புதுடெல்லி: ‘மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்’ என்று மாநிலங்களவையில் பிரியாவிடையின்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். மாநிலங்களவையில் இன்று 24,07.2025 நடைபெற்ற பிரியாவிடையின்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை: இந்தப் பெருமை மிக்க அவையின் பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் உங்களிடமிருந்து விடைபெற எனக்கு வாய்ப்பளித்த இங்குள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன். என் மீது எப்போதும் பாசத்தையும், மரியாதையையும் காட்டிய முன்னாள் அவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன். 1978, 1984 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இந்த பெருமைமிகு அவைக்கு…
Author: admin
உடல் பருமன், வகை 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், பி.சி.ஓ.எஸ் அல்லது தொடர்ந்து உயர்த்தப்பட்ட கல்லீரல் நொதிகள் போன்ற ஆபத்து காரணிகள் உங்களிடம் இருந்தால் மதிப்பீட்டைக் கேளுங்கள். கண்டறியும் விருப்பங்களில் இரத்த பரிசோதனைகள், இமேஜிங் மற்றும் சில சந்தர்ப்பங்களில் வீக்கம் அல்லது வடுவை உறுதிப்படுத்த கல்லீரல் பயாப்ஸி ஆகியவை அடங்கும்.நீங்கள் அனுபவித்தால் உதவியை நாடுங்கள்:தொடர்ச்சியான சோர்வு அல்லது மன மூடுபனிமேல்-வலது வயிற்று அச om கரியம்விவரிக்கப்படாத எடை இழப்பு, வீக்கம் அல்லது மஞ்சள் தோல்/கண்கள்இந்த அறிகுறிகள் மேஷ் சிரோசிஸ் அல்லது அதன் சிக்கல்களை நோக்கி முன்னேறுவதைக் குறிக்கலாம், மேலும் ஆரம்பகால தலையீடு ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்
மாரீசன்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு கமல் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன், “‘மாரீசன்’ படத்தைப் பார்த்தேன். இது நகைச்சுவைக்கும், மனித உணர்வுகளுக்கும் இடையே சிரமமின்றி நடனமாடும் ஒரு படம். என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், படக்குழுவினரைப் பாராட்டவும் வைத்தது. இந்த மகிழ்ச்சியான படைப்புக்காக படக்குழுவினரை வாழ்த்த அவர்களுடன் ஓர் அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன். இப்படத்தின் நகைச்சுவையின் கீழ் மனித உணர்வுகள் மீது சமூக உணர்வுள்ள பார்வையும், நமது சமூகத்தின் இருண்ட நிழல்கள் மீதான கூர்மையான பார்வையும் உள்ளது. பார்வையாளராகவும் படைப்பாளராகவும் இயல்பாகவே ஈர்க்கும் ஒரு வகையான புதுமையான, உற்சாகமான சினிமா” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் பாராட்டு படக்குழுவினரை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சுதேஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர்…
சென்னை: “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (வியாழக்கிழமை) ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவுகள் இயல்பாக உள்ளன. அவர் இரண்டு நாட்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார்.” என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்து கொண்டு, மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதல்வர் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே…
நீங்கள் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தும்போது, உங்கள் இதயம் உடனடியாக அதன் சாதாரண ஓய்வு விகிதத்திற்கு வராது. இதய துடிப்பு மீட்பு (HRR) எனப்படும் ஒரு செயல்பாட்டின் போது, இதயம் படிப்படியாக வேகத்தில் அதன் இயல்பான தாளத்திற்குத் திரும்புகிறது. உங்கள் ஒரு நிமிட இதய மீட்பு விகிதம் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை முடிக்கும்போது உங்கள் இதயத் துடிப்புக்கும், ஒரு நிமிடம் கழித்து அதை அளவிடும்போது உள்ள வித்தியாசத்திற்கும் சமம். இந்த அடிப்படை மதிப்பீட்டு இருதய ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி திறனின் குறிப்பிடத்தக்க குறிப்பானாக செயல்படுகிறது. மேலும் கற்றுக்கொள்வோம் …ஒரு நிமிட இதய துடிப்பு மீட்பு என்றால் என்ன …உடற்பயிற்சியின் பின்னர் உங்கள் இதய துடிப்பு விரைவில் குறையும் வேகம், உங்கள் ஒரு நிமிட இதய துடிப்பு மீட்பு. (60 நிமிடங்களுக்குப் பிறகு அளவிடப்படுகிறது). உங்கள் உடற்பயிற்சியின் பிந்தைய இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 170 துடிப்புகள் (பிபிஎம்) (எடுத்துக்காட்டாக), மற்றும் ஒரு நிமிடத்திற்குப் பிறகு…
ரஜினியை வில்லனாக காட்ட நினைத்த கதை குறித்து பேட்டி ஒன்றில் விவரித்து இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு முன்பாக ரஜினி வைத்து வேறொரு கதையை இயக்க இருந்தார் லோகேஷ் கனகராஜ். அது ஏன் நடக்கவில்லை என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் லோகேஷ் கனகராஜ், “‘கூலி’ கதைக்கு முன்பு ரஜினிக்காக வேறொரு கதை வைத்திருந்தேன். அதுவொரு ஃபேன்டஸி படம். அந்தக் கதையில் ரஜினி தான் வில்லன், நாயகனாக யாரை நடிக்க வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். ரஜினி உட்பட யாருமே அந்தக் கதையை வேண்டாம் என்று கூறவில்லை. அதனை படப்பிடிப்பு தளத்துக்கு எடுத்து வரவே ஒன்றரை வருடம் வரை தேவைப்பட்டது. ஏனென்றால் நிறைய நடிகர்கள், கிராபிக்ஸ் காட்சிகள் என பல விஷயங்கள் அதில் அடங்கியிருந்தது.ரஜினியின் தேதிகளையும் வீணாக்க விரும்பவில்லை. அதுமட்டுமன்றி எனக்கு சில…
சென்னை: கொலை முயற்சி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலத்தை அபகரிக்கும் நோக்கில், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னையும், தனது மகனையும் தாக்கியதாக, எஸ்.செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவர் அறிவழகி, அவரது கணவர் உள்ளிட்டோருக்கு எதிராக, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.லக்ஷ்மி பாலா என்பவர் சங்கராபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி லக்ஷ்மி பாலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து ஜூலை 3ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக அரசு வழக்கறிஞர் கூறியதை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட…
கோவை: இந்தியா – இங்கிலாந்து இடையே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அது குறித்து தொழில் அமைப்பினர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, “இந்தியா – இங்கிலாந்து வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்துக்கு அதிக சதகமாக அமைந்துள்ளது. ஜவுளி, தொழில்நுட்ப ஜவுளி, கடல் சார்ந்த உணவு வகைகள் ஏற்றுமதி, காலணிகள், நகைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் பயன்தரும். குறிப்பாக, இங்கிலாந்தில் உற்பத்தியாகும் கார்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தமிழகம் (கோவை) உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழில் துறையினருக்கு பணி ஆணைகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் 120 பில்லியன் டாலர் ஏற்றுமதி வாய்ப்பு, இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள தொழில் துறையினருக்கு தமிழக அரசு உதவ நடவடிக்கைகளை மேற்கொள்ள…
மிகக் குறைந்த தூக்கத்தைப் பெறுவது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், இதய நோய், மனச்சோர்வு மற்றும் மோசமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதிக தூக்கம் அவ்வளவு ஆபத்தானதாக இருக்க முடியுமா? ஒரு இரவில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தவறாமல் தூங்குவது முன்னர் நினைத்ததை விட அதிக உடல்நல அபாயங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது, இது குறுகிய தூக்கத்தை விட அதிகமாக உள்ளது. இறப்பு ஆபத்து அதிகரிப்பது முதல் நீரிழிவு மற்றும் மனச்சோர்வு போன்ற நாள்பட்ட நோய்களுடன் தொடர்புகள் வரை, அதிக தூக்கம் என்பது ஆழமான ஒன்றின் அடையாளமாக இருக்கலாம். முந்தைய அலாரங்களை அமைக்கத் தொடங்குவதற்கு முன், தூக்கம் எவ்வளவு ஆரோக்கியமானது, அது அதிகமாக மாறும்போது அறிவியல் என்ன சொல்கிறது என்பதை ஆராய்வோம்.தூக்கம் ஏன் உணவு மற்றும் உடற்பயிற்சியைப் போலவே முக்கியமானதுநல்ல ஊட்டச்சத்து மற்றும் வழக்கமான உடல்…
புதுடெல்லி: 95% இந்திய வேளாண் பொருட்களும், 99% இந்திய கடல்சார் உணவுப் பொருட்களும் வரி இன்றி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) என்ற பெயரிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, இதனால் இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பியூஷ் கோயல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் இந்திய – இங்கிலாந்து மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ஏற்றுமதிகளில் சுமார் 99% வரி இல்லாமல இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், உழைப்பு மிகுந்த இந்திய துறைகளுக்கு…
