Author: admin

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்​படி 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள், தாங்​கள் இந்​திய குடிமகன் என்​பதை நிரூபிக்க பிறப்பு சான்​று, பாஸ்​போர்ட், குடி​யிருப்பு சான்று போன்ற கூடு​தல் ஆவணங்​களை சமர்ப்​பிக்க வேண்​டிய கட்​டா​யம் எழுந்​து உள்​ளது. இந்த சூழலில் பிஹார் தலைநகர் பாட்​னா​வின் சவுரி பகு​தி​யில் ‘டாக் பாபு’ என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடி​யிருப்பு சான்றிதழ் வழங்​கப்​பட்டு உள்​ளது. டாக் பாபு​வின் தந்தை பெயர் குடா பாபு, தாயின் பெயர் குடி தேவி என்று சான்​றிதழில் குறிப் பிடப்​பட்டு உள்​ளது. இந்த சான்​றிதழில் பிஹார் வரு​வாய் துறை அதி​காரி முராரி சவு​கான் கையெழுத்​திட்டு உள்​ளார். அரசு அலு​வல​கத்​தின் கவுன்ட்டர் மூல​மாக நேரடி​யாக வழங்​கப்​பட்​டுள்ள சான்​றிதழில் நாயின் புகைப்​பட​மும் அச்​சிடப்​பட்டு உள்​ளது. இந்த குடி​யிருப்பு சான்​றிதழ் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி, வைரலாக பரவி வரு​கிறது. இதைத்…

Read More

லண்டன்: அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் உடனான போரை நிறுத்த புதினுக்கு 50 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார் ட்ரம்ப். தற்போது அதை அவர் குறைத்துள்ளார். ஒரே இரவில் 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், 4+ ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே அதிபர் ட்ரம்ப்பின் போர் நிறுத்த முயற்சிக்கு பலன் கிடைக்காத சூழலில், அங்கு தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. “இனியும் காத்திருப்பதில் எந்தப் பலனும் இல்லை. போர் நிறுத்தம் சார்ந்த முன்னேற்றம் எதுவும் நடைபெறவில்லை. புதின் இது குறித்த முடிவை எடுக்க வேண்டும். மக்கள் அதிகளவில் உயிரிழக்கின்றனர். புதினின் செயல்பாட்டின் மீது அதிருப்தி கொண்டுள்ளேன். அவருடன் பேச்சுவார்த்தை…

Read More

நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம், ‘லூசிஃபர்’. இதில் மோகன்லால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரசியல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இது, 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மலையாள சினிமா வரலாற்றில் ரூ.200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘எல் 2 : எம்புரான்’ என்ற பெயரில் உருவானது. பிருத்விராஜ் இயக்கிய இந்தப் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய காட்சிகள் இடம்பெற்றதால் சர்ச்சையை சந்தித்தது. இதன் மூன்றாம் பாகமான ‘எல் 3: அஸ்ரேல்’ படம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை நீருக்கடியில் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதை மறுத்துள்ள பிருத்விராஜ் தரப்பு, “லூசிஃபர் 3 படம் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன. இது வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதி. போலியான ஐடி மூலம்…

Read More

சென்னை: தமிழகத்​தில் கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் மொத்​தம் 180 அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள் உள்​ளன. கடந்த 4 ஆண்டு திமுக ஆட்​சி​யில் 35 அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள் புதி​தாக தொடங்​கப்​பட்​டன. இதில் 2025-2026 ஆண்டில் மட்​டும் 15 புதி​யக் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்​டதோடு, 253 புதிய பாடப் பிரிவு​களும் தொடங்​கப்​பட்​டுள்​ளன. ஆனால், ஒரு ஆசிரியர் கூட புதி​தாக பணி​யமர்த்​தப்​பட​வில்லை என்​பது​தான் வேதனை அளிக்​கிறது. தமிழகத்​தில் உள்ள அரசுகலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் உள்ள அனு​ம​திக்​கப்​பட்ட உதவி பேராசிரியர்​கள் மற்​றும் பேராசிரியர்​களின் எண்ணிக்கை 14 ஆயிரம் எனும் நிலை​யில், வெறும் 5 ஆயிரம் உதவி பேராசிரியர்​கள் மற்​றும் பேராசிரியர்​கள் மட்​டுமே நிரந்தரமாக பணி​யாற்றி வரு​கின்​றனர். கிட்​டத்​தட்ட 8 ஆயிரம் பேர் கவுரவ விரிவுரை​யாளர்​களாக 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக ரூ.25…

Read More

ராப் மொகுல் ஜே-இசின் இரகசிய மகன் என்று நீண்டகாலமாக கூறியவர் ரைமிர் சாட்டர்த்வைட், தனது மிக சமீபத்திய கூட்டாட்சி வழக்கின் மீது செருகியை இழுத்துள்ளார், இருப்பினும் போர் வெகு தொலைவில் இல்லை என்று அவர் வலியுறுத்துகிறார். ஜூலை 18 அன்று, நீதிமன்ற பதிவுகள் சாட்டர்த்வைட் வழக்கை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றன, இது 2010 ஆம் ஆண்டு வரை நீடித்த ஒரு சாகாவில் மற்றொரு வியத்தகு திருப்பத்தைக் குறிக்கிறது. ஜே-இசின் ரகசிய மகன் என்று கூறும் மனிதன் கூட்டாட்சி வழக்கை கைவிடுகிறான் | கடன்: எக்ஸ்/ஸ்லீசெஸ்தான் தசாப்த கால தந்தைவழி நாடகம் மற்றொரு திருப்பத்தை எடுக்கும்வார இறுதியில், சாட்டர்த்வைட் சமூக ஊடகங்களுக்கு கதையின் பக்கத்தைச் சொல்ல அழைத்துச் சென்றார். அவர் உண்மையில் வழக்கைத் திரும்பப் பெற்றார் என்று அவர் விளக்கினார், ஆனால் விளையாட்டில் பெரிய சக்திகளைக் குறிக்கிறது, “மூடிய கதவுகளுக்கு பின்னால் நிறைய நடக்கிறது” என்று கூறினார். இந்த வழக்கு பல நகரும்…

Read More

புதுடெல்லி: டெல்​லி​யில் ஆன்​லைனில் தூக்க மாத்​திரை வாங்க நினைத்த மூதாட்​டி​யிடம் ரூ.77 லட்​சம் பறிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக ‘டிஜிட்​டல் அரெஸ்ட்’ கும்​பலைச் சேர்ந்த 5 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். டெல்லி வசந்த் கஞ்ச் பகு​தி​யில் வசிப்​பவர் நீரு (62). தனி​யாக வசிக்​கும் இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்​கப்​பட்​டுள்​ளார். அதற்​காக மருத்​து​வர்​கள் பல்​வேறு மருந்​துகளை பரிந்​துரைத்​துள்​ளனர். அத்​துடன் தூக்க மாத்​திரையை​யும் அவர் பயன்​படுத்தி வரு​கிறார். இந்​நிலை​யில், கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தூக்க மாத்​திரை உட்பட தனக்கு தேவை​யான மருந்​துகளை வாங்க இணை​யதளத்​தில் உள்ள பல மருந்து கடைகளை தேடி ஆர்​டர் செய்​துள்​ளார். அதன்​ பிறகு அதை மறந்​து​விட்​டார். அதன் ​பிறகு நீரு​வின் தொலைபேசி​யில் ஒரு​வர் பேசி​னார். தன்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த அதி​காரி என்று அறி​முகப்​படுத்தி கொண்​டார். தடை செய்​யப்​பட்ட போதை மருந்​துகளை வாங்​கிய​தாக​வும் டெல்​லி​யில் போதை பொருட்​களை புழக்​கத்​தில் விடுத்​துள்​ள​தாக​வும் நீரு மீது குற்​றம் சுமத்​தி​னார்.…

Read More

சென்னை: தமிழ்​நாடு நர்​சிங் கவுன்​சில் நூற்​றாண்டு தொடக்க விழா​வில் பங்​கேற்று 25 செவிலியர்​களுக்கு சிறந்த செவிலியர் விருது வழங்​கிய துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், திமுக அரசு என்​றைக்​கும் செவிலியர்​களுக்கு பக்க பலமாக நிற்​கும் என்று தெரி​வித்​தார். தமிழ்​நாடு செவிலியர் மற்​றும் மகப்​பேறு செவிலியர் அவை​யத்​தின் நூற்​றாண்டு தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்​தது. இதில் 25 செவிலியர்​களுக்கு 2025-ம் ஆண்​டுக்​கான சிறந்த செவிலியர் மற்​றும் வாழ்​நாள் சாதனை​யாளர் விருதுகளை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். தொடர்ந்து நூற்​றாண்டு தொடக்க விழா இலச்​சினை மற்​றும் காலண்​டர் தொகுப்​பினை வெளி​யிட்​டார். இதில் சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், செயலர் ப.செந்​தில்​கு​மார், தேசிய நலவாழ்​வுக் குழும திட்ட இயக்​குநர் அருண் தம்​பு​ராஜ், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநர் மற்​றும் தமிழ்​நாடு செவிலியர் மற்​றும் மகப்​பேறு செவிலியர் அவை​யத்​தின் தலை​வர் ஜெ.​ராஜமூர்த்​தி, பதி​வாளர் எஸ்​.அனி கிரேஸ் கலைம​தி, துணை தலை​வர் அனி ராஜா, மருத்​து​வக்…

Read More

உள் மருத்துவ மருத்துவரான டாக்டர் டிம் டியூட்டன், பெர்ரிகளுடன் ஒரு தயிர் கிண்ணத்தையும், கிரானோலாவையும் புற்றுநோய்-குறைக்கும் காலை உணவாக பரிந்துரைக்கிறார். கிரேக்க தயிர் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது, அதே நேரத்தில் பெர்ரி ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. கிரானோலா நெருக்கடி மற்றும் ஆற்றலைச் சேர்க்கிறது, மேலும் மரக் கொட்டைகள் புற்றுநோய் அபாயத்தை மேலும் குறைக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள். இந்த பழமொழிக்கு முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் உணவு ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, மேலும் சரியானது உங்களை நோய்களிலிருந்து கூட பாதுகாக்க முடியும். புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட போர்டு-சான்றளிக்கப்பட்ட உள் மருத்துவ மருத்துவர் டாக்டர் டிம் டியூட்டன் இப்போது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கக்கூடிய காலை உணவு செய்முறையைப் பகிர்ந்துள்ளார். அந்த காலை உணவு என்ன? சரி, இது நிச்சயமாக உதடு-ஊடுருவுகிறது. பார்ப்போம். டாக்டர் டிம்…

Read More

புதுடெல்லி: உ.பி.​யில் தொடர்ச்​சி​யாக நீண்ட காலம் முதல்​வ​ராக பதவி வகித்​தவர்​கள் பட்​டியலில் யோகி ஆதித்​ய​நாத் முதலிடம் பிடித்​துள்​ளார். உத்தர பிரதேசத்​தில் கடந்த 2017-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக வெற்றி பெற்​று, அக்கட்சியின் யோகி ஆதித்​ய​நாத் முதல்​வ​ரா​னார். இதையடுத்து கடந்த 2022-ல் நடை​பெற்ற பேர​வைத் தேர்​தலிலும் 2-வது முறை​யாக வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமை பாஜக​வுக்கு கிடைத்​தது. இது​போல, யோகி ஆதித்​ய​நாத் 2-வது முறை​யாக முதல்​வ​ரா​னார். இந்​நிலை​யில், யோகி ஆதித்​ய​நாத் முதல்​வ​ராக பொறுப்​பேற்று நேற்​றுடன் 8 ஆண்​டு​கள் மற்​றும் 130 நாட்​களை நிறைவு செய்​தார். இதன் மூலம் அம்​மாநிலத்​தில் தொடர்ச்​சி​யாக நீண்ட காலம் முதல்​வ​ராக பதவி வகித்​தவர்​கள் பட்​டியலில் யோகி ஆதித்​ய​நாத் முதலிடம் பிடித்​துள்​ளார். இதற்கு முன்பு இந்த சாதனைக்கு சொந்​தக்​கார​ராக இருந்​தவர் கோவிந்த் வல்​லப் பந்த். உத்தர பிரதேசத்​தின் (சுதந்​திரத்​துக்கு பிறகு) முதல் முதலமைச்​ச​ரான அவர், 8 ஆண்​டு​கள் 127 நாட்​கள் தொடர்ந்து முதல்​வ​ராக பதவி வகித்​துள்​ளார்…

Read More

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், கன்னையா லால் என்ற தையல்காரர் கடந்த 2022-ம் ஆண்டு முகமது ரியாஸ் மற்றும் முகமது கவுஸ் ஆகியோரால் கொலை செய்யப்பட்டார். பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் சர்ச்சையான கருத்துக்கு ஆதரவாக, சமூக ஊடகத்தில் கன்னையா லால் கருத்து தெரிவித்திருந்தார். அதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மையப்படுத்தி ‘உதய்ப்பூர் ஃபைல்ஸ்’ என்ற படத்தை அமித் ஜானி என்பவர் தயாரித்துள்ளார். கன்னையா லால் கதாபாத்திரத்தில் விஜய் ராஸ் நடித்துள்ளார். இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் ‘காக்கிச் சட்டை’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிரந்தரத் தடை விதிக்கக் கோரி ஒரு தரப்பு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. படத்திலுள்ள சில ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து ஆக.8-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில்,…

Read More