சென்னை: கிண்டியில் ரூ.23.10 கோடியில் கட்டப்பட்ட புவியியல், சுரங்கத்துறை அலுவலகம் மற்றும் நடிகர் ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சென்னையில் சாலை, தெருக்களின் பெயர்ப் பலகைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில், கிண்டி தொழிற் பேட்டை வளாகத்தில் தரை மற்றும் 4 தளங்களுடன் 40,528 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் ரூ.23.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் தலைமை அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதுதவிர, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ‘மக்கள் கலைஞர்’ என்றும் ‘தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட்’ என்றும் அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் வசித்துவந்த நுங்கம்பாக்கம், கல்லூரி சாலைக்கு `ஜெய்சங்கர் சாலை’ என்றும், நாடக நடிகரும், தமிழகத்தின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவரும், நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தையுமான…
Author: admin
மாரடைப்பு எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்காது, மேலும் பலர், குறிப்பாக 65 வயதிற்குட்பட்ட பெண்கள், அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள், அவை நுட்பமானவை அல்லது பிற காரணங்களுக்காகக் கூறப்படுகின்றன. அடைபட்ட தமனிகள் பெரும்பாலும் முக்கிய குற்றவாளி என்று கருதப்பட்டாலும், பிற காரணிகள் தீவிரமான இருதய நிகழ்வுகளைத் தூண்டும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் 1,474 மாரடைப்புகளிலிருந்து 15 ஆண்டுகளுக்கும் மேலான தரவுகளை பகுப்பாய்வு செய்தது மற்றும் பெண்களில் பல வழக்குகள் வழக்கத்திற்கு மாறான காரணிகளால் ஏற்படுகின்றன, அவை அடிக்கடி கவனிக்கப்படுவதில்லை அல்லது தவறாக கண்டறியப்படுகின்றன. இந்த மறைக்கப்பட்ட காரணங்களைப் புரிந்துகொள்வது துல்லியமான சிகிச்சை மற்றும் நீண்டகால மீட்புக்கு முக்கியமானது.மறைக்கப்பட்ட மாரடைப்பு பெண்களுக்கு காரணங்கள்ஆண்களின் மாரடைப்புகளில் 75% பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியைக் கொண்டிருந்தாலும், இது 47% பெண்களின் வழக்குகளை மட்டுமே விளக்குகிறது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. வழக்கத்திற்கு மாறான காரணங்களில் எம்போலிஸங்கள், மன அழுத்தம் தொடர்பான…
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துக்கு, ஐ.நாவுக்கு இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட் அழுத்தமான பதிலடியை பதிவு செய்தார். பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐநா சபையில் பேசிய ஐ.நாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட், “பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை பாதுகாக்கிறது. தோல்வியை வெற்றியாக சித்தரிக்க முயற்சிக்கிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானின் விமானத் தளங்கள் அழிக்கப்பட்ட பிறகு, அந்த நாட்டின் ராணுவம் இந்தியாவிடம் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியது. அழிக்கப்பட்ட ஓடுபாதைகள் மற்றும் எரிந்த விமான நிலையங்கள் பாகிஸ்தானுக்கு வெற்றியைப் போலத் தோன்றினால், பாகிஸ்தான் அதை அனுபவிக்க வரவேற்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 பொதுமக்களைக் கொன்ற ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ தீவிரவாத அமைப்பை பாதுகாக்க இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்…
சென்னை: நீலக்கொடி கடற்கரை திட்டத்தை எதிர்த்து சென்னையில் மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கடற்கரைகளில் அமல்படுத்தப்படும் நீலக்கொடி கடற்கரை, கடல் மேம்பாலம், எண்ணெய் எரிவாயு போன்ற திட்டங்களை எதிர்த்து தென்சென்னை அனைத்து மீனவ கிராம சபை சார்பாக மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. சபையின் ஒருங்கிணைப்பாளர் என்.ரத்தினவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நீலக்கொடி திட்டம் வந்தால் கடற்கரையில் இருக்கக்கூடிய மீனவர்களின் கட்டுமரங்கள், வலைகள், ஃபைபர் படகுகள் ஆகியவற்றை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படும். இத்திட்டம் உலக நாடுகளுக்கு பொருந்தும். ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருந்தாது. ஏனென்றால் இங்கு கரைதொழில் செய்யக்கூடிய மீனவ சமூகங்கள் நிறைய உள்ளன. மீன் பிடித்தொழில் நடைபெறும் இடத்தில் நிச்சயமாக மீன் வாடை வரும். ஆனால் ஒரு வெளிநாட்டவர் நம் கடற்கரைக்கு வந்தால் மீன் வாடை வருகிறது என்ற புகார் நிச்சயம் அளிப்பார்.…
பக்கவாதம் பெரும்பாலும் வயதானவர்களைத் தாக்கும் ஒரு நோயாக கருதப்படுகிறது, ஆனால் உண்மையில், அது அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் யாரையும் தாக்கக்கூடும். உட்கார்ந்த மற்றும் மன அழுத்த வாழ்க்கை முறைகள் இன்று வழக்கமாக இருப்பதால், 30 மற்றும் 40 களின் முற்பகுதியில் மக்களிடையே கூட ஆபத்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, பக்கவாதம் மிகவும் தடுக்கக்கூடியது. மூன்று தினசரி பழக்கவழக்கங்கள், நீண்ட ஆயுள் வல்லுநர்கள் மற்றும் ஆரோக்கியமான வயதான மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி, பக்கவாதம் அபாயத்தை கணிசமாகக் குறைத்து, நீண்ட கால இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கலாம்.அவை சவாலான அல்லது விலையுயர்ந்த மாற்றங்கள் அல்ல. அவை மிகவும் எளிமையானவை, அறிவியல் ஆதரவு பழக்கவழக்கங்கள், அவை எவரும் தங்கள் வாழ்க்கை முறையை இணைக்க முடியும், வயதானவர்கள் அல்லது ஃபிட்டராக இருந்தாலும்.கார்னலைச் சேர்ந்த எம்.டி. மற்றும் நீண்ட ஆயுள் மருத்துவர் டாக்டர் வாசிலி எலியோப ou லோஸ், ஆரோக்கியமான, நோய் இல்லாத வாழ்க்கை முறையை ஒருவர்…
புதுடெல்லி: உ.பி. அயோத்தியில் இருந்து 3 முறை எம்.பி.யாக இருந்தவர் பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார். அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த அவர் செய்தியாளர் கூட்டத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அயோத்தியில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இனி இங்கு தங்க உரிமை இல்லை. அவர்கள் விரைவில் வெளியேற வேண்டும். அண்டை மாவட்டங்களான கோண்டா மற்றும் பஸ்திக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் அயோத்தியில் இந்துக்கள் முழு உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடுவோம். பாபர் மசூதி அல்லது வேறு எந்த மசூதிக்கும் பதிலாக புதிய மசூதி அயோத்தியில் கட்ட அனுமதிக்கப்படாது” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு, இந்திய சட்டத்தின் கீழ் வெறுப்புப் பேச்சு குற்றமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மற்றும் கட்சியினர் கட்டியாரின் இந்த கருத்துக்கு அமைதி காக்கின்றனர். உச்ச…
பெங்களூரு: மகளிர் உலகக் கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை அளித்துள்ளார். வரும் 30-ம் தேதி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் முதல் சுற்று நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன. முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் முனைப்புடன் இந்தத் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி களம் காண்கிறது. மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்களின் சந்திப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. பெங்களூரு மற்றும் கொழும்பு நகரில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியின்…
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள். 9,133 வாக்காளர்கள் போலி முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பாஜக எம்பி அனுராக் தாக்கூர் அண்மையில் பேசியிருந்தார். இதையடுத்து, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விசாரணை மேற்கொண்டது. பின்னர், இது தவறான தகவல் என விளக்கமும் அளித்திருந்தது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து, விசாரணை நடத்தி, தீர்வு கான வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்கான வாக்காளர் தரவு பகுப்பாய்வில் கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரிய வாக்காளர்களாக கருதப்படுகின்றனர். 4,370 இரட்டை வாக்காளர் பதிவுகளும், போலி முகவரியுடன் 9,133 வாக்காளர்களும் உள்ளனர். குறிப்பாக, வீட்டு எண் 11, வாக்குச்சாவடி எண் 84-ல் 30 வாக்காளர்…
இன்றைய போட்டி உலகில், அதிகமான இளைஞர்கள் திறன்களை விரைவாக வளர்க்க முற்படுவதால், ஒரு விவாதம் உருவாகி வருகிறது: இது அதிக மதிப்பைக் கொண்டுள்ளது-ஒரு பகுதிநேர வேலை அல்லது விலையுயர்ந்த ஊதியப் படிப்பு? ஏடிபி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, 94% பேர் டிகிரி அல்லது சான்றிதழ்களின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்களை விஞ்சுவதை விட அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். கட்டண படிப்புகள் கட்டமைக்கப்பட்ட கற்றல் மற்றும் நற்சான்றிதழ்களை உறுதியளிக்கும் அதே வேளையில், பகுதிநேர வேலைகள் உண்மையான சவால்களுக்கு வெளிப்பாட்டை வழங்குகின்றன, பாடப்புத்தகங்கள் பெரும்பாலும் கற்பிக்க முடியாத திறன்களை வளர்க்கின்றன. உண்மை என்னவென்றால், கட்டண படிப்புகள் தத்துவார்த்த அறிவை உருவாக்க உதவக்கூடும், ஆனால் பகுதிநேர வேலைகள் குழுப்பணி, பின்னடைவு மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற அத்தியாவசிய மென்மையான திறன்களை வளர்க்க உதவுகின்றன. இந்த திறன்கள் பெரும்பாலும் சிறந்த வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு மொழிபெயர்க்கின்றன. கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளி விரிவடையும் போது, நிஜ உலக அனுபவத்தின்…
சண்டிகர்: இந்தியா – ரஷ்யா இடையே நிலவும் நீண்ட கால உறவுக்கு ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்களே சாட்சியாக உள்ளன என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறினார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விமர்சித்து, இந்தியா மீது 50 சதவீத வரிவிதித்தது. இந்நிலையில் விமானப்படையில் கடந்த 1960-ம் ஆண்டு இணைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மிக்-21 போர் விமானங்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி, விமானப்படை தளபதி ஏ.பி.சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் போர்களில் மிக்-21 போர் விமானங்கள் முக்கிய பங்காற்றியது குறித்து எடுத்துரைக்கப்பட்டன. 1965 மற்றும் 1971-ம் ஆண்டு நடைபெற்ற…
