டாக்கா: வங்கதேச விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. வங்கதேச தலைநகரான டாக்காவின் உட்டாரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நேற்று வங்கதேச போர் விமானம் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மதியம் 1:06 மணிக்கு எப்-7 பிஜிஐ பயிற்சி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 27 ஆக உயர்ந்துள்ளது, அவர்களில் 25 பேர் குழந்தைகள் என்று வங்கதேசத்தின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸின் சிறப்பு ஆலோசகர் சைதுர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விபத்தில் சுமார் 170 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில்…
Author: admin
ஜீதமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் 3’. இதில் நடனக் கலைஞர்களும் பிரபலங்களும் ஜோடியாக இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கிவந்தனர். நடுவர்களாக பாபா பாஸ்கர், சினேகா, வரலட்சுமி சரத்குமார் இருந்தனர். சிறப்பு விருந்தினராக விஜய் ஆண்டனி கலந்து கொண்டார். இதன் இறுதிப்போட்டிக்கு தில்லை- ப்ரீத்தா, நிதின்-தித்யா, சபரீஷ்- ஜனுஷிகா, பிரஜனா – காகனா, திலீப்- மெர்சீனா ஆகிய ஐந்து ஜோடிகள் தேர்வாகினர். இதில், நிதின் – டித்தியா ஜோடி இந்த சீசனின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். முதல் ‘ரன்னர் அப்’பாக தில்லை -ப்ரீத்தாவும் இரண்டாவது ‘ரன்னர் அப்’பாக பிரகனா- காகனாவும் வந்தனர். அவர்களுக்கு விஜய் ஆண்டனி பரிசுகளை வழங்கினார்.
கடலூர்: ரஷ்யாவில் கைதாகி சிறையில் இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் பகுதி மருத்துவ மாணவரை மீட்கக்கோரி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 25-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து, ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்று, அங்கு தவறான குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் தனது மகன் கிஷோரை விடுவித்து, இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கு, உரிய முறையில் மனு அளித்து தீர்வு காணுமாறு கூறினர். இதையடுத்து சரவணன் மற்றும் சிலர், மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடர்பாக மனு அளித்தனர். இதனை தொடர்ந்து சரவணன் செய்தியாளர்களிடம் கூறியது: நான்…
சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அதனடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜூலை 22) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.74,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.128-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜான்ஹ்வி கபூரின் பாணி அதன் சார்பியல் மற்றும் சிரமமின்றி அதிர்வின் காரணமாக ஜெனரல் இசட் உடன் எதிரொலிக்கிறது. ‘கிர்லி’ சக்திவாய்ந்ததாக இருக்கக்கூடும் என்பதை நிரூபித்து, அவள் பெண்ணிய நிழற்படங்களை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்கிறாள். அவளுடைய விளையாட்டு தோற்றம் ஸ்டைலானது, மேலும் அவள் தனக்குத்தானே உண்மையாக இருக்கும்போது போக்குகளுடன் சோதனை செய்கிறாள். ஜான்வி இந்திய உடைகளை எளிய ஸ்டைலிங் மூலம் நவீனமயமாக்குகிறார், எந்தவொரு அலங்காரத்திற்கும் நம்பிக்கை முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது. ஜான்வி கபூர் விரைவாக பாணி உத்வேகத்திற்காக மக்கள் பார்க்கும் ஒருவராக மாறிவிட்டார், அவள் ஒரு பிரபலமானவள் என்பதால் மட்டுமல்ல. அவள் அனைவரும் ஒரு நிகழ்விற்காக உடையணிந்தவரா அல்லது ஒரு பயிற்சிக்குப் பிறகு வெளியேறினாலும், அவளுடைய பேஷன் தேர்வுகள் தொடர்புபடுத்தக்கூடியதாகவும், சிரமமின்றி, இன்னும் முற்றிலும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. விஷயங்களை தனிப்பட்டதாக வைத்திருக்கும்போது போக்குகளுடன் விளையாடுவதற்கான இந்த வழியை அவள் பெற்றிருக்கிறாள், அது ஜெனரல் இசட், குறிப்பாக, உண்மையில் இணைக்க முடியும்.நீங்கள் உங்கள் சொந்த பாணியைக்…
கலிஃபோர்னியாவின் சாண்டா பார்பரா, சான் லூயிஸ் ஒபிஸ்போ, மற்றும் வென்ச்சுரா மாவட்டங்களில் வசிப்பவர்கள் ஜூலை 22, 2025 செவ்வாய்க்கிழமை ஸ்பேஸ்எக்ஸின் பால்கான் 9 ஏவுதலுக்குப் பிறகு எட்டு நிமிடங்களுக்குப் பிறகு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சோனிக் ஏற்றம் கேட்கலாம் என்று அதிகாரிகள் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். திடுக்கிடும் போது, ஏற்றம் பாதிப்பில்லாதது மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் மறுபயன்பாட்டு ராக்கெட் அமைப்பின் வழக்கமான அம்சம். 11:13 AM PDT க்கு திட்டமிடப்பட்ட இந்த வெளியீடு, 57 நிமிட வெளியீட்டு சாளரத்தின் போது நாசாவின் ட்ரேசர்ஸ் மிஷன் மற்றும் மூன்று கூடுதல் பேலோடுகளை சுற்றுப்பாதையில் கொண்டு செல்லும்.வாண்டன்பெர்க்கிலிருந்து பால்கன் 9 கப்பலில் நாசாவின் ட்ரேசர்ஸ் மிஷனைத் தொடங்க ஸ்பேஸ்எக்ஸ்வரவிருக்கும் பணி வாண்டன்பெர்க் விண்வெளி படை தளத்தில் விண்வெளி வெளியீட்டு வளாகத்தில் 4 கிழக்கிலிருந்து தொடங்கப்படும். சூரியக் காற்றுக்கும் பூமியின் காந்த மண்டலத்திற்கும் இடையிலான தொடர்புகளைப் படிக்க வடிவமைக்கப்பட்ட நாசாவின் ட்ரேசர்ஸ் செயற்கைக்கோள்களை (டேன்டெம் மறு…
மும்பை: கேரள மாநிலம் கொச்சியிலிருந்து நேற்று காலை மும்பைக்கு சென்ற விமானம் தரையிறங்கியபோது கனமழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் இன்ஜின் சேதமடைந்தது. ஏர் இந்தியா விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை காலை 9.27 மணிக்கு தரையிறங்கியபோது மழையால் ஓடுபாதை மிகவும் நனைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் சற்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி அருகிலிருந்த புல்வெளியில் மோதியது. இதனால், விமானத்தின் வலதுபுற இயந்திரத்தின் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மும்பை விமான நிலைய அறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறி்த்து ஏர் இந்தியா நிறுவனம் கூறுகையில், “விமானத்தை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சிறிய அளவிலான தாமதத்தை தவிர வேறு எந்த விமான சேவைகளுக்கும் இதனால் பாதிப்பு இல்லை. பயணிகளின் பாதுகாப்புக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளது.
எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத மலைக் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள படம், ‘போகி’. உண்மைச் சம்பவக் கதையான இதில், நபி நந்தி, சரத், சுவாஸிகா, பூனம் கவுர், வேல. ராமமூர்த்தி, சங்கிலி முருகன், ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் என பலர் நடித்துள்ளனர். ராஜா சி சேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு மரியா மனோகர் இசை அமைத்துள்ளார். வி.ஐ.குளோபல் நெட்வொர்க்ஸ் தயாரித்துள்ள இதை விஜயசேகரன் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, “ஒரு மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்குக் கல்வியும் மருத்துவமும் கனவாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த நாயகன், தனது தங்கை மூலமாக தனது கிராமத்தின் மருத்துவ தேவையை சரி செய்ய விரும்புகிறான். அது நடந்ததா, இல்லையா? என்பது படத்தின் கதை” என்றார். ஆக. 1-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை பிஜிபி என்டர்பிரைசஸ் சார்பில் பி.ஜி.பிச்சைமணி வெளியிடுகிறார்.
சென்னை: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுயஉதவி குழு பெண்கள் 2.50 கோடி பேருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கி கடனுதவி வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, அவற்றின் செயல்பாடுகளுக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் 4.08 லட்சம் குழுக்களுக்கு ரூ.21,392 கோடியும், 2022-23-ம் நிதி ஆண்டில் 4.49 லட்சம் குழுக்களுக்கு ரூ.25,642 கோடியும், 2023-24-ம் நிதி ஆண்டில் 4.79 லட்சம் குழுக்களுக்கு ரூ.30,074 கோடியும் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து, கடந்த 2024-25-ம் நிதி ஆண்டில் 4.84 லட்சம் குழுக்களுக்கு ரூ.35,189 கோடி கடன் வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக, நடப்பு 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், சுயஉதவி குழு…
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு அதிக கொழுப்பை நிர்வகிப்பது மிகவும் முக்கியம், மேலும் நீங்கள் சாப்பிடுவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. கொழுப்பைக் குறைக்க உதவும் பல உணவுகளை டயட்டீஷியன்கள் பரிந்துரைக்கின்றனர், ஆனால் சியா விதைகள் சிறந்த ஒன்றாகும். இந்த சிறிய விதைகள் எல்.டி.எல், “மோசமான” கொழுப்பைக் குறைக்க உதவும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, இது இதய பிரச்சினைகளை ஏற்படுத்தும். சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, அவை உங்கள் இரத்த நாளங்களை தெளிவாக வைத்திருக்கவும், உங்கள் இதயம் வலுவாகவும் இருக்கின்றன. உங்கள் உணவில் சியா விதைகளை தவறாமல் சேர்ப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் குறைந்த கொழுப்பைக் குறைப்பதற்கும் எளிதான மற்றும் இயற்கையான வழியாகும்.அதிக கொழுப்பைக் குறைப்பதற்கான சியா விதைகளின் நன்மைகள்சியா விதைகள் கரையக்கூடிய நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்பின் அளவை பராமரிப்பதற்கான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் ஏற்றப்படுகின்றன. அவை சிறியதாக இருக்கலாம்,…
