சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் நவம்பர் மாதத்துக்கு பிறகு தொடங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார் வடசென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவர் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 2024-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் பிரதி மாதம் ஒவ்வொரு வார வியாழக்கிழமையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கிராம, நகர்ப்புற மக்களின் இருப்பிடம் நோக்கி அரசு திட்டங்கள் சென்றடைய ஏதுவாக 10 ஆயிரம் முகாம்கள் ஜூலை முதல் அக்டோபர் வரை நடைபெற உள்ளன. சென்னையில் 400 முகாம்கள் நடைபெறும். மண்டல வாரியாக முகாம்: இந்த முகாம்கள் மண்டல வாரியாக நடைபெறும் என்பதால் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவர் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும்…
Author: admin
ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸுக்கு அனா டி அர்மாஸின் வீடியோ செய்தி உற்சாகத்தையும் விவாதத்தையும் பற்றவைத்தது (கெட்டி இமேஜஸ்) அனா டி அர்மாஸ் தற்போது ஒருவருடன் டேட்டிங் செய்கிறாரா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகையில், பதில் தொழில்நுட்ப ரீதியாக நேரடியானது: அவர் அதிகாரப்பூர்வமாக ஒற்றை, ஆனால் உண்மை என்பது சூழ்ச்சியின் ஒரு பக்கத்துடன் வருகிறது. இந்த நேரத்தில் ANA பகிரங்கமாக யாருடனும் பிணைக்கப்படவில்லை என்றாலும், டாம் குரூஸுடன் சமீபத்திய பார்வைகளும் வசதியான தோற்றங்களும் இணையத்தை ஊகங்களுடன் எரியூட்டுகின்றன. அவர்களின் வேதியியல் மறுக்க முடியாதது, ஆனால் இரண்டு நட்சத்திரங்களும் இது வேலையைப் பற்றியது என்று வலியுறுத்துகின்றன … இப்போதைக்கு. உயர்மட்ட உறவுகளின் வரலாற்றில் அதைச் சேர்க்கவும், ஒவ்வொரு புதிய தொடர்பும் ஏன் புதிய வதந்திகளைத் தூண்டுகிறது என்பதைப் பார்ப்பது எளிது. சுருக்கமாக: அவள் ஒற்றை, ஆனால் ஹாலிவுட்டின் வதந்தி ஆலை கூடுதல் நேரம் வேலை செய்கிறது.ஆரம்பகால காதல் அத்தியாயங்கள்மார்க் க்ளோடெட் (2010–2013): அனாவின் முதல் உண்மையான பொது…
திருவனந்தபுரம்: சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல. அதனால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சசி தரூரை புறக்கணிப்பதாகவும், அவரை உள்ளூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது கிடையாது என்றும் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.முரளிதரன் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்கும் சசி தரூருக்கும் இடையிலான பிளவை பொதுவெளியில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்கும் குழுவுக்கு சசி தரூர் தலைமை வகித்தார். இதனால் அவர் மீது காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் முரளிதரன் இதனை கூறியுள்ளார். “எங்களில் ஒருவராக சசி தரூரை நாங்கள் பார்க்கவில்லை. தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரையில் நாங்கள் அவரை கட்சியின் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப் போவது இல்லை. அவர் எங்களுடன் இல்லாத காரணத்தால் அவரை புறக்கணிப்பது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அவர் மீதான…
பர்மிங்காம்: வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற இருந்த இந்தப் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பிரெட் லீ மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த 18-ம் தேதி இந்த தொடர் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி இந்திய வீரர்கள் பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட மறுத்துவிட்டனர். இந்த தொடரில் இந்திய அணியை யுவராஜ் சிங் கேப்டனாக வழிநடத்துகிறார். ஹர்பஜன் சிங்,…
உதய் கார்த்திக், லுத்துஃப், சௌந்தரராஜா, நரேன், சீதா, பரணி, விக்னேஷ் நடிக்கும் படம், ‘சோழநாட்டான்’. பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு எஃப்.எஸ்.ஃபைசல் இசையமைக்கிறார். செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் என்ற நிறுவனம் மூலம்மும்பை தொழிலதிபர் மாரியப்பன் முத்தையா தயாரிக்கிறார். இதன் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. படம்பற்றி பேசிய பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா, “தஞ்சாவூரில் ஆரம்பித்து சென்னையில் தொடர்வது போன்ற கதையை கொண்ட படம் இது. ரேக்ளா பந்தய பின்னணியில் உருவாகும் இந்தப் படம் மலைவாழ் மக்களின் பெரும் துயரத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. இதில் பிரபலமான நடிகர் ஒருவர் வில்லன்வேடத்தில் நடிக்கிறார். அவர் பற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும். சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பைத் திரையில் சொல்லும் விதமாக இந்தப்படம் தயாராகிறது.” என்றார்.
சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தை ரூ.360 கோடி மதிப்பில் 4-வது முனையமாக மாற்றவும், பெரம்பூர் – அம்பத்தூர் இடையே 6.4 கி.மீ. தொலைவுக்கு 5,6-வது புதிய பாதைகள் அமைக்கவும், ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் ரயில்களை இயக்க வசதியாக, பெரம்பூர் ரயில் நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்திருந்தார். இதற்காக, தெற்கு ரயில்வேயில் நிர்வாக தரப்பில் ஒப்புதல் பெறப்பட்டு, பெரம்பூர் ரயில் நிலையத்தை ரூ.360 கோடியில் 4-வது முனையமாக மாற்ற, ரயில்வே வாரியத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்யப்பட்டது. இதுதவிர,பெரம்பூர் – அம்பத்துார் இடையே 6.4 கி.மீ., துாரத்துக்கு 5,6-வது புதிய பாதை ரூ.182 கோடி ரூபாயில் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.…
சென்னை: சென்னையில் சிஎன்ஜி விலை டீசலுக்கு இணையாக உயர்ந்த நிலையில், தட்டுப்பாடும் நிலவுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் மாசுபாடு விவகாரத்தில், ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பை ஏற்படுத்துவது, அதிக மைலேஜ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு தழுவிய அளவில் சிஎன்ஜி வாகனங்களுக்கு வரவேற்பு நிலவுகிறது. இதனால் டீசல், பெட்ரோல் வாகனங்களையும் சிஎன்ஜியில் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படுகின்றன. இதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் தமிழக போக்குவரத்துத் துறை வழங்கியுள்ளது. அதேநேரம், சென்னையில் தொடர்ச்சியாக சிஎன்ஜி விலை உயர்ந்து வருவதோடு, தட்டுப்பாடும் நிலவுவதாக கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் போல சிஎன்ஜி நிலையங்கள் அதிகளவில் இல்லை. சமூக வலைதளங்கள் மூலமே சிஎன்ஜி இருப்பதை உறுதி செய்யும் நிலை உள்ளது. மேலும், கடந்த ஓராண்டில் (2024 ஜூலை முதல்) ரூ.4 என்றளவில் சிஎன்ஜி விலை உயர்ந்து டீசல் விலைக்குநிகராக வந்துள்ளது. இத்தகைய சூழலில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்…
மழைக்காலம் குளிர்ச்சியான மழையைக் கொண்டுவருகிறது, ஆனால் இது முடி வீழ்ச்சி, ஃப்ரிஸ் மற்றும் உச்சந்தலையில் தொற்று போன்ற முடி பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். இந்த நேரத்தில் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க, நீங்கள் சாப்பிடுவது நீங்கள் அதை எவ்வாறு கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதைப் போலவே முக்கியமானது. சில உணவுகள் முடி வளர்ச்சியை ஆதரிக்கும், உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், முடி சேதத்தை குறைக்கும் ஊட்டச்சத்துக்களில் நிறைந்துள்ளன. உங்கள் அன்றாட உணவில் இவற்றை சேர்ப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். கீரை மற்றும் பயறு வகைகள் முதல் தயிர் மற்றும் உலர்ந்த இஞ்சி வரை, இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் இயற்கையாகவே உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கும் மற்றும் அதன் அனைத்து பருவமழை நீளமாகவும் இருக்கும்.இந்த சூப்பர்ஃபுட்ஸ் மூலம் பருவமழையில் முடி வீழ்ச்சியைத் தடுக்கவும்1. கீரைகீரை என்பது இரும்பு, வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும். இந்த…
லக்னோ: சமூக விரோதிகள் காவி உடையில் ஊடுருவி கன்வர் யாத்ரீகர்களின் புகழை கெடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மிர்சாபூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்குவதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கும், கன்வர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிஆர்பிஎப் வீரரை தாக்கிய 3 கன்வர் யாத்ரீகர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் உ.பி.யில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: உற்சாகம் எங்குள்ளதோ, அங்குதான் நம்பிக்கையும், பக்தியும் இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அந்த உற்சாகத்தை கெடுக்கவும், பக்தி மற்றும் நம்பிக்கைக்கு அவப் பெயர் ஏற்படுத்தவும் சில சமூக விரோதிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். காவி உடையணிந்த கன்வர் யாத்ரீகர்கள் சாலைகளிலும், ஓட்டல்களிலும்…
பெரும்பாலான தலைவலிகள் பாதிப்பில்லாதவை, அவை வீட்டில் நிர்வகிக்கப்படலாம் (அவை சங்கடமாக இருந்தாலும்) இருப்பினும், சில வகையான தலைவலி கடுமையான மருத்துவ சிக்கல்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகளாக செயல்படுகிறது. நீங்கள் அனுபவிக்கும் போது மருத்துவருக்கு வருகை அவசியம்:தலைவலி திடீரென தீவிர சக்தியுடன் தொடங்குகிறது, சிலர் அதை ஒரு இடி தலைவலி என்று விவரிக்கிறார்கள்தலைவலி நிலையான ஓவர்-தி-கவுண்டர் வலி நிவாரண மருந்துகளுக்கு பதிலளிக்காதுதலைவலி பலவீனத்துடன் குழப்பத்தை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் பார்வை மாற்றங்கள் மற்றும் காய்ச்சல் மற்றும் உணர்வின்மை தோன்றும்தலைவலி முறை உருவாகிறது, அல்லது நேரம் செல்லும்போது மோசமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது.தலையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து நீங்கள் தலைவலியை அனுபவிக்கும் போதுஆதாரங்கள்மயோ கிளினிக்மெட்லைன் பிளஸ்சிறந்த சுகாதார சேனல்ஹெல்த் டைரக்ட் ஆஸ்திரேலியாஇன்று மருத்துவ செய்திமறுப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை.
