Author: admin

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.370 கோடியைக் கடந்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படத்தின் முன்கதையாக இப்படம் வெளியாகியுள்ளது. இதில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெளியான முதல் நாளில் இருந்தே ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் நல்ல வசூலையும் செய்து வருகிறது. இந்த நிலையில் வெளியான ஐந்து நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.370 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் ரூ.307 கோடி வசூலித்த நிலையில், வெளிநாடுகளில் ரூ.63 கோடியை இப்படம் வசூலித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இப்படத்தின் வசூல் ரூ.400 கோடியை கடந்து விடும் என்று சினிமா நிபுணர்கள் கணிக்கின்றனர். இப்படம் கன்னடத்தில் ரூ.76 கோடி, தமிழில் ரூ.24,75 கோடி, தெலுங்கில் ரூ.52.65 கோடி, மலையாளத்தில் ரூ.20.75…

Read More

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் தொடர் மழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கரூர் மாவட்டம் குளித்தலையில் அக்.3-ம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்தது. இதில் அக்.3-ம் தேதி மட்டும் 30 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த தொடர் மழை மற்றும் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப் படாததால் குளித்தலையை சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. குளித்தலை அருகேயுள்ள பொய்யாமணியை சுற்றியுள்ள கிராமங்களில் பல நூறு ஏக்கர்களில் நெல், வாழை சாகுபடி செய்துள்ளனர். இதில், 100 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும், வரத்து வடிகால் வாய்க்கால்களை சீரமைக்காததால் தண்ணீர் விரைந்து வடிய முடியாமல் வயலில் மழைநீர் தேங்கி பயிர்கள் அழுகி வருகின்றன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. மேலும், கடந்த வாரம் நகைகளை…

Read More

சமீபத்தில், ஒரு புதிய ஆப்டிகல் மாயை இணையத்தை ஒரு சுறுசுறுப்புக்கு அனுப்பியது. இதில், ஒரு வட்டத்தில் யானைகள் ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டன. முதல் தோற்றத்தில், அவர்கள் அனைவரும் நீல-ஊதா நிறத்தில் (அல்லது மாறாக வயலட்) என்று பார்த்தார்கள், அவற்றில் சில நெருக்கமான தோற்றத்தில், மற்றதை விட ஊதா நிறமாகத் தோன்றின. மேலும் கண்டுபிடிப்போம் …அதிக ஊதா நிறமாக இருப்பதற்கான மாயைபடம் ஐ.ஜி.யில் சைன்செமேஜீசியனால் பகிரப்பட்டது, “எந்த யானை மிகவும் ஊதா நிறத்தில் வண்ணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? இது மாறுமா?சிறந்த முடிவுகளுக்கு உங்கள் திரை பிரகாசத்தை உயர்த்தவும். புதிய OLED திரைகளில் சிறப்பாக செயல்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக அச்சில் வேலை செய்யாது. இந்த மாயை ஹின்னெர்க் ஷால்ட்ஸ்-ஹில்டெபிரண்ட் நான் படித்த புதிய அறிவியல் தாளை அடிப்படையாகக் கொண்டது. இது எங்கள் பார்வை அமைப்பு மற்றும் வண்ணக் கோட்பாட்டில் வழிமுறைகளின் கண்கவர் கலவையாகும். “நிர்ணயிப்பில் மட்டுமே ஊதா நிறத்தை உணரும்போது: ஒரு நிர்ணயம்…

Read More

சுற்றுச்சூழல் விதிமீறல் காரணமாக கன்னட பிக்பாஸ் சீசன் 12 வீடு அமைக்கப்பட்டிருந்த செட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கலர்ஸ் கன்னடா தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ கன்னடம் சீசன் 12 ஒளிபரப்பாகி வருகிறது. இதனை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கான செட் பிடாடி தொழில்துறை பகுதியில் உள்ள ஜாலிவுட் ஸ்டுடியோஸ் அண்ட் அட்வென்ச்சர்ஸில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அண்மையில் இந்த தளத்தில் கழிவு நீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது செட் அமைக்கப்பட்டுள்ள பகுதியின் சுற்றுப்புறத்திலேயே கழிவுநீர் வெளியேற்றப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிகே அமைப்பினர் ஸ்டுடியோவுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். கழிவுநீர் பிரச்சினைகளைத் தவிர, பிளாஸ்டிக் கப் மற்றும் காகிதத் தட்டுகள் உள்ளிட்ட திடக்கழிவுகள் முறையாக பரமாரிக்கப்படவில்லை அல்லது…

Read More

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 15 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பங்கேற்று சிறப்புரை உரையாற்றினார். அப்போது, சனாதனம் குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில், ‘கமல்ஹாசன் சங்கை அறுத்து விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி ரவிச்சந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பால்கனகராஜ் ஆஜராகி,…

Read More

கொழுப்பு கல்லீரல் நோய் வெறுமனே, ஸ்டீடோசிஸ் மற்றும் நாஷ் (ஆல்கஹால் அல்லாத ஸ்டீடோஹெபடைடிஸ்), உலகளாவிய சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாகும், இது பொதுவாக வாழ்க்கை முறை தேர்வுகள், மோசமான உணவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் தொடர்புடையது. கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் அசாதாரண கொழுப்பு படிவு இருக்கும் ஒரு நிலை, இது சாதாரணமாக செயல்படுவதைத் தடுக்கிறது. அதிர்ஷ்டவசமாக, கொழுப்பு கல்லீரல், குறிப்பாக அதன் முந்தைய கட்டங்களில், மீளக்கூடியது, ஏனென்றால் சிரோசிஸ், ஆஸ்கைட்டுகள், உணவுக்குழாய் மாறுபாடுகள், கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் புற்றுநோய் போன்ற பல வழிகளில் வெளிப்படும் அதன் சிக்கல்கள். மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் உதவியுடன், கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் சமநிலையை மீட்டெடுப்பதற்கும் நீண்ட தூரம் செல்ல வீட்டு வைத்தியம் எளிதானது.

Read More

சென்னை: போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகளை அலைக்கழிக்காமல், உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “காவேரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்குப் பின் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் முறையாக கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல் மணிகளுடன் பல நாட்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் விவசாயிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல், சாலை ஓரங்களில் நெல் மணிகளைக் குவித்து வைத்து, 15 நாட்களுக்கும் மேலாக காத்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. கொள்முதல் செய்த நெல்லை சேமித்து வைக்க போதிய இட…

Read More

எளிமையான சமையலறை பொருட்கள் உங்கள் தலைமுடியை எவ்வாறு மாற்றும் என்பதைக் கண்டறியவும். சியா விதைகள், கற்றாழை, தேங்காய் எண்ணெய், தயிர், வெங்காய சாறு அல்லது அம்லா பவுடருடன் கலக்கும்போது, ​​சக்திவாய்ந்த நன்மைகளை வழங்குகின்றன. இந்த இயற்கை வைத்தியங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன, முடி வீழ்ச்சியைக் குறைக்கின்றன, பிரகாசத்தை சேர்க்கின்றன. வலுவான, அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்காக இந்த முகமூடிகளை வாரந்தோறும் இணைக்கவும். சியா விதைகளும் தினமும் உட்கொள்ளும்போது அதிசயங்களைச் செய்கின்றன. நீங்கள் சமீபத்தில் முடிவில்லாத ஹேர்கேர் ரீல்கள் மூலம் ஸ்க்ரோலிங் செய்திருந்தால், எல்லா இடங்களிலும் ஒரு மூலப்பொருள் தோன்றுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் – சியா விதைகள். அதே சிறிய கருப்பு விதைகள் பெரும்பாலும் மிருதுவாக்கிகள் அல்லது ஒரே இரவில் ஓட்ஸாக இருக்கும், இப்போது ஒளிரும் தோல் மற்றும் நறுமணமுள்ள கூந்தலுக்கான அழகு உலகின் விருப்பமான தீர்வாகும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், புரதம், துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த சியா விதைகள்…

Read More

பிலாஸ்பூர்: இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.7) ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் பேருந்து ஒன்று சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிக்காக அங்கு விரைந்துள்ளனர். இதில் காவல் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் கால மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சிம்லாவில் இருந்தபடி நிலைமையை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் இருந்து இமாச்சலில் உள்ள குமர்வின் பகுதிக்கு 30 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது பேருந்து பிலாஸ்பூரின் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது நிலச்சரிவு காரணமாக பேருந்தின் மீது பாறைகள் மற்றும் மண் சரிந்தன. இதையடுத்து நிலச்சரிவின் இடிபாடுகளில் பேருந்து…

Read More

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார். பாமக நிறுவனர் ராமதாஸ் (86) இதய பிரச்சினைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இந்நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலையில் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அப்போது, ‘மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்களா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எனக்கு ஓய்வே கிடையாது” என்றார் ராமதாஸ். இதனிடையே, பாமக வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் மருத்துவ சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருதய சம்பந்தமாக பிரச்சினைக்கு ஆஞ்சியோகிராம் செய்த சிறப்பு…

Read More