Author: admin

புதுக்கோட்டை: தமிழகத்​தில் வாரிசு ஆட்​சிக்கு முடிவு​கட்ட அதி​முகவை பொது​மக்​கள் ஆதரிக்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரத்தை மேற்​கொண்டு வரும் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி, புதுக்​கோட்டை மாவட்​டம் கந்​தர்​வக்​கோட்​டை​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: விவ​சா​யிகள் நலனுக்காக கடந்த அதி​முக ஆட்​சி​யில் ரூ.14,400 கோடி​யில் காவிரி- குண்​டாறு இணைப்​புத் திட்​டத்தை கொண்​டு​வந்​தோம். ஆனால், அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யால் இத்​திட்​டத்தை திமுக அரசு முடக்​கி​யுள்​ளது. அதி​முக மீண்டும் ஆட்​சிக்கு வந்​ததும் இத்திட்டம் நிறைவேற்​றப்​படும். அதே​போல, புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் 2,306 கிராம மக்​கள் பயன்பெறும் வகை​யில், ரூ.574 கோடி​யில் கொண்​டு​வரப்​பட்ட கூட்​டுக் குடிநீர் திட்​டத்​தை​யும் திமுக சரிவர செயல்​படுத்​த​வில்​லை. நான் செல்​லும் இடங்​களில் எல்​லாம் திரளும் மக்​கள் கூட்​டத்​தைப் பார்த்த பிறகும், முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அமைச்​சர்​கள், திமுக​வினருக்கு மீண்​டும் ஆட்​சிக்கு வரமுடி​யும் என்ற நினைப்பு வரு​மா? 100 நாள் வேலைத் திட்​டத்தை 150…

Read More

பெண்களின் கணிசமான பகுதியை பாதிக்கும் இரும்புச்சத்து குறைபாடு பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. டாக்டர் மிர்டமாடி நாள்பட்ட சோர்வு, லேசான தந்திரம் மற்றும் குளிர் முனைகளை எடுத்துக்காட்டுகிறார், ஏனெனில் மருத்துவர்களால் அடிக்கடி கவனிக்கப்படாத முக்கிய குறிகாட்டிகள். இந்த அறிகுறிகளை துல்லியமாகக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்காக வழக்கமான இரும்பு அளவுகளுடன் ஃபெரிடின் அளவுகள், இரும்பின் சேமிப்பக வடிவம் ஆகியவற்றைச் சரிபார்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார். இரும்புச்சத்து குறைபாடு என்பது பெண்களுக்கு ஒரு பொதுவான கவலை. உலக சுகாதார அமைப்பின் (WHO) புள்ளிவிவரங்களின்படி, 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் 37% கர்ப்பிணிப் பெண்களும் அதை வைத்திருக்கிறார்கள். இரும்புச்சத்து குறைபாடு பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது, குறிப்பாக ஆரம்ப கட்டங்களில். சான் டியாகோவில் செயல்பாட்டு மருத்துவத்தில் நிபுணத்துவம் வாய்ந்த உரிமம் பெற்ற இயற்கை மருத்துவரும் முழுமையான ஊட்டச்சத்து நிபுணருமான டாக்டர் பெடி மிர்டமாடி, இரும்புச்சத்து குறைபாட்டின் 3 முக்கியமான அறிகுறிகளை விளக்கினார்,…

Read More

புதுடெல்லி: எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளி​யால் 4-வது நாளாக நேற்​றும் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது. முதல் நாளில் ஆபரேஷன் சிந்​தூர், அகம​தா​பாத் விமான விபத்​து, பிஹார் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி உள்​ளிட்ட விவ​காரங்​களை மக்​களவை, மாநிலங்​களவை​யில் எதிர்க் கட்சி எம்​பிக்​கள் எழுப்​பினர். அவர்​கள் கடும் அமளி​யில் ஈடு​பட்​ட​தால் அன்​றைய தினம் இரு அவை​களும் முடங்​கின. கடந்த 22, 23 ஆகிய தேதி​களி​லும் இதே விவ​காரங்​களால் நாடாளு​மன்​றம் முடங்​கியது. இதைத் தொடர்ந்து 4-வது நாளாக நாடாளு​மன்​றம் நேற்று கூடியது. காலை 11 மணிக்கு மக்​களவை தொடங்​கியதும் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்​டனர். அப்​போது மக்​கள​வைத் தலை​வர் ஓம் பில்லா கூறும்​போது, “சில எம்​பிக்​கள் அவை​யின் மாண்பை சீர்​குலைத்து வரு​கின்​றனர்” என்று கடுமை​யாக கண்​டித்​தார். எதிர்க்​கட்​சி​யினரின் தொடர் அமளி​யால் அவை தொடங்​கிய 6 நிமிடங்​களில் ஒத்​திவைக்​கப்​பட்​டது. பிற்​பகல் 2 மணிக்கு…

Read More

மதுரை: மதுரை அரவிந்த கண் மருத்​து​வக் குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் பி.நம்​பெரு​மாள்​சாமி (85) நேற்று கால​மா​னார். அவரது உடல் தேனி அருகே சொந்த ஊரில் இன்று தகனம் செய்​யப்​படு​கிறது. அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்​வர் மற்​றும் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். உடல் நலக்​குறை​வால் சென்னை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​று​வந்த நம்​பெரு​மாள்​சாமி நேற்று அதி​காலை கால​மா​னார். அவரது உடல் மதுரைக்​குக் கொண்டு வரப்​பட்​டு, அண்ணா நகரில் உள்ள அவரது வீட்​டில் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டுள்​ளது. தேனி மாவட்​டத்​தில் உள்ள அவரது சொந்த ஊரான அம்​பாச​முத்​திரத்​தில் இன்று (ஜூலை 25) நம்​பெரு​மாள்​சாமி​யின் உடல் தகனம் செய்​யப்​படு​கிறது. டாக்​டர் நம்​பெரு​மாள்​சாமி அரவிந்த் கண் மருத்​து​வ​மனை குழு​மத் தலை​வ​ராக​வும், கண் பராமரிப்பு அமைப்​பின் நிறுவன உறுப்பின​ராக​வும் இருந்​தார். அரவிந்த கண் பராமரிப்பு அமைப்​பின் தலை​வர், ஆராய்ச்​சிப் பிரிவு இயக்​குநர் மற்​றும் அரவிந்த்கண் மருத்​துவ அறக்​கட்​டளை தலை​வ​ராக​வும் பொறுப்பு வகித்​தார். மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் மருத்துவப் பணியை…

Read More

சிறுநீரக ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள் நீரேற்றம், சோடியம் உட்கொள்ளல் அல்லது இரத்த அழுத்தக் கட்டுப்பாடு பற்றி சிந்திக்கிறார்கள். இருப்பினும், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றால் மறைக்கப்படும் மெக்னீசியம், சிறுநீரக செயல்பாட்டை ஆதரிப்பதிலும், நோய் முன்னேற்றத்தைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சைன்ஸ் டைரக்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிக உணவு மெக்னீசியம் உட்கொள்ளல் நாள்பட்ட சிறுநீரக நோய் (சி.கே.டி) மற்றும் சிறுநீரக கற்களின் அபாயத்துடன் கணிசமாக தொடர்புடையது. நொதி செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், வாஸ்குலர் கால்சிஃபிகேஷனைக் குறைப்பதற்கும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும் மெக்னீசியத்தின் திறனை ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது -சிறுநீரக ஆரோக்கியத்திற்கான அனைத்து முக்கிய செயல்முறைகளும். மெக்னீசியம் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஒரு அத்தியாவசியமான ஆனால் பெரும்பாலும் மதிப்பிடப்படாத ஊட்டச்சத்து ஆகும். சிறுநீரக கற்களைத் தடுப்பதில் இருந்து நாள்பட்ட சிறுநீரக நோய் முன்னேற்றத்தை குறைப்பது வரை, அதன் நன்மைகள் சமீபத்திய கண்டுபிடிப்புகள் உட்பட வளர்ந்து வரும் அறிவியல் ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகின்றன. மெக்னீசியம் நிறைந்த…

Read More

புதுடெல்லி: ​மும்பை ரயில் குண்​டு​வெடிப்பு வழக்​கி​லிருந்து 12 பேரை விடு​வித்த மும்பை உயர் நீதி​மன்ற தீர்ப்​புக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது. கடந்த 2006-ல் மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​ததில் 189 பேர் உயிரிழந்​தனர். இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் 12 பேர் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், 12 பேரை​யும் விடு​தலை செய்து திங்​கள் கிழமை உத்​தர​விட்​டது. இதையடுத்து அனை​வரும் விடு​தலை செய்​யப்​பட்​டனர். மும்பை உயர் நீதி​மன்ற தீர்ப்பை எதிர்த்து மகா​ராஷ்டிர அரசு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனு நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ் மற்​றும் என்​. கோடீஸ்​வர் சிங் அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது,…

Read More

சென்னை: மாநிலங்​களவை எம்​.பி.​யாக டெல்​லி​யில் இன்று பதவி​யேற்​கும் நிலை​யில், ‘இந்​தி​ய​னாக எனது கடமை​யைச் செய்​யப்​போகிறேன்’ என்று மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் பெரு​மிதத்​துடன் கூறி​னார். திமுக கூட்​ட​ணி​யின் ஆதர​வுடன் மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வர் கமல்​ஹாசன், மாநிலங்​களவை எம்​.பி.​யாக அண்​மை​யில் போட்​டி​யின்றி தேர்​வுசெய்​யப்​பட்​டார். இந்​நிலை​யில், மாநிலங்​களவை​யில் உறுப்​பின​ராக இன்று அவர் பதவி​யேற்​கிறார். இதற்​காக நேற்று காலை சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார். முன்​ன​தாக சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கமல்​ஹாசன் கூறிய​தாவது: செய்​தி​யாளர்​கள் செய்தி சேகரிக்க மட்​டும் வராமல், என்னை வாழ்த்தி அனுப்​புவதற்​கும் வந்​திருப்​ப​தாக நினைக்​கிறேன். அதற்​காக உங்​களுக்கு நன்​றி. மக்​களின் வாழ்த்​துகளு​டன், நான் அங்கு உறு​தி​மொழி எடுத்​து, எனது பெயரைப் பதிவு செய்ய டெல்லி செல்​கிறேன். இந்​தி​ய​னாக எனக்கு கொடுக்​கப் ​பட்​டிருக்​கும் மரி​யாதையை​யும், கடமை​யை​யும் நான் செய்​யப்​போகிறேன். இதை பெரு​மை​யுடன் நான் சொல்​லிக் கொள்​கிறேன். எனது கன்​னிப் பேச்​சு, எதை மையப்​படுத்தி இருக்​கும்…

Read More

உங்கள் தலையை வாரத்திற்கு மூன்று முறை மசாஜ் செய்யும் நடைமுறை பல சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது, இதில் மூளை ஆரோக்கியம் மற்றும் முடி ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றுடன் மன அழுத்த மேலாண்மை அடங்கும். எளிதான மற்றும் இயற்கையான நடைமுறை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் உங்கள் மனதை இனிமையாக்குகிறது மற்றும் மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது, இதன் விளைவாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.உங்கள் தலையை தொடர்ந்து மசாஜ் செய்வது ஏன் முக்கியம்வழக்கமான தலை மசாஜ், மூளைப் பகுதி மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் இந்த பகுதிகளுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட சுழற்சி மக்களுக்கு இன்னும் தெளிவாக கவனம் செலுத்தும்போது சிறப்பாக நினைவில் கொள்ள உதவுகிறது, மேலும் தலைவலிகளை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. பாராசிம்பேடிக் நரம்பு மண்டலம் உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது செயல்படுத்தப்படுகிறது, இது தளர்வு மறுமொழிகளைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் கார்டிசோல் மற்றும்…

Read More

புதுடெல்லி: பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தல் விரை​வில் நடை​பெறவுள்ள நிலை​யில், அங்கு வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்தம் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இந்த நடவடிக்​கையை திரும்ப பெறக் கோரி​யும், இது குறித்து நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் விவா​திக்க கோரி​யும் இண்டியா கூட்​டணி எம்​.பி.க்​கள் நாடாளு​மன்ற வளாகத்​தின் நுழை​வா​யில் படிக்​கட்​டில் நின்று கடந்த 3 நாட்​களாக போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். மூன்​றாவது நாளாக நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, காங்​கிரஸ் பொதுச் செயலாளர்​கள் பிரி​யங்கா காந்​தி, கே.சி.வேணுகோ​பால், திமுக எம்​.பி ஆ.ராசா மற்​றும் இண்​டியா கூட்​டணி கட்சி எம்​.பி.க்​கள் பலர் கலந்து கொண்​டனர். ஜனநாயகத்தை காப்​பாற்​றுங்​கள், வாக்​காளர்​கள் நீக்​கத்தை தடுத்து நிறுத்​துங்​கள் என அவர்​கள்​ கோஷம்​ எழுப்​பினர்​.

Read More

தூத்துக்குடி: பிரதமர் மோடி வரு​கையை முன்​னிட்டு தூத்​துக்​குடிக்கு விமான நிலை​யத்தை சுற்றி 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​படு​கின்​றன. தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத் திறப்பு விழா மற்​றும் தமிழகத்​தில் மத்​திய அரசு சார்​பில் நிறைவேற்​றப்​பட்ட பல்​வேறு திட்​டப் பணி​கள் தொடக்க விழா தூத்​துக்​குடி விமான நிலைய வளாகத்​தில் நாளை (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்​து​கொண்​டு, விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை திறந்​து​வைக்​கிறார். மேலும், பல்​வேறு திட்டப்​பணி​களை திறந்​து​வைத்​து, புதிய பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டிப் பேசுகிறார். இந்த விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக பிரதமர் மோடி மாலத்​தீ​வில் இருந்து இந்​திய விமானப் படைக்​குச் சொந்​த​மான தனி விமானத்​தில் நாளை இரவு 7.50 மணி​யள​வில் தூத்​துக்​குடி விமான நிலை​யம் வரு​கிறார். விழா முடிந்து இரவு 9.30 மணி​யள​வில் தனி விமானத்​தில் திருச்சி செல்​கிறார். இதையொட்​டி, தூத்​துக்​குடி விமான நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் இரவு இந்​திய விமான…

Read More