ஒரு அரிய வானியல் நிகழ்வில், விண்மீன் பார்வையாளரான காமட் 3i/அட்லஸ் 2025 ஆம் ஆண்டில் எங்கள் சூரிய குடும்பத்தை கடந்து செல்கிறது. 130,000 மைல் வேகத்தில் (219,000 கிமீ/மணி) வியக்க வைக்கும் வேகத்தில் பயணிக்கிறது, இந்த வால்மீன் நமது சூரியனுக்கு அப்பால் இருந்து உருவாகிறது, இது சோலார் அமைப்பில் நுழைவதற்கு மூன்றாவது உறுதிப்படுத்தப்பட்ட இடைவெளியின் பொருளாக மட்டுமே அமைகிறது. அதன் கரு, 1 கிலோமீட்டருக்கும் குறைவான அகலமானது, வாயு மற்றும் தூசியின் ஒளிரும் கோமாவால் சூழப்பட்டுள்ளது, இதில் நீர் பனி, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவை உள்ளன. அக்டோபர் 3, 2025 அன்று, இது செவ்வாய் கிரகத்திற்கு அதன் நெருங்கிய அணுகுமுறையை உருவாக்கும், இது ஈஎஸ்ஏ மற்றும் நாசா விண்கலத்தை விரிவாகக் கவனிக்க அனுமதிக்கிறது. பின்னர், இது பெரிஹெலியனின் போது வியாழன் அருகே கடந்து செல்லும், இது நமது சூரிய குடும்பத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு விண்மீன் வேதியியல்,…
Author: admin
ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர், கடந்த செப்.17-ம் தேதி உப்பல் பகுதியில் இருந்து தார்நாகா எனும் ஊருக்கு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அதற்கு, செல்போன் மூலம் ஆட்டோ ஓட்டுநர் முகமது மொயின் உத்தீனுக்கு பணம் அனுப்பினார். அப்போது அதே ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் நண்பரான முகமது சையது சல்மான் என்கிற சுல்தான், முதியவர் பணம் அனுப்பும்போது, ரகசிய குறியீட்டு எண்ணை பார்த்துள்ளார். பிறகு அந்த முதியவரை திசை திருப்பி செல்போனையும் திருடி விட்டார். பின்னர், முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.95 லட்சத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டனர். இது தொடர்பான புகாரில் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆட்டோ ஓட்டுநர் முகமது மொயின் உத்தீனை பிடித்து விசாரணை நடத்தியதில் நடந்த உண்மைகள் வெளிவந்தன. முதியவரின் செல்போன் மூலம் பெட்ரோல் பங்க், கடைகள், என பல இடங்களில் ஸ்கேன் செய்து,…
சென்னை: ‘மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும். விதி மீறலால் உயிரிழப்பு, பொருளாதார இழப்பு ஏற்படுகிறது’ என்று தோல் ஏற்றுமதி குழும மேலாண் இயக்குநர் இரா.செல்வம் அறிவுறுத்தி உள்ளார். சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில் பிறந்தவர் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு. இவர் தனது இல்லத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான ‘கலாம் சபா’ என்ற நூலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நிறுவியுள்ளார். இதை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கடந்த ஆண்டு திறந்துவைத்தார். ‘கலாம் சபா’ நூலகம் சார்பில் மாதாந்திர வழிகாட்டி கூட்டத்தொடரையும் டில்லிபாபு நடத்தி வருகிறார். அதில் சிறந்த ஆளுமைகள் வரவழைக்கப்பட்டு, அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன் 8-வது நிகழ்வாக அக்.1-ம் தேதி ‘ஹார்வர்டு நாட்கள்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தோல் ஏற்றுமதி குழு மேலாண் இயக்குநர் இரா.செல்வம் பங்கேற்று, அவர் எழுதிய ‘ஹார்வர்டு நாட்கள்’ நூலில் போக்குவரத்து விதிமீறல் குறித்து எழுதியது தொடர்பாக விஞ்ஞானி…
மூன்று காலகட்டங்களில், 3 நிலப்பகுதிகளில் நடக்கும் காதல் கதையை மையமாகக் கொண்டு ‘அமரம்’ என்ற படம் உருவாகியுள்ளது. இதை திருஅருள்கிருஷ்ணன் இயக்கியுள்ளார். திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க, சி.ஆர்.ராஜன் தயாரித்துள்ளார். இதில் ராஜன் தேஜேஸ்வர், ஐராஅகர்வால் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். ஜார்ஜ், சாய் தீனா,நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெரேடி, வாசுதேவன் முரளி உள்படபலர் நடித்துள்ளனர். மிக்கி ஜெ.மேயர் இசையமைத்துள்ளார். பரத்குமார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்தப் படம் பற்றி திரு அருள் கிருஷ்ணன் கூறும்போது, “இதுவரை திரையில் பார்த்திராத அதிரடி காட்சிகளுடன் ஆக் ஷன் விருந்தாக இந்தப்படம் இருக்கும். மிராக்கிள் மைக்கேல் புதுவிதமான பாணியில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இதுவரை சொல்லப்படாத, கிழக்கு காடு மக்களின் வாழ்க்கையை சொல்லும் இந்தப்படம், பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.
சென்னை: சென்னை மாநகரில் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறுவது நடைமுறையில் உள்ளது. செல்லப் பிராணிகளின் உரிமையாளர் தங்களின் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.50 உரிமக் கட்டணமாகச் செலுத்தி உரிமம் பெற்று வருகின்றனர். கடந்த 2024-ம் ஆண்டுமுதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 12,393 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் நாய்களுக்கு மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதள சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை ரிப்பன்…
பெங்களூரு: பெங்களூருவில் படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்து மனைவியின் அந்தரங்க வீடியோவை பதிவு செய்த கணவர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். பெங்களூரு புட்டேனஹள்ளியை சேர்ந்த 27 வயதான பெண் போலீஸில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கும் புட்டேனஹள்ளியை சேர்ந்த சையத் இனாமுல் (35) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் ஆனது. வரதட்சணையாக 340 கிராம் நகை, இரு சக்கர வாகனமும் கொடுத்தோம். பின்னர் என் கணவர் சையத் இனாமுலுக்கு ஏற்கெனவே திருமணமானது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, என்னை தாக்கினார். மேலும் படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்து அவர் என்னோடு நெருக்கமாக இருப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு 19 பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் என்னுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளிநாடுகளில் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து அவர்கள் பெங்களூரு வரும்போது என்னை அவர்களுடன் பாலுறவு வைத்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார்.…
அகமதாபாத்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்கள் கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில், 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4, ஜஸ்பிரீத் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2,…
பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி அறிமுகமாகும் படம், ‘கும்கி 2’. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை பென் ஸ்டூடியோஸ், பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் ஜெயந்திலால் காடா, தவல் காடா தயாரித்துள்ளனர். “இந்தப் படம், ஓர் இளைஞனுக்கும் ஓர் அற்புதமான யானைக்கும் இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பேசுகிறது. இந்தப் படம் மூலம் அறிமுகமாகும் மதி, கதாபாத்திரத்துக்குத் தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார். யானையுடன் நடிக்கப் பயிற்சி எடுத்துக் கொண்டார். காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியான காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாக இருந்தாலும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளார்” என்று பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ‘ஒரே இரவில் கரூருக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், சிவகங்கைக்கு இன்றுவரை செல்லாதது ஏன்?’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்ப தாவது: “இயற்கை பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் மத்திய நிதியமைச்சர் வந்ததும் இல்லை, நிதி தந்ததுமில்லை” என்று ஒவ்வொரு மேடையிலும், வாய் கூசாது முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் கூறுகிறார். தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் எனப் பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் மக்கள் அவதி யுற்றபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓடோடி வந்தது தங்களுக்கு மறந்துவிட்டதா? பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை பேரிடர் நிதியாகத் தமிழகத்துக்கு ரூ.13,000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியதை ஏன் மறைக்கப் பார்க்கிறீர்கள்? மழையிலும், புயலிலும் தமிழக மக்களோடு என்றும் உறுதுணையாக இருக்கும் எங்களுக்கு, யாரையும் உருட்டி மிரட்டி கூட்டணிக்கு வர வைக்கவோ,…
பாட்னா: பிஹாரில் ஜோக்பானி – தனாபூர் இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பூர்னியா- கஸ்பா ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று அதிகாலையில் இந்த ரயில் வரும்போது, டீன்ஏஜ் மாணவர்கள் 5 பேர் ரயில் பாதையில் நின்று ரீல்ஸ் எடுத்துள்ளனர். அப்போது ரயில் மோதியதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். ரயில்வே போலீஸார் இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வழியில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி ஒருவரும் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.
