நடிகர் விதார்த் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தை கே.எஸ்.அதியமான் இயக்குகிறார். இதில் நடிகை ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு, சஞ்சித், அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலயா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார். கவியரசு ஒளிப்பதிவு செய்கிறார்.படம் பற்றி கே.எஸ்.அதியமான் கூறும்போது, “அம்மா – மகன், கணவன் – மனைவி, ஒரு காதல் -இவற்றைச் சுற்றி நடக்கும் உண்மைக்கு நெருக்கமான கதை இது. அனைவராலும் உணர்வுப்பூர்வமாக இந்த கதையை தங்களுடன் தொடர்புப் படுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். இந்த கதை உண்மையாகவே இருக்கும்” என்றார்.
Author: admin
சென்னை: சவுக்கு சங்கர் மீதான வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னுடைய யூடியூப் சேனல் செயல்பட காவல் ஆணையர் அருண் தடையாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “கருத்து சுதந்திரத்தை நல்ல நோக்கத்துக்காகவே பயன்படுத்த வேண்டுமே தவிர அதை மிரட்டும் நோக்கில் பயன்படுத்த கூடாது. வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளபோது ஊடக விசாரணை மேற்கொள்வது சரியானது அல்ல. இது தொடர்பாக சவுக்கு சங்கருக்கு உரிய அறிவுரையை அவர்தரப்பு வழக்கறிஞர் வழங்க வேண்டும். சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் விவரங்களை தமிழக உள்துறை செயலர், டிஜிபி, சென்னை காவல் துறை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு…
2025 ஆம் ஆண்டில், வீட்டு அலங்காரமானது இயற்கையுடன் மீண்டும் இணைவது பற்றியது, மேலும் பயோபிலிக் வடிவமைப்பு வழிவகுக்கிறது. வெளிப்புறங்களை கொண்டு வருவதற்கான யோசனையில் வேரூன்றி, இந்த போக்கு இயற்கை ஒளி, பசுமை, கரிம அமைப்புகள் மற்றும் மண் வண்ணங்களை கலக்கிறது, இது அமைதியான, சீரான மற்றும் உயிருடன் இருக்கும் இடங்களை உருவாக்குகிறது. நம் வாழ்க்கை பெருகிய முறையில் டிஜிட்டல் ஆகும்போது, அதிகமான மக்கள் புலன்களைத் தணிக்கும் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் உட்புறங்களுக்கு மாறுகிறார்கள். சிறந்த பகுதியாக அதை முயற்சிக்க உங்களுக்கு ஒரு பெரிய புதுப்பித்தல் தேவையில்லை. ஒரு சில சிந்தனை புதுப்பிப்புகள் மூலம், உங்கள் இடத்தை புத்துணர்ச்சியூட்டும், இயற்கையால் ஈர்க்கப்பட்ட சரணாலயமாக மாற்றலாம், இது ஒவ்வொரு நாளும் வாழ நன்றாக இருக்கும்.இந்த எளிதான அலங்கார புதுப்பிப்புகளுடன் 2025 பயோபிலிக் வடிவமைப்பு போக்கை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்ஒவ்வொரு அறையிலும் தாவரங்களை வரவேற்கிறோம்பசுமை இல்லாமல் எந்த பயோபிலிக் இடமும் முழுமையடையாது. உட்புற தாவரங்கள் உங்கள்…
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கரில் புகழ்பெற்ற வைத்தியநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புனித ஷ்ராவண மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித கங்கை நீரை எடுத்துவந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இது கன்வர் யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இக்கோயிலுக்கு சுமார் 35 பக்தர்கள் சென்ற ஒரு பேருந்தும் எதிரில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தேவ்கர் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
வாஷிங்டன்: இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். இருப்பினும் இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவீதம் வரையில் வரி விதிக்க வாய்ப்புள்ளதாக அவர் சூசகமாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது, உலக நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி பட்டியலை வெளியிட்டார். இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் இந்த புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதன்படி, கடந்த ஜூலை 9-ம் தேதி கெடு முடிய இருந்த நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்தார். இதனிடையே, பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் ஜப்பான், இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியாவுடனும் வரி விதிப்பு…
தமிழில் ‘குத்து’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்பட சில படங்களில் நடித்திருப்பர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்திக்கொலை செய்த வழக்கில் கைதாகிசிறை சென்றார். இப்போது ஜாமீனில் இருக்கிறார். அதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதுபற்றி ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சாதாரண குடிமகனுக்கு உச்ச நீதிமன்றம்தான் நம்பிக்கை அளிக்கும். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என கூறியிருந்தார். இதனால், தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, ஆபாசத் தகவல்களை அனுப்பியுள்ளனர். சிலர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்தனர். இந்நிலையில் தனக்கு ஆபாச தகவல்கள் அனுப்பிய 11 பேரின் பெயர்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ரம்யா, அவர்கள் மீது சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ரம்யா குறித்து அவதூறு பதிவுகள்…
சென்னை: அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்வதற்கான இந்திய மருத்துவர் அளிக்கும் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அவகாசம் கேட்பு: அப்போது, அமலாக்கத்துறை தரப்பில், “விசாரணை அதிகாரி பலமுறை அழைப்பாணை அனுப்பியும், விசாரணைக்கு ஒரு முறை கூட அசோக்குமார் ஆஜராகவில்லை. அவர் அமெரிக்க செல்ல அனுமதிக்க கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதற்கு இந்திய மருத்துவரின் பரிந்துரையை பெற வேண்டியது அவசியம். அவ்வாறு மருத்துவர் பரிந்துரைத்தது தொடர்பான…
இரவு கால் பிடிப்புகள் ஏற்படுவது சாத்தியமான நீரிழப்பைக் குறிக்கிறது, மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற கனிம குறைபாடுகள், ஏனெனில் இந்த பொருட்கள் தசை செயல்பாடு மற்றும் நரம்பு பரவலுக்கு முக்கியமானவை. சிறிய பிடிப்புகளுக்கு, நிறைய தண்ணீர் குடித்து உங்கள் கனிம நுகர்வு அதிகரிக்கவும். மசாஜ் நுட்பங்களுடன் இணைந்து, முன்-தூக்க நீட்சி, தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான தடுப்பு நடவடிக்கையாக செயல்படுகிறது. மறுபுறம், சில மருந்துகள் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் தசைப்பிடிப்பை மோசமாக்குகின்றன, எனவே ஒருவர் முதலில் மதிப்பீடு செய்யப்பட்டால் நல்லது.குறிப்புகள்https://www.mayoclinic.org/simptoms/foot-pain/basics/causes/sym-20050792https://pmc.ncbi.nlm.nih.gov/articles/pmc4199287/https://www.healthine.com/health/cracked-heels-vitamin- குறைபாடுhttps://www.webmd.com/diabetes/ss/slideshow-what-your-feet-sayமறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான், இந்தியாவின் மனைவியாகிவிட்டது என்று ராஜஸ்தான் எம்பி அனுமன் பெனிவால் கூறியதை கேட்டு மக்களவையில் சிரிப்பலை எழுந்தது. ராஜஸ்தானின் நாகவூர் பகுதியை சேர்ந்தவர் அனுமன் பெனிவால். வழக்கறிஞரான இவர் கடந்த 2003-ல் இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் இணைந்தார். கடந்த 2004-ம் ஆண்டில் பாஜகவில் ஐக்கியமானார். கருத்து வேறுபாடு காரணமாக 2013-ல் பாஜகவில் இருந்து வெளியேறி 2018-ல் ராஷ்டிரிய லோக்தந்ரிக் என்ற கட்சியை தொடங்கினார். ராஜஸ்தானின் நாகவூர் தொகுதி எம்பியான இவர், மக்களவையில் நேற்று ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றார். அவர் பேசியதாவது: சிந்தூர் என்றால் குங்குமம் என்று அர்த்தம். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் நெற்றியில் பாதுகாப்பு படை குங்குமத்தால் திலகமிட்டு உள்ளது. இந்து பாரம்பரியத்தின்படி ஒரு ஆண், ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமத்தால் திலகமிட்டால் இருவரும் கணவன், மனைவி ஆகி விடுவார்கள். இந்த பாரம்பரியத்தின்படி தற்போது பாகிஸ்தான், இந்தியாவின்…
சென்னை: ஆதாயக் கொலையும், ஆதாயக் கொள்ளையுமாக அடுத்தடுத்த நாள்களில் இருந்தது போலவே மது போதை மோதலிலும் அடுத்தடுத்த நாள்களில் தமிழ்நாட்டில் கொலைகள் நடந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம், வலசையூர் அருகே அரூரில் வசிக்கும் பூமாலை- சின்னபாப்பா தம்பதியை கொடூரமாக தாக்கி, அவர்களை கட்டிப்போட்டு விட்டு நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கணவர் பூமாலையும், மனைவி சின்னப்பாப்பாவும், இணைந்து விவசாயம் பார்ப்பதோடு, செங்கல் சூளையிலும் வேலை பார்த்து சொந்த உழைப்பில் பொருளீட்டி வாழ்கிற அருமையான உழைப்பாளிகள். ஒரு மகனை பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க அனுப்பி வைத்திருக்கிறார்கள். இன்னொரு மகன் தமிழ்நாட்டின் திருச்செங்கோட்டில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். உழைப்பின் உன்னதத்தை பறைசாற்றக்கூடிய உதாரண தம்பதியராய் வாழும் அவர்களின் சேமிப்பு நகையையும், பணத்தையும்தான் கொள்ளையடித்து போயிருக்கிறது கொள்ளைக்கூட்டம். காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது.…
