Author: admin

சென்னை: மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் சிறப்​பாக செயல்​பட்ட 5 போலீ​ஸாருக்கு ‘காந்​தி​யடிகள் காவலர்’ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் பாராட்​டத்​தக்க வகை​யில் பணி​யாற்​றியதற்​காக விழுப்​புரம் மண்​டலம், மத்​திய நுண்​ணறி​வு பிரிவு காவல் ஆய்​வாளர் ப.நட​ராஜன், விழுப்​புரம் மாவட்​டம், ஆரோ​வில் காவல் நிலைய உதவி ஆய்​வாளர் மா.சத்​யாநந்​தன், கள்​ளக்​குறிச்சி மாவட்​டம், சின்ன சேலம் காவல் நிலைய உதவி ஆய்​வாளர் சு.மணி​கண்​டன், கடலூர் மாவட்​டம், புத்​தூர் காவல் நிலைய உதவி ஆய்​வாளர் க.நட​ராஜன் மற்​றும் சேலம் மாவட்​டம், மத்​திய நுண்​ணறி​வுப் பிரிவு தலை​மைக் காவலர் வா.பெ.கண்​ணன் ஆகிய 5 பேருக்கு 2025-ம் ஆண்​டுக்​கான ‘காந்​தி​யடிகள் காவலர்’ விருது வழங்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இவ்​விருது, முதல்​வ​ரால் 2026-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி குடியரசு தினத்​தன்று வழங்​கப்​படும். இவ்​விருதுடன், பரிசுத் தொகை​யாக ஒவ்​வொரு​வருக்​கும் ரூ.40 ஆயிரம் வழங்​கப்​படும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்ளது.

Read More

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: மத்​திய மேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், தெற்கு ஒடி​சா, வடக்கு ஆந்​திரா இடையே நேற்று இரவு கரையை கடந்​தது. இதன் தாக்​கம் காரண​மாக தமிழகத்​தில் இன்று (அக்​.3) முதல் வரும் 8-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தமிழகத்​தில் இன்று காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, சேலம் மாவட்​டங்​களி​லும்.நாளை திரு​வள்​ளூர், சென்​னை,செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், ராணிப்பேட்​டை, வேலூர் மற்​றும் ராம​நாத​புரம் மாவட்​டங்​களி​லும், வரும் 5-ம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்​கை, தேனி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய, மித​மான மழை…

Read More

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தசரா பரிசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் பணவீக்கம், விலைவாசியை கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) மத்திய அரசு அறிவிக்கிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை மார்ச் மாதம் 2 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இந்த உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப் படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்தது. தற்போது அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 58 சதவீதமாக…

Read More

பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘அகண்டா 2: தாண்டவம்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் ‘அகண்டா 2: தாண்டவம்’. ஆனால், இறுதிகட்டப் பணிகள் தாமதத்தினால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் ஓடிடி, தொலைக்காட்சி, இசை என அனைத்து உரிமைகளும் பெரும் விலைக்கு விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. போயபட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அகண்டா 2: தாண்டவம்’. இதன் முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தை 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீஸர் இணையத்தில் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் சம்யுக்தா, ஆதி பினிஷெட்டி, ஹர்ஷாலி மால்ஹோத்ரா உள்ளிட்ட பலர் பாலகிருஷ்ணா உடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப் பதிவாளராக ராம் பிரசாத் மற்றும் சந்தோஷ் , எடிட்டராக…

Read More

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, தெற்கு ரயில்வே சார்​பில் மொத்​தம் 108 சிறப்பு ரயில்​கள் இயக்​கப்பட உள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டம் சார்​பில், மகாத்மா காந்​தி​யின் 156-வது பிறந்​த​நாள் கொண்​டாட்​டம் மற்​றும் தூய்மை சேவை பிரச்​சார நிறைவு நாள் நிகழ்வு சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் நேற்று நடை​பெற்​றது. தெற்கு ரயில்வே கூடு​தல் பொது மேலா​ளர் பி. மகேஷ் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். அவருடன் சென்னை ரயில்வே கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங், கூடு​தல் கோட்ட மேலா​ளர்​கள் தேஜ் பிர​தாப் சிங், அங்​கூர் சவு​கான் உள்​ளிட்ட அதி​காரி​கள், ஊழியர்​கள் கலந்​து​கொண்​டனர், ரயில்​களில் செல்​லும்​போது எப்​படி கவன​மாக இருக்க வேண்​டும் என நாடகங்​கள் மற்​றும் பாடல்​கள் மூல​மாக​வும்,ரயில்​களில் மற்ற பயணி​களுக்கு பாதிப்பு இல்​லாமல் பயணம் மேற்​கொள்ள வேண்​டும் என்​பது தொடர்​பாக​வும் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்​டது. இதைத்​தொடர்ந்​து, தெற்கு ரயில்​வே​யின் கூடு​தல் பொது மேலா​ளர் பி.மகேஷ், சென்னை கோட்ட மேலா​ளர் சைலேந்​திர…

Read More

பெங்களூரு: காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டதால், ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே (82), தசரா விடுமுறைக்காக டெல்லியில் இருந்து கடந்த 29-ம் தேதி பெங்களூரு வந்திருந்தார். கடந்த 30-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ‘பேஸ்மேக்கர்’ கருவி: அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத் துடிப்பில் மாறுபாடு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது. சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளதால், அவர், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேற்று மருத்துவமனையில் அவரை…

Read More

ஜீவா நடித்துள்ள படத்துக்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஃபேலிமி’ என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமானவர் நிதிஷ் சஹாதேவ். அப்படத்துக்குப் பிறகு தமிழில் ஜீவா நடிக்கும் படத்தை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஒட்டுமொத்தமாக முடிக்கப்பட்டு இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்துக்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்து வருகிறார். இதில் பிரார்த்தனா, மீனாட்சி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் ஜீவாவுடன் நடித்து வருகிறார். முழுக்க காமெடி கலந்த கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் நிதிஷ் சஹாதேவ். இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட முனைப்பு காட்டி வருகிறது படக்குழு. ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் தவிர்த்து, நான்கு படங்கள் தயாரித்து வருகிறார் கண்ணன் ரவி. இப்படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்து விட்டு ராஜேஷ் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்த…

Read More

பார்சிலோனா: என் ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது. இதனிடையே தனியார் ஊடகம் ஒன்றுக்கு அஜித் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முயற்சிக்கிறேன். எனவே, விளையாட்டுக்கும் இந்திய திரைப்படத் துறைக்கும் முக்கியத்துவத்தைம் தரும் ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டறிய வேண்டும். ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. மேலும் மோட்டார் ஸ்போர்ட்ஸை ஒரு தளமாகப் பயன்படுத்த விரும்புகிறேன். சர்வதேச அளவில் நிறைய விருதுகள் வழங்கப்பட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. சர்வதேச பார்வையாளர்களை அதிக அளவில் ஈர்ப்பதே இதன் நோக்கம். உதாரணமாக, கொரிய படங்கள் இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன. அதேபோல், இந்திய படங்களுக்கும் அதே மாதிரியான வரவேற்பு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவை பிரபலமாக உள்ளன…

Read More

சென்னை: மத்​திய அரசு நிதி வழங்​கியதைத் தொடர்ந்து தனி​யார் பள்​ளி​களில் இலவச சேர்க்கை மீண்​டும் தொடங்​கப்​பட்​டுள்​ளது. ஏற்​கெனவே சேர்க்​கப்​பட்​ட​வர்​களில் தகு​தி​யான மாணவர்​களை ஆர்​டிஇ ஒதுக்​கீட்​டின்​கீழ் பதிவு செய்​வதற்​காக 10 நாள் காலஅவ​காசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ) தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடங்​களில் ஏழைக் குழந்​தைகள் சேர்க்​கப்​படு​வார்​கள். மாநிலம் முழு​வதுமுள்ள 8 ஆயிரத்​துக்​கும் மேலான தனி​யார் பள்​ளி​களில் சுமார் 1 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இந்த திட்​டத்​தில் எல்​கேஜி அல்​லது ஒன்​றாம் வகுப்​பில் சேருபவர்​கள் 8-ம் வகுப்பு வரை கட்​ட​ணம் செலுத்​தாமல் இலவச​மாக படிக்​கலாம். தமிழகத்​தில் 2013-ல் அமலான இந்த ஆர்​டிஇ திட்​டத்​தின்​கீழ் இது​வரை 4 லட்​சம் குழந்​தைகள் தனி​யார் பள்​ளி​களில் படித்து வரு​கின்​றனர். இதற்​கிடையே, தேசிய கல்விக்கொள்​கையை தமிழகம் ஏற்க மறுப்​ப​தால் பள்​ளிக்​கல்​வித் துறை திட்​டங்​களுக்​கான நிதியை மத்​திய அரசு நிறுத்தி வைத்​துள்​ளது. அதில், ஆர்​டிஇ திட்ட நிதி​யும் ரூ.600 கோடி வரை வழங்​கப்​பட​வில்​லை.…

Read More

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை ராமர் மேற்கொண்டுள்ளார். பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், ‘நண்டு’ ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போது இப்படம் நவம்பர் 7-ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Read More