இந்தியா சீனா இடையிலான நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 26 முதல் மீண்டும் தொடங்க உள்ளது. சில தினங்களுக்கு முன்பு சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியா சீனா இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையேயான தொடர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்த மாத இறுதிக்குள் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. இரு தரப்பு விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நடந்து வந்தன. நேரடி விமான சேவையை மீண்டும் அமல்படுத்துவது மற்றும் திருத்தப்பட்ட விமான சேவை ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து இதில் பேசப்பட்டன. இந்த அறிவிப்பை தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம், வரும் அக்டோபர்…
Author: admin
“தயவுசெய்து சினிமாவை கொல்லாதீர்கள். ஒருவருக்கொருவர் பாராட்டுங்கள்” என்று நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ‘ஓஜி’ படத்தின் பெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ‘ஓஜி’ படத்தின் முந்தைய பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார் பவன் கல்யாண். மேலும், இப்படத்தில் ஜப்பானுக்கு சென்று சில காட்சிகளை படமாக்க இயக்குநர் விரும்பினார். ஆனால், தன்னால் முடியாமல் போய்விட்டதை நினைத்து வருந்துவதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் பவன் கல்யாண். மேலும், பவன் கல்யாண் பேசும்போது, “ரசிகர்களுக்கு படத்துக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. பலர் தங்களது குடும்பங்களை விட்டுப் பிரிந்து பணிபுரிந்து வருகிறார்கள். இயக்குநர் சுஜித் தனது மனைவியையும் குழந்தையையும் ஒன்றரை மாதமாகப் பார்க்கவில்லை. ஆனால், அனைவரும் படும் கஷ்டங்களை அறியாமல் ரசிகர்கள் இணையத்தில் சண்டையில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை நிறுத்துமாறும் எனது ரசிகர்களையும், மற்ற…
கோவை: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். நூற்றாண்டை கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய இயக்கம். வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி போன்ற எண்ணற்ற தலைவர்களை உருவாக்கிய இயக்கம். ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் இருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமிற்கு நேரில் வந்து பார்வைிட்ட…
Last Updated : 02 Oct, 2025 09:56 PM Published : 02 Oct 2025 09:56 PM Last Updated : 02 Oct 2025 09:56 PM கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி, ‘நாயகன்’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் ட்ரெண்டில் இணைந்துள்ளது ‘நாயகன்’. நவம்பர் 6-ம் தேதி இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது 71-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு ‘நாயகன்’ ரீரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான மெருக்கேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘நாயகன்’. 1987-ம் ஆண்டு வெளியான இப்படம் பெருமளவில் கொண்டாடப்பட்டது. இப்போது இப்படத்தினை கல்ட் க்ளாஸிக் என்று கொண்டாடி வருகிறார்கள். இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களும் இதன் வெற்றிக்கு ஒரு காரணம். இதில் ஜனக ராஜ், சரண்யா பொன் வண்ணன், டெல்லி கணேஷ்,…
நாம் சமையல் மற்றும் முறைகளில் இறங்குவதற்கு முன், சியா விதைகள் ஏன் இந்த மிகைப்படுத்தலுக்கு தகுதியானவை என்பதைப் புரிந்துகொள்வது மதிப்பு. அவர்கள் நவநாகரீகமானவர்கள் அல்ல; அவை உண்மையான ஊட்டச்சத்து அடர்த்தியானவை. உங்கள் தலைமுடிக்கு அவை மிகவும் நல்லது.ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை: இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் உங்கள் உச்சந்தலையில் உணவு போன்றவை. அவை வீக்கத்தைக் குறைக்கின்றன, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன, மேலும் உங்கள் மயிர்க்கால்களை வளர்க்க உதவுகின்றன, இதனால் உங்கள் இழைகள் வலுவாகவும் பிரகாசமாகவும் வளர்கின்றன.புரதத்தால் நிரம்பியுள்ளது: முடி அடிப்படையில் புரதத்தால் (கெராடின்) ஆனது, மற்றும் சியா விதைகள் அதை ஆதரிக்க ஒரு நல்ல தாவர அடிப்படையிலான அளவை வழங்குகின்றன.ஆக்ஸிஜனேற்றங்களுடன் ஏற்றப்பட்டுள்ளது: சியா விதைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உச்சந்தலையில் மற்றும் முடியை சேதப்படுத்தும் இலவச தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுகின்றன, இது மெலிந்து சாம்பல் நிறத்தை தடுக்க உதவுகிறது.இரும்பு மற்றும் துத்தநாகம் அதிகம்: இந்த இரண்டு தாதுக்களும் முடி வளர்ச்சிக்கு அவசியம்,…
பயனர்களின் உரையாடலை மைக்ரோபோன் மூலம் ஒட்டுக் கேட்கிறதா இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் என்பதற்கு அந்த தளத்தின் தலைவர் ஆடம் மொஸேரி விளக்கம் அளித்துள்ளார். மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது ஃபேஸ்புக்) அதனை வாங்கியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் பில்லியன் கணக்கான ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இச்சூழலில் இந்த தளத்தை பயன்படுத்தி வரும் பெரும்பாலான பயனர்களுக்கு ஒரு சந்தேகம் எப்போதும் இருப்பது உண்டு. அது என்னவென்றால், இன்ஸ்டா பயனர்கள் தங்களது நண்பர்களுடன் கலந்து பேசியது விளம்பரமாக இன்ஸ்டா ஃபீடில் வருவதுதான். இதனால் பயனர்களின் உரையாடலை போனில் உள்ள மைக்ரோபோன் மூலம் இன்ஸ்டா தளம் ஒட்டுக் கேட்கிறதா என்பதுதான் அந்த ஐயம். அதற்கு இப்போது ஆடம் மொஸேரி வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். “நிச்சயம் பயனர்கள் பேசுவதை மைக்ரோபோன் மூலம்…
சுஜித் இயக்கத்தில் நானி நடிக்கும் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓஜி’ படத்தின் இயக்குநர் சுஜித். இவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது நானி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதன் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு நானி – சுஜித் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள். முன்னதாக, நானி படத்தின் பணிகளை பல மாதங்களாகவே செய்து வந்தார் சுஜித். இதன் பொருட்செலவு அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர் மாறியுள்ளார். தற்போது நிகாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘ப்ளடி ரோமியோ’ என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை. இப்படத்தில் நானியுடன் நடிக்கவிருப்பவர்கள் உள்ளிட்ட விவரங்கள் எதையும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால், இப்படம் ஒரு டார்க் காமெடி பாணியில் இருக்கும் எனவும், மிகவும் சிரமப்பட்டு படமாக்கக் கூடிய கதை…
உணவு, டூம்ஸ்கிரோலிங், கேமிங், அதிகப்படியான பார்ப்பது அல்லது போதைப் பொருள் துஷ்பிரயோகம் ஆகியவற்றால் நீங்கள் அதிகமாக இருக்கிறீர்களா? டாக்டர் ஸ்மித்தின் கூற்றுப்படி, இந்த அடையாளம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது, “ஏனென்றால் நாம் அனைவரும் இதை ஓரளவிற்குச் செய்கிறோம். இதன் பொருள் இது நாள்பட்ட மன அழுத்தத்தை நீண்ட நேரம் கவனிக்காமல் இருக்க அனுமதிக்கிறது.” “நாம் மன அழுத்தத்தை எவ்வாறு உணர்ச்சியற்றவராக இருக்கலாம், ஆனால் செயல்பாடு ஒன்றுதான். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மறுக்க அனுமதிக்கும் பொறி தான், ஏனெனில் மன அழுத்தம் அமைதியாக பின்னணியில் உருவாகிறது. நாங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது இன்னும் போதைப்பொருளாக உணர்கிறோம், ஏனெனில் இது அத்தகைய உடனடி நிவாரணத்தை அளிக்கிறது,” என்று அவர் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவில் கூறினார். “கவனச்சிதறல் மற்றும் உணர்ச்சியற்ற தன்மை ஆகியவற்றிற்கான உங்கள் சொந்த விருப்பத்தேர்வுகள் நீங்கள் நிறைய நடக்கும்போது மிகவும் கட்டாயப்படுத்தப்படுவதை நீங்கள் கவனிக்கிறீர்களா? அது ஆல்கஹால், உணவு, டூம் ஸ்க்ரோலிங்,…
சென்னை: கால்பந்து விளையாட்டு உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி இந்தியா வருவதை உறுதி செய்துள்ளார். இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “இந்திய சிறப்பு மிக்க நாடு. 14 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வந்த போது நான் கண்ட அனுபவம் என் நினைவுகளில் உள்ளது. இந்திய ரசிகர்கள் அற்புதமானவர்கள். கால்பந்து விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்ட நாடு இந்தியா. இந்த முறை எனது ஆட்டத்தை நேசிக்கும் அடுத்த தலைமுறை ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். இந்த பயணம் எனக்கு மதிப்பளிக்கிறது” என மெஸ்ஸி தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் (நவம்பர்) கேரள மாநிலத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி, நட்பு ரீதியான போட்டியில் விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இதனை அந்த அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சூழலில் தனது இந்திய பயணத்தை மெஸ்ஸி உறுதி செய்துள்ளார். இந்த போட்டி மட்டுமல்லாது…
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் நடைபெற்றது. விரதம் கடை பிடித்து வேடம் அணிந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தசரா திருவிழா: இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா மிகவும் விமரிசியைாக நடைபெறும். இக்கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து கடந்த 10 நாட்களாக வீதி தோறும் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர். குலசேகரன்பட்டினம் கோயிலில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா…
