இதயம், மூளையுடன் சேர்ந்து, இரத்தத்தை செலுத்துவதற்கு காரணமான உடலுக்கு மிக முக்கியமான உறுப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், ஒரு “இரண்டாவது இதயம்” உள்ளது, இது உங்கள் உடலுக்குள் செயல்படுகிறது, இருப்பினும் அது உங்கள் மார்பு குழிக்குள் இல்லை. இந்த உறுப்பு பற்றி மேலும் அறிந்து கொள்வோம் …உங்கள் கன்றுகளில் “இரண்டாவது இதயம்” என்னகன்றுகளில் உள்ள மற்ற தசைகளுடன் சோலஸ் தசை, இரத்த ஓட்டத்திற்கு ஒரு வலுவான தசை பம்ப் அமைப்பை உருவாக்குகிறது. உங்கள் உடல் உங்கள் இதயத்திலிருந்து ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை உங்கள் கீழ் கால்களை அடைவதற்கு முன்பு, அதிக வேகத்தில் பெறுகிறது. இதயத்திற்குத் திரும்பும் இரத்தத்தின் செயல்முறை குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது, ஏனெனில் ஈர்ப்பு அதற்கு எதிராக செயல்படுகிறது.கன்று தசைகள் உடலின் இரண்டாம் நிலை பம்ப் பொறிமுறையாக செயல்படுகின்றன. இயக்கத்தின் போது உங்கள் கால்களில் உள்ள நரம்புகளை சுருக்கவும், உங்கள் இதயத்தை நோக்கி இரத்தத்தை மேல்நோக்கி தள்ளவும்…
Author: admin
திருப்பதி: ஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினம் முதல் மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியான இதனை அமல்படுத்த தீவிர ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆந்திர மாநில அரசு பஸ் போக்குவரத்து கழக (ஏபிஎஸ்ஆர்டிசி) நிர்வாக இயக்குநர் துவாரகா திருமலராவ் திருப்பதி அடுத்துள்ள வெங்கடகிரி வாகாடு பேருந்து பணிமனையை ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்துக்காக தற்போது வரை 750 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும் 600 பேருந்துகள் வர உள்ளன. அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. மொத்தம் உள்ள 11,000 பேருந்துகளில் 74 சதவீத பேருந்துகள் மகளிர் இலவச பயண திட்டத்துக்காக ஒதுக்கப்பட உள்ளன. இத்திட்டம் ஒருங்கிணைந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அனைத்து பஸ் நிலையங்களிலும்…
புதுடெல்லி: ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 1 முதல் 21-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடருக்கான ‘டிரா’ நிகழ்வு நேற்று சிட்னியில் நடைபெற்றது. தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய மகளிர் அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் முன்னாள் சாம்பியன்களான ஜப்பான், சீன தைபே மற்றும் வியட்நாம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 4-ம் தேதி வியட்நாமுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து 7-ம் தேதி ஜப்பானுடனும், 10-ம் தேதி சீன தைபேவுடனும் மோதுகிறது. இந்த இரு ஆட்டங்களும் சிட்னியில் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த அணிகளில் இரண்டும்…
சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சிக்காக கூகுள், யூனிட்டி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தில், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திறன்சார்ந்த பயிற்சிகள் பெற்று வருகின்றனர். மேலும் தமிழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக கூகுள் பிளே மற்றும் யூனிட்டி கேம் டெவலெப்பர் டிரைனிங் புரோகிராம் என்ற புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், கூகுள் பிளே,யூனிட்டி மற்றும் முன்னணி கேம்துறையினர் இணைந்து வழங்கும் சிறப்பு திறன் பயிற்சியாகும். இது கேம் டிசைன், டெவலப்மென்ட் மற்றும் மானிட்டைசேஷன் ஆகிய தொழில்நுட்ப திறன்களை வழங்கும். குறிப்பாக கணினி அறிவியல் துறையிலுள்ள இறுதியாண்டு இன்ஜினீயரிங் மாணவர்களுக்கும் மற்றும் நடப்பாண்டில்…
புதுடெல்லி: பஹல்காம் சம்பவத்துக்குக் காரணமான 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி என்பது குறித்தும், `ஆபரேஷன் மகாதேவ்’ குறித்த புதிய தகவல்களையும் தேசிய புலனாய்வு முகமை (என்ஏஐ) வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் கடந்த 3 மாதங்களாக இந்திய ராணுவமும் புலனாய்வு அமைப்புகளும் ஈடுபட்டு வந்தன. இதனிடையே, ஜம்மு – காஷ்மீரில் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் மாநில போலீஸார் இணைந்து நடத்திய `ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் சுலைமான் என்கிற ஃபைசல், ஹம்சா அப்ஹான், ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் சுலைமான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான், ஹம்சா அப்ஹான்…
புதுடெல்லி: பாட்மிண்டன் தரவரிசை பட்டியலை உலக பாட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி மீண்டும் 10-வது இடங்களுக்குள் நுழைந்துள்ளது. பாட்மிண்டன் தரவரிசை பட்டியலை உலக பாட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரை இறுதி வரை முன்னேறியிருந்த இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 3 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக் ஷயா சென், 2 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், 54,442 புள்ளிகள் பெற்றுள்ளார். ஹெச்.எஸ்.பிரனாய் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு 40,366 புள்ளிகளுடன் 33-வது இடத்தில் உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 17 வயதான இந்தியாவின் உன்னதி ஹூடா 4 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை…
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை தாக்கின. கம்சட்கா பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம். இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்காக சைரன் ஒலிக்கப்பட்டது. இந்நிலையில், சுமார் 4 மீட்டர் உயரம் வரையிலான சுனாமி பேரலைகள் ரஷ்யாவின் குரில் தீவு பகுதியை தாக்கியது. தொடர்ந்து ஹவாய், சிலி, ஜப்பான் மற்றும் சாலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதை ரஷ்யாவின் டாஸ் (TASS) செய்தி முகமை உறுதி…
மதுரை: சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று எழுத்தாளர் சோ.தர்மன் கூறியுள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பரிந்துரை செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் சோ.தர்மன், அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆணிவேரில் வெந்நீர் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. அவர் சாதிய மனோபாவத்துடன் செயல்படுவதாக வழக்கறிஞர் ஒருவர் குற்றம்சாட்டியது போராட்டமாக மாறிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டு நீதித்துறையின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றுவதுபோல உள்ளது. நீதிபதிகளின் தீர்ப்புகளை விவாதிக்கலாம், கருத்து கூறலாம். ஆனால், நீதிபதிகள் சாதி மனோபாவத்துடன் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை தக்க சாட்சியங்கள்…
புதுடெல்லி: டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து 12,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ள விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவின் முதன்மையான ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் இந்த ஆண்டு தனது உலகளாவிய பணியாளர்களில் 2 சதவீதத்தை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, அந்த நிறுவனம் 12,261 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேலும், இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்துடன் ஐடி அமைச்சகம் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளது. பணி நீக்க அறிவிப்புக்கு காரணமான பின்னணி என்ன என்பதை அறியும் முயற்சியில் ஐடி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கல்லீரல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, போதைப்பொருள் தொழில்துறையை நீக்குகிறார், அதன் தயாரிப்புகளை பயனற்றதாகவும் தீங்கு விளைவிக்கும் என்றும் அழைக்கிறார். கல்லீரல் இயற்கையாகவே நச்சுத்தன்மையடைகிறது மற்றும் சிறப்பு தயாரிப்புகள் தேவையில்லை என்று அவர் வலியுறுத்துகிறார். அதற்கு பதிலாக, நீரேற்றம், கருப்பு காபி, சிலுவை காய்கறிகள் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்க பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்ப்பது, வித்தைகளை விட வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு வாதிடுவதை அவர் பரிந்துரைக்கிறார். ஆரோக்கிய துறையில் டிடாக்ஸ் முறைகள் மிகவும் நட்சத்திரம். இந்த ‘அதிசய’ சாறுகள், தேநீர் மற்றும் பிற மூலிகை தயாரிப்புகளில் பெரும்பாலானவை பெரும்பாலும் நச்சுத்தன்மையில் கவனம் செலுத்துகின்றன. உடலில் இருந்து நச்சுகளை பறித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் பணத்தை நச்சுத்தன்மையற்ற தயாரிப்புகளுக்கு சிறந்த ஆரோக்கியத்தை அடைவார்கள் என்ற நம்பிக்கையில் செலவிடுகிறார்கள். போதைப்பொருள் தொழில் வளர்ந்து வருவதில் ஆச்சரியமில்லை. ஆனால்…
