சென்னை: இந்தியன் வங்கியின் 2025-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள வங்கியின் தலைமையகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. பின்னர், வங்கி மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பினோத் குமார் செய்தியாளர்களிடம் கூறியது: 2025-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை முடிந்த முதலாவது காலாண்டில், இந்தியன் வங்கியின் நிகர லாபம் 23.69 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.2,973 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2024-ல் முதலாவது காலாண்டில் நிகர லாபம் ரூ.2,403 கோடியாக இருந்தது. வங்கியின் செயல்பாட்டு லாபம் 2024-ல் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது, ரூ.4.502 கோடியில் இருந்து ரூ.4,770 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலமாக, செயல்பாட்டு லாபம் 5.97 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. வங்கியின் நிகர வட்டி வருவாய் 2024-ல் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, ரூ.6,359 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 2.93 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சொத்துகள் மீதான லாபமீட்டல் நிலை…
Author: admin
டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை யோகா கணிசமாகக் குறைக்கலாம். வழக்கமான யோகா பயிற்சி அபாயத்தை 40%குறைக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சி சங்கம் மத்திய அமைச்சர் ஸ்ரீ ஜே.பி. நாதாவுக்கு இந்த அறிக்கையை வழங்கியது. டாக்டர் ஜிதேந்திர சிங் தடுப்பு சுகாதாரத்துறையில் யோகாவின் திறனை எடுத்துக்காட்டுகிறார். பாரம்பரிய ஆரோக்கிய தலையீடுகள் குறித்த மேலதிக ஆய்வுகள் நடந்து வருகின்றன. மனித உடல் மற்றும் மனதில் அதன் அற்புதமான நன்மைகளுக்காக அறியப்பட்ட யோகா, இப்போது ஒரு வாழ்க்கை முறை நோயை நிர்வகிப்பதில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய ஆய்வில், யோகா பயிற்சி செய்வது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை 40%குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சி சங்கத்தின் வல்லுநர்கள் தலைமையிலான ஒரு புதிய ஆராய்ச்சி (ஆர்.எஸ்.எஸ்.டி.ஐ), யோகா வகை 2 நீரிழிவு நோயைத் தடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்தது.…
மண்டி: இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டம், சர்காகாட் என்ற இடத்தில் இருந்து துர்காபூர் நோக்கி மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட மொத்தம் 29 பேர் இருந்தனர். இந்நிலையில் சர்காகாட் அருகில் இப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி சென்று பார்வையிட்டார்.
‘கூலி’ படத்தில் சிறுகதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் இணையத்தில் ‘கூலி’ படத்தில் சிறுகதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக படக்குழுவினர் அமைதி காத்து வந்தார்கள். இந்த வதந்திக்கு பேட்டியொன்றில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ‘கூலி’யில் கமல் நடித்திருப்பது குறித்த கேள்விக்கு, “கமல் சார் ’கூலி’ படத்தில் இருப்பதை விரும்பவில்லை. அப்படி ஏதேனும் திட்டம் வைத்திருந்தால் கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து பேசி இருவரும் இணைந்து நடியுங்கள் என்று கேட்டிருப்பேன். ’கூலி’ படத்தின் கதை ஒரு தனிப்பட்ட கதை. இப்படத்துக்கும் எனது முந்தைய படங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது. ’கூலி’ பார்த்தவுடன் அனைவருக்கும் தெரியவரும், ஏன் ரஜினி சார் ‘விக்ரம்’ படத்தையும், கமல் சார் ‘கூலி’ படத்தையும் பண்ண முடியாது என்று. ஏனென்றால் இப்படங்களின் கதையினை அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருமே பண்ணக் கூடாது என்பதால் தான் எழுதினேன்.”…
சென்னை: வழக்கு தொடரும் கட்சிக்காரர்கள் தங்கள் மனைவியை விட தங்களது வழக்கறிஞர்களைத்தான் அதிகம் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை ஒருபோதும் வீணாக்கிவிடக் கூடாது என பணி ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். சுப்பிரமணியன் அறிவுறுத்தினார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர். சுப்பிரமணியன் பணி ஓய்வு பெற்றதால், அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று உயர் நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தலைமை வகித்தார். அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் பேசுகையில், நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கடந்த 9 ஆண்டுகளில் 37 ஆயிரம் வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டுள்ளதாக பாராட்டிப் பேசினார். இந்நிகழ்வில் சக உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். இந்நிகழ்வில் நீதிபதி ஆர். சுப்பிரமணியன் ஏற்புரையாற்றி பேசுகையில், “சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமார் 33 ஆண்டுகள்…
தாரா சுட்டேரியா இந்தியா கோச்சர் வாரத்தில் வசீகரிக்கப்பட்டார், ரோஸ் அறைக்காக இஷா ஜஜோடியாவின் அதிர்ச்சியூட்டும் தந்தம்-தங்க கவுனில் நடந்து சென்றார். விண்டேஜ்-ஈர்க்கப்பட்ட குழுமத்தில் ஒரு கட்டமைக்கப்பட்ட கோர்செட் மற்றும் பாயும் சரிகை பாவாடை ஆகியவை இடம்பெற்றன, இது மென்மையான ஒப்பனை மற்றும் காதல் சுருட்டைகளால் பூர்த்தி செய்யப்பட்டது. வீர் பஹாரியாவுக்கு ஒரு முத்தம் வெடித்தபோது ஒரு இனிமையான தருணம் ஏற்பட்டது, விசித்திரக் கதைக்கு பதிவு செய்யப்படாத தொடுதலைச் சேர்த்தது. சரி, இந்த ஆண்டு இந்தியா கோச்சர் வாரத்தை தாரா சுட்டேரியா எவ்வளவு அதிர்ச்சியூட்டும் வகையில் பார்த்தார் என்பதைப் பற்றி பேச சிறிது நேரம் எடுக்க முடியுமா? நிகழ்வின் 2 ஆம் நாளில், அவர் இஷா ஜாஜோடியாவின் ரோஸ் அறைக்கான வளைவில் நடந்து சென்றார், நேர்மையாக, ஓடுபாதையின் குறுக்கே ஒரு நிஜ வாழ்க்கை இளவரசி சறுக்குவதைப் பார்ப்பது போல் உணர்ந்தேன்.விண்டேஜ், கனவு, நேர்த்தியான மற்றும் நவீனத்தின் சரியான அளவு – சரியான குறிப்புகள்…
பஸ்தர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தீவிர நக்சல் வேட்டையை தொடர்ந்து, 5 மாவட்டங்களில் நேற்று 66 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தனர். இவர்களில் 49 பேர் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2.27 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நக்சல் வேட்டைக்கு என மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில போலீஸில் சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டன. இவர்களுடன் துணை ராணுவப்படையினரும், விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிர தேடுல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினரின் நடமாட்டத்தை கண்காணிக்க நக்சலைட்கள் ட்ரோன்களையும் பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு ட்ரோன்கள் விநியோகித்து பயிற்சி அளித்த நபர்களும் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால், நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர்கள் எல்லாம் தேடுல் வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் இதர நக்சலைட்கள் பாதுகாப்பு…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z10R போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z10R ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் iQOO பிராண்டின் ‘Z’ வரிசை போன்களில் ஒன்று. மூன்று வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் 29-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. விலையில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பைபாஸ் சார்ஜிங் அம்சம் இதில் உள்ளது. iQOO Z10R ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 7400 சிப்செட் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் 128 ஜிபி,…
சென்னை: மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 12 பெட்டிகளை கொண்ட மெமு ரயில், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம்தடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு பயணிகள் சென்று திரும்ப வசதியாக, மெமு (மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயில்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்த ரயில்கள் சென்னை ரயில்வே கோட்டத்தில் காட்பாடி – அரக்கோணம், சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், திருத்தணி – சென்னை சென்ட்ரல், சென்னை – திருப்பதி, நெல்லூர் உட்பட 15-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் 8 அல்லது 9 பெட்டிகளாக மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இடவசதி குறைவாக இருக்கும். இதன் காரணமாக, இந்த ரயில்கள் காலை, மாலை வேளைகளில் நெரிசல் மிகுந்த (பீக் அவர்ஸில்) நேரங்களில் இயக்கப்படும் போது, கூட்டம் நிரம்பி வழிந்து பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, இந்த ரயில்களில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக இயக்க வேண்டும்…
கண் புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் வலி ஒன்றாக இருக்கலாம், மேலும் பதிலளிக்காத சிவத்தல் அல்லது எரிச்சல் ஒரு எச்சரிக்கை அடையாளத்தை சமிக்ஞை செய்கிறது. எரிச்சல் ஒரு கீறல் அல்லது எரியும் உணர்வாக உருவாகிறது, இது நேரத்துடன் மிகவும் கடுமையானதாகிறது. கட்டிகள் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது, பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள வீங்கிய இரத்த நாளங்களுடன் சிவத்தல் ஏற்படுகிறது. கண் கட்டமைப்புகளை கடந்தபோது அல்லது உள் அழுத்தம் உயரும்போது கட்டி வேதனையாகிறது.ஒரு மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவிக்கும்போது ஒரு சுகாதார நிபுணர் உடனடியாக உங்கள் கண்களை சரிபார்க்க வேண்டும், குறிப்பாக அவர்கள் மேம்படவில்லை அல்லது மோசமாகிவிட்டால். ஆரம்பகால கண்டறிதல் சிறந்த சிகிச்சை விளைவுகளுடன் பார்வை பாதுகாப்பை செயல்படுத்துகிறது. ஒளி நிற கண்கள் உள்ளவர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தில் மெலனோமா உள்ளவர்கள், அல்லது கணிசமான சூரிய வெளிப்பாட்டை அனுபவிப்பவர்கள், வழக்கமான கண் பரிசோதனைகளை திட்டமிட வேண்டும், ஏனெனில் அவர்களின் ஆபத்து…
