கெய்ரோ: இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டுள்ளகாசா மீண்டும் கட்டி எழுப்பப்படும். அந்த பகுதியில் இருந்து தீவிரவாதம் அகற்றப்படும். ஹமாஸ் குழுவின் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்ட பிறகு காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும். ஹமாஸ் குழுவினர் ஆயுதங்களை கைவிட வேண்டும். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். காசாவில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக வெளிநாடுகளில் குடியேறலாம். காசாவை நிர்வகிக்க உள்ளூர் தலைவர்கள் அடங்கிய புதிய குழு…
Author: admin
சென்னை: சென்னையில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது என்று தெரிவித்தார். சென்னையில், டிட்கோ, பிசிஐ ஏரோஸ்பேஸ் (பிரான்ஸ்), மற்றும் தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து நடத்தும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான – ஏரோ-டெஃப்-கான் 25 (AeroDefCon 2025) என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் 19 நாடுகள் மற்றும் 300 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தொழில்துறை, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே 5,000-க்கும் மேற்பட்ட வணிக சந்திப்பு கூட்டங்களும் நடைபெறுகின்றன. இம்மாநாட்டின் கண்காட்சியில் முன்னணி நிறுவனங்கள், நடுத்தர ரக நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான – ஏரோ-டெஃப்-கான் 25 என்ற இந்த…
இரவு 9 மணிக்கு இரவு உணவு சாப்பிட மட்டுமே அந்த இரவு நேர பீஸ்ஸா, அலுவலக தின்பண்டங்கள் அல்லது முடித்த வேலைகளை நன்கு அறிந்திருக்கிறதா? இந்த பழக்கவழக்கங்கள் அமைதியாக உங்கள் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி இப்போது காட்டுகிறது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், இரவு 7-8 மணிக்கு முன் இரவு உணவை சாப்பிடுவது இருதய பிரச்சினைகளின் வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக பெண்களில். இரவு 9 மணிக்குப் பிறகு தவறாமல் தங்கள் கடைசி உணவை உட்கொண்டவர்கள் 28% பக்கவாதம் மற்றும் பிற இதயம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டனர். உங்கள் இரவு உணவை வெறுமனே மாற்றுவதன் மூலம், நீங்கள் உங்கள் வழக்கத்தை முறுக்குவதில்லை; உங்கள் இதயத்திற்கும் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கவும், நன்றாக தூங்கவும், எடையை மிகவும் திறம்பட நிர்வகிக்கவும் ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பை அளிக்கிறீர்கள். இந்த கட்டுரையில், ஆரம்பகால இரவு உணவுகள்,…
புதுடெல்லி: உ.பி.யில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.40 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உ.பி.யில் துப்புரவுப் பணியில் பெரும்பாலும் வால்மீகி சமூகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தலைநகர் லக்னோவில், பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மகாசபா அறக்கட்டளை சார்பில் மகரிஷி வால்மீகி பிரகத் திவஸ் நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக முதல்வர் யோகி பங்கேற்று பேசியதாவது: வால்மீகி பகவானை அவமதிப்பது ராமரை அவமதிப்பது போலாகும். இவர்களை வைத்து எதிர்க்கட்சிகள் சாதி அரசியல் செய்கின்றன. இதிலிருந்து தப்பிக்க வால்மீகி சமூகத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். வால்மீகி சமூகத்தினருக்கு அளிக்கப்படும் மரியாதை வால்மீகியின் மரபுக்கு செய்யும் மரியாதை ஆகும். உ.பி.யில் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர் துரதிருஷ்டவசமாக விபத்துக்குள்ளானால், அவரது குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் வழங்கும் வகையில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த தொகை அவுட்சோர்சிங் நிறுவனங்கள் மூலமாக அன்றி, அரசு நிறுவனம் மூலம்…
கடலூர்: ஊராட்சி மன்ற தேர்தலின் போது நடைபெற்ற கொலை தொடர்பான வழக்கில், கடலூர் நீதிமன்றம் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில். கடலூர் வட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராமச்சந்திரன், ரவி ஆகியோர் போட்டியிட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன், ராமச்சந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். தேர்தலில் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். இதனால் ராமச்சந்திரன் ஆதரவாளர் ஜனார்த்தனனுக்கும், ரவி ஆதரவாளர் குமார் என்பவருக்கும் முன்விரோதம் உருவானது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி ஜனார்த்தனன், அவரது ஆதரவாளர் கமலக்கண்ணன் (40) என்பவருடன் அதே பகுதியில் பேசிக்கொண்டிந்தார். அப்போது அங்கு வந்த குமாருடன் தகராறு ஏற்பட, இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பைச் சேர்ந்த ஜனார்த்தனன், கமலக்கண்ணன், சிவா, ஜெயசீலன் உட்பட 7 பேருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலக்கண்ணன்…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஓரிரு நாளில் ரூ.90 ஆயிரத்தை தொடும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம் செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதன்பிறகு, ஓரிரு நாட்கள் இறக்கமாகவும், பெரும்பாலான நாட்கள் ஏற்றமாகவும் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பவுன் தங்கம் ரூ.89 ஆயிரத்தை தொட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றும் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து…
பெருங்குடல் புற்றுநோய் (சி.ஆர்.சி), ஒரு முறை முக்கியமாக வயதானவர்களைத் தாக்கும் நோயைத் தாக்கும், இளையவர்களிடமும் மேலும் மேலும் கண்டறியப்படுகிறது. பல சுகாதார வல்லுநர்கள் அதன் ஆரம்பகால நிகழ்வுகளில் எச்சரிக்கையாக உள்ளனர், ஏனெனில் பெரும்பாலும் நோயறிதல் தாமதமானது மற்றும் நோய் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். இது ஏன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், எதைப் பார்க்க வேண்டும் என்பதைக் கண்டறிவதும் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.2040 ஆம் ஆண்டளவில், பெருங்குடல் புற்றுநோயின் சுமை ஆண்டுக்கு 3.2 மில்லியன் புதிய வழக்குகளாக அதிகரிக்கும் (63%அதிகரிப்பு) மற்றும் ஆண்டுக்கு 1.6 மில்லியன் இறப்புகள் (73%அதிகரிப்பு).இந்த உயர்வை மேலும் மோசமாக்குவது என்னவென்றால், இதுபோன்ற பெரும்பாலான வழக்குகள் நோயின் மேம்பட்ட கட்டங்களில் கண்டறியப்படுகின்றன, முக்கியமாக, அனைத்து ஆரம்ப அறிகுறிகளும் லேசான நோய்களுக்கு இன்னும் நுட்பமானதாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம். நோயாளிகள் மருத்துவ உதவியை நாடும் நேரத்தில், புற்றுநோய் ஏற்கனவே மேம்பட்ட நிலைகளை எட்டியிருக்கலாம், இதன் மூலம்…
புதுடெல்லி: சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இந்தியா வலுவான வர்த்தக உறவுகளை கொண்டிருப்பது அவசியம் என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு தீபாவளிக்கு முன் மற்றொரு முக்கிய சீர்திருத்தம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் ராஜீவ்கவுபா தலைமையிலான குழு ஏற்கெனவே இந்த சீர்திருத்தங்கள் குறித்த முதல் அறிக்கைகளை சமர்பித்துள்ளது. முழு ஐரோப்பிய ஒன்றியமும் 50 சதவீத வர்த்தகத்தை தங்களுக்குள்ளாகவே செய்து கொள்கிறது. வங்கதேசம் இந்தியாவின் 6-வது பெரிய வர்த்தகபங்குதாரர். நேபாளம் முன்பு முதல் 10 இடங்களுக்குள்ளாக இருந்தது. அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டியது மிக அவசியம். சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நமது வர்த்தகத்தை வலுப்படுத்த வேண்டும். 18 டிரில்லியன் டாலர் கொண்ட சீனப் பொருளாதாரத்தை நாம் அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாது, தவிர்க்க கூடாது. சீனாவுக்கு முக்கிய சப்ளையராக இந்தியா உள்ளது.…
சென்னை: சனாதனவாதிகளுக்கு ஒரு அம்பேத்கரிய சிந்தனையாளர் தலைமை நீதிபதியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி செய்கின்றனர். ராகேஷ் கிஷோர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயற்சித்துள்ளார். தலைமை நீதிபதி மீது இயல்பிலேயே உள்ள வன்மம்தான் இதற்கு காரணம். தலைமை நீதிபதி கவாய் பவுத்தத்தை தழுவியவர் என்றாலும் அவர் ஒரு அம்பேத்கர் சிந்தனையாளர். பவுத்தத்தை தழுவியதால் அவர்கள் தலித் ஆக மாட்டார்கள் என ராகேஷ் கிஷோரே கூறியுள்ளார். பவுத்தத்தை தழுவியவர்களை இட ஒதுக்கீடு பெறும் பிரிவினராக அங்கீகரித்துள்ளனர். அகில இந்திய அளவில் பவுத்தம் தழுவிய அனைவரையுமே பட்டியல் சமூக பிரிவினராக அங்கீகரித்து சலுகைகளை வழங்குகின்றனர். சனாதனவாதிகளுக்கு ஒரு அம்பேத்கரிய சிந்தனையாளர் தலைமை நீதிபதியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படிச் செய்கின்றனர். திட்டமிட்டு தூண்டப்பட்ட…
பருத்தி, அதன் அனைத்து வடிவங்களிலும், இந்தியாவின் பணக்கார ஜவுளி மரபு கொண்டாட்டமாகும். ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு தறி, நூலைத் தொடும் ஒவ்வொரு கையும் பல நூற்றாண்டுகள் பழமையான மற்றும் காலமற்ற ஒரு கதைக்கு பங்களிக்கிறது. ஒரு பருத்தி சேலை சொந்தமாக வைத்திருப்பது ஒரு அலமாரிக்கு கூடுதலாக உள்ளது, இது இந்த மரபுகளை உயிரோடு வைத்திருக்கும் கைவினைஞர்களுக்கு அஞ்சலி, ஒவ்வொரு நூலிலும் பதிக்கப்பட்ட வரலாறு மற்றும் பருத்தி மட்டுமே வழங்கக்கூடிய எளிமை மற்றும் நேர்த்தியுடன்.உலக பருத்தி நாளில், இந்த தாழ்மையான மற்றும் கம்பீரமான துணியின் பயணத்தைப் பாராட்ட இடைநிறுத்தப்படுவது மதிப்பு. பண்ணையிலிருந்து தறி வரை துணி வரை, பருத்தி அதனுடன் வியர்வை, திறமை மற்றும் எண்ணற்ற கைகளின் ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டு செல்கிறது. ஒவ்வொரு சேலையும் ஆடை மட்டுமல்ல; இது கலாச்சாரத்தின் கேன்வாஸ், சருமத்திற்கு ஒரு ஆறுதல், மற்றும் நேரத்தை மீறும் பாரம்பரியத்தின் கொண்டாட்டம்.சேலை பிரியர்களைப் பொறுத்தவரை, பருத்தி புடவைகள் இன்றியமையாதவை. அவை…
