Author: admin

முசாபராபாத்: பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​ மக்கள் 38 முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஏஏசி) தலைமை தாங்​கியது. போராட்டத்தின் 3-வது நாளான நேற்று பேரணி நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து, முசாபராபாத், தத்யா,ரவாலாகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேரணியைத் தடுக்க போலீஸார் ஏற்படுத்திய தடைகளை தாண்டி மக்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்கள், ‘‘காஷ்மீர் எங்களுடையது, அதன் விதியை நாங்கள்தான் நிர்ணயிப்போம். ’’ என கோஷமிட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் முதல் முறையாக தற்போதுதான், பாகிஸ்தான் அரசுக்கும்,ராணுவத்துக்கும் எதிராக கோஷமிட்டனர் நிலைமை மோசமடைந்ததால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் துப்பாக்கி சூடுநடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 200-க்கும்மேற்பட்டோர் குண்டுகாயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸார் உயிரிழந்தனர். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த…

Read More

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் 8 நாட்களில் மட்டும் உண்டியலில் பக்தர்கள் ரூ.25 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பதி பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக பாடுபட்ட அனைத்து தேவஸ்தான அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், துப்புரவு தொழிலாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரம்மோற்சவ விழா தொடங்கியதிலிருந்து அக்டோபர் 1-ம் தேதி வரையிலான 8 நாட்களில் மட்டும் ரூ.5.8 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 2.42…

Read More

தரு​மபுரி: அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது அரசின் கடமை என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். தரு​மபுரி​யில் நேற்று பொது​மக்​களிடையே பழனி​சாமி பேசி​ய​தாவது: கரூரில் 41 பேர் உயி​ரிழந்​ததற்கு அரசு போதிய பாது​காப்பு ஏற்​படுத்​தித் தராதது​தான் காரணம். அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது தமிழக அரசின் கடமை. முதல்​வரின் கட்​டுப்​பாட்​டில் காவல் துறை உள்​ள​தால், கரூர் சம்​பவத்​துக்கு அவர்​தான் பொறுப்​பேற்க வேண்​டும். மக்​கள் கேள்வி​களுக்​கும் அவர்​தான் பதில் கூற வேண்​டும். தற்​போது ஒரு நபர் ஆணைய விசா​ரணை தொடங்​கி​யுள்​ளது. அவர்​களின் விசா​ரணை முடிவை பொறுத்​திருந்து பார்ப்​போம். ஒரு நபர் ஆணை​யம் அமைக்​கப்​பட்ட பிறகு ஐஏஎஸ் அதி​காரி​கள், காவல் துறை உயர் அதி​காரி​கள் இந்த விவ​காரம் தொடர்​பாக பேசுவது ஏன்? கடந்த அதி​முக ஆட்​சி​யின்​போது திமுக-வுக்கு பல கூட்​டங்​களுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், தற்​போது திமுக அரசு எதிர்க்​கட்​சிகளின் கூட்​டங்​களுக்கு அனு​மதி வழங்​கு​வ​தில்…

Read More

புதுடெல்லி: குஜ​ராத்​தின் ரான் ஆப் கட்ச் பகு​தி​யில் உள்ள சர் கிரீக் கடல் எல்​லைப் பகு​தி​யில், பாகிஸ்​தான் அத்​து​மீறி செயல்​பட்​டால், பதிலடி கொடுக்​கப்​படும் என மத்​திய உள்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். குஜ​ராத்​தின் ரான் ஆஃப் கட்ச் பகு​தி​யில் சர் கிரீக் என்ற நீரிணைப்பு பகுதி உள்​ளது. இது இந்​தியா – பாகிஸ்​தான் இடையே கடல் எல்​லைப் போல் உள்​ளது. இப்​பகு​தி​யின் எல்​லைப் பிரச்​சினை இரு நாடு​கள் இடையே நீண்​ட​கால​மாக உள்​ளது. இப்​பிரச்​சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இந்​தியா பல முறை முயன்​றது. ஆனால் பலன் இல்​லை. இந்​நிலை​யில் சர் கிரீக் பகு​தி​யில் ராணுவ கட்​டமைப்​பு​களை பாகிஸ்​தான் விரிவுபடுத்​துகிறது. இது குறித்து பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கூறிய​தாவது: எல்​லைப் பகு​தி​களை இந்​திய ராணுவ​மும், எல்லை பாது​காப்பு படை​யும் (பிஎஸ்​எப்) தொடர்ந்து பாது​காத்து வரு​கிறது. சர் கிரீக் பகு​தி​யில் பாகிஸ்​தான் அத்​து​மீறி​னால், இந்​தியா பதிலடி கொடுப்​பது நிச்​ச​யம்.…

Read More

புதுடெல்லி: சோஹோ நிறு​வனர் மற்​றும் தலைமை விஞ்​ஞானி ஸ்ரீதர் வேம்​பு, இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட ‘அரட்​டை’ செயலியை முழு வீச்​சில் கொண்டு வர தீவிர​மாக இருக்​கிறார். இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட அரட்டை செயலி இலவச​மானது, பயன்​படுத்த எளி​தானது, பாது​காப்​பானது. சோஹோ​வால் தொடங்​கப்​பட்ட அரட்டை செயலியை வாட்ஸ் அப், டெலிகி​ராம் போல் பயன்படுத்தலாம். இந்​நிலை​யில், ‘அரட்​டை’ செயலி​யின் குளோபல் புராடெக்ட் தலை​வர் ஜெரி ஜான் முதல் முறை​யாக அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரட்டை செயலி 10 லட்​சம் வாடிக்​கை​யாளர்​களை தாண்டி விட்​டது என்ற தகவலை பகிர்ந்து கொள்​வ​தில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்​போது ‘மேட் இன் இந்​தி​யா’ தயாரிப்​பு​கள் விஷ​யத்​தில் பயனாளி​கள் மிகுந்த ஆர்​வ​மாக உள்​ளனர். ஆனால், இந்த எண்​ணத்தை நீடித்து நிலைக்க செய்​வதற்​காக எங்​கள் குழு மும்​முர​மாக பணி​யாற்றிவரு​கிறது. குறிப்​பாக தனி​யுரிமை, மதிப்பு சார்ந்த விஷ​யங்​களில் கவனம் செலுத்தி வரு​கிறோம். உரை​யாடல் மற்​றும் வீடியோ அழைப்​பு​களைப் பொறுத்த வரை​யில் முழு​மை​யான பாது​காப்​பு​தான் (எண்ட் டூ எண்ட்…

Read More

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் நார்த் டெக்​சாஸ் பல்​கலைக்​கழகம், ஸ்டான்​போர்டு பல்​கலைக்​கழக விஞ்​ஞானிகள் இணைந்து இதயம், கல்​லீரல், ரத்த நாளங்​கள் உள்​ளிட்ட மனித உறுப்​பு​களை ஆய்​வகத்​தில் செயற்கையாக உரு​வாக்கி சாதனை படைத்து உள்​ளனர். இதுதொடர்​பான ஆய்​வறிக்கை முன்​னணி மருத்​துவ இதழ்​களில் வெளி​யிடப்​பட்டு உள்​ளது. அந்த ஆய்​வறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆய்​வகத்​தில் ஸ்டெம் செல்​களை பயன்​படுத்தி செயற்கை இதயத்தை உரு​வாக்​கும் ஆராய்ச்​சி​யில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஈடு​பட்டு வரு​கிறோம். இதன்​படி 16 நாட்​களில் எங்​களது ஆய்​வகத்​தில் செயற்கை இதயம் உரு​வாக்​கப்​பட்​டது. இந்த செயற்கை இதயம்,மனித இதயத்தை போன்று துடிக்​கிறது. இதே​போல செயற்கை கல்​லீரலை​யும் உரு​வாக்கி உள்​ளோம். மேலும் செயற்கை ரத்த நாளங்​களை​யும் உரு​வாக்கி இருக்​கிறோம். எங்​களது ஆராய்ச்​சி​யின் மூலம் லட்​சக்​கணக்​கான மக்​களை காப்​பாற்ற முடி​யும். இவ்​வாறு ஆய்​வறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

Read More

சென்னை: காந்தியைக் கொன்ற மதவாதியின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் பிரதமரே அஞ்சல் தலை வெளியிடும் அவல நிலை இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறி யிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: நம் தேசப்பிதா காந்தியை கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவரே அஞ்சல்தலையும், நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்கவேண்டும் என காந்தியின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்போம். தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: சுதந்திரம் அடைந்து 50 ஆண்டு களுக்கும் மேலாக சுதந்திரக் கொடியை ஏற்றுக்கொள்ளாத ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சல்தலையும், ரூ.100 நினைவு நாணயத்தையும் வெளியிட்டிருப்பது, சுதந்திர இந்தியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் துரோகச் செயலாகும். இழிவுபடுத்துவதற்கு சமம் காந்தியின் படுகொலைக்குக் காரணமான…

Read More

புதுடெல்லி: பொருளா​தார விவ​காரங்​களுக்​கான மத்​திய அமைச்​சரவை குழு (சிசிஇஏ) கூட்​டம் டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்து அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறுகை​யில், “நாட்​டின் 17 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் புதி​தாக 57 கேந்​திர வித்​யால​யா பள்ளி​களை திறக்க சிசிஇஏ ஒப்புதல் அளித்​துள்​ளது. இதன் மூலம் 86,000-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பயன் அடை​வார்​கள். மேலும் இதனால் 4,600-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உரு​வாகும். இதற்​காக 9 ஆண்​டு​களில் சுமார் ரூ.5,863 கோடி ஒதுக்​கப்​படும். இதில் ரூ.2,586 கோடி மூலதனச் செலவாகவும் ரூ.3,277 கோடி செயல்​பாட்​டுச் செல​வாகவும் இருக்​கும்” என்​றார். இதுகுறித்து ‘எக்​ஸ்’ தளத்​தில் பிரதமர் மோடி வெளி​யிட்​டுள்ள பதி​வில், “57 புதிய கே.​வி. பள்ளி​களை நிறுவ அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. குழந்​தைகளுக்கு அடிப்​படை நிலை​யில் கல்வி அளிக்​கும் பால்​வ​தி​காக்​களை இது உள்​ளடக்​கி​யிருப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது. இதனால் ஏராள​மான மாணவர்​கள் பயனடை​வார்​கள்,…

Read More

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். மாலை பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்வு நடத்தப்பட்டது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி மாலை கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இதனை தொடர்ந்து அன்றிரவு பெரிய சேஷ வாகன சேவையுடன் தொடர்ந்து 9 நாட்கள் வரை வாகன சேவைகள் நடத்தப்பட்டன. மொத்தம் 16 வாகனங்கள், ஒரு தங்க ரத ஊர்வலம் மற்றொன்று மகா ரத புறப்பாடு, ஒரு தீர்த்தவாரி என கடந்த 9 நாட்களும் திருமலையே விழாக்கோலம் பூண்டிருந்தது. 28 மாநிலங்களில் இருந்து பங்கேற்ற நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. காலையும், இரவும் மின்னொளியில்…

Read More

சென்னை: மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு பாஜகவினர் காவி ஆடை அணிவித்ததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மதுரையில் கடந்த 1959-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது என்ற பெருமை கொண்டது காந்தி அருங்காட்சியகம். கடந்த 1921 செப்டம்பர் 21-ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த காந்தியடிகள், மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார். அப்போது மதுரையில் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மேலாடை அணியக்கூட வசதி இல்லாமல் வறுமையில் இருந்ததை கண்டு மனம் வருந்திய அவர், ‘நாடு முழுமைக்கும் என்றைக்கு நம் மக்கள் மேலாடை அணியும் நிலை வருமோ, அன்று வரை நானும் மேலாடை அணிவதில்லை’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உறுதிமொழியை செப்டம்பர் 22-ம் தேதி எடுத்தார். காந்தியை கோட்சே சுட்டபோது காந்தியடிகள் தன் உடலில் அணிந்திருந்த ஆடை, மதுரை காந்தி அருங்காட்சியகத்துக்குத்தான் கொண்டு வரப்பட்டது. இத்தகைய…

Read More