குளியலறை சுத்தம் செய்வது வலுவான மணம் கொண்ட ரசாயன கிளீனர்களைப் பயன்படுத்துவதைக் குறிக்க வேண்டியதில்லை. உங்கள் குளியலறையை புதியதாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று ஏற்கனவே உங்கள் சமையலறையில் உள்ளது. உப்பு, பேக்கிங் சோடா மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் கலவை கறைகள், சோப்பு மோசடி மற்றும் நாற்றங்களில் வேலை செய்கிறது. வணிக தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது இது பாதுகாப்பானது, மலிவு மற்றும் சூழல் நட்பு.பப்மெட் சென்ட்ரலின் ஆராய்ச்சி பேக்கிங் சோடாவின் சுத்தம் மற்றும் டியோடரைசிங் திறனை ஆதரிக்கிறது. வீட்டு சுத்தம் செய்யும் தயாரிப்புகள் குறித்த ஒரு ஆய்வில், பேக்கிங் சோடா உள்ளிட்ட “பச்சை மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட” சூத்திரங்களின் பயன்பாடு, வழக்கமான கிளீனர்களுடன் ஒப்பிடும்போது குறைவான சுவாச அபாயங்களுடன் தொடர்புடையது, அவற்றின் பாதுகாப்பு மற்றும் துப்புரவு பாத்திரத்தை உறுதிப்படுத்தியது.சால்டின் சிராய்ப்பு நடவடிக்கை மற்றும் கலவையை மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ள உதவும் எண்ணெயின் திறனுடன் நீங்கள் இணைக்கும்போது, மூவரும் கடுமையான…
Author: admin
திருப்பதி: திருப்பதி மாவட்டம், ஏர்பேடு மண்டலம், செங்காலபல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஜி. யுகந்தர் (33). இவர் கடந்த 2010-ம் ஆண்டில் இண்டர்மீடியட் (பிளஸ் 2) படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து யுகந்தர், கடப்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை அதிகாரிகளின் உதவியுடன், ஹைதராபாத்தில் உள்ள பி.ஆர். அம்பேத்கர் தொலைதூர கல்வி பல்கலைக்கழகத்தில் படித்து அடுத்தடுத்து 4 பட்டப் படிப்புகளை அவர் நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து 3 பட்ட மேற்படிப்புகளை படித்து முடித்துள்ளார். சிறப்பாக படித்து அதிக மதிப்பெண் பெற்றதால் தங்கப் பதக்கம் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்தது. வரும் 30-ம் தேதி பல்கலைக்கழகத்தின் 26-வது ஆண்டு விழாவில், யுகந்தருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படம் ‘கார்மேனி செல்வம்’. லட்சுமி பிரியா, அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ள இதை, பாத்வே புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ளார். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் சக்ரி இயக்கியுள்ளார் இவர் ஏற்கெனவே ‘குறையொன்றுமில்லை’ படத்தை கார்த்திக் ரவி என்ற பெயரில் இயக்கியவர். படம் பற்றி அவர் கூறும்போது, “நேர்மையான, உண்மையான மற்றும் உலகளவில் தொடர்புப்படுத்தக் கூடிய கதையை கொண்ட படம் இது. பணத்தின் மீது ஏற்படுகிற ஆசை, ஒருவர் வாழ்க்கையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது ஒன் லைன். இதில் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் இருவருமே இயக்குநர்கள் என்பதால், நடிப்பைப் பெறுவது எளிதாக இருந்தது. சில இடங்களில் அவர்களிடம் திருத்தம் சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது. அதற்குச் சரியான விளக்கத்தை அவர்கள் எதிர்பார்த்தார்கள். சொன்னதும் ஏற்றுக்கொண்டு நடித்தார்கள். இருவருக்குமான…
சென்னை: பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: செப்.26, 27, 29, 30 தேதிகளில்… பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி செப்.26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 2,430 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 400 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 250 பேருந்துகளும் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,380…
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.27) மீண்டும் ஒரு பவுன் ரூ.85,000-ஐ கடந்துள்ளது. வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த 23-ம் தேதி 85,000-ஐ கடந்திருந்தது. அன்றைய தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.85,120 என சந்தையில் விற்பனையானது. இது வரலாறு காணாத உச்சமாக அமைந்தது. இந்நிலையில், அதற்கடுத்த இரண்டு நாட்கள் தங்கம் விலை சற்று குறைந்தது. தொடர்ந்து நேற்றைய தினம் (செப்.26) தங்கம் விலை…
பலர் மெலிதான, மெலிந்த தொடைகளை அடைய விரும்புகிறார்கள், ஆனால் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து கொழுப்பை “குறைக்க” முடியாது என்பதை அறிந்து கொள்வது அவசியம். தொடை கொழுப்பு பெரும்பாலும் மரபியல், ஹார்மோன்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் பாதிக்கப்படுகிறது, பொருள் முடிவுகள் நேரத்தையும் நிலைத்தன்மையையும் எடுக்கும். உங்கள் தொடைகளை மெலிதான மிகச் சிறந்த வழி, முழு உடல் உடற்பயிற்சிகளும், வலிமை பயிற்சி, இருதய உடற்பயிற்சி மற்றும் சீரான ஊட்டச்சத்து ஆகியவற்றின் கலவையாகும். நல்ல தூக்கம், மன அழுத்த மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான அன்றாட பழக்கவழக்கங்களுடன் ஜோடியாக இருக்கும்போது, இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கிறது, தசைகளை டன் செய்கிறது, மேலும் காலப்போக்கில் உங்கள் கால்களில் மெலிந்த, மேலும் வரையறுக்கப்பட்ட தோற்றத்தை உருவாக்க உதவுகிறது.8 பயிற்சிகள் உங்கள் தொடைகளை மெலிதானவை1. குந்துகைகள்குந்துகைகள் மிகவும் பயனுள்ள குறைந்த உடல் நகர்வுகளில் ஒன்றாகும், குவாட்ரைசெப்ஸ், ஹாம்ஸ்ட்ரிங்ஸ் மற்றும் குளுட்டிகளை ஈடுபடுத்துகின்றன, அதே நேரத்தில் மையத்தை…
புதுடெல்லி: போலி என்கவுன்ட்டர் என புகார் அளிக்கப்பட்டதால், மாவோயிஸ்ட் கமாண்டர் கதா ராமசந்திர ரெட்டியின் உடலை பாதுகாத்து வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் கடந்த 22-ம் தேதி நடத்திய என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கமாண்டர் கதா ராமசந்திர ரெட்டி. ஆனால், போலி என்கவுன்ட்டரில் தனது தந்தை கொல்லப்பட்டதாக கதா ராமசந்திர ரெட்டியின் மகன் ராஜ சந்திரா குற்றம்சாட்டினார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் பண்டிகை விடுமுறை காரணமாக, அங்கு அவரது மனு அவசரமாக விசாரிக்கப்படவில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இவரது மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா, ஏ.ஜி.மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, கதா ராமசந்திர ரெட்டி உடல் மட்டும் மருத்துவமனையில் உள்ளது.…
மும்பை: 2-வது முறையாக இந்தியா வந்துள்ளார் மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட். இந்நிலையில், களத்தில் கடினமாக உழைக்க தனக்கு உத்வேகம் அளித்தது கிரிக்கெட் வீரர்கள்தான் என அவர் தெரிவித்துள்ளார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள அவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2014-ல் அவர் இந்தியா வந்திருந்தார். தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார். “சிறு வயது முதலே நான் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் வீரர்களின் திறன், அவர்களின் உழைப்பு, அதற்காக அவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை பார்த்து வளர்ந்தேன். அவர்களது கடின உழைப்பு எனக்கு உத்வேகம் தந்தது. அந்த வகையில் நாம் சார்ந்துள்ள விஷயத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்” என மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் போல்ட் தெரிவித்தார். ஜமைக்காவில் இருந்து…
மண் சாலைகளில் நடக்கும் கார் பந்தயத்தை மையப்படுத்தி ‘மட்டி’ என்ற படத்தை இயக்கிய பிரகபல், அடுத்து இயக்கியுள்ள படம், ‘ஜாக்கி’. பிகே 7 ஸ்டூடியோஸ் தயாரித்து வழங்கும் இந்தப் படம் கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ‘மட்டி’யில் நடித்த யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி பிரகபல் கூறும்போது, “மதுரையில் கிடா சண்டை பந்தயத்தை நேரில் பார்த்தேன். அதைப் பார்க்கும் போதே, சுவாரஸ்யமாக இருந்தது. அந்த சண்டைக்குள் ஒரு வாழ்வியலையும், கிடாவுக்கும் அதை வளர்ப்பவர்களுக்குமான பிணைப்பையும் கவனித்தேன். அது தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிப் போன விளையாட்டு என்பது புரிந்தது. உடனே மதுரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 2022-ம் ஆண்டு முதல் அங்கேயே தங்கி கதையை எழுத ஆரம்பித்தேன். பிறகு 4 வலுவான கிடாக்களைத் தேடி…
சென்னை: தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார். தமிழகத்தில் விஷ்ணுபிரசாத் (கடலூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), ஜோதிமணி (கரூர்), ராபர்ட் புரூஸ் (திருநெல்வேலி), ஆர்.சுதா (மயிலாடுதுறை), கோபிநாத் (கிருஷ்ணகிரி), சசிகாந்த் செந்தில் (திருவள்ளூர்) ஆகிய 9 பேர் காங்கிரஸ் எம்பிக்களாக உள்ளனர். தமிழகத்தில் 2019-ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் நீடித்து வரும் காங்கிரஸின் மகளிரணி நிர்வாகியாக இருந்தவரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்த்திருப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் கரூர் மாவட்டத்தில் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த விவகாரம் கூட்டணி கட்சிகள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கிடையில், 2026 தேர்தலில் அதிக இடம், ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி குரல் கொடுத்துள்ளார். சட்டப்பேரவை கட்சித் தலைவரான ராஜேஷ்குமாரும் ஆட்சியில்…
