சமீபத்திய ஆண்டுகளில், கார்பனேற்றப்பட்ட நீர் சர்க்கரை குளிர்பானங்களுக்கும் இன்னும் தண்ணீருக்கும் ஒரு பிரபலமான மாற்றாக மாறியுள்ளது, அதன் பிஸ்ஸி, புத்துணர்ச்சியூட்டும் தரத்திற்காக கொண்டாடப்படுகிறது. நீரேற்றத்திற்கு அப்பால், வளர்ந்து வரும் ஆராய்ச்சி, பிரகாசமான நீர் முழுமையின் உணர்வுகளை அதிகரிப்பதன் மூலமும், கலோரி கட்டுப்பாட்டுக்கு உதவுவதன் மூலமும் எடை நிர்வாகத்தை ஆதரிக்கக்கூடும் என்று கூறுகிறது. உயர் கலோரி பானங்களை வெற்று கார்பனேற்றப்பட்ட நீரில் மாற்றுவது தினசரி ஆற்றல் உட்கொள்ளலில் மிதமான குறைப்புக்கு பங்களிக்கும். இருப்பினும், சான்றுகள் குறைவாகவே உள்ளன, மேலும் நன்மைகள் பொதுவாக சிறியவை. சாத்தியமான நன்மைகள் மற்றும் வரம்புகள் இரண்டையும் புரிந்துகொள்வதும், கார்பனேற்றப்பட்ட நீரை உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கு ஒரு பரந்த, சீரான அணுகுமுறையின் ஒரு பகுதியாகக் கருதுவதும் முக்கியம்.எடை இழப்புக்கு உதவக்கூடிய கார்பனேற்றப்பட்ட நீரின் வடிவங்கள்கார்பனேற்றப்பட்ட நீர், பிரகாசமான நீர், செல்ட்ஸர் அல்லது பிஸி நீர் என்றும் அழைக்கப்படுகிறது, இது அழுத்தத்தின் கீழ் கார்பன் டை ஆக்சைடு வாயுவால் செலுத்தப்பட்ட…
Author: admin
புதுடெல்லி: குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவின் பிறந்த நாளையொட்டி சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. என்றாலும் இந்த அனுமதி, தேர்வு செய்யப்பட்ட குழுக்களுக்கு மட்டுமே பொருந்தும். தகுதி வாய்ந்த பக்தர்களை பஞ்சாப் மாநில அரசு பரிந்துரை செய்யும். மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு அனுமதி வழங்கும். குரு நானக் தேவ் பிறந்த இடமான நன்கானா சாகிப்பில் உள்ள குருத்வாரா, குரு நானக் தனது கடைசிக் காலத்தை கழித்த கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாரா உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு அட்டாரி – வாகா எல்லை வழியாக இவர்கள் பயணம் செய்யலாம். இந்தக் குழுக்களுக்கு ஷிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி, பாகிஸ்தானின் எவாக்யூ டிரஸ்ட் சொத்து…
2026 டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடருக்கு நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தகுதி பெற்று விட்டன. ஹராரேயில் நடைபெற்ற ஐசிசி ஆப்பிரிக்கா தகுதிச் சுற்று போட்டிக்கான 2வது அரையிறுதியில் கென்யாவை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஆப்பிரிக்கச் சுற்றில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே நேரடியாகத் தகுதி பெற்று விட்டதால் இப்போது ஜிம்பாப்வே, நமீபியா அணிகளும் டி20 உலகக் கோப்பைப் பந்தயத்தில் இணைந்துள்ளன. இதே ஹராரேயில் தான்சானியா அணியை எளிதில் வீழ்த்தி நமீபியா அணி முன்னதாக 2026 ஆடவர் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. 2வது அரையிறுதியில் ஜிம்பாப்வே பவுலர்கள் சிறப்பாகச் செயல்பட்டு கென்யாவை 20 ஓவரக்ளில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் என்று நெருக்கினர். 123 ரன்கள் இலக்கை 15 ஓவர்களில் ஜிம்பாப்வே வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தொடக்க வீரர்கள் பிரையன்…
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை அதிகாரபூர்வமாக கைப்பற்றியது. அதன்பின்னர் தலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். முத்தாகி அக்டோபர் 10-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் விவசாயப் பொருட்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியாவிலிருந்து உதவிகள் வழங்கப்படுவது குறித்து ஆமிர் கான் முத்தாகியின் வருகையின் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளது. இதனால் அவர்கள்…
சென்னை: தமிழக அரசின் ஓய்வூதியக்குழு இடைக்கால அறிக்கை அளித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தலைமைச் செயலக பணியாளர்கள் வரும் 6-ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.ஹரிசங்கர் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புக்கு மாறாக, அரசின் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வழங்காமல், அதே தேதியில் இடைக்கால அறிக்கையை அளித்துள்ளது. இது சட்டப்பேரவை அறிவிப்பை மீறும் செயல். கால நீட்டிப்பு குறித்து அரசிடம் நேரடியாக கோராமல், மறைமுகமாக கேட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இடைக்கால அறிக்கை அளித்ததன் மூலம் ஓய்வூதியக்குழு தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தலைமைச் செயலக பணியாளர்கள் அக்.6-ம் தேதி திங்கள்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து…
சென்னை: ஆதார் அட்டை அப்டேட் செய்வதற்கான சேவை கட்டத்தை உயர்த்தியுள்ளது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ). இந்த கட்டண உயர்வு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வங்கி சேவை, அரசுத் துறை சேவைகள், தொலைபேசி இணைப்பு உட்பட பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியமானதாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் இதில் பயனர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய ஆதார் சேவை மையங்களில் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. பயனருக்கு வழங்கப்படும் சேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சேவை கட்டணத்தை யூஐடிஏஐ உயர்த்தி உள்ளது. இதன்படி தற்போது ஆதார் பயனர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். அதேபோல பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆதாரில் அப்டேட் செய்ய ரூ.75 செலுத்த வேண்டும். இதற்கு…
ஒரு கொடிய லிஸ்டீரியா வெடிப்புக்கு மத்தியில், எஃப்.டி.ஏ மிகவும் முன் சமைத்த மற்றும் உறைந்த உணவை நினைவு கூர்ந்தது. டிமர்ஸ் உணவுக் குழு லிங்குவினியுடன் ஸ்காட் & ஜோனின் இறால் ஸ்கம்பி தானாக முன்வந்து நினைவு கூர்ந்தது, அதே நேரத்தில் ஆல்பர்ட்சன்ஸ் நிறுவனங்கள் பல்வேறு கடை தயாரிக்கப்பட்ட டெலி பொருட்களை நினைவு கூர்ந்தன. நேட்டின் சிறந்த உணவுகளால் வழங்கப்பட்ட அசுத்தமான பாஸ்தா பொருட்களிலிருந்து தோன்றிய இரண்டு நினைவுகூரல்களும். குறுக்கு மாசணத்தைத் தடுக்க நுகர்வோர் பாதித்த தயாரிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது திரும்பப் பெற வேண்டும். நான்கு உயிர்கள் மற்றும் குறைந்தது 20 நோய்த்தொற்று வழக்குகளை கோரிய கொடிய லிஸ்டீரியா வெடிப்புகளுக்கு மத்தியில், யுனைடெட் ஸ்டேட்ஸ் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) சந்தையில் இருந்து முன்கூட்டியே சமைத்த மற்றும் உறைந்த உணவை சாத்தியமான மாசுபாடு தொடர்பாக நினைவு கூர்ந்தது.புதன்கிழமை (அக். நினைவுகூர்ந்த பாஸ்தா மூலப்பொருள் இருந்ததால் நினைவுகூருதல் தொடங்கப்பட்டது. அதே நாளில்,…
புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வருடாந்திர விஜயதசமி விழாவில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசும்போது, “பழங்காலத்தில் நமது சமுதாயத்தில் சிறந்த தனிநபர்களை உருவாக்கும் முறை இருந்தது. இது வெளிநாட்டினரின் ஊடுருவல் காரணமாக அழிக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு அந்த முறையை மீண்டும் உருவாக்கியது. கடந்த 100 ஆண்டுகளாக, சங்கத்தின் நிர்வாகிகள் எந்தச் சூழ்நிலையிலும் அந்த முறையைத் தொடர்ந்து பேணிக் கொண்டு வந்துள்ளனர். அமெரிக்கா கொண்டு வந்த புதிய வரி கொள்கை அவர்கள் நலனை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டது. உலக நாடுகள் ஒன்றின் மீது ஒன்று சார்ந்தே இயங்குகிறது. அதேநேரம் இந்த சார்பு கட்டாயமாக…
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தடுத்து வைத்துக் கொண்டு, கல்வியை அரசியல் செய்வதாக தெலுங்கான முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்பாக்கத்தில் இருந்து கோவூர் வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பரிசுகளை வழங்கி பேசியதாவது: பிரதமர் மோடி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நாட்டிற்குச் சமர்ப்பித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தடுத்து விட்டனர். நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் வாங்குவது நவோதயா பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்தான். அங்கிருந்துதான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்தே கல்வியை அரசியலாக்கி, தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நவோதயா போன்ற பள்ளிகளைத் தடுத்துவிட்டனர். புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளையும்…
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.3) சென்னையில் பவுனுக்கு ரூ.880 என குறைந்துள்ளது. நேற்று மாலை ஒரு பவுன் தங்கம் விலை ரூ.88,000-ஐ எட்டிய நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அக்.1-ம் தேதி அன்று தங்கம் விலை ஒரு பவுன் ரூ.87,600 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இந்நிலையில், நேற்று (அக்.2) காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.560…
