இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்ஜன்னா’. 2013-ம் ஆண்டு வெளியான இதன் இரண்டாம் பாகமாக ‘தேரே இஸ்க் மே’ என்ற படம் உருவாகியுள்ளது. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்திசனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் சிலமாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. நவ. 28-ல் படம் ரிலீசாகிறது. இந்நிலையில் இதன் டீஸர் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம் பற்றி ஆனந்த் எல் ராய் கூறும்போது, “காதல் என்றால் முழுமையான சரணாகதி; அது உங்களைக் குணப்படுத்தட்டும், காயப்படுத்தட்டும், மாற்றட்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த டீஸரை பாராட்டியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனுஷ்,கீர்த்தி சனோனை டேக் செய்து, உங்களைத் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
Author: admin
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கும் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றுமொரு காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் 3 ஏடிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்களும் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி.…
சென்னை: தீபாவளியை ஒட்டி கலைவாணர் அரங்கில் 15 நாட்கள் நடைபெற உள்ள தேசிய கைத்தறி கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் 50 சதவீதம் தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கைத்தறி துணி வகைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கு கைத்தறி துறையால் தேசிய கைத்தறி கண்காட்சியை சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இந்த கண்காட்சியில், கைத்தறி நெசவாளர்களின் கைவண்ணங்களால் தனித்துவத்துடன் நெசவு செய்யப்பட்ட பேஸ்டல் கலெக் ஷன்ஸ், பூம்பட்டு, புதுமணப்பட்டு, பட்டு நூல் டிசைனர் சேலைகள், கட்டம் பட்டு, வெண்ணிலா கலெக் ஷன்ஸ், அனுதினப்பட்டு, பருத்தி நூல் யோகா மேட், தர்ப்பை புல் யோகா மேட், தாய்-சேய் பெட்டகம் போன்ற புதிய வடிவமைப்பு ரகங்களை அறிமுகம் செய்து விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இக்கண்காட்சியில் கைத்தறி துறையின் கீழ் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், வெளி மாநில தலைமை…
மருந்துகள் குணமடைய வேண்டும், ஆனால் அவை அனைத்தும் அவை தோன்றும் அளவுக்கு பாதுகாப்பானவை அல்ல. பலர் ஒவ்வொரு நாளும் மாத்திரைகளை பாப் செய்கிறார்கள், அந்த காப்ஸ்யூல்களுக்குள் மறைந்திருக்கும் நீண்டகால சேதத்தை உணராமல் அவர்கள் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று நம்புகிறார்கள். ஒரு அனுபவமுள்ள மருந்தாளுநர், ஸ்டீவ் ஹோஃபார்ட், அனைத்து செலவுகளிலும் தனிப்பட்ட முறையில் தவிர்க்கும் பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட மூன்று மருந்துகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த மருந்துகள் ஏன் பிரபலமாக இருந்தாலும், எப்போதும் பாதுகாப்பான தேர்வாக இருக்காது என்பதற்கு அவரது நுண்ணறிவுகள் வெளிச்சம் போடுகின்றன.இந்த 3 மருந்துகள் இங்கே உள்ளன, அவற்றைத் தவிர்ப்பது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கக்கூடும் என்பதற்குப் பின்னால் உள்ள ஆழமான காரணங்கள்.Nsaidsஇப்யூபுரூஃபன், செலிகோக்சிப் மற்றும் நாப்ராக்ஸன் போன்ற அழற்சியற்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (என்எஸ்ஏஐடிகள்) வலி மற்றும் வீக்கத்திற்கு மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை விரைவான நிவாரணத்தைக் கொண்டுவருகின்றன, ஆனால் பக்க விளைவுகள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன.NSAID…
புதுடெல்லி: உ.பி.யின் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர் ராஜா பைய்யா என்கிற ராகுராஜ் பிரதாப் சிங். பிரதாப்கரை சேர்ந்த இவர் 1993 முதல் 2018 வரை தொடர்ந்து சுயேச்சை எம்எல்ஏவாக இருந்தார். உ.பி.யில் ஆட்சிக்கு வரும் கட்சி எதிலும் சேராமலேயே அதன் அமைச்சரவையில் இடம்பெறும் அளவுக்கு அரசியல் செல்வாக்கு கொண்டவர். இவ்வாறு, பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் அரசில் அமைச்சராக இருந்தார். 2018-ல் ஜன்சத்தா தளம் என்ற தனிக் கட்சி தொடங்கி அதன் சார்பில் பிரதாப்கர் மாவட்டம் குண்டா தொகுதி எம்எல்ஏவாக தொடர்கிறார். ராஜா பைய்யா நேற்று முன்தினம் தனது மாளிகையில் ஆயுத பூஜை கொண்டாடினார். இதில் சுமார் 200 வகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் இடம் பெற்றிருந்தன. இவற்றை காண ஏராளமானோர் கூடினர். அவர்கள் பதிவுசெய்த காட்சிகள் வைரலாகி பார்ப்பவரை திகைக்க வைத்துள்ளன. இவரது மனைவி பனவி குமாரி சிங் கருத்து வேறுபாடு காரணமாக…
பிரபல இந்தி நடிகையான இஷா தல்வார், தமிழில் பத்ரி இயக்கிய ‘தில்லு முல்லு’, மித்ரன் ஜவஹர் இயக்கிய ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ஆர்ஜே.பாலாஜி நடித்த ‘ரன் பேபி ரன்’ படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக, தொன்மையான தற்காப்புக் கலையான களரியைக் கேரளாவில் கற்று வருகிறார். களரியைக் கற்றுக்கொடுப்பவர்கள் மற்றும் இக்கலையை கற்கும் மாணவர்களுடன், தான் இருக்கும் புகைப்படங்களை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், களரி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக கோயில்களிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 48 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 28 சுவாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்த 2 பெண்கள் உட்பட 89 மாணவர்கள், மூன்றாண்டு பயிற்சி முடித்த 12 மாணவர்கள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 7 மாணவர்கள் என 108 பேருக்கு அதற்கான சான்றிதழை அறநிலையத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2021-ம் ஆண்டிலிருந்து இதுவரை பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 213 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 43 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பெண் ஓதுவார்கள் மட்டும் 12 பேர். திமுக ஆட்சியில் இதுவரை 3,707 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கோயில்களில் உள்ள சிலைகளை…
சென்னை: மிச்செலின் நிறுவனம் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரித்திருக்கிறது. இவை அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான டயர் விற்பனையில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனமான மிச்செலின் இந்தியா நிறுவனம் தற்போது எஸ்யுவி, சேடன் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரித்து, அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் விட்டோர் சில்வா, மேலாண்மை இயக்குநர் சாந்தனு தேஷ்பாண்டே,மிச்செலின் சென்னை ஆலை இயக்குநர் புளோரன்ட் சாசேட் ஆகியோர் கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 900 கிமீ விரைவுச் சாலை மட்டுமே இருந்தது. இன்றைக்கு 5 ஆயிரம் கிமீ மேல் விரைவுச் சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 2030-ம் ஆண்டுக்குள் விரைவுச் சாலைகள் 16 ஆயிரம் கி.மீட்டரை கடந்திருக்கும். இவை நகரங்களுக்கு இடையேயான தொலைவை குறைக்கின்றன. உதாரணமாக சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்வதற்கு 7 மணி நேரமாகும் நிலையில், விரைவில் பெங்களூருவுக்கு…
ஒரு அரிய வானியல் நிகழ்வில், விண்மீன் பார்வையாளரான காமட் 3i/அட்லஸ் 2025 ஆம் ஆண்டில் எங்கள் சூரிய குடும்பத்தை கடந்து செல்கிறது. 130,000 மைல் வேகத்தில் (219,000 கிமீ/மணி) வியக்க வைக்கும் வேகத்தில் பயணிக்கிறது, இந்த வால்மீன் நமது சூரியனுக்கு அப்பால் இருந்து உருவாகிறது, இது சோலார் அமைப்பில் நுழைவதற்கு மூன்றாவது உறுதிப்படுத்தப்பட்ட இடைவெளியின் பொருளாக மட்டுமே அமைகிறது. அதன் கரு, 1 கிலோமீட்டருக்கும் குறைவான அகலமானது, வாயு மற்றும் தூசியின் ஒளிரும் கோமாவால் சூழப்பட்டுள்ளது, இதில் நீர் பனி, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவை உள்ளன. அக்டோபர் 3, 2025 அன்று, இது செவ்வாய் கிரகத்திற்கு அதன் நெருங்கிய அணுகுமுறையை உருவாக்கும், இது ஈஎஸ்ஏ மற்றும் நாசா விண்கலத்தை விரிவாகக் கவனிக்க அனுமதிக்கிறது. பின்னர், இது பெரிஹெலியனின் போது வியாழன் அருகே கடந்து செல்லும், இது நமது சூரிய குடும்பத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு விண்மீன் வேதியியல்,…
ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர், கடந்த செப்.17-ம் தேதி உப்பல் பகுதியில் இருந்து தார்நாகா எனும் ஊருக்கு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அதற்கு, செல்போன் மூலம் ஆட்டோ ஓட்டுநர் முகமது மொயின் உத்தீனுக்கு பணம் அனுப்பினார். அப்போது அதே ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் நண்பரான முகமது சையது சல்மான் என்கிற சுல்தான், முதியவர் பணம் அனுப்பும்போது, ரகசிய குறியீட்டு எண்ணை பார்த்துள்ளார். பிறகு அந்த முதியவரை திசை திருப்பி செல்போனையும் திருடி விட்டார். பின்னர், முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.95 லட்சத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டனர். இது தொடர்பான புகாரில் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆட்டோ ஓட்டுநர் முகமது மொயின் உத்தீனை பிடித்து விசாரணை நடத்தியதில் நடந்த உண்மைகள் வெளிவந்தன. முதியவரின் செல்போன் மூலம் பெட்ரோல் பங்க், கடைகள், என பல இடங்களில் ஸ்கேன் செய்து,…
