Author: admin

தருமபுரி: ‘விஷச் சாராய உயிரிழப்புகளின் போது கள்ளக்குறிச்சிக்கு ஆறுதல் கூற செல்லாத முதல்வர் ஸ்டாலின், தேர்தல் ஆதாயத்துக்காக தற்போது கரூருக்குச் சென்றுள்ளார்’, என பாலக்கோடு பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. ஏனெனில், மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் திமுக-வும் ஆட்சியில் இருந்த காலத்தில் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக கச்சத் தீவை மீட்க உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி வருவது அதிமுக தான். மக்களுக்காக செயல்படும் கட்சி அதிமுக. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்ததும் இரவோடு இரவாக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட…

Read More

புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற கவுடில்யா பொருளா​தார மாநாட்​டில் மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: உலகளா​விய பிரச்​சினை​கள் எல்​லாம் தீவிரம் அடைந்து வரு​கின்​றன. வரி விதிப்​பு​கள், தடைகள், பிரிக்​கும் யுக்​தி​கள் எல்​லாம் உலகளா​விய நுகர்வு சங்​கி​லியை மாற்​றியமைக்​கின்​றன. இந்த மாற்​றங்​கள் இந்​தி​யா​வின் பலவீனம் மற்​றும் வலிமை ஆகிய இரண்​டை​யும் வெளிப்​படுத்​துகிறது. மாற்​றங்​கள் மற்​றும் அதிர்​வு​களை தாங்​கும் திறனை வரவேற்​கிறோம். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது, இந்தியா மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க விரும்புகிறது என அர்த்தம் அல்ல. வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய நாம், மொத்த உள்​நாட்டு உற்​பத்​தியை 8 சதவீத​மாக உயர்த்த வேண்​டும். உள்​நாட்டு வர்த்தக நில​வரம் வலு​வாக…

Read More

ஒட்டாவா: க​ன​டா​வில் இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. அதன்​தொடர்ச்​சி​யாக, திரையரங்​கு​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தால் ரிஷப் ஷெட்​டி​யின் காந்​தா​ரா: சாப்​டர் 1 உட்பட பல இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வது உடனடி​யாக நிறுத்​தப்​பட்​டது. இது இந்​திய ரசிகர்​களிடையே ஏமாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளதுடன், படத்​தின் வசூலும் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தாக்​குதலுக்கு காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள் காரண​மாக இருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. கனடா​வின் ஒன்​டாரியோ மாகாணத்​தில் உள்ள திரையரங்​கு​கள் கடந்த ஒரு வாரத்​தில் இரண்டு வெவ்​வேறு சந்​தர்ப்​பங்​களில் தீவைப்பு மற்​றும் துப்​பாக்கி சூடு தாக்​குதல்​களுக்கு ஆளாகி​யுள்​ளது. இதையடுத்​து, அந்த திரையரங்​கு​களில் இந்​திய திரைப்​படங்​கள் திரை​யிடு​வது உடனடி​யாக நிறுத்​தப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து காவல் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: ரிஷப் ஷெட்​டி​யின் காந்​தா​ரா: சாப்​டர் 1 மற்​றும் பவன் கல்​யாணின் தே கால் ஹிம் ஓஜி உள்​ளிட்ட இந்​திய திரைப்​படங்​கள் திரை​யிடப்​பட்​டிருந்த திரையரங்​கு​களை குறி​வைத்து செப்​டம்​பர் 25 மற்​றும் அக்​டோபர் 2 தேதி​களில் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. நள்​ளிர​வில்…

Read More

கரூர்: கரூர் சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்​காமல் 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளி​யிடு​பவர் தலை​வ​ரா என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் எம்​.ஏ.பேபி கேள்வி எழுப்பினார். கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை​யும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்​களை​யும் எம்.ஏ.பேபி மற்​றும் எம்​.பி.க்​கள் ராதாகிருஷ்ணன், சிவ​தாசன், சச்​சி​தானந்​தம், அரசி​யல் தலை​மைக் குழு உறுப்​பினர் உ.வாசுகி, எம்​எல்ஏ நாகை மாலி கொண்ட குழு​வினர் நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறினர். பின்​னர், எம்​.ஏ.பேபி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த விவ​காரத்​தில் விரைந்து செயல்​பட்ட தமிழக அரசின் நடவடிக்கை பாராட்​டுக்​குரியது. தமிழக முதல்​வர் இந்த விவ​காரத்தை அரசி​யல் ரீதி​யாக அணு​காமல், இரவோடு இரவாக நேரில் வந்து உயி​ரிழந்​தவர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தி, காயமடைந்​தவர்​களை சந்​தித்து ஆறு​தல் கூறி​யுள்​ளார். இங்கு நடந்த சம்​பவம்​போல இனி எங்​கும் நடை​பெறக்​கூ​டாது. 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​களில் ஈடு​பட்​டுள்​ளனர். கூட்​டத்தை ஒழுங்​குபடுத்​தவோ, கட்​டுப்​படுத்​தவோ…

Read More

புதுடெல்லி: நாட்டில் வழக்கமாக நவராத்திரி மற்றும் பண்டிகை காலத்தில் மக்களின் நுகர்வு அதிகரிக்கும். ஆண்டு விற்பனையில் 40 முதல் 45 சதவீதம் இந்த பண்டிகை காலத்தில் மட்டுமே நடைபெறும். இந்த முறை ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. இதனால் கார்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைந்தது. இதனால் மக்களின் நுகர்வும் பல மடங்கு அதிகரித்தது. குறிப்பாக கார்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்தது. நவராத்திரியின் முதல் நாளில் 30,000 கார்களை விற்ற மாருதி சுசுகி நிறுவனம், 8 நாட்களில் 1.65 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. பண்டிகை காலத்தில் கார்களின் முன்பதிவு 2 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நவராத்திரி காலத்தில் 85,000 மாருதி வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தின் விற்பனை இந்தாண்டில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 50,000 வாகனங்களை விற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின்…

Read More

இதயம் மற்றும் வாஸ்குலர் ஆரோக்கியத்திற்கு வரும்போது, ​​இரத்த நாளங்களின் வலிமை நாம் உணர்ந்ததை விட முக்கியமானது. சேதமடைந்த அல்லது கடினமான இரத்த நாளங்கள் சரியான இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் அல்லது பக்கவாதம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் உடலில் அதன் சொந்த பழுதுபார்க்கும் வழிமுறைகள் உள்ளன, மேலும் சில உணவுகள் இந்த இயற்கை குணப்படுத்துதலை தீவிரமாக ஆதரிக்க முடியும். டாக்டர் வில்லியம் லி மற்றும் பல்வேறு ஆராய்ச்சி ஆய்வுகள் போன்ற விஞ்ஞானிகள் அன்றாட உணவுகளை சுட்டிக்காட்டுகின்றன, அவை கப்பல்களை மிருதுவான, செயல்பாட்டு மற்றும் வலுவாக வைத்திருக்க உதவும்.அடிப்படை ஊட்டச்சத்துக்கு அப்பாற்பட்ட 5 உணவுகள் இங்கே உள்ளன மற்றும் வாஸ்குலர் அமைப்புக்கு இயற்கை குணப்படுத்துபவர்களாக செயல்படுகின்றன.

Read More

ஸ்ரீகங்காநகர்: அடுத்த முறை பாகிஸ்​தானுக்கு கருணை காட்ட மாட்​டோம் என்று இந்​திய ராணுவ தளபதி உபேந்​திர திவேதி பகிரங்​க​மாக எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். ராஜஸ்​தானின் ஸ்ரீகங்​காநகரில் இந்​திய ராணுவ முகாம் அமைந்​துள்​ளது. பாகிஸ்​தான் எல்லை அருகே உள்ள இந்த முகாமை ராணுவ தளபதி உபேந்​திர திவேதி நேற்று ஆய்வு செய்​தார். அப்​போது ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது சிறப்​பாக செயல்​பட்ட வீரர்​களுக்கு அவர் பரிசுகளை வழங்​கி​னார். பிஎஸ்​எப், ராஜஸ்​தான் ரைபிள்ஸ் படைகளை சேர்ந்த அதி​காரி​கள், வீரர்​கள் கவுரவிக்​கப்​பட்​டனர். பின்​னர் வீரர்​கள் மத்​தி​யில் அவர் பேசி​ய​தாவது: பாகிஸ்​தானில் செயல்​பட்ட தீவிர​வாத முகாம்​கள் குறித்த ஆதா​ரங்​கள் ஆபரேஷன் சிந்​தூரின்​போது உலகத்​துக்கு தெரிய​வந்​தது. இதன்​மூலம் பாகிஸ்​தானின் உண்மை முகம் அம்​பல​மானது. பாகிஸ்​தான் மக்​களுக்கு எந்த தீங்​கும் நேரக்​கூ​டாது என்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறோம். ஆனால் அந்த நாட்​டின் தீவிர​வா​தி​களை அழிப்​ப​தில் ஈவு, இரக்​கம் காட்ட முடி​யாது. ஆபரேஷன் சிந்​தூரின்​போது தீவிர​வாத முகாம்​களை மட்​டுமே அழித்​தோம். ஆனால் இந்​தியா மீது…

Read More

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் சைபர் பாது​காப்பு விழிப்​புணர்வு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த சில மாதங்​களுக்கு முன்​னர் என் வீட்​டில் நடை​பெற்ற ஒரு சிறிய சம்​பவத்தை உங்​களுக்கு சொல்​கிறேன். என் மகள் நிதாரா வீடியோ கேம் விளை​யாடிக் கொண்​டிருந்​தாள். அப்​படி விளை​யாடும் போது, எதிர் தரப்​பில் விளை​யாடும் முகம் தெரி​யாத நபர்​களிடம் இருந்து குறுந்​தகவல்​கள் வரும். எப்​படி இருக்​கிறீர்​கள்? நீங்​கள் ஆணா, பெண்ணா என்று பல கேள்வி​கள் வரும். அப்​படி கேட்ட போது, பெண் என்று என் மகள் பதில் அனுப்​பி​னாள். உடனே எதிர் தரப்​பில் விளை​யாடி கொண்​டிருந்த அந்த நபர், ‘உங்​கள் நிர்​வாண படத்தை அனுப்ப முடி​யு​மா?’ என்று என் மகளுக்கு குறுந்​தகவல் அனுப்​பி​னார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என் மகள், உடனே வீடியோ கேமை அணைத்​து​ விட்​டு, நடந்த…

Read More

திருச்சி: ​திருச்சி அருகே ராமர் படத்தை தீ வைத்து எரித்த ஐந்​தாம் தமிழ்ச் சங்க நிர்​வாகி​களை கண்​டித்து இந்து அமைப்​பினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதையடுத்​து, அந்த அமைப்​பின் நிர்​வாகி​கள் 4 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். திருச்சி மாவட்​டம் திரு​வெறும்​பூர் அரு​கே​யுள்ள அயன்​புத்​தூர் கிராமத்​தில் ஐந்​தாம் தமிழ்ச் சங்​கம் என்ற அமைப்பு சார்​பில் கடந்த 28-ம் தேதி இரவு ஆசிவக திரு​மால் வழி​காட்டு விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில், அந்த அமைப்​பின் நிர்​வாகி​கள் 6 பேர் ராமர் படம் பொறிக்​கப்​பட்ட பிளக்ஸ் பேனரை அவம​தித்​ததுடன், தீ வைத்​துக் கொளுத்​தி​யுள்​ளனர். மேலும், ராமரை இழி​வாகப் பேசி​யதுடன், ராவணனைப் போற்​றும் வகை​யில் பேசி​யுள்​ளனர். அதை வீடியோ​வாக எடுத்து சமூக வலைதளங்​களில் பதிவேற்​றம் செய்​தனர். இதையடுத்​து, சமூக வலை​தளங்​களில் சட்​டம்​-ஒழுங்கு பிரச்​சினையை ஏற்​படுத்​தும் வகை​யில் உள்ள பதிவு​களை கண்​காணித்து வரும் காவலர் கார்த்​திக், இந்​தப் பதிவு மக்​களிடையே கலவரத்தை தூண்​டி, பொது அமை​திக்கு…

Read More

பரிதாபாத்: ஹரி​யா​னா​வின் பல்​வால் மாவட்​டம் கோட் கிராமத்​தைச் சேர்ந்​தவர் வாசிம் அக்​ரம். இவர் ஹிஸ்ட்ரி ஆப் மேவாட் என்ற தலைப்​பில் யூடியூபில் வீடியோக்​களை பதி​விட்டு வரு​கிறார். இதுகுறித்து காவல் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ மற்​றும் அதன் தூதரகத்துக்கு கடந்த மூன்று ஆண்​டு​களாக உளவு பார்க்​கும் வேலையை வாசிம் அக்​ரம் செய்​து​வந்​துள்​ளார். அக்​ரம் தொலைபேசியி​லிருந்து வாட்​ஸ்​அப் உரை​யாடல்​களை போலீ​ஸார் கண்​டறிந்​துள்​ளனர். பாகிஸ்​தானின் மற்​றொரு உளவாளி​யான தவுபிக்கை கைது செய்து விசா​ரித்தபோது அவர் அக்​ரம் குறித்த தகவல்​களை தெரி​வித்​தார். அப்​போது​தான் உண்​மை​கள் தெரிந்​தது. அக்​ரம் மற்​றும் தவுபிக் இரு​வரும் இணைய அழைப்​பு​கள் மூலம் ஐஎஸ்ஐ மற்​றும் பாகிஸ்​தான் தூதரகத்துடன் தொடர்​பில் இருந்​துள்​ளனர். இந்த வழக்​கில் பலர் கைது செய்​யப்பட வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு அதி​காரி​கள்​ தெரிவித்​தனர்​.

Read More