உங்கள் பிள்ளை வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு முன்பே மகிழ்ச்சி, பதற்றம் மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகளை உணர முடியும். ஒரு ஆய்வில், 6 மாத வயதுடைய குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வெளிப்பாடுகள் மூலம் எதிர்மறை உணர்ச்சிகளை ஊகிப்பதன் மூலம் மன அழுத்தத்தை அனுபவிக்க முடியும் என்று காட்டுகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் வாதிடுவது மன அழுத்தம், கோபம், மனச்சோர்வு மற்றும் பிரிப்பு கவலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை அனுபவிப்பதில் அவர்களை பாதிக்கக்கூடும். பெற்றோர்களைக் காணும் குழந்தைகளுக்கு அடிக்கடி வாதிடுவது கவனம் மற்றும் கல்வி செயல்திறனில் சிக்கல்களைக் கொண்டுள்ளது.
Author: admin
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யார் மெஜாரிட்டியை கைப்பற்றுவது என்பதில் கூட்டணிகளுக்குள் மட்டுமல்லாது… கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குள்ளேயே நீயா நானா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிடும் புதுச்சேரியின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், தங்களது தொகுதிகளை தாங்களே தேர்வு செய்து, மக்களுக்கான நல உதவிகளை தாராளமாக வாரி வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமா… அப்படியே கிடைத்தாலும் இந்தத் தொகுதி கிடைக்குமா என்றெல்லாம் தெரியாத நிலையிலும் சிலர் பெருத்த நம்பிக்கையுடன் தொகுதிகளுக்குள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல் இரண்டு முக்கிய கூட்டணியிலும் உள்ள கட்சிகளும் தங்களுக்கு இத்தனை தொகுதிகள் என கூட்டணிக்குள்ளேயே கொடிபிடிக்கத் தொடங்கிவிட்டன. கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக-வை உள்ளடக்கிய என்டிஏ கூட்டணி புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தது. இருந்த போதும் 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் காங்கிரஸிடம் என்டிஏ…
இன்று பெரும்பாலான பெற்றோருக்கு, கவலை கல்வி வெற்றிக்கு அப்பாற்பட்டது. நல்ல நடத்தை கொண்ட குழந்தைகளை வளர்ப்பது இன்று அவசியம், சமூக மற்றும் தனிப்பட்ட அமைப்புகளில் செழித்து வளரும் மரியாதைக்குரிய, பச்சாதாபமான நபர்களை வடிவமைக்கிறது. நிரூபிக்கப்பட்ட சில முறைகளை ஆராய்வோம்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (சி.எம்.ஆர்.எல்.) பயண அட்டையிலிருந்து சிங்கார சென்னை அட்டைக்கு ஆக. 1-ம் தேதிமுதல் முழுமையாக மாற திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க வசதியாக, சி.எம்.ஆர்.எல். பயண அட்டையுடன் கூடுதலாக தேசிய பொது போக்குவரத்து அட்டை (சிங்கார சென்னை அட்டை) கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. மேலும் இந்த அட்டையை மாநகரப் பேருந்துகளிலும் பயன்படுத்தும் திட்டம் ஜன.6-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன்பிறகு, சிங்கார சென்னை அட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. இந்நிலையில்,சி.எம்.ஆர்.எல். பயண அட்டையிலிருந்து சிங்கார சென்னை அட்டைக்கு ஆக. 1-ம் தேதி முதல் முழுமையாக மாற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன (சி.எம்.ஆர்.எல்.) பயண அட்டைகளை…
மூளை ஆரோக்கியம் மிக முக்கியமானது, மேலும் வல்லுநர்கள் அதன் செயல்பாட்டை அதிகரிக்க எளிய, செலவு இல்லாத முறைகளை பரிந்துரைக்கின்றனர். மூளை அறிவியலில் ஒரு ஆய்வு மூன்று முக்கிய காரணிகளை எடுத்துக்காட்டுகிறது: உடல் உடற்பயிற்சி, சமூக தொடர்பு மற்றும் வலுவான ஆர்வங்களை வளர்ப்பது. இயக்கம் மூளை வயதானதை எதிர்த்துப் போராடுகிறது, அதே நேரத்தில் உறவுகள் சிக்கலான உயிரியல் செயல்முறைகளைத் தூண்டுகின்றன. பேஷன் கற்றலை இயக்குகிறது, நரம்பியல் நெட்வொர்க் வளர்ச்சியை பாதிக்கிறது. மூளை சந்தேகத்திற்கு இடமின்றி மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு. இது உடலில் உள்ள சில முக்கிய செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும், எனவே அதை மேல் வடிவத்தில் வைத்திருப்பது முக்கியம். ஆனால் உங்கள் மூளை செயல்பாட்டை எவ்வாறு அதிகரிப்பது? இல்லை, நீங்கள் உண்மையில் முடிவற்ற கூடுதல் அல்லது விலையுயர்ந்த சிகிச்சைகள் எடுக்க வேண்டியதில்லை. தந்திரம் எளிமையானது மற்றும் இலவசம்! மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க 3 பயனுள்ள வழிகள் இங்கே என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.…
புதுடெல்லி: சட்ட மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8 அன்று பிறப்பித்த உத்தரவில். “தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல். அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்டவிரோதம். அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக்கப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன. மறுநிறைவேற்றம் செய்து அனுப்பிவைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3…
சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் நாளை இயக்கப்பட உள்ளன. தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரில் இருந்து பொதுமக்கள் ராமேசுவரத்துக்கு சென்று, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவார்கள். இதன்படி, ஆடி அமாவாசை தினத்தில் ராமேசுவரத்துக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில், சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நாளை (ஜூலை 23) கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், பெங்களூருக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இருமார்க்கத்திலும் சேர்த்து மொத்தம் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, www.tnstc.in மற்றும் tnstc official app மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து…
திருவனந்தபுரம்: இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான எப்-35பி போர் விமானம் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14-ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அதனை சரிசெய்ய இங்கிலாந்து ராயல் விமானப் படையைச் சேர்ந்த 25 பொறியாளர் சிறப்பு உபகரணங்களுடன் அட்லஸ் விமானத்தில் கிளம்பி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் விமானத்தின் ஹைட்ராலிக் குறைபாடு பொறியாளர்களால் நிவர்த்தி செய்யப்பட்டது. இதையடுத்து, 37 நாட்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் படையினரின் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து எப்-35பி போர் விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு கிளம்பி வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வினை நோக்கி பறந்தது. இந்த விமானம் போர் போன்ற அவசர காலத்தின்போது வேகமாக புறப்படவும், செங்குத்தாக தரையிறங்கவும் கூடியது. போர் விமானத்தை பழுதுபார்க்கும் பணிக்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கியதற்கு இங்கிலாந்து அரசு நன்றி தெரிவித்துக்…
சென்னை: இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியின் 3-வது சீசன் வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இம்முறை போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசுத் தொகையும் ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபாரெஸ்ட், அமெரிக்காவின் லியாங் அவோன்டர், ஜெர்மனி யின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் ரே ராப்சன், ரஷ்யாவின் விளாடிமிர் ஃபெடோசீவ் மற்றும் 2024-ல் சேலஞ்சர்ஸ் பிரிவில் வென்றதன் மூலம் முன்னேறியுள்ள இந்தியாவின் வி.பிரணவ் ஆகியோர் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்களை புக்மைஷோ இணையதளம் வாயிலாக பெறலாம். டிக்கெட்டின் தொடக்க விலை ரூ.750 ஆகும். விஐபி டிக்கெட் விலை ரூ.3,500 ஆகும். சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்தியாவின் கார்த்திகேயன்…
சென்னை: முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும் என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் தமிழகத்தில் 1.48 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர 8 உயர் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 2,157 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது. இதில் 2,053 வகையான பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறலாம். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,500 கோடிக்கான சிகிச்சைகள் மக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலும், பல தனியார் மருத்துவமனைகளில் அந்த சேவை மறுக்கப்படுகிறது. குறிப்பாக உயிர் காக்கும் பல அறுவை சிகிச்சைகளை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில்…
