Author: admin

கும்லா/ ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். வட மாநிலங்களில் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாவோயிஸ்ட்கள் இல்லாத நாட்டை உருவாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த சனிக்கிழமை காலை கும்லா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்​போது தடை செய்​யப்​பட்ட ஜார்​க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் (ஜேஜேஎம்​பி) பிரி​வினை​வாத அமைப்பை சேர்ந்த மாவோ​யிஸ்ட்​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். அதற்கு பாது​காப்​புப் படை​யினர் பதில் தாக்​குதல் நடத்​தினர். இதில் ஜேஜேஎம்பி அமைப்பை சேர்ந்த 3 பேர் உயி​ரிழந்​தனர். அதே​போல் சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தார் மண்​டலம் பிஜப்​பூர் மாவட்​டத்​தில் உள்ள அடர்ந்த வனப்​பகு​தி​யில் பாது​காப்​புப் படை​யினருக்​கும் மாவோ​யிஸ்ட்​களுக்​கும் இடை​யில் பலத்த துப்​பாக்​கிச் சண்டை நடை​பெற்​றது. இந்த என்​க​வுன்ட்​டரில் 4 மாவோ​யிஸ்ட்​கள்…

Read More

உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டி​யின் 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள் சேஸ் பிரி​வில் இந்​திய வீராங்​கனை அங்​கிதா தியானி வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டிகள் ஜெர்​மனி​யின் எசென் உள்​ளிட்ட நகரங்​களில் நடை​பெற்று வரு​கின்​றன. கடைசி நாளான நேற்று மகளிருக்​கான 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள்​ சேஸ் போட்டி நடை​பெற்​றது. இதில் இந்​திய வீராங்​கனை அங்​கிதா பந்தய தூரத்தை 9:31.99 வினாடிகளில் கடந்து 2-வ​தாக வந்​தார். இதையடுத்து அவர் வெள்​ளிப்​ப​தக்​கம் வென்று அசத்​தி​னார். ஜெர்​மனி வீராங்​கனை அடியா புட்டே 9:33.34 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்​கம் வென்​றார். இந்​தப் பிரி​வில் பின்​லாந்​தின் இலோனா மரியா 9:31.86 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்​கப்​ ப​தக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார். ரோட்​டரி ஒலிம்​பி​யாட்: 1,500 மாணவர்​கள் பங்​கேற்பு: சென்னை ஜவஹர்​லால் நேரு மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற ரோட்​டரி ஒலிம்​பி​யாட் விளை​யாட்​டுப் போட்​டி​யில் 1,500க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர். இந்​தப் போட்​டி​யில் 70க்​கும் மேற்​பட்ட…

Read More

ராமேசுவரம்: புவி கண்​காணிப்​புக்​காக நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உரு​வாக்​கிய செயற்​கைக்​கோள் ஜூலை 30-ம் தேதி விண்​ணில் செலுத்​தப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் நாராயணன் கூறி​னார். முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல்​கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்​தையொட்டி ராமேசுவரத்​தில் கலாம் நினைவு கருத்​தரங்​கம் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற இஸ்ரோ தலை​வர் நாராயணண் பேசி​ய​தாவது: சந்​திரனுக்கு விண்​கலத்தை அனுப்​பும் அளவுக்கு இஸ்ரோ பிரம்​மாண்​ட​மாக வளர்ச்சி அடைந்​துள்​ளது. 35 கிலோ ராக்​கெட்​டில் தொடங்கி 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்​கெட்டை விண்​வெளிக்கு அனுப்​பும் வல்​லமை​யைப் பெற்​றுள்​ளது. இது சுமார் 40 மாடி உயரம் கொண்ட ராக்​கெட் ஆகும். புவி கண்​காணிப்​புக்​காக நாசாவுடன் இணைந்து உரு​வாக்​கிய அதிநவீன சிந்​தடிக் அப்​பர்​சர் ரேடார் செயற்​கைக்​கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar) ஜிஎஸ்​எல்வி ராக்​கெட் மூல​மாக இஸ்ரோ ஜூலை 30-ம் தேதி விண்​ணில் செலுத்​துகிறது. இது ஜிஎஸ்​எல்வி எஃப்​-16 வரிசை​யில் 18-வது ராக்​கெட்​டாகும். இதற்​கான…

Read More

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் நேற்று கூறியுள்ளதாவது: 2026 நிதியாண்டில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய சந்தைகளில் நுழைவது, புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது, ஏஐ பயன்படுத்துவது போன்றவற்றால் நிறுவனம், ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்து மறுபணியமர்த்த உள்ளது. ஆனால், இந்த செயல்முறையின் விளைவாக வேலைவாய்ப்பில் ஒரு பகுதி அதாவது 12,200 வேலைகள் குறைக்கப்படும். எங்​களின் வாடிக்​கை​யாளர்​களுக்கு சேவை வழங்​கு​வ​தில் எந்த பாதிப்​பும் ஏற்​ப​டா​மல் இருப்​பதை உறுதி செய்​வதற்​காக இந்த மாற்​றத்தை உரிய கவனத்​துடன் செயல்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு டிசிஎஸ் தெரி​வித்​துள்​ளது. இந்​திய ஐடி துறை நிச்​சயமற்ற தன்​மையை எதிர்​கொண்​டுள்​ளது. இதன் காரண​மாக, செல​வு​களை கட்​டுப்​படுத்த வேண்​டிய நிலைக்கு அவை தள்​ளப்​பட்​டுள்​ளன. வாடிக்​கை​யாளர் முடி​வெடுப்​ப​தி​லும், திட்​டத்தை தொடங்​கு​வ​தி​லும் கால​தாமதம் ஏற்​படு​வ​தாக டிசிஎஸ் தலைமை நிர்​வாகி கே.கிருத்​தி​வாசன் தெரி​வித்​துள்​ளார்​.

Read More

சமீபத்திய ஆய்வில் ஆண்டுதோறும் உலகளாவிய இறப்புகளில் கல்லீரல் நோய் 4% கணக்கைக் குறிக்கிறது, ஆண்கள் விகிதாசாரமாக பாதிக்கப்படுகிறார்கள். டாக்டர் ச ura ரப் சேத்தி மஞ்சள் காமாலை, ஸ்பைடர் ஆஞ்சியோமாஸ், பால்மர் எரித்மா மற்றும் அரிப்பு போன்ற தோல் அறிகுறிகளை எடுத்துக்காட்டுகிறார், இது கல்லீரல் செயலிழப்பைக் குறிக்கலாம். இந்த அறிகுறிகளை அங்கீகரிப்பதன் மூலம் முன்கூட்டியே கண்டறிதல் சரியான நேரத்தில் மருத்துவ தலையீட்டிற்கு முக்கியமானது. கல்லீரல் நோய் ஆண்டுதோறும் சுமார் இரண்டு மில்லியன் உயிர்களைக் கோருகிறது, இது அனைத்து இறப்புகளிலும் 4% (உலகளவில் ஒவ்வொரு 25 இறப்புகளில் 1), 2023 ஆய்வின்படி. இதில், கல்லீரல் தொடர்பான அனைத்து இறப்புகளிலும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு ஆண்களில் நிகழ்கிறது. சிரோசிஸ் மற்றும் ஹெபடோசெல்லுலர் கார்சினோமா ஆகியவை மரணத்திற்கு முக்கிய காரணங்களாகும், அவற்றில் முந்தையது வைரஸ் ஹெபடைடிஸ், ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயுடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்லீரல் நோய்களை அடையாளம் காண ஆரம்பகால…

Read More

சென்னை: ​விஜய் தவிர வேறு புகைப்​படங்​களை பயன்​படுத்​தி​னால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும், கட்சி நிகழ்ச்​சிகள் மற்​றும் பொதுக்​கூட்​டங்​களில் பட்​டாசு வெடிக்​கக் கூடாது என்று தவெக நிர்​வாகி​களுக்கு பொதுச் செய​லா​ளர் ஆனந்த் வழி​காட்டு நெறி​முறை​களை வெளி​யிட்​டுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: கட்​சி​யின் கொள்​கைகள், கோட்​பாடு​கள் மற்​றும் குறிக்​கோள்​களின் நற்​பெயருக்கு களங்​கம் ஏற்​படுத்​தும் வித​மாகக் கட்​சி​யினர் ஒரு​போதும் செயல்​படக் கூடாது. தேர்​தல் பரப்​புரை மற்​றும் உறுப்​பினர் சேர்க்கை பணி​களுக்​காக வீடு​வீ​டாகச் செல்​லும்​போது, கட்சி தலைமை அதி​காரப்​பூர்​வ​மாக அனு​ம​தித்​துள்ள பரப்​புரை வாசகங்​கள் மற்​றும் புகைப்​படத்​தைக் கொண்ட ஸ்டிக்​கர் மட்​டுமே ஒட்ட வேண்​டும். பரப்​புரை சார்ந்து அங்​கீகரிக்​கப்​ப​டாத பேனர் டிசைன்​கள், இலச்​சினை​கள், வாசகங்​களைப் பயன்​படுத்​தக் கூடாது. மேலும், கட்​சி​யின் அனைத்து நிலை அமைப்​பு​களின் சார்​பில் நடத்​தப்​படும் உள்​ளரங்கு மற்​றும் பொது​வெளி, பொதுக்​கூட்ட நிகழ்ச்​சிகளில், கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் பட்​டாசு வெடித்​துக் கொண்​டாடு​வதை தவிர்க்க வேண்​டும். அதே​போல், கட்சி நிகழ்ச்​சிகளின்​போது பொது​மக்​களுக்​கும் போக்​கு​வரத்​துக்​கும் எவ்​வித இடையூறும் இல்​லாமல்…

Read More

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-ம் சீசனுக்காக 60 வகையான, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்ச் செடிகள், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 லட்சம் விதைகள் மற்றும் நாற்றுகளை நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கர்நாடக அரசு பூங்காவில் மஞ்சள் நிறத்தில் நடன மங்கை ஆடுவதைப்போல காட்சிதரும் ‘ஆனிசைடம்’ என்றழைக்கப்படும் ஆர்கிட் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த மலர்களின் அருகில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். இந்த மஞ்சள் நிற ஆர்கிட் மலர்களை கர்நாடகா பூங்காவில் மட்டுமே காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லின் கடந்த 21-ம் தேதி காலை​யில் வழக்​க​மான நடைப​யிற்சி மேற்​கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, காலை 10.50 மணி​யள​வில் அவர் சென்னை ஆயிரம்​விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு பல்​வேறு மருத்​துவ பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. கடந்த 24-ம் தேதி மேற்​கொள்​ளப்​பட்ட கூடு​தல் பரிசோதனை​யில் அவருடை தலைசுற்​றல் பிரச்​சினைக்​கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்​ததே காரணம் என்​பது தெரிய​வந்​தது. இதய இடை​யீட்டு சிகிச்சை நிபுணர் ஜி.செங்​கோட்​டு​வேலு தலை​மையி​லான மருத்​து​வர் குழு​வினர் முதல்​வருக்கு இதய துடிப்பை சீராக்​கு​வதற்​கான சிகிச்​சையை மேற்​கொண்​டனர். தொடர்ந்து மேற்​கொள்​ளப்​பட்ட ஆஞ்​சியோ பரிசோதனை​யில் வேறு எந்த பாதிப்​பும் இல்லை என்​பது உறு​தி​யானது. முதல்​வரின் உடல்​நிலையை மருத்​து​வர்​கள்…

Read More

உணர்ச்சிகள் அதிகமாக இயங்கும்போது, குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் மூளையின் பகுத்தறிவு பகுதியை அணுக முடியாது.விரிவுரைகளை விட அதிகமாக உதவுவது “கண்ணாடி பேச்சு”. இதன் பொருள் அவர்களின் உடல் மொழி, தொனி மற்றும் உணர்வுகளை அமைதியான பச்சாத்தாபத்துடன் பிரதிபலிக்கிறது. உதாரணமாக, ஒரு குழந்தை கைமுட்டிகளையும் கூச்சல்களையும் பிடுங்கினால், அமைதியான குரலில் பதிலளித்தால், “அந்த கைமுட்டிகள் மிகவும் இறுக்கமாகத் தெரிகின்றன… இப்போது ஏதோ மிகவும் நியாயமற்றதாக உணர்கிறதா?” கேலி செய்யப்படாமல், குழந்தைக்கு பிரதிபலிக்க உதவுகிறது.இந்த நுட்பம் விளையாட்டு சிகிச்சை மற்றும் உணர்ச்சி ரீதியான அணுகல் உத்திகளிலிருந்து வருகிறது, மேலும் இது நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. ஒரு குழந்தை உண்மையிலேயே புரிந்து கொள்ளப்படும்போது, கோபம் பெரும்பாலும் உரையாடலில் உருகும்.

Read More

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குஜராத் – வடக்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 28) முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக் கூடும். ஆகஸ்ட் 1, 2-ம் தேதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய…

Read More