எதிர்காலத்தை நோக்கி ஒரு பெரிய பாய்ச்சலில் அதிவேக பயணம்நாசாவின் சோதனை எக்ஸ் -59 சூப்பர்சோனிக் ஜெட் அதன் முதல் விமானத்திற்கு நெருக்கமாக நகர்கிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள விமானப் பயணங்களில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும். “கான்கார்ட்டின் மகன்” என்று செல்லப்பெயர் பெற்ற எக்ஸ் -59 அதன் ஆரம்ப குறைந்த வேக டாக்ஸி சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது, அதன் வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. பயண நேரங்களை கடுமையாக வெட்ட வடிவமைக்கப்பட்ட விமானம், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து பாரிஸுக்கு பயணிகளை பறக்க நோக்கமாகக் கொண்டுள்ளது வணிக விமானங்கள். சீர்குலைக்கும் சோனிக் ஏற்றம் குறைக்கும் போது, ஒலியை விட வேகமாக பறக்கும் திறன் அதன் தனித்துவமான அம்சமாகும், அதை மிகவும் அமைதியான “தம்ப்” உடன் மாற்றுகிறது. இந்த முன்னேற்றம் சூப்பர்சோனிக் பயணத்தின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும்.நாசாவின் தரை சோதனைகள் எக்ஸ் -59 சூப்பர்சோனிக் ஜெட் முதல் விமானத்திற்கு நெருக்கமாக கொண்டு வருகின்றனஜூலை 10 அன்று,…
Author: admin
கொச்சி: மாவட்ட நீதித் துறையின் நீதிமன்ற செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழிநுட்பத்தின் பொறுப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு தொடர்பான கொள்கையை கேரள உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக பயன்படுத்துவது தனியுரிமை உரிமைகளை மீறுதல், தரவு பாதுகாப்பு அபாயங்கள், நீதித் துறை முடிவெடுப்பதில் நம்பிக்கை இழப்பு உள்ளிட்ட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மாவட்ட நீதித் துறை அதன் பயன்பாட்டில் தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்க சாட்ஜிபிடி, ஜெமினி, டீப்ஸீக் போன்ற ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தக்கூடாது. ஏஐ கருவிகள் பொறுப்பான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஏஐ நீதித் துறை முடிவுகளை எடுப்பதற்கோ அல்லது சட்டப்பூர்வமான பகுத்தறியும் பணிகளுக்கோ மாற்றாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். நீதித் துறை ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் வெளிப்படைத் தன்மை, ரகசியத்தன்மை, நியாயத்தன்மை, பொறுப்புணர்வை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த கொள்கையின் நோக்கம்.…
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக ‘இசை’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்போது அவர் இயக்கும் படத்துக்கு ‘கில்லர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் கனவு படமான இதில், காருக்கு முக்கியத்துவம் இருப்பதால், ஜெர்மனியில் இருந்து புதிய பிஎம்டபிள்யூ கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை தனது பிறந்த தினத்தை முன்னிட்டு எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது.
சென்னை: மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய ஜூலை 25, 26-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் திருமணத்தை பதிவு செய்ய, பத்திர பதிவுத் துறையால் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 2018 டிசம்பர் 10-ம் தேதி முதல், திருமண தரப்பினர் இணைய வழியில் விண்ணப்பித்து, திருமண பதிவுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய, சிறப்பு முகாம் நடத்துமாறு பத்திர பதிவுத் துறைக்கு அயலக தமிழர் நலன், மறுவாழ்வு துறை ஆணையர் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். இதை கருத்தில் கொண்டு, சிறப்பு முகாம்கள் நடத்த பத்திர பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை வேலை நாளாக உள்ள சார்பதிவாளர்…
புதிய ஆராய்ச்சி ஒரு தினசரி கப் கருப்பு தேநீர் இதய ஆரோக்கியத்திற்கு கணிசமாக பயனளிக்கும் என்று கூறுகிறது, குறிப்பாக வயதான பெண்களுக்கு. எடித் கோவன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கருப்பு தேயிலை உட்கொண்ட பங்கேற்பாளர்கள் வயிற்று பெருநாடி கால்சிஃபிகேஷனின் ஆபத்து குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது, இது இருதய பிரச்சினைகளை முன்னறிவிப்பவராகும். ஒரு சூடான கப் தேநீர், காலையில் அல்லது மாலை, உங்கள் ஆன்மாவை இனிமையாக்குவதை விட அதிகமாக இருக்கலாம். இது உண்மையில் உங்கள் இதயத்தை பாதுகாக்கக்கூடும்! இந்த தாழ்மையான கோப்பை தேநீர் இதயத்தின் சிறந்த இரகசியமாக இருக்கலாம். ஆம், அது சரி. அதன் ஆறுதலான அரவணைப்பு மற்றும் பணக்கார நறுமணத்திற்கு அப்பால், பிளாக் டீ பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கலாம், அவை பிற்கால வாழ்க்கையில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இந்த பிரபலமான பானம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கும் சக்தியைக் கொண்டிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள்…
யமுனா நகர்: லவ் ஜிகாத் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து என கூறிய யமுனா நகர் நீதிமன்றம், இதற்கு வற்புறுத்திய நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்தார். அதில் பள்ளிக்கு செல்லும் போது முஸ்லிம் இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வருவதாகவும், அவருடன் நட்பாக பழகும்படி ஷாபாஜ் என்பவர் வற்புறுத்துகிறார் என கூறினார். இதன் அடிப்படையில் ஷாபாஜ் மீது குற்ற சதி, போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் தொந்தரவு உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த யமுனாநகர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: மைனர் இந்துச் சிறுமியை, முஸ்லிம் இளைஞரிடம் நட்பாக பழகும்படி வற்புறுத்துவதும் ‘லவ் ஜிகாத்’தில் ஒன்று. இதுபோன்ற செயல்கள் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்த குற்றத்துக்காக சிறுமியை…
சென்னை: ஆடிக் கிருத்திகையை ஒட்டி, வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். மற்ற மாதங்களில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தை விட, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஜூலை 20-ம் தேதி, ஆக. 16-ம் தேதி என 2 முறை கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. அந்த வகையில், முதல் ஆடிக் கிருத்திகை நாளான நேற்று அனைத்து முருகன் கோயில்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன. சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதனால் அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையை பொருத்தவரை வடபழனி முருகன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஆடிக் கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெறும். வடபழனி முருகன் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு பள்ளியறை பூஜைகள் நடந்தன. காலை 5 மணிமுதல் நண்பகல் 12…
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி நடித்துள்ள படம், ‘பிளாக்மெயில்’. ஜேடிஎஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஆக. 1-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், வசந்தபாலன், ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் தனஞ்செயன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசும்போது, “இந்தப் படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்து கடைசி 8 நாட்கள் மட்டும் ஷூட்டிங் முடியாமல் இருந்தது. அதற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்தவர் ஜி.வி.பிரகாஷ். படத்துக்காக அவர் பாதி சம்பளம்தான் வாங்கி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டப்பிங் முடித்து இசை வெளியீடு வரைவந்திருக்கிறார். அவருக்கு என்றுமே கடமை பட்டிருக்கிறேன்” என்றார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் சுற்றுப்பயணத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறையும் வரை நீட், உதய் மின்திட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்ற மறுத்தார். ஆனால் பழனிசாமி நீட் தேர்வை 2017-ல் நடைமுறைக்கு கொண்டுவந்தார். 2011-ல் அதிமுக ஆட்சி அமைந்தபோது, திமுக வைத்த கடன் ரூ.1 லட்சம் கோடி. ஆனால் 2021-ல் அதிமுக விட்டுச்சென்ற கடன் ரூ.5.7 லட்சம் கோடி. 11 ஆண்டுகளில் ரூ.130 லட்சம் கோடிக்கு பாஜக அரசு கடன் வைத்திருக்கிறது. தமிழகத்தின் கடன் சுமையை பற்றி பேசும் பழனிசாமி, மத்திய பாஜக அரசின் கடன் சுமையை பற்றி பேச துணிவு இருக்கிறதா? சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு, மும்மொழி கொள்கை திணிப்பு, கல்வித்துறைக்கு நிதி மறுப்பு, மக்களவை எண்ணிக்கை குறைக்கும் முயற்சி போன்றவற்றை எதிர்க்காமல் அடிமை கட்சியாக அதிமுக …
அனுபவமுள்ள இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் ச ura ரப் சேத்தி, மேம்பட்ட நல்வாழ்வுக்காக உங்கள் அன்றாட உணவில் ஐந்து விதைகளை இணைக்க பரிந்துரைக்கிறார். சியா விதைகள் ஆற்றலை அதிகரிக்கின்றன, அதே நேரத்தில் ஆளி விதைகள் ஹார்மோன் சமநிலைக்கு உதவுகின்றன. பூசணி விதைகள் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கின்றன, மேலும் எள் விதைகள் எலும்புகளை வலுப்படுத்துகின்றன. செரிமான பிரச்சினைகளுக்கு, பெருஞ்சீரகம் விதைகள் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. இந்த எளிய சேர்த்தல்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும், இயற்கையாகவே பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்கின்றன. விதைகளில் முணுமுணுப்பது ஒரு சிறிய உணவு மாற்றங்கள் போல் தோன்றலாம், ஆனால் இது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். விதைகள் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்து பவர்ஹவுஸ்கள். 25 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவத்துடன் ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டின் பயிற்சியுடன் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, இயற்கையாகவே…
