Author: admin

புதுடெல்லி: பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மகர் துவார் என்ற பகுதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 2ம் நாளான இன்று, வழக்கம்போல் இரு அவைகளும் காலை 11 மணிக்குக் கூடின. அப்போது, இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர், இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தின் பின்னணி பற்றியும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு(எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, வெளியே வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகர் துவார் எனும் நாடாளுமன்ற வாயிலில்…

Read More

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ட்ரூப். ஏராளமான நாடகங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள இவர், பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1967-ம் ஆண்டு வெளியான ‘ஸ்டார் ட்ரெக்’, ‘மிஷன் இம்பாசிபிள்’ ஆகிய சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான இவர், ‘தி டெவிஸ்’ஸ் பிரிகேட்’, ‘கெல்லிஸ் ஹீரோஸ்’, ‘சம்மர் ஸ்கூல்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவின் பிரேவர்லி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த இவர், வயது முதிர்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலமானார். அவருக்கு வயது 97. டாம் ட்ரூப் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டாம் ட்ரூப் மனைவியும் நடிகையுமான கரோல் குக், கடந்த 2023-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.

Read More

சென்னை: புரசை​வாக்​கம் தாலுகா அலு​வல​கத்​தில் உள்ள இ-சேவை மையம் முன்பு விழுந்த மரத்தை வரு​வாய்த்​ துறை​யினர் அகற்​றாத​தால் பொது​மக்​கள் அவதிக்​குள்​ளா​யினர். சென்னை புரசை​வாக்​கம் தாலுகா அலு​வலக வளாகத்​தில் 2 அலகு​கள் கொண்ட இ-சேவை மையம் மற்​றும் ஒரு ஆதார் மையம் செயல்​பட்டு வரு​கிறது. இந்த மையத்​துக்கு தின​மும் 150-க்​கும் மேற்​பட்​டோர் வந்​து, ஆதார் தொடர்​பான சேவை​கள் மற்​றும் வரு​வாய்த்​துறை, சமூக நலத்துறை சார்ந்த சான்​றுகளை பெற விண்​ணப்​பித்து வரு​கின்​றனர். சென்​னை​யில் கடந்த ஒரு வார​மாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலை​யில், இ-சேவை மையம் முன்பு இருந்த மரம், நேற்று முன்​தினம் வேரோடு சாய்ந்து விழுந்​தது. இந்த மையத்​தின் பணி​யாளர்​கள் நேற்று கடும் சிரமத்​துக்​கிடையே மையத்​துக்​குள் நுழைந்​துள்​ளனர். அதன் பின்​னர் காலை 10 மணிக்​குமேல் பொது​மக்​கள் அதிக அளவில் வரத் தொடங்​கினர். ஒவ்​வொரு​வரும் ஆபத்​தான நிலை​யில், மரத்​தின் மீது ஏறி, இறங்கி கால் நடுங்​கியபடி இ-சேவை மையத்​துக்​குள் செல்ல நேர்ந்​தது. வயதானவர்​கள்,…

Read More

கால்களின் கால்களில் பூண்டு தேய்த்தல் என்பது சமூக ஊடகங்கள் மற்றும் ஆரோக்கிய வலைப்பதிவுகள் முழுவதும் பரவலாக பகிரப்பட்ட ஒரு வீட்டு வைத்தியம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், காய்ச்சலைக் குறைக்கலாம், பூஞ்சை தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்று மக்கள் கூறுகின்றனர், மற்றவர்கள் இதை ஒரு ஆதாரமற்ற போக்கு என்று அழைக்கிறார்கள். பூண்டு அதன் ஆண்டிமைக்ரோபையல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற அலிசினில் நிறைந்திருக்கிறது-ஆனால் ஆரோக்கிய நன்மைகளை வழங்க கால்கள் வழியாக உறிஞ்ச முடியுமா? பூண்டின் வாய்வழி நன்மைகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டாலும், தோல் வழியாக அதன் பயன்பாடு கேள்விக்குரியதாகவே உள்ளது.பூண்டு நிரூபிக்கப்பட்ட மருத்துவ பண்புகளை வழங்குகிறது என்றாலும், அதை உங்கள் காலில் தேய்த்தல் அந்த நன்மைகளை அடைய பயனுள்ள அல்லது மருத்துவ ரீதியாக ஒப்புதல் அளித்த வழி அல்ல. சிறந்தது, இது சிறிய பூஞ்சை காளான் விளைவுகளை வழங்கக்கூடும், ஆனால் மோசமான நிலையில், இது ரசாயன தீக்காயங்கள் மற்றும்…

Read More

புதுடெல்லி: ஜெகதீப் தன்கர் ராஜினாமா விவகாரத்தில் தீவிரமாக ஏதோ ஒன்று நடந்திருப்பதாக காங்கிரஸ் சந்தேகம் கிளப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “நேற்று, மதியம் 12:30 மணிக்கு ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இதில் ஜே.பி. நட்டா மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறிது நேர விவாதத்துக்குப் பிறகு, கூட்டம் மீண்டும் மாலை 4:30 மணிக்கு கூடும் என்று முடிவு செய்யப்பட்டது. மாலை 4:30 மணிக்கு, கூட்டம் ஜெகதீப் தன்கர் தலைமையில் மீண்டும் கூடியது. ஆனால் நட்டா மற்றும் ரிஜிஜு ஆகியோர் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இரண்டு மூத்த அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது ஜெகதீப் தன்கருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவில்லை. கோபமடைந்த அவர் கூட்டத்தை மதியம் 1 மணிக்கு மாற்றினார். எனவே நேற்று…

Read More

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னடப் படமான ‘காந்தாரா’, கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அதிகஎதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டுப் படக்குழு அறிவித்துள்ளது. அதில் பேசும் ரிஷப் ஷெட்டி, “மூன்று வருட இடைவிடாத அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் இதன் படப்பிடிப்பு 250 நாட்கள் நடந்துள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்தாலும் இந்தப் பயணம் முடியவில்லை. இப்போதுதான் தொடங்குகிறது. தெய்வீக காவியமான இந்தப் படம் அக். 2-ல் வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Read More

சென்னை: நாடு​முழு​வதும் 700-க்​கும் மேற்​பட்ட மருத்​து​வக் கல்​லூரி​கள் உள்​ளன. அதற்கு அங்​கீ​காரம் அளித்​தல், அதை புதுப்பித்தல் உள்​ளிட்ட நடவடிக்​கைகளை தேசிய மருத்​துவ ஆணை​யம் மேற்​கொண்டு வரு​கிறது. கல்​லூரி​களின் அடிப்​படை வசதி​கள், கட்​டு​மானம், கல்வி சார்ந்த நடவடிக்​கைகள், ஆராய்ச்​சிகள், ஆய்வக வசதி​கள், மருத்​து​வ​மனை கட்​டமைப்பு உள்​ளிட்​ட​வற்​றின் அடிப்​படை​யில் அங்​கீ​காரம் வழங்​கப்​படு​கிறது. அதே​போல், மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் அதனுடன் ஒருங்​கிணைந்த மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர்​கள், மருத்​து​வப் பேராசிரியர்​களின் வரு​கையை பதிவு செய்ய ஆதா​ருடன் கூடிய பயோமெட்​ரிக் முறை கடைப்​பிடிக்​கப்​படு​கிறது. குறைந்​த​பட்​சம் பேராசிரியர்​கள், கல்​லூரி அலு​வலர்​களின் வரு​கைப் பதிவு 75 சதவீதம் இருக்க வேண்​டும். அவ்​வாறு இல்​லாத பட்​சத்​தில் அங்​கீ​காரம் புதுப்​பித்​தல், இடங்​களை அதி​கரித்​தல் ஆகிய​வற்​றுக்கு அனு​மதி மறுக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், நடப்​பாண்​டில் தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​களுக்கு அங்​கீ​காரம் அளிப்​ப​தற்​கான ஆய்வை தேசிய மருத்​துவ ஆணைய குழு சமீபத்​தில் மேற்​கொண்​டது. அதில், 36 அரசு மருத்​து​வக் கல்​லூரி​களி​லும் குறை​பாடு​கள் இருப்​பது கண்டறியப்​பட்டு நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டது. இதையடுத்​து,…

Read More

உணவைத் தவிர்ப்பது அல்லது நீண்ட நேரம் பசியுடன் இருப்பது எடை குறைக்க உதவும் என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், சுகாதார வல்லுநர்கள், குறிப்பாக இயற்கை மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில், இதற்கு நேர்மாறாக பரிந்துரைக்கின்றனர். உங்கள் வயிற்றை அதிக நேரம் காலியாக வைத்திருக்கும்போது, உங்கள் உடல் ஆற்றலைப் பாதுகாக்க அதன் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும், குறிப்பாக வயிற்றைச் சுற்றி. நீடித்த பசி பசி, அதிகப்படியான உணவு மற்றும் இரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வுகளையும் தூண்டுகிறது. காலப்போக்கில், இது கார்டிசோல் போன்ற அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கக்கூடும், இது கொழுப்பு சேமிப்பகத்தை ஊக்குவிக்கிறது. உணவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, சீரான, சரியான நேரத்தில் சாப்பிடுவது எடையை நிர்வகிப்பதற்கும் செரிமானத்தை அதிகரிப்பதற்கும் ஆரோக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும்.உங்கள் உடல் மற்றும் மனதில் அதிக நேரம் வெற்று வயிற்றில் தங்குவதன் பக்க விளைவுகள்உடல் உயிர்வாழும் பயன்முறையில் நுழைகிறது: நீங்கள் நீண்ட நேரம் சாப்பிடாதபோது, உங்கள்…

Read More

ஜப்பானின் துடிப்பான நீரில் குமேஜிமா தீவுவிஞ்ஞானிகள் ஒரு வினோதமானதைக் கண்டுபிடித்துள்ளனர் புதிய கடல் இனங்கள் அது இணையம் சலசலத்தது. தி எலும்புக்கூடு பாண்டா கடல் ஸ்கர்ட்அதிகாரப்பூர்வமாக கிளாவெலினா ஒசிபாண்டே என்று பெயரிடப்பட்டது. இந்த சிறிய, வெளிப்படையான உயிரினம் ஒரு குழந்தை பாண்டா ஒரு எலும்புக்கூட்டாக உடையணிந்ததாகத் தெரிகிறது. கறுப்பு கண் போன்ற புள்ளிகள் மற்றும் வெள்ளை “விலா எலும்புகள்” அதன் உடல் முழுவதும் ஓடுவதால், இது இதுவரை கண்டிராத விசித்திரமான மற்றும் அழகான கடல் உயிரினங்களில் ஒன்றாகும். இப்போது, இது கடல் உயிரியல் உலகம் மற்றும் சமூக ஊடகங்களில் அலைகளை உருவாக்குகிறது. இந்த கண்டுபிடிப்பு முறையாக இனங்கள் பன்முகத்தன்மையில் நவோஹிரோ ஹசெகாவா மற்றும் ஹிரோஷி காஜிஹாரா ஆகியோரால் வெளியிடப்பட்டது, விவரிக்கிறது கிளாவெலினா ஒசிபாண்டே ஒகினாவாவின் குமேஜிமா தீவில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் வெள்ளை ‘விலா எலும்புகள் போன்ற’ கப்பல்கள் மற்றும் பாண்டா – ஃபேஸ் அடையாளங்களைக் கொண்ட ஒரு வெளிப்படையான…

Read More

புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் உட்பட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. இதற்கு ஆளும் தரப்பு ஒப்புக்கொள்ளாததால் இரு அவைகளும் அடுத்தடுத்து பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், நேற்றைய நாடாளுமன்றப் பணிகள் ஏறக்குறைய முடங்கின. இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் உட்பட முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பின்(அமெரிக்கா) பங்களிப்பு குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். கேள்வி நேரம்…

Read More