Author: admin

சென்னை: ‘ஒரே இரவில் கரூருக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், சிவகங்கைக்கு இன்றுவரை செல்லாதது ஏன்?’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்ப தாவது: “இயற்கை பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் மத்திய நிதியமைச்சர் வந்ததும் இல்லை, நிதி தந்ததுமில்லை” என்று ஒவ்வொரு மேடையிலும், வாய் கூசாது முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் கூறுகிறார். தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் எனப் பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் மக்கள் அவதி யுற்றபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓடோடி வந்தது தங்களுக்கு மறந்துவிட்டதா? பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை பேரிடர் நிதியாகத் தமிழகத்துக்கு ரூ.13,000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியதை ஏன் மறைக்கப் பார்க்கிறீர்கள்? மழையிலும், புயலிலும் தமிழக மக்களோடு என்றும் உறுதுணையாக இருக்கும் எங்களுக்கு, யாரையும் உருட்டி மிரட்டி கூட்டணிக்கு வர வைக்கவோ,…

Read More

பாட்னா: பிஹாரில் ஜோக்​பானி – தனாபூர் இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் இயங்கி வரு​கிறது. இந்​நிலை​யில் பூர்​னி​யா- கஸ்பா ரயில் நிலை​யங்​களுக்கு இடை​யில் நேற்று அதி​காலை​யில் இந்த ரயில் வரும்​போது, டீன்​ஏஜ் மாணவர்​கள் 5 பேர் ரயில் பாதை​யில் நின்று ரீல்ஸ் எடுத்​துள்​ளனர். அப்​போது ரயில் மோதி​ய​தில் 5 பேரும் படு​கா​யம் அடைந்​தனர். ரயில்வே போலீ​ஸார் இவர்​களை மீட்டு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இந்​நிலை​யில் வழி​யில் 3 பேரும் சிகிச்சை பலனின்​றி​ ஒருவரும் உயி​ரிழந்​தனர். ஒரு​வர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். இது குறித்து ரயில்வே போலீ​ஸார் வி​சாரிக்கின்றனர்​.

Read More

துபாய்: 2026-ம் ஆண்​டுக்​கான டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி இந்​தியா மற்​றும் இலங்கை நாடு​களில் நடை​பெற உள்​ளது. 2024-ம் ஆண்டு அமெரிக்​கா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள் நாட்​டில் நடை​பெற்ற தொடர் போலவே இந்​தத் தொடருக்​கும் மொத்​த​மாக 20 அணி​கள் 4 பிரிவு​களாகப் பிரிக்​கப்பட உள்​ளன. இந்​தத் தொடருக்கு டி20 தரவரிசைப் பட்​டியலில் உள்ள முதல் 8 அணி​கள் நேரடி​யாகத் தகுதி பெற்று விடும். எஞ்​சிய அணி​கள் தகு​திச் சுற்​றில் விளை​யாடி வெற்றி பெறும் அடிப்​படை​யில் தகுதி பெறும். அதன்​படி, ஜிம்​பாப்வே அணி, தனது கடைசி நான்கு தகு​திச் சுற்​றுப் போட்​டிகளில் கென்​யா, தான்​சானியா ஆகிய அணி​களை வீழ்த்தி அடுத்த டி20 உலகக் கோப்​பை​யில் விளை​யாடு​வதற்​கான வாய்ப்​பைப் பெற்​றுள்​ளது. அதே​போல, நமீபியா அணி​யும் உலகக் கோப்​பை​யில் பங்​கேற்க தகு​திபெற்​றுள்​ளது.

Read More

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான வியூகம் அமைத்தல், கூட்டணி பேச்சுவார்த்தை, தங்களது கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல் போன்ற தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. அதற்கேற்ப கட்சிகளின் தலைமை, மாவட்ட அளவில் கலந்தாய்வு கூட்டங்கள், பரப்புரை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் தேர்தலுக்கான களப் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி தேர்தலுக்கு ஓராண்டு காலத்துக்கு முன்பாகவே தனித்துத்தான் போட்டி என்று அறிவித்து, கட்சி உட்கட்டமைப்பு பணிகளில் நாம் தமிழர் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலில்…

Read More

புதுடெல்லி: ​காசோலையை வங்​கி​களில் டெபாசிட் செய்​தால் இனி நாள் கணக்​கில் காத்​திருக்க வேண்​டிய அவசி​யமில்​லை. ஒரே நாளில் கையில் பணம் கிடைக்​கும் வசதியை வங்​கி​கள் இன்று முதல் அமல்​படுத்த உள்​ளன. விரை​வான மற்​றும் பாது​காப்​பான பணம் செலுத்​து​வதற்​கான புதுப்​பிக்​கப்​பட்ட தீர்வு கட்​டமைப்பை ரிசர்வ் வங்கி வடிவ​மைத்​துள்​ளது. இதைத் தொடர்ந்து எச்​டிஎப்​சி, ஐசிஐசிஐ உள்​ளிட்ட தனி​யார் வங்​கி​கள் ஒரே நாளில் காசோலையை பணமாக மாற்​று​வதற்​கான (கிளியரிங்) வசதியை இன்று முதல் (அக்​.4) தொடங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளன. அதன்​படி, அக்​டோபர் 4 முதல் டெபாசிட் செய்​யப்​படும் காசோலைகள் இனி இந்த புதிய முறை​யின் கீழ் ஒரே நாளில் பரிசீலிக்​கப்​பட்டு பணம் சில மணி நேரங்​களுக்​குள் வாடிக்​கை​யாளர்​களின் கணக்​கில் வரவு வைக்​கப்​படும். காசோலைகள் பவுன்ஸ் ஆவதை தடுக்​க​வும், தாமதங்​கள் அல்​லது நிராகரிப்பு செய்​யப்​படு​வதை தவிர்க்​க​வும் காசோலை​யில் அனைத்து விவரங்​களை​யும் துல்​லிய​மாக நிரப்​பப்​படு​வதை உறுதி செய்​யும்​படி வாடிக்​கை​யாளர்​களை இந்த இரு தனி​யார் துறை வங்​கி​களும் அறி​வுறுத்​தி​யுள்​ளன. பாசிட்​டிவ் பே…

Read More

ஃபோர்டே: உலக பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். நார்வே நாட்டின் ஃபோர்டே நகரில் நேற்று நடைபெற்ற போட்டியின் மகளிர் 48 கிலோ பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 199 கிலோ (ஸ்னாட்சில் 84 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க்கில் 115 கிலோ) தூக்கி 2-ம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளியை கைப்பற்றினார். இதே பிரிவில் வட கொரியாவின் ரி சோங்கும் முதலிடம் பிடித்து தங்கமும், தாய்லாந்தின் தான்யாத்தோன் சுக்சரோயன் 3-ம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றனர்.

Read More

காமராஜரின் வாழ்க்கை கதையை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘வெல்கம் பேக் காந்தி’ என்ற பெயரிலும் தனது ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய, ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் திருக்குறளை மையமாக வைத்து ‘திருக்குறள்’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார். திருக்குறளை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், யூடியூப் தளத்தில் வெளியிடும் விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலகிருஷ்ணன் பேசும்போது, “இந்தப் படம் வெளிவந்த போது, நல்ல விமர்சனங்கள் வந்தன. ஆனால் திரையரங்குக்கு ஆட்கள் வரவில்லை. அதனால், மக்களிடம் இந்தப் படத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் யூடியூப்பில் இலவசமாக வெளியிடலாம் என முடிவு செய்து வெளியிட்டுள்ளோம். இப்படம் உலகம் எங்கும் போய்ச் சேரும். காலம் கடந்தும் நிற்குமென நம்பிக்கை உள்ளது” என்றார். தயாரிப்பாளரும் நடிகருமான பி.எல். தேனப்பன், சித்ரா லட்சுமணன், ராம்ராஜ் குழுமத் தலைவர் கே.ஆர். நாகராஜன் உள்பட பலர் கலந்து…

Read More

தருமபுரி: ‘விஷச் சாராய உயிரிழப்புகளின் போது கள்ளக்குறிச்சிக்கு ஆறுதல் கூற செல்லாத முதல்வர் ஸ்டாலின், தேர்தல் ஆதாயத்துக்காக தற்போது கரூருக்குச் சென்றுள்ளார்’, என பாலக்கோடு பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. ஏனெனில், மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் திமுக-வும் ஆட்சியில் இருந்த காலத்தில் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக கச்சத் தீவை மீட்க உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி வருவது அதிமுக தான். மக்களுக்காக செயல்படும் கட்சி அதிமுக. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்ததும் இரவோடு இரவாக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட…

Read More

புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற கவுடில்யா பொருளா​தார மாநாட்​டில் மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: உலகளா​விய பிரச்​சினை​கள் எல்​லாம் தீவிரம் அடைந்து வரு​கின்​றன. வரி விதிப்​பு​கள், தடைகள், பிரிக்​கும் யுக்​தி​கள் எல்​லாம் உலகளா​விய நுகர்வு சங்​கி​லியை மாற்​றியமைக்​கின்​றன. இந்த மாற்​றங்​கள் இந்​தி​யா​வின் பலவீனம் மற்​றும் வலிமை ஆகிய இரண்​டை​யும் வெளிப்​படுத்​துகிறது. மாற்​றங்​கள் மற்​றும் அதிர்​வு​களை தாங்​கும் திறனை வரவேற்​கிறோம். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது, இந்தியா மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க விரும்புகிறது என அர்த்தம் அல்ல. வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய நாம், மொத்த உள்​நாட்டு உற்​பத்​தியை 8 சதவீத​மாக உயர்த்த வேண்​டும். உள்​நாட்டு வர்த்தக நில​வரம் வலு​வாக…

Read More

ஒட்டாவா: க​ன​டா​வில் இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. அதன்​தொடர்ச்​சி​யாக, திரையரங்​கு​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தால் ரிஷப் ஷெட்​டி​யின் காந்​தா​ரா: சாப்​டர் 1 உட்பட பல இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வது உடனடி​யாக நிறுத்​தப்​பட்​டது. இது இந்​திய ரசிகர்​களிடையே ஏமாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளதுடன், படத்​தின் வசூலும் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தாக்​குதலுக்கு காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள் காரண​மாக இருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. கனடா​வின் ஒன்​டாரியோ மாகாணத்​தில் உள்ள திரையரங்​கு​கள் கடந்த ஒரு வாரத்​தில் இரண்டு வெவ்​வேறு சந்​தர்ப்​பங்​களில் தீவைப்பு மற்​றும் துப்​பாக்கி சூடு தாக்​குதல்​களுக்கு ஆளாகி​யுள்​ளது. இதையடுத்​து, அந்த திரையரங்​கு​களில் இந்​திய திரைப்​படங்​கள் திரை​யிடு​வது உடனடி​யாக நிறுத்​தப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து காவல் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: ரிஷப் ஷெட்​டி​யின் காந்​தா​ரா: சாப்​டர் 1 மற்​றும் பவன் கல்​யாணின் தே கால் ஹிம் ஓஜி உள்​ளிட்ட இந்​திய திரைப்​படங்​கள் திரை​யிடப்​பட்​டிருந்த திரையரங்​கு​களை குறி​வைத்து செப்​டம்​பர் 25 மற்​றும் அக்​டோபர் 2 தேதி​களில் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. நள்​ளிர​வில்…

Read More