லண்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி – இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் முன்னிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும், பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா – இங்கிலாந்து பொருளாதார ஒத்துழைப்பில் இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது, உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது, விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இருக்கும் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. ஜவுளி, தோல், காலணிகள், கடல்சார் பொருட்கள், ரத்தினங்கள், நகைகள், கரிம ரசாயனங்கள், பிளாஸ்டிக், வாகன பாகங்கள், கைவினைப் பொருட்கள், சேவைகள்…
Author: admin
மதுரை: தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2020-ல் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் 2019-ம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வை மாநிலம் முழுவதும் 5,574 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றனர். இது குறித்து விசாரித்தபோது தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர். முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக 99 பேர் வாழ்நாள் தகுதியிழப்பு செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கீழ்நிலை அதிகாரிகள், விண்ணப்பதாரர்கள், புரோக்கர்கள்,…
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 31-ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து முதல் கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார். வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது. இதற்காக தூத்துக்குடி அருகே சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மின்சார கார் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024 பிப்ரவரி 25-ம் தேதி அடிக்கல் நாட்டினார். முதல் கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் வியட்நாம் நாட்டில் உள்ள தங்கள்…
நாம் அனைவரும் இப்போதெல்லாம் குளியலறை பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்களை அனுபவிக்கிறோம், அது சாதாரணமாக கருதப்படுகிறது. ஆனால் சில நேரங்களில், இந்த நுட்பமான மாற்றங்கள் மிகவும் தீவிரமான ஒன்றின் அறிகுறிகளாக இருக்கலாம்- புற்றுநோய் போன்றவை. சில சந்தர்ப்பங்களில், ஒரு நபரின் குடல் அல்லது சிறுநீர் வடிவங்களில் நுட்பமான மற்றும் தொடர்ச்சியான மாற்றங்கள் சில வகையான புற்றுநோய்களின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம், குறிப்பாக பெருங்குடல், சிறுநீர்ப்பை, சிறுநீரகங்கள் அல்லது புரோஸ்டேட் ஆகியவற்றை பாதிக்கும். இந்த அறிகுறிகளை கடந்து செல்வது என்னவென்றால், அவை பெரும்பாலும் பாதிப்பில்லாத செரிமான பிரச்சினைகள் அல்லது வயது தொடர்பான மாற்றங்களுக்காக தவறாக கருதப்படுகின்றன. ஆனால் இந்த நுட்பமான அறிகுறிகளை ஆரம்பத்தில் பிடிப்பது புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் முக்கியமானது. இது ஒருவரின் உயிர்வாழும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது, அதனால்தான் உங்கள் உடலைக் கேட்பது அவசியம். எனவே, புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கும் குளியலறை பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை இங்கே பட்டியலிடுகிறோம்- எனவே ஒருவர் அவற்றைப்…
புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் உள்ளது கடி குர்த் கிராமம். இதில் சரியான சாலை இன்றி அந்த கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த குர்த் கிராமவாசிகள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒரு வருடமாக முறையிட்டும் பலனில்லாமல் இருந்தது. இதனையடுத்து அந்த கிராமத்தில் வசிக்கும் கர்பிணிப் பெண்ணான லீலா சாஹு என்பவர் அந்த சாலையை தன் கைப்பேசியில் வீடியோ பதிவு செய்தார். மேலும் அந்த வீடியோவில் தானே தோன்றி, அங்கு சாலை வசதி இல்லாததால் ஏற்பட்டு வரும் பாதிப்பை விளக்கினார். தன்னுடன் சேர்த்து ஏழு கிராமப் பெண்கள் கர்ப்பமாக இருப்பதாகவும், அவர்களுக்கு ஒரு அவசரம் எனில் ஆம்புலன்ஸ் வராமல் எந்த ஆபத்தும் நிகழலாம் என எச்சரித்திருந்தார். மேலும், ‘விகாஸ் கஹான் ஹை(வளர்ச்சி எங்கு உள்ளது?)’ எனவும் கேள்வி எழுப்பியிருந்தார் லீலா. இந்த வீடியோவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய போக்குவரத்து துறை…
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்களுக்கு மைதானத்திலும், மரத்தடியிலும் வகுப்பறைகள் நடத்தப்படுகின்றன. திருச்சி மாவட்டம் காட்டூர் பாப்பாக் குறிச்சியில் ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 600 மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைந்துள்ளது. கூடுதல் வகுப்பறை கட்டும் பணி தொய்வாக நடைபெறுவதால், பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாமல், மாணவர்கள் மைதானத்திலும், மரத்தடியிலும் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். தற்போது ஆடிக் காற்றில் பறக்கும் குப்பை, தூசியை எதிர்கொண்டு மிகுந்த சிரமத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். இது குறித்து அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.ரகமதுல்லா, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நலத் துறை மேல்நிலைப் பள்ளி,…
தேனி: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் வீரபாண்டி பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கான தர்ப்பண வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்பு அன்னதானம் வழங்கி கோயில்களில் வழிபாடு செய்தனர். இந்துக்களின் முன்னோர் வழிபாடாக ஆடி அமாவாசை இருந்து வருகிறது. இந்நாட்களில் கடற்கரை, ஆற்றங்கரை மற்றும் பல்வேறு நீர்நிலைகளில் பொதுமக்கள் நீராடி தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். இதன் மூலம் மூதாதையர்களின் ஆன்மா சாந்தி அடைந்து, அவர்களின் ஆசி குடும்பத்துக்கு கிடைப்பதுடன், சந்ததியும் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. இதன்படி தேனி மாவட்டத்தில் வீரபாண்டி முல்லை பெரியாற்றங்கரையில் இன்று (ஜூலை 23) ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர். ஆற்றில் நீராடி பின்பு தங்கள் முன்னோர்களுக்கான வழிபாடுகளை மேற்கொண்டனர். இதற்காக மூதாதையர்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு எள், சோற்றுடன் பிண்டங்களாக ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து யாசகர்களுக்கு அன்னதானம், கால்நடைகளுக்கு கீரைகளை வழங்கினர். பின்பு கண்ணீஸ்வரமுடையார், கவுமாரியம்மன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையை…
மதுரை: பழமையான தஞ்சை சரஸ்வதி நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 60 ஆயிரம் கையெழுத்து பிரதிகளும், 4,503 அரிய புத்தகங்களும் உள்ளன. இந்த நூலகத்தில் 46 பணியிடங்கள் உள்ளன. தற்போது 14 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்து. எஞ்சிய இடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. மத்திய அரசு பழமையான நூலகங்களை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனால், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தையும் தேசிய நூலக திட்டத்தின் கீழ் மாதிரி நூலகமாக அறிவித்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, தேசிய நூலக திட்டத்தின் கீழ்…
டைம்ஸ் சதுர செல்பி அல்லது லா பீச் விடுமுறையை கனவு காண்கிறீர்களா? பிடி – நகரத்தில் ஒரு புதிய கட்டணம் உள்ளது. எதிர்காலத்தில் எப்போதாவது தொடங்கி, அறிக்கையின்படி, டிரம்ப் நிர்வாகம் ஒரு புதிய $ 250 “விசா ஒருமைப்பாடு கட்டணத்தை உருவாக்குகிறது.”ஆம், அது நீங்கள் ஏற்கனவே செலுத்தியதற்கு மேல் உள்ளது.காத்திருங்கள் – நாம் எவ்வளவு பேசுகிறோம்?நீங்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தால், ஒரு நிலையான சுற்றுலா விசாவிற்கு (பி – 1/பி – 2) விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், உங்கள் செலவுகள் சுமார், 800 15,800 (அது $ 185) முதல் கிட்டத்தட்ட, 000 40,000 (சுமார் 2 472) ஆக உயர்ந்தது.இது சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல. மாணவர்கள், தற்காலிக தொழிலாளர்கள், பார்வையாளர்களை பரிமாறிக்கொள்கிறார்கள் – நீங்கள் அனைவரும் இந்த புதிய கட்டண கிளப்பில் சேர்க்கப்பட்டுள்ளீர்கள். H-1BS, F-1S, JS … இதை யாரும் ஏமாற்றுவதில்லை.பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?தொழில்நுட்ப ரீதியாக, ஆம் -…
பாட்னா: தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதைக் கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தகுதி வாய்ந்த எந்த வாக்காளரின் பெயரும் விடுபட்டுவிடக் கூடாது; அதேநேரத்தில் தகுதியற்ற எந்த வாக்காளரின் பெயரும் இடம்பெறவும் கூடாது என்பதே இதன் நோக்கம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான அறிவிப்பை கடந்த ஜூன் 24-ம் தேதி வெளியிட்ட தேர்தல் ஆணையம், தொடர்ந்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகிறது. இந்நிலையில், பிஹார் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை தேர்தல் ஆணையம்…
