சென்னை: தமிழக மாநில உருது அகாடமியின் துணை தலைவராக முஹமது நயிமூர் ரஹ்மானை மீண்டும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உருதுமொழியின் மேம்பாட்டுக்காக கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில உருது அகாடமி உருவாக்கப்பட்டது. இந்த அகாடமியின் தலைவராக உயர் கல்வித் துறை அமைச்சர் செயல்படுவார். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டும், அதைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டும் மாநில உருது அகாடமி புனரமைக்கப்பட்டு துணை தலைவராக முஹமது நயிமூர் ரஹ்மான் நியமிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது பணிக்காலத்தை 24.2.2027 வரை மேலும் 3 ஆண்டு காலம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு கல்வியாளர்கள் எம்.பி.அமானுல்லா, வி.எம்.ஹபீபுர் ரஹ்மான், சஜ்ஜாத் சுல்தான், ஏ.அப்துல் அஜிஸ், எம்.பி.,ஷேக் பசுலுல்லா, சையத் முஜிப் பைஸ் கத்ரி, ஒய்.எம்.ஹபிபுல்லா ரூமி, ஜி.எம். நசீரா , சி. கைசர் அஹமத், டி.முபாரக் உன்னிசா, நாசர் முஹம்மது மேடக்கர்,…
Author: admin
சென்னை: மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவர் மருத்துவர் நம்பெருமாள்சாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘புகழ்பெற்ற மருத்துவரும், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவருமான ‘பத்மஸ்ரீ’ நம்பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையுற்றேன். தென் தமிழ்நாட்டில் மிக எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பையும், அமெரிக்காவில் மேல்படிப்பையும் முடித்து இந்தியாவின் முதல் விழித்திரை சிறப்பு மருத்துவர் என்ற பெயர் பெற்றவர் நம்பெருமாள்சாமி. ஏழை எளியோருக்கும் கண்மருத்துவம் கிடைக்க வேண்டும், கண்பார்வைக் குறைபாட்டை நீக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தொடங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவர் மருத்துவர் நம்பெருமாள்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கான மக்களுக்குக் கண்பார்வை அளித்த நம்பெருமாள்சாமி அவர்களின் சேவைக்கு அங்கீகாரமாக உலகப் புகழ்பெற்ற டைம் இதழ், உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களில் ஒருவராகவும்…
இருமல், சளி, அல்லது ஆஸ்துமா அறிகுறிகளை எளிதாக்குவதற்கான இயற்கையான வழியை நீங்கள் தேடுகிறீர்களானால், முல்லின் தேநீர் ஒரு மென்மையான மற்றும் சக்திவாய்ந்த விருப்பமாக இருக்கலாம். முல்லீன் செடியின் (வெர்பாஸ்கம் தப்சஸ்) இலைகள் மற்றும் பூக்களிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த மூலிகை தேநீர் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் நுரையீரல் மற்றும் சுவாச ஆரோக்கியத்தை ஆதரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சியின் படி, முல்லின் வீக்கத்தைக் குறைக்கவும், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடவும், நுரையீரலில் இருந்து சளியை அழிக்கவும் உதவும். அதையும் மீறி, செரிமானத்திற்கு உதவுவதற்கும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதற்கும் இது அறியப்படுகிறது. முல்லின் தேநீரின் 10 அறிவியல் மற்றும் பாரம்பரிய ஆதரவு சுகாதார நன்மைகளை இங்கே ஒரு நெருக்கமான பார்வை.10 வழிகள் முல்லின் தேநீர் இயற்கையாகவே சுவாச ஆரோக்கியத்தை ஆதரிக்கிறதுசுவாச சிக்கல்களை நீக்குகிறதுசளி, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துயரத்தை எளிதாக்குவதற்கு முல்லின் தேநீர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன்…
புதுடெல்லி: இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததன் பின்னணி குறித்து அன்றாடம் புதுப்புது ஊகங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில், வெளியுறவு அமைச்சகம் அவருக்கு மிகக் குறைவான வெளிநாட்டுப் பயணங்களை ஒதுக்கியதாலும், அரசு ‘ப்ரோட்டோகால்’ ரீதியாக மரியாதைக் குறைபாடுகளால் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாகவும் அவர் ராஜினாமா செய்திருக்கலாம் என்ற புதிய ஊகம் தற்போது வெளியாகியுள்ளது. தனக்கு முன்பு குடியரசு துணைத் தலைவர் பதவிகளில் இருந்தவர்களுடன் ஒப்பிடுகையில் தான் ஓரங்கட்டப்படுவதாக, உரிய மரியாதை வழங்கப்படாததாக தன்கர் உணர்ந்தார் என்று இந்த புதிய ‘தியரி’ கூறுகிறது. ஜெகதீப் தன்கர் 35 மாதங்கள் இப்பதிவியில் இருந்துள்ளார். ஆனால் 4 முறை மட்டுமே இருநாட்டு நல்லுறவு ரீதியாக அவர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். இதனால் வெளியுறவு அமைச்சகத்துடன் அவருக்கு பிணக்கு ஏற்பட்டுள்ளது. வெளியுறவுக் கொள்கைகள் ரீதியாக ஓரங்கட்டப்பட்டதாக தன்கர் உணர்ந்துள்ளார். அவருக்கு முன்னதாக குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கயா நாயுடு 2017 முதல்…
சென்னை: மாநில தகுதித் தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்கள், அதற்கான சான்றிதழ்களை ஆகஸ்ட்7-ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மாநில தகுதித் தேர்வு (செட் தேர்வு) கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படையில் செட் தேர்வில் தமிழ் வழியில் பயின்றோருக்கு (பிஎஸ்டிஎம்) இடஒதுக்கீடு வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. செட் தேர்வு எழுதியுள்ள விண்ணப்பதாரர்களில் தமிழ் வழி ஒதுக்கீ்ட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு…
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் நேற்று ரிஷப் பந்த் காயமடைந்ததைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரை களமிறக்காமல் ஷர்துல் தாக்கூரை ஏன் இறக்க வேண்டும் என்று ஷுப்மன் கில் – கம்பீர் கூட்டணிக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் தினேஷ் கார்த்திக். வாஷிங்டன் சுந்தர்தான் இந்திய அணியின் ‘ஆபத்பாந்தவர்’. நெருக்கடி தருணங்களில், எதிரணியினர் சப்தங்களைப் போட்டுக் கொண்டு ஆரவாரம் செய்யும் தருணங்களில் கிரீசில் கொஞ்சம் அமைதியை நிலைநாட்டி ஆடுபவர் சுந்தர். நேற்று சாய் சுதர்ஷன் அத்தகைய அமைதியான ஒரு நிலையை தன் மரபான ஆட்டம் மூலம் கொண்டு வந்தார். ரவி சாஸ்திரி சொல்வது போல் வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுத்தால் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் வாஷிங்டன் சுந்தரை 3-ம் நிலையில் களமிறங்க தயார்ப்படுத்த வேண்டும். அப்படிச் செய்து அதில் அவர் செட்டில் ஆகிவிட்டால் குல்தீப் யாதவ்வை அணியில் சேர்க்க மார்க்கமுண்டு. இந்நிலையில், திடீரென அணிக்குள் வரும் ஷர்துல் தாக்கூரை புரொமோட் செய்து…
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சினிமா தொடர்பான பக்கங்களில் அதிகம் இடம்பெறும் பெயர்… சாய் அபயங்கர். ஒருபக்கம் இவரது பாடல்கள், முன்னணி இயக்குநர்கள் – நடிகர்களின் படங்களுக்கு ஒப்பந்தம் ஆவது குறித்த செய்திகள் என்றால், இன்னொரு பக்கம் இவர் தொடர்பான ட்ரோல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழ் சினிமாவின் பிரபல பாடகர்களான திப்பு – ஹரிணி தம்பதியரின் மூத்த மகன்தான் சாய் அபயங்கர். சிறுவயது முதலே இசையில் ஆர்வம் மிகுந்த சாய் அபயங்கர், தபேலா, கிடார், டிரம்ஸ் போன்ற இசைக் கருவிகளை கற்றவர். கூடவே குரல் பயிற்சியும் மேற்கொண்ட அவர், 13 வயதிலேயே இசையமைக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார். ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைத்து 2022-ஆம் ஆண்டு வெளியான ‘வலம் வரவேண்டும்’ என்ற பாடலை சாய் அபயங்கர் எழுதி, பாடியிருந்தார். ஆனால், அந்தப் பாடல் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. கரோனா காலகட்டத்தில் தன் நண்பர் ஆதேஷ் கிருஷ்ணா உடன் சேர்ந்து தான் உருவாக்கிய…
மதுரை: போலீஸ் தாக்கியதில் மரணமடைந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா, அவரது தாயாரிடம் மதுரையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திருமங்கலம் கல்லூரி பேராசிரியை நிகிதா, அவரது தாயார் சிவகாமியம்மாள் ஆகியோர் கடந்த ஜூன் 27-ம் தேதியன்று சிவகங்கை மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்காக சென்றனர். அப்போது காரில் இருந்த நிகிதாவின் நகை காணாமல் போன புகார் தொடர்பாக கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை டெல்லி சிபிஐ பிரிவு டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரிக்கின்றனர். மடப்புரம் கோயில், திருப்புவனம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை என பல இடங்களிலும் நேரில் விசாரித்தனர். அஜித்குமார் மரணத்துக்கு முன்பு அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக்வேல், அஜித்குமாரின் நண்பர்கள் பிரவின்குமார்,…
ஒரு நம்பிக்கைக்குரிய திருப்புமுனையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் சில விகாரங்கள் புற்றுநோய், கருவுறாமை மற்றும் ஹார்மோன் கோளாறுகளுடன் இணைக்கப்பட்ட நச்சு “என்றென்றும் ரசாயனங்கள்” கலவையை அகற்ற உதவும் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், அதிகாரப்பூர்வமாக பி.எஃப்.ஏக்கள் (பெர்- மற்றும் பாலிஃப்ளூரோஅல்கில் பொருட்கள்) என அழைக்கப்படுகின்றன, அவை உடைக்க கிட்டத்தட்ட சாத்தியமற்றது மற்றும் பல தசாப்தங்களாக மனித திசுக்களில் குவிவது கண்டறியப்பட்டுள்ளது. நேச்சர் மைக்ரோபயாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பி.எஃப்.ஏ.க்களை உறிஞ்சி வெளியேற்றும் திறன் கொண்ட மனித குடல் பாக்டீரியாவின் ஒன்பது விகாரங்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டனர், உடலில் அவற்றின் செறிவை 74 சதவிகிதம் குறைக்கும். இந்த கண்டுபிடிப்புகள் நவீன சூழல்களில் மிகவும் தொடர்ச்சியான சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றுக்கு எதிராக நுண்ணுயிர் அடிப்படையிலான போதைப்பொருள் மூலோபாயத்திற்கான புதிய நம்பிக்கையை எழுப்புகின்றன.இருந்து புற்றுநோய் ஆபத்து எப்போதும் ரசாயனங்கள் மனித உடலில் பி.எஃப்.ஏக்கள் பொதுவாக மனிதனால் உருவாக்கப்பட்ட ரசாயனங்கள்,…
புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 4-ம் நாளான இன்று (ஜூலை 24), நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக மகர் துவார் பகுதியில் கூடிய எதிர்க்கட்சி எம்பிக்கள், பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ‘ஜனநாயத்தின் மீதான தாக்குதல்’ என்ற பேனரை பிடித்தபடி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் துணைத்…
