புதுடெல்லி: கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றார். கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வரை அவர் குஜராத் முதல்வர் பதவியில் நீடித்தார். கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம்தேதி அவர் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து 3-வது முறையாக அவர் பிரதமராக பதவியேற்று நாட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறார். அரசின் தலைமைப் பொறுப்பில் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக பதவியேற்றேன். பூகம்பம், புயல், வறட்சி, அரசியல் குழப்பம் நிறைந்த காலத்தில் முதல்வராக பணியாற்றினேன். பல்வேறு சவால்களை கடந்து குஜராத்தை கட்டியெழுப்பினேன். நாட்டு மக்களுக்கு திறம்பட சேவையாற்றினேன். நான் முதல்வராக பதவியேற்றபோது எனது அம்மா ஓர் அறிவுரையை கூறினார். ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும். எந்த சூழலிலும் ஒரு…
Author: admin
தேர்தல் வந்துவிட்டாலே தேர்தல் ஆணையத்துக்கு எக்ஸ்ட்ரா வேலை கொடுக்க புதுப் புதுக் கட்சிகள் புத்துணர்வுடன் பூத்துக் கிளம்பும். அதில் சிலர், தங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்றுகூட திரும்பிப் பார்க்காமல், “அடுத்து நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்” என்று அனாயசமாகச் சொல்வார்கள். அந்த வகையில், தேசிய செட்டியார் பேரவை என்ற அமைப்பானது, ‘நமது மக்கள் முன்னேற்றக் கழகம்’ (நமமுக) என்ற அரசியல் கட்சியாக அண்மையில் உருமாற்றம் கண்டிருக்கிறது. மதுரையம்பதியில் இந்தக் கட்சியை அரசியல் உலகத்துக்கு அறிமுகம் செய்த அதன் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, “234 தொகுதிகளிலும் நமமுக போட்டியிட்டு தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சியாக மாறும்” என்று அக்மார்க் அதிரடி கிளப்பினார். அரசியல் பிரவேசம் குறித்து அவரை இன்னும் கொஞ்சம் பேசச் சொன்னோம். “எங்கள் கட்சியின் கொள்கையாக மாறுபட்ட புள்ளிகளை எடுத்துள்ளோம். பென்னிகுவிக் மட்டுமே முல்லை பெரியாறு அணையைக் கட்டிவிடவில்லை. அதன் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட எத்தனையோ தமிழர்களின்…
குளிர்காலம் இயற்கை உலகிற்கு அமைதியான இடைநிறுத்தத்தைக் கொண்டுவருகிறது, மேலும் உட்புற தாவரங்கள் விதிவிலக்கல்ல. உங்கள் வீடு சூடாக இருக்கும்போது, குறைக்கப்பட்ட சூரிய ஒளி மற்றும் குளிரான காற்று உங்கள் வீட்டு தாவரங்களை மெதுவாக்கவும் ஆற்றலைப் பாதுகாக்கவும் சமிக்ஞை செய்கின்றன. இந்த பருவகால மாற்றம் அவை குறைவான துடிப்பானதாக தோன்றும், ஆனால் இது அவர்களின் வாழ்க்கைச் சுழற்சியின் சாதாரண பகுதியாகும். கொஞ்சம் கவனத்துடன், உங்கள் தாவரங்கள் குளிர்ந்த மாதங்களை பாதுகாப்பாக செல்ல உதவலாம். இந்த நேரத்தில் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வது ஆரோக்கியமான, நெகிழ்ச்சியான பசுமையை பராமரிப்பதில் முக்கியமானது, இது வசந்த காலம் வரும்போது வலுவாகவும் செழிப்பாகவும் இருக்கும்.குளிர்காலத்தில் வீட்டு தாவரங்களை எவ்வாறு பராமரிப்பதுகுளிர்காலம் நெருங்கும்போது, பல வீட்டு தாவரங்கள் இயல்பாகவே ஒரு செயலற்ற கட்டத்திற்குள் நுழைகின்றன, அவற்றின் வளர்ச்சியைக் குறைத்து, ஆற்றலைப் பாதுகாக்கின்றன. இது இயற்கையான உயிர்வாழும் பொறிமுறையாகும், இது தாவரங்களின் குளிர்ந்த வெப்பநிலை, குறுகிய நாட்கள் மற்றும் குறைந்த ஒளி அளவை…
புதுடெல்லி: மொபைல் போனை பயன்படுத்தி கைரேகை, முக அங்கீகார அடையாளத்தின் மூலம் யுபிஐ வழியாக பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகமாகிறது. பொருட்களை வாங்குவது மற்றும் சேவை களை பெறுவதற்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது இதுவரை பின் நம்பர்களை அடையாளமாகக் கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்திய அரசின் தனித்துவமான அடையாள அமைப்பான ஆதாரின் கீழ் சேமிக்கப்படும் பயோமெட்ரிக் தரவுகளை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகமாகிறது. இது யுபிஐ பரிவர்த்தனையில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. பின் நம்பருக்கு மாற்றாக, கைரேகை, முக அங்கீகாரம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது நிதி மோசடிகள் பெருமளவு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பின் நம்பரைப் பொருத்தவரையில் பகிரப்பட அல்லது திருடப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், கைரேகை அல்லது முக அடையாளம் போன்ற பயோமெட்ரிக் தரவுகளை நகலெடுப்பது சாத்தியமற்றது.…
ஸ்டாக்ஹோம்: அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவ நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு விவரங்களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று வெளியிட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் எம். மார்டினிஸ், பிரிட்டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்கேல் டெவோரெட் ஆகியோர் இந்த ஆண்டு இயற்பியல் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மூன்று விஞ்ஞானிகளும் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர். குவாண்டம் ஊடுருவல் குறித்த ஆய்வுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பந்தை சுவரில் எறிந்தால், அந்த பந்து திரும்பி வரும். இது அனைவரும் அறிந்த இயற்பியல்…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மேலிட தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா உள்ளிட்ட தலைவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பின்போது தற்போதைய தமிழக அரசியல் கள நிலவரம், சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சார வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ள நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்துக்கு இந்த சந்திப்பின்போது முறைப்படியாக அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணத்தில் இபிஎஸ் கலந்துகொள்வார் என்றும் சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் கட்சிக்கு எதிராக இரு கட்சிகளும் இணைந்து பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்தும் இந்த…
அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் அதிர்வெண் என்பது ஒரு நபர் வழக்கத்தை விட அடிக்கடி தங்கள் சிறுநீர்ப்பையை காலி செய்ய வேண்டிய அவசியத்தை உணரும் ஒரு நிபந்தனையாகும். சிறுநீரகத்தின் அவ்வப்போது அதிகரிப்பு திரவ உட்கொள்ளல் அல்லது வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் ஏற்படலாம் என்றாலும், தொடர்ச்சியான அல்லது அதிகப்படியான சிறுநீர் கழித்தல் ஒரு அடிப்படை மருத்துவ சிக்கலைக் குறிக்கலாம். மருத்துவ நிலைமைகள், சிறுநீர் கோளாறுகள், மருந்துகள், உணவு மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் போன்ற காரணிகள் அனைத்தும் ஒரு நபர் எவ்வளவு அடிக்கடி சிறுநீர் கழிக்கின்றன என்பதை பாதிக்கும். “அதிகமாக” இருப்பதைப் புரிந்துகொள்வது, காரணங்களை அங்கீகரிப்பது, மருத்துவ ஆலோசனையை எப்போது பெறுவது என்பதை அறிவது சிறுநீர் அதிர்வெண்ணை திறம்பட நிர்வகிப்பதற்கும் ஒட்டுமொத்த சிறுநீர்ப்பை ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் இன்றியமையாத படிகள்.மருத்துவ நிலைமைகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை ஏற்படுத்துகின்றனநீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களின் தேசிய நிறுவனத்தின் கூற்றுப்படி, பல…
புதுடெல்லி: நவி மும்பை சர்வதேச விமான நிலையம், 3-ம் கட்ட மும்பை மெட்ரோ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மகாராஷ்டிராவின் நவி மும்பையில் ரூ.19,650 கோடி செலவில், 1,160 ஹெக்டேர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த விமான நிலையத்தின் முதல்கட்ட திட்டப் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 2 கோடி பேர் பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் 4-ம் கட்ட திட்டப் பணிகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட உள்ளன. இவை நிறைவடையும்போது ஆண்டுக்கு 9 கோடி பேர் வரை பயணம் மேற்கொள்ள முடியும். வரும் 2030-ம் ஆண்டில் நவி மும்பை சர்வதேச விமான நிலையம் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாம் கட்ட மும்பை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.12,200 கோடியில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி ஆச்சார்யா அத்ரே சவுக் முதல் கபே பரேட் வரை புதிய மெட்ரோ வழித்தடம்…
கெய்ரோ: இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டுள்ளகாசா மீண்டும் கட்டி எழுப்பப்படும். அந்த பகுதியில் இருந்து தீவிரவாதம் அகற்றப்படும். ஹமாஸ் குழுவின் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்ட பிறகு காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும். ஹமாஸ் குழுவினர் ஆயுதங்களை கைவிட வேண்டும். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். காசாவில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக வெளிநாடுகளில் குடியேறலாம். காசாவை நிர்வகிக்க உள்ளூர் தலைவர்கள் அடங்கிய புதிய குழு…
சென்னை: சென்னையில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது என்று தெரிவித்தார். சென்னையில், டிட்கோ, பிசிஐ ஏரோஸ்பேஸ் (பிரான்ஸ்), மற்றும் தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து நடத்தும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான – ஏரோ-டெஃப்-கான் 25 (AeroDefCon 2025) என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் 19 நாடுகள் மற்றும் 300 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தொழில்துறை, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே 5,000-க்கும் மேற்பட்ட வணிக சந்திப்பு கூட்டங்களும் நடைபெறுகின்றன. இம்மாநாட்டின் கண்காட்சியில் முன்னணி நிறுவனங்கள், நடுத்தர ரக நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான – ஏரோ-டெஃப்-கான் 25 என்ற இந்த…
