Author: admin

தேனி: நிறைபுத்​தரி பூஜைக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் இன்று மாலை நடை திறக்​கப்பட உள்​ளது. பூஜைக்​கான நெற்கதிர்கள் இன்று அலங்​கரிக்​கப்​பட்ட வாக​னத்​தில் பம்​பைக்கு வர உள்​ளது. மலை​யாள ஆண்​டின் முதல் மாதம் சிங்க மாதம் (ஆவணி) ஆகும். இந்த மாதத்​தில்​தான் கேரளா​வின் பெரிய பண்​டிகை​யான ஓணம் கொண்​டாடப்​படு​கிறது. இதற்கு முன்​ன​தாக சபரிமலை உள்​ளிட்ட பல கோயில்​களில் சுவாமிக்கு நெற்​க​திர்​களை படைத்து வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம். இது நிறைபுத்​தரி (நிறை​யும் புது அரிசி) என அழைக்​கப்​படு​கிறது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நாளை (புதன்) அதி​காலை 5.30 மணிக்கு இந்த வழி​பாடு தொடங்க உள்​ள​தால் இன்று மாலை நடை திறக்​கப்​படு​கிறது. இதற்​காக புதி​தாக அறு​வடை செய்​யப்​பட்ட நெற்​க​திர்​கள், அச்​சன்​கோ​யில் தர்​ம​சாஸ்தா கோயி​லில் இருந்து கொண்டு வரப்​படு​கிறது. சிறப்பு வாக​னத்​தில் அலங்​கரிக்​கப்​பட்டு திருஆபரணப்​பெட்​டி​யில் இந்த நெற்​க​திர்​கள் இன்று மாலை​யில் பம்​பைக்கு வர உள்​ளது. தொடர்ந்து அங்​குள்ள கணபதி கோயி​லில் பூஜை செய்​யப்​பட்டு சபரிமலைக்கு கொண்டு செல்​லப்​படும்.…

Read More

Last Updated : 29 Jul, 2025 05:50 AM Published : 29 Jul 2025 05:50 AM Last Updated : 29 Jul 2025 05:50 AM தஞ்​சாவூர்: தஞ்​சாவூர் முத்​துக்​கு​மார மூப்​ப​னார் சாலை​யில் திமுக மாவட்ட அலு​வல​க​மான கலைஞர் அறி​வால​யம் உள்​ளது. இந்நிலையில், 2010 முதல் 2025-26-ம் நிதி​யாண்டு வரை மாநக​ராட்​சிக்கு சொத்துவரி புதைசாக்​கடை வரி என ரூ.34,46,396-ஐ 15 நாட்களுக்​குள் செலுத்​து​மாறு கலைஞர் அறி​வால​யத்​துக்கு மாநக​ராட்சி நோட்​டீஸ் அனுப்​பி​ உள்ளது. இதுகுறித்து திமுக நிர்​வாகி​கள் கூறும்போது, ‘‘கலைஞர் அறி​வால​யத்​துக்கு வணி​கப் பயன்​பாட்​டுக்​கான வரி செலுத்​து​மாறு மாநக​ராட்​சி ​நோட்​டீஸ் அனுப்பி இருந்​தது. அறி​வால​யத்​தில் பொது​ மக்​கள் பயன்​படுத்​தும் நூலகம் இருப்​ப​தால், வணி​கப்பயன்​பாட்டு வரியை நீக்​கு​மாறு பலமுறை மனு அளித்தும் மாநக​ராட்சி நடவடிக்கை எடுக்​க​வில்லை. வரியை குறைத்​தால், வரியை முழுமையாகச் செலுத்த தயா​ராக உள்​ளோம்’’ என்றனர். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்……

Read More

சென்னை: கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம், ஓபன் எண்டட் பரஸ்பர நிதி திட்டமான கோடக் ஆக்டிவ் மொமென்டம் பண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது சொந்தமாக உருவாக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் வருவாய் வேகத்துடன் கூடிய பங்குகளை அடையாளம் காண்பதன் மூலம் வாய்ப்புகளைப் பிடிக்க முயல்கிறது. இந்த புதிய திட்டத்தில் (என்எப்ஓ) இன்று முதல் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். என் எப்ஓ காலத்தில் குறைந்த பட்சம் ரூ.5,000 முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு சந்தையில் எவ்வளவு தொகை வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். எஸ்ஐபி முறையில் குறைந்தபட்சம் ரூ. 500 முதலீடு செய்யலாம். விலை உயரும் பங்குகள்: பொதுவாக மொமென்டம் முதலீடு என்பது விலை உயர வாய்ப்புள்ள பங்குகளை வாங்குவதாகும். இருப்பினும், மொமென்டம் விலை சார்ந்தது மட்டுமல்ல. வருவாய் மொமென்டம் என்பது வலுவான அடிப்படைக் காரணிகளால் ஆதரிக்கப்படும். மேல்நோக்கிய வருவாய் திருத்தங்கள் மற்றும் சாதகமான…

Read More

பிரான்ஸ் நாட்டின் அக்ஸ் அன் ப்ரொவேன்ஸ் நகரில், கடந்த 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ‘டோல் டிராபி மாஸ்டர்ஸ் 2025 ’ எனும் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளுடன் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் முதல் இடத்தைப் பெற்று, போலாந்தின் மலேக் ஜான் உடன் சமன் செய்தார். வெற்றியாளரை நிர்ணயம் செய்ய நடைபெற்ற முதல் ரேபிட் போட்டி டிரா ஆனது. அடுத்து நடைபெற்ற 2-வது ரேபிட் போட்டியில் இனியன், 1.5 – 0.5 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். ஆக.11-ல் பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப்: சென்னை மாவட்ட சிறுவர், சிறுமியர்களுக்கான பள்ளிகளுக்கு இடையேயான வாலிபால் சாம்பியன்ஷிப் வரும் ஆகஸ்ட் 11 முதல் 13-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த…

Read More

சென்னை: தமிழக மக்​களுக்கு நல்​லாட்​சியை வழங்​கும் வரை ஓயமாட்​டேன் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரிவித்​தார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: ‘மக்​களைக் காப்​போம்- தமிழகத்தை மீட்​போம்’ என்ற பயணத்தில் சுமார் 18.5 லட்​சம் மக்​களை நேரடி​யாக சந்​தித்​திருக்​கிறேன். அவர்​களைப் பார்த்​து, அவர்​களின் குறை​களைக் கேட்​டு, அவர்​களின் மனநிலையை அறிந்​தேன். பொது​மக்​கள் அனை​வருமே ஸ்டா​லினின் மக்​கள் விரோத ஆட்​சி​யில், அவர்​கள் சந்​தித்து வரும் வேதனை​களை எடுத்​துரைத்​தனர். இந்த ஆட்​சி​யில் பெண்​கள், குழந்​தைகளுக்​குப் பாது​காப்​பில்​லை. பாலியல் வன்​கொடுமை​கள் அதி​கரித்​துக்​கொண்டே போகிறது. இந்த ஆட்​சிக்கு குற்​றங்​களை கட்​டுப்​படுத்​தத் தெரிய​வில்​லை. மக்​களே மக்​களை பாது​காத்​துக் கொள்​ளும் அவல​மான ஆட்சி நடக்​கிறது. காவல்​துறை​யினருக்கே பாது​காப்​பில்​லை. திமுக ஆட்​சி​யின்​மீது வெறுப்​பிலும், கடும் கோபத்​தி​லும் உள்​ளனர். அதி​முக மீண்​டும் ஆட்​சிக்கு வர வேண்​டும். இந்த மோச​மான தீய ஆட்​சிக்கு முடிவு​கட்டி நல்​லாட்​சி​யைத் தர வேண்​டும் என என்​னைச் சந்​தித்த அனை​வரும் கேட்​டுக்​கொண்​டனர். தாலிக்​குத் தங்​கம் திட்​டத்தை தாய்​மார்​களும், பெண்​களும், அதி​முக…

Read More

சென்னை: ‘தமிழகம் என்​றுமே ஆன்​மிகம் தழைத்​தோங்​கும் புண்​ணி​யபூமி என்​பது மீண்​டுமொரு​முறை நிரூபண​மாகி​யுள்​ளது’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: ராஜேந்​திர சோழனின் வீர வரலாற்​றின் ஆயிர​மாவது வெற்றி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக​வும், தூத்​துக்​குடி நவீன விமான நிலை​யம் உள்​ளிட்ட பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்கி வைப்​ப​தற்​காக​வும் 2 நாள் அரசு​முறைப் பயண​மாக பிரதமர் மோடி 26-ம் தேதி இரவு தமிழகம் வந்​தார். தூத்​துக்​குடி விமான நிலைய வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ரூ.4,900 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டப்​பணி​களைத் தொடங்கி வைத்​தார். தமிழகத்​தின் உட்​கட்​டமைப்பை வலுப்​படுத்​தி, லட்​சக்​கணக்​கான மக்​களுக்கு வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கித் தரும் வகை​யில் பல வளர்ச்​சித் திட்​டங்​களை வழங்​கிய மத்​திய அரசுக்கு எனது நெஞ்​சார்ந்த நன்​றி. பண்​டைய பாரதத்​தின் பொருளா​தார வளர்ச்​சி​யில் பெரும்​பங்​களித்த நமது பாண்​டிய நாட்டு முத்​துக்​களின் பெருமை குறித்து தூத்துக்​குடி மண்​ணில் துல்​லிய​மாக விவரித்த பிரதமரின் வரலாற்று ஞானம் கண்டு அதிச​யித்​துப்…

Read More

ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘கோ​விந்தா கோபாலா’ என முழங்க ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயில் ஆடிப்​பூர தேரோட்​டம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்​தனர். ஆண்​டாள் அவதரித்த ஆடிப்​பூர தேரோட்​டத் திரு​விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முதல் நாள் இரவு 16 சக்கர தேரில் ஆண்​டாள் ரெங்​க மன்​னார் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தனர். விழாவையொட்டி தின​மும் காலை ஆடிப்​பூரக் கொட்​டகை​யில் ஆண்​டாள் ரெங்​கமன்​னாருக்கு சிறப்பு திரு​மஞ்​சன​மும், மாலை சிறப்பு அலங்​காரத்​தில் பல்​வேறு வாக​னங்​களில் வீதி உலா​வும் நடை​பெற்​றது. ஆடிப்​பூர திரு​விழா​வின் 5-ம் நாள் காலை பெரி​யாழ்​வார் மங்​களா​சாசன​மும், இரவு 5 கருட சேவை​யும், 7-ம் நாள் விழா​வில் சயன சேவை​யும் நடை​பெற்​றன. 8-ம் நாள் விழா​வான நேற்று முன்​தினம் இரவு ரெங்​கமன்​னார் தங்​கக் குதிரை வாக​னத்​தி​லும், ஆண்டாள், பூப்​பல்​லக்​கிலும் எழுந்​தருளி வீதி உலா வந்​தனர். கள்ளழகர் சீர்வரிசை: நேற்று காலை ஆண்​டாள்,…

Read More

ஒவ்வாமை, தொற்று (கான்ஜுண்டிவிடிஸ்), தூக்கமின்மை அல்லது அதிகப்படியான ஆல்கஹால் பயன்பாடு ஆகியவற்றால் அடிக்கடி ஏற்படுகிறது. பெரும்பாலும், சிறிய இரத்த நாளங்கள் கண்ணின் மேற்பரப்புக்கு அடியில் உடைகின்றன, இது இரத்தத்தை சிக்க வைக்கிறது மற்றும் கண்ணின் வெள்ளை பகுதியை சிவப்பு நிறமாக மாற்றுகிறது. காலவரிசைப்படி ரத்தக் கண்கள் வீக்கம் அல்லது அடிப்படை தன்னுடல் தாக்கம் அல்லது முறையான நிலைமைகளை அடையாளம் காட்டக்கூடும்.

Read More

ஒரு சமீபத்திய ஆய்வில், நீண்டகால வேலை நேரம் மூளை கட்டமைப்பில் மாற்றங்களைத் தூண்டக்கூடும், இது அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை பாதிக்கும். சுகாதாரப் பணியாளர்களின் மூளை ஸ்கேன்களை பகுப்பாய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், வாரந்தோறும் 52 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் நபர்களிடையே நிர்வாக செயல்பாடுகளையும் உணர்ச்சி ஒழுங்குமுறைகளையும் நிர்வகிக்கும் பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டறிந்தனர். நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்கிறீர்களா? சரி, இது உங்கள் சம்பள காசோலையை எவ்வாறு பிரதிபலிக்கும் என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது நிச்சயமாக உங்கள் மூளையை மாற்றப்போகிறது. ஆம், அது சரி. ஒரு புதிய ஆய்வில் நீண்ட வேலை நேரம் மூளை கட்டமைப்பை மாற்றக்கூடும் மற்றும் உங்கள் அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை கூட பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புதிய ஆய்வில் நீண்ட வேலை நேரம் மூளையின் கட்டமைப்பை மாற்றக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் தொழில்சார் மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவ இதழில்…

Read More

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் நேற்று தொடங்கியது. தோல்வியை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதால் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதில், வெளிநாட்டு அழுத்தம் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்த சூழலில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கேள்வி நேரத்துக்கு பிறகு, பகல் 12 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் தொடங்கப்படும் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி குறித்தும் விவாதம் நடத்த…

Read More