பலர் மெலிதான, மெலிந்த தொடைகளை அடைய விரும்புகிறார்கள், ஆனால் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து கொழுப்பை “குறைக்க” முடியாது என்பதை அறிந்து கொள்வது அவசியம். தொடை கொழுப்பு பெரும்பாலும் மரபியல், ஹார்மோன்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் பாதிக்கப்படுகிறது, பொருள் முடிவுகள் நேரத்தையும் நிலைத்தன்மையையும் எடுக்கும். உங்கள் தொடைகளை மெலிதான மிகச் சிறந்த வழி, முழு உடல் உடற்பயிற்சிகளும், வலிமை பயிற்சி, இருதய உடற்பயிற்சி மற்றும் சீரான ஊட்டச்சத்து ஆகியவற்றின் கலவையாகும். நல்ல தூக்கம், மன அழுத்த மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான அன்றாட பழக்கவழக்கங்களுடன் ஜோடியாக இருக்கும்போது, இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கிறது, தசைகளை டன் செய்கிறது, மேலும் காலப்போக்கில் உங்கள் கால்களில் மெலிந்த, மேலும் வரையறுக்கப்பட்ட தோற்றத்தை உருவாக்க உதவுகிறது.8 பயிற்சிகள் உங்கள் தொடைகளை மெலிதானவை1. குந்துகைகள்குந்துகைகள் மிகவும் பயனுள்ள குறைந்த உடல் நகர்வுகளில் ஒன்றாகும், குவாட்ரைசெப்ஸ், ஹாம்ஸ்ட்ரிங்ஸ் மற்றும் குளுட்டிகளை ஈடுபடுத்துகின்றன, அதே நேரத்தில் மையத்தை…
Author: admin
புதுடெல்லி: போலி என்கவுன்ட்டர் என புகார் அளிக்கப்பட்டதால், மாவோயிஸ்ட் கமாண்டர் கதா ராமசந்திர ரெட்டியின் உடலை பாதுகாத்து வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் கடந்த 22-ம் தேதி நடத்திய என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கமாண்டர் கதா ராமசந்திர ரெட்டி. ஆனால், போலி என்கவுன்ட்டரில் தனது தந்தை கொல்லப்பட்டதாக கதா ராமசந்திர ரெட்டியின் மகன் ராஜ சந்திரா குற்றம்சாட்டினார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் பண்டிகை விடுமுறை காரணமாக, அங்கு அவரது மனு அவசரமாக விசாரிக்கப்படவில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இவரது மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா, ஏ.ஜி.மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, கதா ராமசந்திர ரெட்டி உடல் மட்டும் மருத்துவமனையில் உள்ளது.…
மும்பை: 2-வது முறையாக இந்தியா வந்துள்ளார் மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட். இந்நிலையில், களத்தில் கடினமாக உழைக்க தனக்கு உத்வேகம் அளித்தது கிரிக்கெட் வீரர்கள்தான் என அவர் தெரிவித்துள்ளார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள அவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2014-ல் அவர் இந்தியா வந்திருந்தார். தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார். “சிறு வயது முதலே நான் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் வீரர்களின் திறன், அவர்களின் உழைப்பு, அதற்காக அவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை பார்த்து வளர்ந்தேன். அவர்களது கடின உழைப்பு எனக்கு உத்வேகம் தந்தது. அந்த வகையில் நாம் சார்ந்துள்ள விஷயத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்” என மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் போல்ட் தெரிவித்தார். ஜமைக்காவில் இருந்து…
மண் சாலைகளில் நடக்கும் கார் பந்தயத்தை மையப்படுத்தி ‘மட்டி’ என்ற படத்தை இயக்கிய பிரகபல், அடுத்து இயக்கியுள்ள படம், ‘ஜாக்கி’. பிகே 7 ஸ்டூடியோஸ் தயாரித்து வழங்கும் இந்தப் படம் கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ‘மட்டி’யில் நடித்த யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி பிரகபல் கூறும்போது, “மதுரையில் கிடா சண்டை பந்தயத்தை நேரில் பார்த்தேன். அதைப் பார்க்கும் போதே, சுவாரஸ்யமாக இருந்தது. அந்த சண்டைக்குள் ஒரு வாழ்வியலையும், கிடாவுக்கும் அதை வளர்ப்பவர்களுக்குமான பிணைப்பையும் கவனித்தேன். அது தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிப் போன விளையாட்டு என்பது புரிந்தது. உடனே மதுரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 2022-ம் ஆண்டு முதல் அங்கேயே தங்கி கதையை எழுத ஆரம்பித்தேன். பிறகு 4 வலுவான கிடாக்களைத் தேடி…
சென்னை: தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார். தமிழகத்தில் விஷ்ணுபிரசாத் (கடலூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), ஜோதிமணி (கரூர்), ராபர்ட் புரூஸ் (திருநெல்வேலி), ஆர்.சுதா (மயிலாடுதுறை), கோபிநாத் (கிருஷ்ணகிரி), சசிகாந்த் செந்தில் (திருவள்ளூர்) ஆகிய 9 பேர் காங்கிரஸ் எம்பிக்களாக உள்ளனர். தமிழகத்தில் 2019-ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் நீடித்து வரும் காங்கிரஸின் மகளிரணி நிர்வாகியாக இருந்தவரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்த்திருப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் கரூர் மாவட்டத்தில் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த விவகாரம் கூட்டணி கட்சிகள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கிடையில், 2026 தேர்தலில் அதிக இடம், ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி குரல் கொடுத்துள்ளார். சட்டப்பேரவை கட்சித் தலைவரான ராஜேஷ்குமாரும் ஆட்சியில்…
வலது விலா எலும்புக் கூண்டுக்கு அடியில் கல்லீரல் உள்ளது, எனவே கொழுப்பு கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் இந்த குறிப்பிட்ட பிராந்தியத்தில் மந்தமான வலி அல்லது அச om கரியத்தை உருவாக்குகிறது. இந்த நிலையின் அச om கரியம் ஒரு மந்தமான உணர்வை உருவாக்குகிறது, இது அழுத்தம் அல்லது முழுமையை உருவாக்குகிறது, ஆனால் குத்துதல் அல்லது கூர்மையான வலியை உருவாக்காது. அச om கரியம் சாப்பிட்ட பிறகு, அல்லது உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. தொடர்ச்சியான அச om கரியத்தின் இருப்பு, கொழுப்பு குவிப்பு காரணமாக கல்லீரல் விரிவடைந்து வீக்கமடைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது, அதே நேரத்தில் அதன் செயல்பாட்டு செயல்திறனை இழக்கிறது. இந்த அறிகுறியின் பிற குறிகாட்டிகளுடன், கொழுப்பு கல்லீரல் நோயை அதன் ஆரம்ப கட்டங்களில் அடையாளம் காண மருத்துவர்கள் உதவும்.தோல் மற்றும் முடி மாறுகிறதுஒரு கொழுப்பு கல்லீரல் நோய் தோல் மற்றும் முடி தோற்றத்தில் அதன் தாக்கத்தின் மூலம் உடலின் வெளிப்புறத்தில்…
Last Updated : 27 Sep, 2025 09:08 AM Published : 27 Sep 2025 09:08 AM Last Updated : 27 Sep 2025 09:08 AM லக்னோ: உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகில் உள்ள பகல்வாரா கிராமத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மதரசா செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து பயாக்பூர் துணை ஆட்சியர் அஸ்வினி குமார் பாண்டே தலைமையில் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அங்கு ஆய்வு நடத்தச் சென்றனர். அப்போது அதிகாரிகள் மாடிக்குச் செல்வதை மதரசா நடத்துபவர்கள் தடுக்க முயன்றனர். எனினும் போலீஸார் உதவியுடன் அக்கட்டிடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாடியில் இருந்த கழிப்பறை பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து பெண் போலீஸார் அதன் கதவை திறந்தபோது, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 40 சிறுமிகள் ஒருவர் பின் ஒருவராக கழிப்பறையில் இருந்து வெளியே வந்தனர்.…
லக்னோ: இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 420 ரன்களும், இந்தியா ‘ஏ’ அணி 194 ரன்களும் எடுத்தன. 226 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 46.5 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 412 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 44, மானவ் சுதார் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 91.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 210 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 176…
வாஷிங்டன்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் நேற்று முன்தினம் அமெரிக்கா வந்தடைந்தனர். இருவரும் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு நேற்றுமுன்தினம் மாலை 4.52 மணிக்கு சென்றனர். அப்போது அதிபர் ட்ரம்ப் பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டிருந்தார். அவரை சந்திப்பதற்காக ஷெபாஸ் ஷெரீப்பும், அசிம் முனிரும் சுமார் 30 நிமிடத்துக்கு மேல் காத்திருந்தனர். அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு வந்தார். பின்னர் பிரதமர் ஷெபாஸ், ராணுவ தளபதி அசிம் ஆகியோரை தனது ஓவல் அலுவலகத்தில் அதிபர் ட்ரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு முடிந்த பின்னர் மாலை 6.18 மணிக்கு ஷெபாஸ், அசிம் இருவரும் காரில் புறப்பட்டு சென்றனர். இந்தச் சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், “பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் இருவரும் சிறந்த தலைவர்கள்” என்று கூறினார்.
அடுத்த ஆண்டு நடக்கும் 98-வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்திப் படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகி இருக்கிறது. நீரஜ் கேவான் இயக்கி உள்ள இதில், இஷான் கட்டார், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று வெளியானது. பல்வேறு சர்வதேசப் பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பஷாரத் பீர் என்பவர் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தின் சில காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் தணிக்கைக் குழு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பின்னர் மறு பரிசீலனைக் குழு படத்தைப் பார்த்து பல்வேறு மாற்றங்களைச் செய்யுமாறு கூறியது. 11 கட் கொடுத்தப் பிறகு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்து உள்ளனர்.
