லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி போராடிவந்த பருவநிலை செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் நேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு அவர் ஜோத்பூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக லடாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து லடாக்கின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாங்சுக் லடாக்கின் பாதுகாப்பிற்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து கவனிக்கப்படுகிறது. அமைதியை விரும்பும் லடாக்கில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது முக்கியம். இதை உறுதி செய்வதற்கும், பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்கும், வாங்சுக் மேலும் பாதகமாகச் செயல்படுவதைத் தடுப்பது முக்கியம். எனவே குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, ஜோத்பூர் சிறைக்கு மாற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பொது நலனுக்காக, அவரை லே மாவட்டத்தில் வைத்திருப்பது நல்லதல்ல. உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரக் குழுவின் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருந்தபோதிலும்,…
Author: admin
சென்னை: திமுகவுடன் இணைந்து நடிகர் விஜய் நடத்தும் இந்த நாடக அரசியலை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.திமுகவும் நடிகர் விஜய்யும் செபாஸ்டின் சைமனும் (சீமான்) இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மக்கள் நல அரசியல் மறைந்து வாக்கு திருட்டுத் தேர்தல் அரசியல் மலிந்து விட்டது. மக்கள் நலனுக்கான விரைவுத் திட்டங்கள், நாட்டு நலனுக்காக தொலைநோக்கு திட்டங்கள், மக்களின் உணவு, குடிநீர், கல்வி, மருத்துவம்,தொழில் சார்ந்த வளர்ச்சிக்கான மறுமலர்ச்சிக்கான கொள்கை சார்ந்த திட்டங்கள் இவற்றை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்பதும் தேர்தலை சந்திப்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களாக இருந்தது. ஆனால் இன்று தமிழகத்தில் யார் அதிகமாக ஊழல் செய்து கொள்ளையடித்தார்களோ? யார் பெரும் பணத்தை தேர்தல் வியாபாரத்தில் முதலீடு செய்து விளம்பர அரசியல், லாட்டரி அரசியல், இலவச பொருட்கள்…
இரவில் தாமதமாக உணவைப் பிடிப்பது பாதிப்பில்லாததாக உணரக்கூடும், ஆனால் விஞ்ஞானம் இல்லையெனில் பரிந்துரைக்கிறது. உடலுக்குள் ஓடும் 24 மணி நேர கடிகாரம் இரவு உணவு சாப்பிடுவதால் முரட்டுத்தனமாக பாதிக்கப்படலாம், மேலும் ஒரு ஹார்மோன் அதற்காக குற்றம் சாட்டப்படலாம். ஸ்லீப் ஹார்மோன் என்று நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம், ஆனால் ஆய்வுகள் மெலடோனின் நம்மை தூக்கத்தை ஏற்படுத்துவதை விட அதிகம் என்று கூறுகின்றன. மெலடோனின் உடலின் கடிகாரம் அல்லது சர்க்காடியன் தாளங்களில் தலையிடலாம். காலப்போக்கில், இந்த பொருத்தமின்மை நீரிழிவு அபாயத்தை உயர்த்தலாம், இன்சுலின் சுரப்பைக் குறைக்கும் மற்றும் நாள்பட்ட வளர்சிதை மாற்ற நோய்களை உயர்த்தக்கூடும். இருட்டிற்குப் பிறகு நீங்கள் சாப்பிடும்போது என்ன நடக்கும்சூரியன் மறையும் போது, உடலின் சர்க்காடியன் தாளங்கள் அதை ஓய்வு பயன்முறையில் மாற்றுகின்றன, மேலும் இது மெலடோனின் அளவு பொதுவாக உயர்ந்து, இரவு முழுவதும் அதிகமாக இருக்கும். மெலடோனின் ஓய்வெடுக்க உதவுவதில் சிறந்தது என்றாலும், இது நம் உடல் உணவைக் கையாளும்…
புதுடெல்லி: நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை பொறுப்பாளர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் மற்றும் கொலம்பியாவுக்கு ராகுல் காந்தி செல்வார் என்றும் அங்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த தலைமுறை உலகத் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடுவார் என்றும் கூறப்படுகிறது. நாடுகளின் அதிபர்கள் மற்றும் மூத்த தலைவர்களை ராகுல் காந்தி சந்திப்பார் என்றும் ஜனநாயக மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவார் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி உயர்வுக்குப் பிறகு இந்தியா தனது வணிகத்தை பரவலாக்க திட்டமிட்டு செயல்பட்டு வரும்…
நியூயார்க்: ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்ற பாலியல் குற்றச்சாட்டு ஆவணத்தில் தனது பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். புதிதாக வெளியான 6 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில், எலான் மஸ்க் கடந்த 2016 டிசம்பர் 6-ம் தேதி வர்ஜீனியா தீவுகளில் உள்ள எப்ஸ்டைன் தீவுக்கு சென்றாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பகிர்வில், “இது தவறானது” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். வேறு எந்த விளக்கங்களையும் சொல்லாமல் ஒற்றை வார்த்தையில் மஸ்க் பதிலளித்துள்ளது அவர் தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது. எப்ஸ்டீன் லீக்ஸ் பின்னணி என்ன? கடந்த 2015-ஆம் ஆண்டு வர்ஜீனியா கிஃபர் என்ற அமெரிக்க பெண், பிரிட்டனைச் சேர்ந்த கிஷ்லெய்ன் மேக்ஸ்வெல் என்பவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் தொழில் இடைத்தரகருடன்…
சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 4,510 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.150 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சர்வதேச, ஆசிய, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, 819 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். பணியின்போது காலமான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியாளர்களின் வாரிசுகளான எஸ்.தீபா, ஆர்.தினேஷ், எம்.தினேஷ்குமார், பி.ஹரிஷ் ஆகிய 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: கல்வி என்றால் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மட்டுமின்றி, உடற்கல்வியும் முக்கியம். இதனாலேயே, சென்னையில் நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும்…
மும்பை பாலிவுட் மற்றும் கணேஷ் சதுர்த்தியைப் பற்றியது என்று நீங்கள் நினைத்திருந்தால், இதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். மகாராஷ்டிராவின் கவர்ச்சியான தலைநகரான மும்பை, துடிப்பான துர்கா பூஜோ காட்சிகளையும் கொண்டுள்ளது. அக்டோபர் மற்றும் மும்பை கொல்கத்தாவின் டைனியர் பதிப்பாக மாறுகிறது (கொல்கத்தா அதன் துர்கா பூஜோ கொண்டாட்டங்களுக்கு உலக புகழ்பெற்றது என்றாலும்). மும்பையில் உள்ள துர்கா பூஜா பாண்டல்கள் இசை மற்றும் எண்ணற்ற கலாச்சார சடங்குகளுடன் நகரத்தை ஒளிரச் செய்கின்றன. இந்த குறிப்பில், மும்பையில் ஒன்பது பந்தல்களைப் பார்ப்போம், இந்த துர்கா பூஜை 2025 ஐ நீங்கள் தவறவிடக்கூடாது.பம்பாய் துர்கபரி சமிதிகும்பல்லா ஹில்பம்பாய் துர்கபாரி சமிதி நகரத்தின் சிறந்த துர்கா பூஜையில் ஒன்றை ஏற்பாடு செய்கிறார். இது மும்பையின் மிகப் பழமையான ஒன்றாகும், இது 1930 களில் இருந்து, பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியது. இங்கே இருக்கும்போது, ஒரு நட்பு வளிமண்டலத்தைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். “எகலா” சிலைகள் மற்றும் சந்தி பூஜா…
எலோன் மஸ்க் சமீபத்தில் ஒரு ஏக்கம் நிறைந்த வீடியோ கிளிப்பைப் பகிர்ந்து கொண்டார், முன்னாள் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்சோ அபேவை டெஸ்லா மாடலில் ஒரு டெஸ்ட் டிரைவ் வழங்கினார், இது பார்வையாளர்களிடையே புன்னகையைத் தூண்டியது. முதலில் 2015 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட இந்த வீடியோ, பிரதமரின் அமெரிக்காவின் அரசு வருகையின் போது மஸ்க்குக்கும் அபேவிற்கும் இடையிலான லேசான மற்றும் உற்சாகமான தொடர்பைப் பிடிக்கிறது. மின்சார வாகன சவாரிக்கு அபேவின் எதிர்வினை உண்மையானது மற்றும் மகிழ்ச்சியடைந்தது, இது அதிநவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்வத்தையும் புகழையும் பிரதிபலிக்கிறது. இந்த தருணம் இராஜதந்திரம், புதுமை மற்றும் தனிப்பட்ட வசீகரம் ஆகியவற்றின் கலவையை எடுத்துக்காட்டுகிறது, உலகளாவிய தலைவர்களும் தொழில்நுட்ப தொலைநோக்கு பார்வையாளர்களும் முறையான அமைப்புகளுக்கு அப்பால் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதற்கான அரிய பார்வையை வழங்குகிறது.எலோன் மஸ்க்ஸ் டெஸ்லா உலகளாவிய கவனத்தை ஈர்த்த சவாரிஇந்த வீடியோவில் எலோன் மஸ்க் தனிப்பட்ட முறையில் அபேவை டெஸ்லா மாடலில் கட்டுப்படுத்தப்பட்ட…
புதுடெல்லி: பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாகத் தெரிவித்து அவற்றைத் தடை செய்யக் கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இதனிடையே பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தேசிய தலைநகரப் பகுதிகளில்(என்சிஆர்) கடந்த 2024-ம் ஆண்டு தடை விதித்தது. இதனால் பட்டாசு தொழிலை மட்டுமே நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமயிலான அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே. பரமேஷ்வர்,…
நடப்பு ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான போட்டி பரபரப்பான முறையில் ஸ்கோர்கள் சமன் ஆக சூப்பர் ஓவர் வரை சென்றது, இதில் அர்ஷ்தீப் சிங்கின் அட்டகாசமான பந்து வீச்சினால் இந்தியா அபார வெற்றி பெற்று தோற்காத அணியாக இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. துபாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் பலருக்கும் சந்தேகங்களையும் கேள்வியையும் எழுப்பிய சம்பவம் சூப்பர் ஓவரில் ஷனகா ரன் அவுட் என்று தெரிந்தும் ஏன் அவுட் கொடுக்கவில்லை என்பதே. சூப்பர் ஓவரில் முதலில் இலங்கை பேட் செய்தது, ஏனோ சத நாயகன் அதிரடி பதுன் நிஷாங்காவை இறக்காமல் இருந்தனர் என்பது புரியாத புதிர். ஷனகா 4-வது பந்தில் சஞ்சு சாம்சன் த்ரோவுக்கு கிளியராக ரன் அவுட் ஆனார். அர்ஷ்தீப் சிங் வீசிய யார்க்கர் லெந்த் பந்தை மிஸ் செய்த ஷனகா கிரீசைத் தாண்டி வந்தார். சஞ்சு அவரை ரன் அவுட் செய்தார்.…
