அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று (ஜூலை 27) நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழன் உருவம் பொதித்த நாணயம் வெளியிடுகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடுக்கு வருகிறார். அங்கிருந்து காரில் ரோடு ஷோவாக கோயிலை வந்தடைகிறார். கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர், அங்குள்ள சிற்பங்கள், கலாச்சாரத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து, ராஜேந்திர சோழன் நினைவு…
Author: admin
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில் காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக கடந்த 25-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 35,400 கனஅடியாகவும், நேற்று காலை 45,400 கன அடியாகவும் இருந்த நீர்வரத்து, மதியம் 12 மணிக்கு 75,400 கனஅடியாகவும், மாலை ஒரு லட்சத்து 400 கனஅடியாகவும் அதிகரித்தது. இதையடுத்து அணையிலிருந்து ஒரு லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணியின் சுரங்க மின்…
திருச்சி: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு, ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கோர்ட்யார்ட் மாரியார்ட் ஓட்டலில் பிரதமர் தங்கினார். தொடர்ந்து, நேற்று காலை 11.10 மணியளவில் ஓட்டலில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். மேஜர் சரவணன் சாலை, பாரதிதாசன் சாலை, தலைமை அஞ்சல் நிலைய ரவுண்டானா, குட்ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம் வழியாக சென்று 11.31 மணிக்கு விமான நிலையம் சென்றடைந்தார். வழிநெடுகிலும் சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் இருந்தவாறு அவர்களை பார்த்து பிரதமர் கையசைத்தார். காலை 11.45 மணிக்கு ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட…
அரியலூர்: மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திர மான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது. விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று திருச்சியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டில் பிற்பகல் 12.15 மணிக்கு வந்தார். அப்போது பிரதமர், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தார். அங்கிருந்து கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் விண்வெளி வீரர் ஷுபான்ஷு ஷுக்லா பற்றிய பாடங்களை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, விண்வெளி வீரர் ஷுபன்ஷு ஷுக்லா, சந்திரயான் விண்கலம் மற்றும் இஸ்ரோவின் சாதனைகள் குறித்த தகவல்களை பள்ளி பாடத் திட்டத் தில் சேர்க்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்துடன் கூடுதலாக இடம்பெறும் என்றும் வரும் கல்வியாண்டில் இது அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட ஒவ்வொரு தலைப்பிலும் 8 முதல் 10 பக்கங்கள் அடங்கிய பாடங்களை தயாரிக்குமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த பாடங்கள் 2 வகைகளாக தயாரிக்கப்பட உள்ளது. இதில் ஒன்று 3 முதல் 8-ம் வகுப்பு வரையிலான…
தூத்துக்குடி: தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடியை அளித்துள்ளதாகவும், இது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட தொகையைவிட 3 மடங்கு அதிகமாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்தும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வடக்கு முனையம்-3 உட்பட, தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் பிரதமர் மோடி பேசியதாவது: மேக் இன் இந்தியா திட்டத்தால் இந்தியா பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழகத்தின் ஆற்றல் வளத்தை மேம்படுத்த, தூத்துக்குடி துறைமுக கட்டமைப்பை உயர்தொழில்நுட்பத்துடன் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இங்கு ரூ.450 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள விமானமுனையம், ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும். 3 மடங்கு அதிகம்… தமிழகத்தில் ரூ.2,500 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள சாலை திட்டங்களால் வர்த்தகம், வேலைவாய்ப்புக்கான பாதைகள் திறக்கும். கடந்த 11 ஆண்டுகளில் ரயில்வே நவீனமயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ரயில்வே…
நாசாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட 20% – சுமார் 3,870 ஊழியர்கள் – கூட்டாட்சி அமைப்புகளை குறைப்பதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் திட்டத்தின் கீழ் பெரிய நிதி வெட்டுக்களைத் தொடர்ந்து ஏஜென்சியிலிருந்து வெளியேறினர். பணிநீக்கங்கள் ஒத்திவைக்கப்பட்ட ராஜினாமா திட்டத்திலிருந்து உருவாகின்றன, இந்த நடவடிக்கையை நாசாவை “மெலிந்த மற்றும் மிகவும் திறமையானவை” செய்யும் முயற்சியாக அதிகாரிகள் விவரிக்கிறார்கள். இந்த முடிவு விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் விண்வெளி கொள்கை நிபுணர்களிடமிருந்து பரவலான பின்னடைவைத் தூண்டியுள்ளது, அவர்கள் ஏஜென்சியின் எதிர்கால பணிகளுக்கு கடுமையான அபாயங்கள் குறித்து எச்சரிக்கின்றனர். வார இறுதியில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன, தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் இந்த நடவடிக்கையை விண்வெளியில் அமெரிக்காவின் தலைமைக்கு நேரடி அச்சுறுத்தலாகக் கூறினர்.நாசா கூட்டாட்சி குறைப்பு இயக்கத்தின் கீழ் ஆயிரக்கணக்கானவர்களை சுடுகிறதுஒத்திவைக்கப்பட்ட ராஜினாமா திட்டத்தின் இரண்டாவது சுற்றில், வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் மூடப்பட்டது, டிரம்ப் பதவிக்கு திரும்பிய பின்னர் முதல் அலைகளில் இருந்து 870 க்கு மேல் சுமார் 3,000…
மும்பை: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடினால் ஒட்டுமொத்த தேசமும் கோபமடையும் என ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி கூறியுள்ளார். செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் செப்டம்பர் 14-ம் தேதி அன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்ற எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் விக்கெட் கீப்பர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். “ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடனான ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறட்டும். நாம் ஆசிய கோப்பையை வெல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தியா இதில் பங்கேற்பதன் மூலம் அது பொருளாதார ரீதியாக தொடரில்…
மீண்டும் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்து பணிபுரிய திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இப்படத்தின் இறுதி பதிப்பை பார்த்த ரஜினி, லோகேஷ் கனகராஜை வெகுவாக பாராட்டியிருக்கிறார். மேலும், மீண்டும் இணைந்து பணிபுரியலாம் என்று கூறியிருக்கிறார். இதனால் பெரும் உற்சாகமாகன லோகேஷ் கனகராஜ், ரஜினிக்காக வேறொரு கதையை தயார் செய்துவிட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி எப்போது இணையும், யார் தயாரிப்பாளர் உள்ளிட்ட எதுவுமே இன்னும் முடிவாகவில்லை. அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து ‘கைதி 2’, ஆமிர்கான் நடிக்கும் படம் என மும்முரமாக இருக்கிறார். இவை அனைத்தையும் முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்குவார் என தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி‘ படத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட…
‘என் விட்டுக்கே ரூ.12 ஆயிரம் மின்கட்டணம் வருகிறது’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், ‘உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்ட உங்களை எல்லோரும் புகழ்கிறார்கள்’ என மின்துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பழனிசாமி, ‘‘மின் கட்டணம் கடுமையாக உயர்ந்து விட்டது. என் வீட்டுக்கு ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வரும். ஆனால் தற்போது ரூ.12 ஆயிரம் வருகிறது’ என பேசியிருந்தார். இதுதொடர்பான செய்தி வலைதளங்களில் வெளியாகியிருந்தது. அந்த பதிவில் பலரும், ‘மின் கட்டண உயர்வுக்கு அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே காரணம்’ என விமர்சனம் செய்து இருந்தனர். பில்லை கொடுங்கள் சரிபார்ப்போம்: இந்நிலையில் அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட பதிவில். ‘‘கீழே இருக்கும்…
