புதுடெல்லி: தங்கள் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முன்வந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் ட்ரம்ப்பின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது மிக முக்கியமான முன்னேற்றம் என்றும், மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலும் இன்றுவரை தொடரும் காசா அவலமும்! கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. அதற்கடுத்த இந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக 65,000-க்கும் அதிகமான காசா மக்கள் உயிரிழந்துள்ளனர். ட்ரம்ப் வைத்த செக்! இந்நிலையில், “மத்திய கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு வழியில் நமக்கு அமைதி ஏற்பட வேண்டும். ரத்தம் தெறிக்கும் வன்முறை முற்று பெற வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள…
Author: admin
தொழிலதிபர் எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு ட்வீட்டால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் பங்கு தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருகின்றன. இது அந்த நிறுவனத்தையே ஆட்டம் காணச் செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் மீது அமெரிக்க வலதுசாரி ஆதரவாளர்கள் ஒரு குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். அதாவது தனது திரைப்படங்கள், வெப் தொடர்கள் மூலம் LGBTQ கலாச்சாரத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பார்வையாளர்களிடம் வலிந்து திணிக்கிறது என்பது அவர்களுடைய புகார். இந்தச் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தீவிர வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க் கொல்லப்பட்டார். இதனையடுத்து சார்லி கிர்க் குறித்து அனிமேஷன் பட இயக்குநரான லண்டனைச் சேர்ந்த ஹாமிஷ் ஸ்டீல் என்பவர் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்தார். சார்லி கிர்க் ஒரு ‘நாஜி’ என்று அவர் கூறியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஹாமிஷ் ஸ்டீல் இயக்கிய ‘Dead End: Paranormal Park’ என்ற அனிமேஷன் தொடர்…
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் நடைபெற்றுள்ளது. இதில் இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் என முடிவு செய்திருக்கிறார்கள். இந்த தகவல் தெலுங்கு ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் முதலில் சேர்ந்து நடித்தார்கள். அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இருவருமே முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர். குறிப்பாக ராஷ்மிகா நடித்த பல படங்கள் வரவேற்பைப் பெற்றதால், இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருவருமே தங்களுடைய பணிகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் வெளிநாடுகளுக்கு…
சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமையும், ஒவ்வோர் ஆண்டும் பெரிய அளவிலான 2 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்து கொள்கின்றன. 8, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமா, பொறியியல் பட்டம், கலை அறிவில் பட்டதாரிகள் என அனைத்து கல்வித் தகுதியை உடையவர்களும் இந்த முகாமில் நேரடியாக கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். பதிவுக் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. தேர்வு…
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் பீன்ஸ், நூக்கல், கோஸ் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த 2 மாதங்களாக காய்கறி விலை குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சில காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் மொத்த விலையில் கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் கிலோ ரூ.60 ஆகவும், ரூ.15-க்கு விற்கப்பட்ட நூக்கல் ரூ.30 ஆகவும், ரூ.5-க்கு விற்கப்பட்ட முட்டைக்கோஸ் ரூ.10 ஆகவும் உயர்ந்துள்ளது. விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகள் கூறும்போது, “தற்போது புரட்டாசி மாதம் என்பதால் அசைவம் தவிர்த்து, சைவ உணவுகள் அதிகம் உண்ணப்படுவதால், காய்கறிகள் அதிகமாக வாங்கப்படுகின்றன. இதனால் விலை உயர்ந்துள்ளது என்று கூறினார்.
சர்க்கரை வெற்று கலோரிகள் அல்ல, அதிகமாக உட்கொள்வது கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும் மற்றும் கொழுப்பின் அளவை எதிர்மறையாக பாதிக்கும். சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை அதிக அளவில் உட்கொள்வது, குறிப்பாக சோடாக்கள், இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து, உயர்த்தப்பட்ட எல்.டி.எல் (“கெட்ட”) கொலஸ்ட்ரால், அதிகரித்த ட்ரைகிளிசரைடுகள் மற்றும் குறைந்த எச்.டி.எல் (“நல்ல”) கொழுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில், இந்த மாற்றங்கள் பெருந்தமனி தடிப்பு, இதய நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளின் அபாயத்தை உயர்த்துகின்றன. சர்க்கரை கொழுப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது, பொதுவான மறைக்கப்பட்ட ஆதாரங்களை அங்கீகரிப்பது மற்றும் சிறிய உணவு மாற்றங்களைச் செய்வது உங்கள் இதயத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும். ஆரோக்கியமான லிப்பிட் சுயவிவரத்தை பராமரிக்க மிதமான மற்றும் தகவலறிந்த தேர்வுகள் முக்கியம்.சர்க்கரை கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு பாதிக்கிறதுஅதிகப்படியான சர்க்கரையை சாப்பிடுவது, குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்பு பானங்களிலிருந்து, உங்கள் உடலில் ஒரு சங்கிலி எதிர்வினையைத் தூண்டுகிறது, இது…
பில்லியனர் தொழில்முனைவோர் மார்க் கியூபன் எலோன் மஸ்க்கை “புத்திசாலி மற்றும் வளைவுக்கு முன்னால்” என்று பாராட்டியுள்ளார், குறிப்பாக வீடியோ பயிற்சி பெற்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் AI இன் உலகில். இருப்பினும், எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் மனித ரோபோக்களைப் பற்றிய மஸ்க்கின் பார்வை குறித்து கியூபன் சந்தேகம் கொண்டுள்ளார். பேராசிரியர் ஜி மார்க்கெட்ஸ் போட்காஸ்டில் பேசிய கியூபன், ரோபாட்டிக்ஸ் உற்பத்தித்திறனுக்கு முக்கியமானதாக இருக்கும்போது, எதிர்காலம் மனிதனைப் போன்ற இயந்திரங்களை விட செயல்பாடு-முதல், பணி சார்ந்த ரோபோக்களில் உள்ளது. மனிதர்களைப் போல அவசியமின்றி, சுத்தம் செய்தல், சலவை வரிசைப்படுத்துதல் அல்லது தூசுதல் போன்ற நடைமுறை வேலைகளை திறம்பட செய்யக்கூடிய ரோபோக்களை அவர் கருதுகிறார். மறுபுறம், மஸ்க், மனிதநேய ரோபோக்கள் ஒரு நாள் ஸ்மார்ட்போன்களைப் போலவே எங்கும் காணப்படலாம் என்று கணித்துள்ளது, இது உலகப் பொருளாதாரத்தை மாற்றும்.எலோன் மஸ்கின் பார்வை: அன்றாட உதவியாளர்களாக மனித உருவங்கள்எலோன் மஸ்க் டெஸ்லாவின் ஆப்டிமஸ் போன்ற மனித ரோபோக்களைப் பார்க்கிறார்,…
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேந்திர குமார் பாட்னாவில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவ. 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேந்திர குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று பிஹார் தலைநகர் பாட்னா செல்கின்றனர். அவர்கள் இன்றும் நாளையும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இதன் அடிப்படையில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பிஹார் அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: சாத் பண்டிகை அக்டோபர் 28-ம் தேதி நிறைவடைகிறது. இதன்பிறகே தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு…
இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்ஜன்னா’. 2013-ம் ஆண்டு வெளியான இதன் இரண்டாம் பாகமாக ‘தேரே இஸ்க் மே’ என்ற படம் உருவாகியுள்ளது. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்திசனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் சிலமாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. நவ. 28-ல் படம் ரிலீசாகிறது. இந்நிலையில் இதன் டீஸர் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம் பற்றி ஆனந்த் எல் ராய் கூறும்போது, “காதல் என்றால் முழுமையான சரணாகதி; அது உங்களைக் குணப்படுத்தட்டும், காயப்படுத்தட்டும், மாற்றட்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த டீஸரை பாராட்டியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனுஷ்,கீர்த்தி சனோனை டேக் செய்து, உங்களைத் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கும் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றுமொரு காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் 3 ஏடிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்களும் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி.…
