புதுடெல்லி: ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான ஊக செய்திகள் வெளியிடுவதை மேற்கத்திய ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சாரபு நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஏர் இந்தியா விமான விபத்து குறித்த இறுதி அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது. அதுவரை மேற்கத்திய ஊடகங்கள் ஊகங்களை பயன்படுத்தி செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவில் கருப்புப் பெட்டித் தரவை வெற்றிகரமாக டிகோட் செய்த விமான விபத்து புலனாய்வு பணியகத்தை (ஏஏஐபி) பாராட்ட வேண்டும். இந்தியாவிலேயே தரவுகளை மீட்டெடுக்கும் அற்புதமான பணியை அவர்கள் செய்துள்ளனர். முன்னதாக, தரவுகளை மீட்டெடுக்க கருப்பு பெட்டியை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. முதல்கட்ட அறிக்கையும் நமக்கு கிடைத்துள்ளது. முழுமையான அறிக்கை கிடைக்கும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். இறுதி அறிக்கை வரும் வரை எந்த கருத்தையும் அரைகுறையாக புரிந்துகொண்டு கருத்து தெரிவிப்பது நல்லதல்ல.…
Author: admin
திருப்பூர்: தொழிற்சங்க சொத்து விவகாரத்தில் வைகோ விவரம் தெரியாமல் பேசுகிறார். பஞ்சாலை தொழிற்சங்க சொத்துகளை எந்தக்கட்சியும் கட்டுப்படுத்த முடியாது என திருப்பூர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார். மதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரான திருப்பூர் சு.துரைசாமி நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: வைகோவுக்கு நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் அவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் திமுகவிலிருந்து வெளியே வந்தேன். ஆனால், இன்றோ நான் ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்துள்ளதாக வைகோ பேசியுள்ளார். பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்துக்கென்று வாங்கிய சொத்துகள் சங்கத்துக்கு மட்டுமே சொந்தமானது. தனிப்பட்ட யாரும் அதற்கு உரிமை கோர முடியாது. மதிமுகவில் பொருளாளராக இருந்த மாசிலாமணி, கணேசமூர்த்தி காசோலையில் கையெழுத்திட்டது கிடையாது. மதிமுகவின் கணக்கு வழக்குகளை நிர்வகிப்பது பொருளாளரின் கடமை என்று விதி இருந்தும், பொருளாளர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் பொதுச்செயலாளரான வைகோ கையெழுத்திட்டு 13 ஆண்டுகாலம் கட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்து வருகிறார். இதற்கு, அவரிடம் இருந்து எந்தப் பதிலும்…
டிஜிட்டல் பரிசோதனையாகத் தொடங்கியது, AI ஆல் அவரது சேனலுக்கு அறியப்பட்ட ஒரு யூடியூபருக்கு ஒரு தீவிர சுகாதார மாற்றமாக மாறியது. ஜூலை 12, 2025 அன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், சாட்ஜிப்டை ஒரு தனிப்பட்ட உதவியாளராகப் பயன்படுத்துவது அவருக்கு 27 கிலோகிராம் (சுமார் 60 பவுண்டுகள்) கொட்டவும், அவரது உடல் மற்றும் மன நல்வாழ்வின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும் உதவியது என்பதை அவர் வெளிப்படுத்தினார். அவர் ஆர்தர் என்று பெயரிட்ட ஒரு மெய்நிகர் AI பயிற்சியாளரால் இயக்கப்படுகிறது, ஆறு மாத பயணம் ஒழுக்கம், ஸ்மார்ட் திட்டமிடல் மற்றும் ஓபனாயின் சாட்போட்டிலிருந்து தினசரி வழிகாட்டுதலால் இயக்கப்படுகிறது. அவர் தனது உடல்நலத்தையும் வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்பியதற்காக அமைப்பைப் பாராட்டுகிறார்.மோசமான பழக்கங்களை உடைத்து எடை இழப்பு வழக்கத்தை உருவாக்க AI எவ்வாறு உதவியதுஎளிய வினவல்களுக்கு சாட்ஜிப்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, யூடியூபர் அதை தனது முழு வாழ்க்கை முறையிலும் ஒருங்கிணைத்து, உணவு மற்றும் உடற்பயிற்சிகளிலிருந்து அவரது படைப்பு…
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த கிராமம் சுற்றுலாத் தலமாகிறது. இதற்காக, உத்தர பிரதேச அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமரான, பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்த நாள் வரும் டிசம்பர் 24-ல் கொண்டாடப்பட உள்ளது. இதை விமரிசையாகக் கொண்டாட மத்திய அரசும் பாஜகவும் தயாராகி வருகிறது. இச்சூழலில், ஆக்ராவில் உள்ள வாஜ்பாயின் மூதாதையர் கிராமமான படேஷ்வரை ஒரு முக்கிய ஆன்மிக மற்றும் பாரம்பரிய சுற்றுலா தலமாக மாற்ற உத்தர பிரதேச சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 101 சிவன் கோயில்கள் உள்ளன. இதை மேம்படுத்தி அங்கு, யாத்ரீக அனுபவத்தை ஏற்படுத்த உ.பி. அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. பிரோசாபாத் சாலையில் அமைந்துள்ள படேஷ்வர் கிராமத்துக்கு பிரம்மாண்டமான ஒரு நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது. இக்கிராமத்தின் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும்…
லண்டன்: 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர்கள் விலகியதால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறஇருந்த போட்டி ரத்தானது. ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவு, தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இந்திய மூத்த வீரர்கள் அணியில் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே இந்த போட்டியில் இருந்து ஷிகர் தவான், இர்பான் பதான், யூசுப் பதான்,…
நாகப்பட்டினம்: ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று பழனிசாமி பேசியதில், எந்த உள்நோக்கமும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். நாகை மாவட்டம் உத்தம சோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைபணியை நிறுத்திவிட்டு, ஏற்கெனவே அறிவித்த பூதங்குடி பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் வாஞ்சூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது: தமிழகத்தில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பூதங்குடியில் கட்டவேண்டிய தடுப்பணையை உத்தமசோழபுரத்தில் கட்டுவதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. 2026-ல் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பூதங்குடியிலேயே தடுப்பணை கட்டப்படும். மத்திய அரசால் விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை தமிழக அரசு முறையாகப் பயன்படுத்துவதில்லை. இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தபோது, ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என அதிமுக…
உலகெங்கிலும் மரணத்திற்கு இதய நோய் முதலிடத்தில் உள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்னர், மூத்த குடிமக்களில் (பிளஸ் 60) மட்டுமே இதய நோய் நிகழும் என்று கூறப்பட்டது, இது இப்போது மிகவும் இளைய நபர்களுக்கு, 30 வயது குழந்தைகளுக்கு கூட நடக்கிறது! வழக்கமான சோதனைகள் முக்கியமானவை என்றாலும், அமைதியான இதய நிலையில் பாதிக்கப்படுகையில், உங்கள் உடல் கொடுக்கும் வேறு சில அறிகுறிகள் உள்ளன. இந்த எளிய 3 இரண்டாவது இதய சோதனை மிகவும் உதவியாக இருக்கும், ஏனெனில் இது அடிப்படை இதய நிலைமைகளைக் கண்டறிய முடியும், அதுவும் சரியான நேரத்தில். மேலும் கற்றுக்கொள்வோம் …3-வினாடி சோதனைநீங்கள் எழுந்தவுடன் இந்த சோதனை செய்யப்பட வேண்டும். இங்கே நீங்கள் செய்ய வேண்டியது (ஆதாரம்: sygynis.nature)எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்இரு கைகளையும் உங்கள் தலைக்கு மேலே உயர்த்தவும்3 விநாடிகள் வைத்திருங்கள்இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்மார்பில் இறுக்கம்உணர்ச்சியற்ற விரல்கள்திடீர் சோர்வு அல்லது லைட்ஹெட்னஸ்இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்றால், அது…
புதுடெல்லி: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியில் 2 வீரர்கள் காயமடைந்துள்ளதால் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் காம்போஜ் இணையவுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் காயம் அடைந்துள்ளனர். ஆகாஷ் தீப் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர், 4-வது போட்டிக்கு முன்னதாக முழுவதும் குணமடைவாரா என்பது தெரியவில்லை. அவரது உடல்நிலையை…
முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த சீமான், மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரையும், துணை முதல்வர் உதயநிதியையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மு.க.முத்துவின் மறைவு மிகவும் வருத்தம் அளித்தது. அந்த துயரத்தை பகிர்ந்துகொள்ள என்னால் நேரில் செல்ல முடியவில்லை. எனவே முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்து என்னுடைய ஆறுதல்களை தெரிவித்தேன். அரசியல் பாதை, கொள்கை நிலைப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அதையும் தாண்டி ஓர் உறவு இருக்கிறது. கொள்கை கோட்பாடுகள் வேறு. மனித உறவும் மாண்பும் வேறு. ஒருமுறை நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் மயங்கி விழுந்தபோது, என்னை தொடர்பு கொண்டு உடல்நிலையை கவனித்துக்கொள்ளும்படி ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல் என்…
மும்பை: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்றது. கிரிக்கெட் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை, ஸ்பான்சர்ஷிப் ஆகிய பிரச்சினைகள் காரணமாக 2015-ம் ஆண்டு இந்த தொடரை நிறுத்துவதாக ஐசிசி அறிவித்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பரில் இத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன. கடைசியாக நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சிஎஸ்கே அணி பட்டம் வென்றிருந்தது. செய்தித்துளிகள்: சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான்…
