புதுடெல்லி: கடந்த ஜூலை 23, 24 தேதிகளில் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இப்போது 56 பில்லியன் டாலராக உள்ள இருதரப்பு வர்த்தகத்தை 2030-க்குள் இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்தியா வருமாறு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டாரமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கீர் ஸ்டார்மர், 2 நாள் அரசு முறை பயணமாக வரும் 8-ம் தேதி இந்தியா வருகிறார். கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், 9-ம் தேதி பிரதமர் மோடியை மும்பையில் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, விஷன் 2035 என்ற 10 ஆண்டு திட்டத்தின் மூலம் இந்தியா-இங்கிலாந்து இடையே ஏற்பட்ட…
Author: admin
வாஷிங்டன்: விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற தகவல் களஞ்சியத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்கிறார். கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட விக்கிபீடியா உலகின் தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது. விக்கிமீடியா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் விக்கிபீடியாவை நிர்வகித்து வருகிறது. இந்த தளம் சுமார் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை வழங்கி வருகிறது. சுமார் 6.5 கோடிக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தற்போது விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற புதிய தகவல் களஞ்சியத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில், “அடுத்த 2 வாரங்களில் குரோக்பீடியா தொடங்கப்படும்’’ என்று அறிவித்துள்ளார். தொழிலதிபர் எலான் மஸ்க் சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் எக்ஸ் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் தொடங்கப்பட்டது. எக்ஸ் ஏஐ சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் குரோக்…
சென்னை: சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார். வழக்கறிஞரும், சமூகப் போராளியுமான பி.வி.பக்தவச்சலத்தின் 18-வது ஆண்டு நினைவு கருத்தரங்கம் பிவிபி அறக்கட்டளை சார்பில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. ‘ஆணவக் கொலைகளும், சாதியை அழித்தொழித்தலும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பும், பின்பும் நீதிமன்றங்கள் ஆதிக்க சாதியை சார்ந்த கருத்துகளை முன்வைத்து, ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான நிலையையே பெரும்பாலும் எடுத்து வந்துள்ளன. தமிழகத்தில் சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அர்ச்சகர்களுக்கான தகுதிகளைப் படித்து, முறையாக பயிற்சி பெற்ற பிறகும் அனைத்து…
சிறுநீர் கழிக்க இரவில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை எழுந்திருப்பது உங்கள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று உணரலாம், ஆனால் விஞ்ஞானம் இது ஆழமான ஒன்றின் அடையாளமாக இருக்கலாம் என்று கூறுகிறது. நொக்டூரியா என அழைக்கப்படும் இந்த நிலை சில நேரங்களில் படுக்கைக்கு முன் சாதாரண வயதான அல்லது அதிகப்படியான நீர் என கவனிக்கப்படுவதில்லை. உண்மையில், அடிக்கடி இரவுநேர சிறுநீர் கழித்தல் வகை 2 நீரிழிவு மற்றும் பிற நாட்பட்ட சுகாதார பிரச்சினைகளின் ஆரம்ப குறிகாட்டியாக செயல்படும்.2024 ஆம் ஆண்டில் நேச்சர் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு பெரிய ஆய்வு தூக்கத்தின் தரம் மற்றும் சுகாதார விளைவுகளை பகுப்பாய்வு செய்ய 90,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடமிருந்து அணியக்கூடிய சாதன தரவைப் பயன்படுத்தியது. ஒழுங்கற்ற தூக்கம் மற்றும் இரவுநேர விழிப்புணர்வுகள் நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் இருதய நோய் ஆகியவற்றின் அதிக ஆபத்துடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளன என்று அது கண்டறிந்தது. நீரிழிவு…
சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்-அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் வாட்ஸ்-அப் மெசஞ்சரில் பயனர்களை ஈர்க்கும் வகையில் மெட்டா ஏஐ மூலம் சாட் தீமை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் அம்சம், வீடியோ அழைப்பில் பேசும்போது ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்பட்ட பேக்கிரவுண்ட், செயலியில் இருந்தபடியே போட்டோ…
கொழும்பு: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 88 ரன்களில் வீழ்த்தியது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இது இந்த தொடரில் இந்திய அணிக்கு இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த மாதம் 30-ம் தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி கடந்த 30-ம் தேதி அன்று தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் விளையாடியது. இதில் டிஎல்எஸ் முறையில் 59 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. தொடர்ந்து நேற்று (அக்.5) பாகிஸ்தான் அணி உடன் இந்தியா விளையாடியது. இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. இந்திய அணிக்காக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.…
சென்னை: ரோந்து பணியிலிருந்த போலீஸ் எஸ்ஐ ஒருவரை தெரு நாய் கடித்து குதறியது. சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் நாய்கடி முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை. இருசக்கர வாகனத்தில் ரோந்து இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பணியில் உள்ள, வினோத் குமார் (35) என்ற நேரடி எஸ்.ஐ அவரது இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அதே பகுதியில் உள்ள அருணாச்சலம் தெருவில் சென்றபோது அவரை தெரு நாய் ஒன்று துரத்தி பின் தொடர்ந்தது. பின்னர் திடீரென அவரைக் கடித்து குதறியது. பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சென்று முதல் உதவி சிகிச்சை பெற்றார்.
அவரது உள்நோக்க இயல்பு மற்றும் அவர் தனது எண்ணங்களை ரசிகர்களுடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் விதம், பி.டி.எஸ் லீடர் ஆர்.எம்., அதன் உண்மையான பெயர் கிம் நம்ஜூன், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) அண்மையில் ஒரு லைவ்ஸ்ட்ரீமின் போது ரசிகர்களுக்கு அவரது மனதில் ஒரு பார்வையை அளித்தது. கே-பாப் சிலை திருமணம் மற்றும் பெற்றோர்ஹுட் முதல் தனிமை, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் கொரியாவில் அவரது தலைமுறை எதிர்கொள்ளும் அழுத்தங்கள் வரை தனிப்பட்ட மற்றும் சமூக தலைப்புகளின் பரந்த வரிசையை பிரதிபலித்தது. அவரது நேர்மையான மற்றும் சிந்தனைமிக்க முறையில், ஆர்.எம் வாழ்க்கையின் சிக்கல்களை வழிநடத்தியது, பல ரசிகர்களுடன் ஆழமாக எதிரொலிக்கும் முன்னோக்குகளை வழங்கியது.பி.டி.எஸ்ஸின் ஆர்.எம் சமூக அழுத்தங்கள் மற்றும் திருமணத்தை பிரதிபலிக்கிறது(( பட கடன்: பி.டி.எஸ். கடன்: வீவர்ஸ் )ஆர்.எம்., 31, திருமணத்தை சுற்றியுள்ள சமூக எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதன் மூலம் தொடங்கியது, குறிப்பாக பெண்கள் மீது பெரும்பாலும் வைக்கப்பட்டுள்ள அழுத்தங்கள். “குறிப்பாக பெண்களைப்…
ஒரு நாள் கிரேட் போட்டி ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய இடது கை வீரர் ஹர்ஜஸ் சிங் முச்சதம் விளாசினார். இதில் 35 சிக்சர்கள் அடங்கும். இவர் 141 பந்துகளில் 314 ரன்களைக் குவித்துள்ளார். இவரது இந்த முச்சதம் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் ஃபர்ஸ்ட் கிரேடு கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது பெரிய ஸ்கோர் மற்றும் ஆஸ்திரேலிய கிரேடு கிரிக்கெட்டில் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் ஆகும். இவர் வெஸ்டர்ன் சப் அர்ப்ஸ் அணிக்கு ஆடினார். இந்திய வம்சாவளி பெற்றோருக்கு சிட்னியில் பிறந்த ஹர்ஜாஸ் சிங், 2024 U-19 உலகக் கோப்பையில் சிறந்து விளங்கினார், இந்த இன்னிங்ஸ் குறித்து அவர் கூறும்போது பயிற்சி மற்றும் பவர்-ஹிட்டிங் தினசரி பிராக்டீஸ் ஆகியவையே காரணம் என்றார். சாதாரண கிரேடு லெவல் கிரிக்கெட் இவரது காட்டடியினால் பேட்டர்ன் பார்க் மைதானம் உயிர் பெற்றது. ஒருநாள் கிரேடு கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக முச்சதம் அடித்த வீரர்…
“கூடுதல் தொகுதிகள் கேட்பதும், அமைச்சரவையில் பங்கு பெறுவதும் எங்களது உரிமை. இப்படி பேசுவதால், ‘நாங்கள் கூட்டணி மாறுவோம் ’என்று வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். எங்கள் கூட்டணியில், எங்கள் நண்பர்களிடம் எங்களது உரிமையை நாங்கள் கேட்கிறோம். முன்பு நாங்கள் 110 தொகுதிகளில் கூட போட்டியிட்டிருக்கிறோம்” என்று அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருந்தார். இந்நிலையில், வாக்குத் திருட்டு நடப்பதாக தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சின்னசேலத்தில் நேற்று முன்தினம் (அக்.4) கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்காக கே.எஸ்.அழகிரி மாலை 5 மணிக்கே வருவதாக கட்சியினர் தெரிவித்திருந்தனர். கூட்டத்தைக் கூட்டி பந்தலில் அமர வைத்தனர். நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி வந்த நேரம் இரவு மணி 7. காத்திருந்தவர்கள் வெறுத்துப்போய் இருக்கையை காலி செய்து விட்டு சென்று விட, உடன்பிறப்புகளின் நிர்வாகிகள் சிலர், “கூடுதல் தொகுதி கேக்குறது தப்பில்லை; ஆனால் கூடுன கூட்டத்தை தக்க வைக்க மாட்டேங்கிறாரே! பசிக்குதுன்னு கேக்குறாரே தவிர,…
