புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், பிரளய் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரளய் ஏவுகணையின் இரண்டு தொடர்ச்சியான சோதனைகள் அப்துல் கலாம் தீவில் ஜூலை 28 மற்றும் 29 தேதிகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஏவுகணை அமைப்பின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தாக்கும் திறனை மதிப்பிடுவதன் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. குறிப்பிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்ததையடுத்து இந்த ஏவுகணை சோதனையின் அனைத்து நோக்கங்களும் பூரத்தி செய்யப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரளய் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட திட எரிபொருள் குவாசி-பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இது, பல்வேறு இலக்குகளை குறிவைத்து பல வகையான…
Author: admin
சென்னை: அரசு கல்லூரிகளில் உள்ள பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ் எல்பி செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,256 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 20,026 இடங்களும் உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள துணை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களுக்கு சிறப்பு பிரிவு மற்றும் பொது கலந்தாய்வு என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் ஜூலை 30-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆக. 2 மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களைத் தேர்வு செய்யலாம்.
துபாய்: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட். அதேவேளையில் கேப்டன் ஹர்மன் பிரீத், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தரவரிசையில் நாட் ஸ்கைவர் பிரண்ட் கடைசியாக 2023-ம் ஆண்டு முதலிடம் வகித்திருந்தார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 32 வயதான நாட் ஸ்கைவர் பிரண்ட் 160 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் 731 புள்ளிகளுடன் அவர், முதலிடத்தை பிடித்துள்ளார். ஸ்மிருதி மந்தனா 728 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கும், நடுவரிசை பேட்டிங் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15-வது இடத்தில் இருந்து 13-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர். பந்து வீச்சு தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 4-வது இடத்தில்…
சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாழ்நாள் முழுவதும் இந்த விசாரணை முடிவுக்கு வராது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலைக்கு பணம் பெற்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கர நராயணன் வாதத்தில் கூறியதாவது: இந்த லஞ்ச ஊழல் வழக்கில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வழக்கை முறையாக தமிழக காவல்துறை நடத்தவில்லை. வழக்கில் முன்னாள் அமைச்சர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர்கள் வழக்கை முறையாக நடத்தாமல் இழுத்தடிக்கின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் இந்த விசாரணை தற்போது முடியாது, எனவே பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களை விசாரிக்க…
மதுரை: ‘திமுக தொண்டர்கள் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்ததாலேயே சு.வெங்கடேசன் எம்.பி.யாகியுள்ளார்’ என்று மாநகராட்சி கூட்டத்தில் திமுக மேயரும், அக்கட்சியின் கவுன்சிலர்களும் கொந்தளித்தனர். இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை கடைசி இடம் பிடித்தது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்திருந்தார். மதுரை நகரின் தூய்மை மோசமாக உள்ளது, மாநகராட்சி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தூய்மையைப் பாதுகாக்க முதல்வர் தலையிட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் குழுத் தலைவர் மா.ஜெயராமன் பேசும்போது, “தூய்மை நகரங்கள் பட்டியலில் பல்வேறு குறைபாடுகள், முரண்பாடுகள் உள்ளன. கீழடி ஆய்வை மதிக்காத மத்திய அரசின் அறிக்கையை நாம் ஏன் மதிக்க வேண்டும்? பல லட்சம் பேர் பங்கேற்ற சித்திரை திருவிழா, திருப்பரங்குன் றம் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் மாநகராட்சி சிறப்பான ஏற்பாடு செய்திருந்தது. நாடு முழுவதும் இருந்து வந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டுக்கு மாநகராட்சி…
ஆரோக்கியத்திற்கு காய்கறிகள் முக்கியம். டாக்டர் ஷெர்லி கோஹ் தினமும் போதுமான காய்கறிகளை சாப்பிட அறிவுறுத்துகிறார். பெரியவர்களுக்கு ஐந்து பகுதிகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் தேவை. சமைத்த காய்கறிகளுக்கு ஒரு ஃபிஸ்ட்ஃபுல் ஒரு நல்ல நடவடிக்கை. மூலப்பொருட்களுக்கான தொகையை இரட்டிப்பாக்கவும். காய்கறிகள் நார்ச்சத்து வழங்குகின்றன, இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்துகின்றன, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கின்றன. வண்ணமயமான தட்டு என்பது ஆரோக்கியமான உணவு என்று பொருள். குழந்தைகளுக்கும் தினமும் ஐந்து பகுதிகள் தேவை. ஆரம்பத்தில் இருந்தே, உங்கள் காய்கறிகளையும் கீரைகளையும் சாப்பிட மக்கள் உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கலாம். காய்கறிகள் மற்றும் இலை கீரைகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியம். காய்கறிகளில் உள்ள ஃபைபர் உள்ளடக்கம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்தையும் மூளை ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கின்றன. ஆனால் இந்த நன்மைகளைப் பெற நீங்கள் எவ்வளவு காய்கறிகளை சாப்பிட வேண்டும்? காய்கறிகளுக்கு வரும்போது தினசரி உட்கொள்ளல் என்னவாக இருக்க வேண்டும்?…
சென்னை: கிராம ஊராட்சிகளில் சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: இது உழைக்கும் வர்க்கத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. விலைவாசி உயர்வு, மின்கட்டணம், குடிநீர் கட்டணம், பால்விலை உயர்வு என தள்ளாடும் சிற்றுண்டிக் கடைகளை மொத்தமாக இழுத்து மூட முடிவு செய்து விட்டதா திமுக அரசு. ஏழை, எளிய மக்களின் தோள்களின் மீது நிதிச் சுமை ஏற்றப்படுவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. இந்த உரிமக் கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் 48 வகையான உற்பத்தி தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக் கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிக வருவாயும், லாபமும் தரக்கூடிய கடைகளுக்கு உரிமம்…
சென்னை: ஊராட்சி பகுதிகளில் எந்தெந்த தொழில் தொடங்க உரிமம் பெற வேண்டும் என்ற பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. தமிழக ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் தொழில் தொடங்க உரிமம் பெறுவதற்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி சட்டங்களி்ல் திருத்தம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்தெந்த தொழிலுக்கு உரிமம் பெற வேண்டும் என்ற பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி தையல் பொருட்கள், தையல் இயந்திரங்கள் உற்பத்தி, அனைத்து வகையான மின் மற்றும் மின்னணு பொருட்களின் உற்பத்தி, மின்சார மோட்டார்கள் மற்றும் பம்புகளின் உற்பத்தி, மின்சார மோட்டார்கள் மற்றும் பம்புகளை சேமித்து விற்பனை செய்தல், கல் வெட்டுதல், காகித பொருட்களின் உற்பத்தி, அனைத்து வகையான உலோகங்களின் உற்பத்தி, பாத்திரங்கள் மற்றும் பாத்திரங்களை உற்பத்தி செய்தல், மோட்டார்கள் மற்றும் பம்புகளின் உற்பத்தி, தொழில் துறை எந்திரங்களின் உற்பத்தி, மோட்டார் வாகன பாகங்கள் உற்பத்தி, கட்டுமான பொருட்களின் உற்பத்தி, பொறியியல் பணிகள், செங்கல் அறைகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை…
புதுடெல்லி: “பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக அறிவித்தார். மக்களவையில் நேற்று ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம், சிஆர்பிஎப், ஜம்மு காஷ்மீர் போலீஸ் என கூட்டுப் படையினர் எடுத்த நடவடிக்கையில் அவர்கள் கொல்லப்பட்டனர். ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் சுலைமான் என்கிற பைசல், அப்ஹான், ஜிப்ரான் என்ற 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சுலைமான் என்பவர் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் ஏ அந்தஸ்தில் இருந்த கமாண்டர் அதேபோல் அப்ஹானும் ஜிப்ரானும் லஷ்கர் தீவிரவாதிகள். தீவிரவாதிகள்…
புற்றுநோயை விலக்கி வைப்பதற்கான 7 வழிகள் (30 ஆண்டுகளாக இந்த நிலையைப் படித்த ஒரு ஆராய்ச்சியாளரிடமிருந்து)
