Author: admin

போபால்: மத்திய பிரதேசத்​தில் 2 வெவ்​வேறு இடங்​களில் துர்கா சிலைகளை கரைக்​கும் நிகழ்ச்​சி​யில் 10 சிறு​வர்​கள் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். நாடு முழு​வதும் நவராத்​திரி விழா​வின் இறுதி நாளான நேற்று விஜயதசமி கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, மத்​திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே இங்​கோரியா நகரில் இருந்து துர்கா சிலைகளை கரைப்​ப​தற்​காக நேற்று டிராக்​டரில் எடுத்​துச் சென்​றுள்​ளனர். அந்த டிராக்​டரில் சிறு​வர்​களும் பயணித்​துள்​ளனர். சம்​பல் நதி​யின் மீது உள்ள பாலத்​தின் மீது டிராக்​டர் நிறுத்​தப்​பட்​டது. அப்​போது 12 வயது சிறு​வன் திடீரென இன்​ஜினை ஆன் செய்​த​தால் வாக​னம் திடீரென முன்​னேறி சம்​பல் நதி​யில் விழுந்​த​தாக கூறப்​படு​கிறது. இதில் 12 சிறு​வர்​கள் தண்​ணீரில் விழுந்த நிலை​யில், 11 பேர் மீட்​கப்​பட்​டனர். ஒரு​வரை காண​வில்​லை. காணா​மல் போன சிறு​வனை போலீ​ஸாரும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் தேடி வருகின்றனர். மீட்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது​போல காந்த்வா மாவட்​டம், பந்​தனா நகருக்கு…

Read More

சோச்சி: அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில், அவர் இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு நடந்தது. இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் புதின் பேசியது: “ரஷ்யாவின் வர்த்தக ரீதியான கூட்டாளிகள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டால், அது உலக அளவில் எரிசக்தி பொருட்கள் மீதான விலையை உயர்த்தும். இதன் காரணமாக அமெரிக்க ஃபெடரல் மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படும். மேலும், இதனால் அமெரிக்க பொருளாதாரம் மந்தமாகும். எனது இந்திய பயணத் திட்டத்தை எதிர்நோக்கி உள்ளேன். இந்தியாவுடன் எங்களுக்கு எப்போதும் சிக்கல் இருந்ததில்லை. நிச்சயம் அயலக அழுத்தங்களுக்கு இந்திய தேசம் அடிபணியாது. அது…

Read More

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் இது​வரை 20.16 லட்​சம் டன் திடக்கழிவுகள் அகற்​றப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: திரு​வொற்​றியூர், மாதவரம், தண்​டை​யார்​பேட்​டை, அண்ணாநகர், திரு.​வி.க.நகர் உள்​ளிட்ட 8 மண்​டலங்​களில் சேகரிக்​கப்​படும் திடக்​கழி​வு​கள், கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் பல ஆண்டுகளாக கொட்​டப்​பட்டு வந்​தன. இதன் காரண​மாக கொடுங்​கையூர் வளாகத்​தில் குப்​பைகள் அதி​கரித்​து, சுற்​றுச்​சூழல் மாசு ஏற்​படும் நிலை உரு​வானது. கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தின் பரப்​பளவு 342.91 ஏக்​கர் ஆகும். இதில் 252 ஏக்​கர் பரப்​பள​வில் திடக்​கழி​வு​கள் கொட்​டப்​பட்டு வந்​தன. இதை பயோமைனிங் முறை​யில் ரூ.641 கோடி​யில் பிரித்​தெடுத்து அகற்​றும் பணி​கள், 6 தொகுப்​பு​களாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் அகழ்ந்​தெடுக்​கப்பட வேண்​டிய திடக்​கழி​வு​கள் 66.52 லட்​சம் டன் ஆகும். அதில் இது​வரை 20.16 லட்​சம் டன் திடக்​கழி​வு​கள் அகற்​றப்​பட்​டுள்​ளன. தொகுப்பு 1 மற்​றும் 2-ன் வாயி​லாக சுமார்…

Read More

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்க புதிய தடுப்பூசி வழிகாட்டுதல்களை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) நிறுவியுள்ளது. எந்த தடுப்பூசிகளைப் பயன்படுத்த வேண்டும், கோவ் -19 தடுப்பூசிகள் மற்றும் முழுமையான குழந்தை பருவ தடுப்பூசி அட்டவணைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கும்போது அவற்றை எப்போது வழங்க வேண்டும் என்பதை வழிகாட்டுதல்கள் தீர்மானிக்கின்றன. பார்ப்போம் …புதிய கோவ் -19 தடுப்பூசி வழிகாட்டுதல்கள் இரண்டு குறிப்பிட்ட குழுக்களுக்கு பொருந்தும்சி.டி.சி புதிய கோவ் -19 தடுப்பூசி நெறிமுறைகளை நிறுவியது, இது எந்தவொரு கோவ் -19 தடுப்பூசிகளையும் பெறாதவர்களைப் பாதுகாக்கும், மேலும் முந்தைய அளவுகளைப் பெற்றவர்கள் 2024-2025 மாடர்னா அல்லது ஃபைசர்-பயோன்டெக் தடுப்பூசியை கடைசி தடுப்பூசிக்கு குறைந்தது எட்டு வாரங்களுக்குப் பிறகு பெற வேண்டும். சி.டி.சி மாடர்னா மற்றும் ஃபைசர்-பயோன்டெக் மற்றும் நோவாவாக்ஸ் தடுப்பூசிகளை 12 முதல் 17 வயதுடையவர்களுக்கு பரிந்துரைக்கிறது, குறிப்பிட்ட அளவு தேவைகள் உள்ளன. புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள்…

Read More

புதுடெல்லி: ஜன​நாயகத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதல்​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் என மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி விமர்​சனம் செய்​துள்​ளார். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடான கொலம்​பி​யா​வுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளார். அங்கு உள்ள இஐஏ பல்​கலைக்​கழகத்​தில் மாணவர்​களு​ட​னான கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில், ராகுல் காந்தி பேசும்​போது, “இந்​தியா உலகத்​துக்கு ஏராள​மான விஷ​யங்​களை செய்ய முடி​யும் என்ற நம்​பிக்கை எனக்கு உள்​ளது. ஆனால், இந்​திய அமைப்​பில் சில பிழைகள் உள்​ளன. அதனை எதிர்​கொள்​வ​தில் இந்​தியா சில சவால்​களை எதிர்​கொள்ள வேண்​டும். குறிப்​பாக, இந்​தி​யா​வில் பல மதங்​கள், மரபு​கள் மற்​றும் மொழிகள் உள்​ளன. ஜனநாயக அமைப்பு அனை​வருக்​கும் இடமளிக்​கும் ஒரு தளமாக செயல்​படு​கிறது. ஆனால் தற்​போது, அந்த ஜனநாயக அமைப்பு பல திசைகளி​லிருந்​தும் தாக்​குதலுக்கு உள்​ளாகி வரு​கிறது. இது​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளது” என்​றார். இதுகுறித்து பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஷெஷாத் பூனாவல்லா…

Read More

சிவகாசி: கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பட்​டா​சால் ஏற்​படும் காற்று மாசு​பாட்​டை​விட நிலக்​கரி, மீத்​தேன், ஹைட்ரோ கார்​பன் போன்​றவை​தான் அதிக மாசு ஏற்​படுத்​தும். பெரிய முதலா​ளி​களை விட்​டு​ விட்​டு, சிவ​காசி போன்ற சிறிய ஊரில் இருக்​கும் சிறு முதலா​ளி​களின் பட்​டாசு தொழிலுக்கு நெருக்​கடி கொடுக்​கின்​றனர். கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும். அனைத்​துக்​குமே காரணம் அரசு என்று கூறு​வதை ஏற்க முடி​யாது. பாஜக விஜய்க்கு ஆதர​வாக இருக்​கிறது என்​பது வெளிப்​படை​யாகத் தெரி​கிறது. பாஜக எம்​.பி.க்​கள் குழு இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு ஆறு​தல் கூறு​வதை​விட, திமுக அரசை குறை கூறு​வ​தில்​தான் மும்​முர​மாக உள்​ளனர். கரூர் சம்​பவத்​துக்கு முதல்​வர் பொறுப்​பேற்க வேண்​டும் என்று கூறு​வோர், மணிப்​பூர் கலவரத்​துக்கு யார் பொறுப்​பேற்க வேண்​டும் என கூற​வில்​லை. இதே நீதிபதி ஆணை​யத்​தில் தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு…

Read More

புதுடெல்லி: டாடா கன்​சல்​டன்சி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தில் சுமார் 6.13 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். வரும் 2026-ம் ஆண்​டில் 2 சதவீத ஊழியர்​கள் குறைக்​கப்​படு​வார்​கள் என்று டிசிஎஸ் அண்​மை​யில் தெரி​வித்​தது. இதன்​படி சுமார் 12,000 பேர் பணி நீக்​கம் செய்​யப்​படு​வார்​கள் என்று தெரி​கிறது. இந்த சூழலில் டிசிஎஸ் நிறு​வனத்​தில் இருந்து பணி நீக்​கம் செய்​யப்​படும் ஊழியர்​களுக்கு முன்​கூட்​டியே நோட்​டீஸ் வழங்​கப்​படும். அவர்​களின் பணி அனுபவத்தை பொறுத்து 6 மாதங்​கள் முதல் 2 ஆண்​டு​கள் வரையி​லான ஊதி​யம் இழப்​பீ​டாக வழங்​கப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதன்​படி 8 மாதங்​களுக்கு மேல் பணி ஒதுக்​கப்​ப​டா​மல் இருக்​கும் ஊழியர்​களுக்கு சிறிய அளவி​லான இழப்​பீடு மட்​டுமே கிடைக்​கும். 10 ஆண்​டு​கள் முதல் 15 ஆண்​டு​கள் வரை பணி​யாற்​றிய ஊழியர்​களுக்கு 18 மாதங்​களுக்​கான ஊதி​யம் கிடைக்​கும். அதற்கு மேல் பணி​யாற்​றிய​வர்​களுக்கு 24 மாதங்​களுக்​கான ஊதி​யம் கிடைக்​கும் என்று கூறப்​படு​கிறது. பணி நீக்​கம் செய்​யப்​படும் ஊழியர்​கள், புதிய…

Read More

அகமதாபாத்: இந்​திய அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் முகமது சிராஜ், ஜஸ்​பிரீத் பும்ரா ஆகியோரது வேகப்​பந்து வீச்சை தாக்​குப் பிடிக்க முடி​யாமல் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 162 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நேற்று தொடங்​கிய இந்த போட்​டி​யில் டாஸ் வென்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் கேப்​டன் ராஸ்​டன் சேஸ் பேட்​டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய அந்த அணிக்கு தொடக்க ஓவர்​களில் ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் வேகக்​கூட்​டணி கடும் அழுத்​தம் கொடுத்​தது. தொடக்க வீர​ரான டேக்​நரைன் சந்​தர்​பால் 11 பந்​துகளில் ரன் ஏதும் எடுக்​காமல் சிராஜ் பந்​தில் விக்​கெட் கீப்​பர் துருவ் ஜூரெலிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். மற்​றொரு தொடக்க வீர​ரான ஜான் கேம்​பல் 8 ரன்​களில் பும்ரா பந்​தில் வெளி​யேறி​னார். இதைத் தொடர்ந்து களமிறங்​கிய பிரண்​டன் கிங் 13 ரன்களி​ல் சிராஜின் அற்​புத​மான இன் ஸ்விங் பந்​தில் போல்​டா​னார்.…

Read More

முசாபராபாத்: பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​ மக்கள் 38 முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஏஏசி) தலைமை தாங்​கியது. போராட்டத்தின் 3-வது நாளான நேற்று பேரணி நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து, முசாபராபாத், தத்யா,ரவாலாகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேரணியைத் தடுக்க போலீஸார் ஏற்படுத்திய தடைகளை தாண்டி மக்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்கள், ‘‘காஷ்மீர் எங்களுடையது, அதன் விதியை நாங்கள்தான் நிர்ணயிப்போம். ’’ என கோஷமிட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் முதல் முறையாக தற்போதுதான், பாகிஸ்தான் அரசுக்கும்,ராணுவத்துக்கும் எதிராக கோஷமிட்டனர் நிலைமை மோசமடைந்ததால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் துப்பாக்கி சூடுநடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 200-க்கும்மேற்பட்டோர் குண்டுகாயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸார் உயிரிழந்தனர். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த…

Read More

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் 8 நாட்களில் மட்டும் உண்டியலில் பக்தர்கள் ரூ.25 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பதி பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக பாடுபட்ட அனைத்து தேவஸ்தான அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், துப்புரவு தொழிலாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரம்மோற்சவ விழா தொடங்கியதிலிருந்து அக்டோபர் 1-ம் தேதி வரையிலான 8 நாட்களில் மட்டும் ரூ.5.8 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 2.42…

Read More