ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இறகு பந்து (பாட்மிண்டன்) விளையாடிக் கொண்டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தின் நாகோல் உள் விளையாட்டு அரங்கில் ராகேஷ் (25) என்பவர் தனது நண்பர்களுடன் நேற்று காலையில் பாட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கீழே விழுந்த இறகு பந்தை எடுத்து மீண்டும் ஆட முயற்சித்தபோது, அப்படியே கீழே சரிந்தார். உடனே நண்பர்கள் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராகேஷ் ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர். தினமும் உடற்பயிற்சி செய்ததுடன் இறகு பந்து ஆடுவதையும் வழக்கமாக கொண்டிருந்த ராகேஷ் ஏன் இறந்தார்? என்ற கேள்வி அனைவருடைய மனதிலும் எழுந்துள்ளது. ராகேஷின் மரணம் அவரின் குடும்பத்தாரை வெகுவாக புரட்டிப் போட்டுள்ளது. ராகேஷ் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து கீழே விழுந்து இறக்கும் வீடியோ தற்போது தெலங்கானா, ஆந்திர…
Author: admin
சென்னை: மத்திய அரசு மீது பழிபோடாமல் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகளை பட்டியலிட வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கங்கை கொண்ட சோழபுரம் என்ற சிறிய ஊரின் தலையெழுத்தை, பிரதமரின் வருகை நிச்சயமாக மாற்றும். பிரதமரின் வருகைக்கு பிறகு நிறைய சுற்றுலா பயணிகள், ஆன்மிகவாதிகள் ஏராளமானோர் வருகை தருவார்கள். பிரதமரை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தாரா என்பது எனக்கு தெரியாது. தமிழகத்தில் வறட்சி தொடங்கி விட்டது. எனவே, கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு பணியை நடத்த வேண்டும். விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இன்னும் பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் மாநில பொறுப்பாளர்கள் இன்னும் முழுமையாக தேர்வு செய்யப்படவில்லை. அகில இந்திய அளவில் மாநில…
மார்பு வலிக்கு வரும்போது, நம் மனம் தானாகவே மாரடைப்பை நோக்கி விலகுகிறது, மேலும் இது நம் கவலையை மேலும் தீவிரப்படுத்துகிறது. இருப்பினும், உறுதியாக இருப்பது எப்போதுமே ஒரு நல்ல யோசனையாக இருந்தாலும், மார்பு வலி என்பது இதயப் பிரச்சினையால் மட்டுமல்ல என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தசை இழுத்தல், ஒரு கனமான பொருளைத் தூக்குவது அல்லது வாயு கூட மாரடைப்பைப் பிரதிபலிக்கும் மார்பு வலியை ஏற்படுத்தும், இதில் வாயு பெரும்பாலும் கார்டியாக் அல்லாத காரணியாகவே உள்ளது. மேலும் கற்றுக்கொள்வோம் …இதயம்/வாயு வலிக்கு இடையிலான ஒரு வித்தியாசம்மார்பு வலி ஏற்படுவது மக்களை உடனடி பீதிக்கு அனுப்புகிறது. உறுதியாக இருப்பது இயல்பு. அதே இடத்தில் இரைப்பை குடல் பிரச்சினைகளுடன் மாரடைப்பு அறிகுறிகள் ஏற்படுகின்றன, ஆனால் நோயாளிகளுக்கு சமமான அளவிலான பயத்தை உருவாக்குகின்றன.மார்பு வலி: அனைவரும் ஒரே மாதிரியாக இல்லைமாரடைப்புக்கு உடனடி கவனம் தேவைப்படுகிறது, ஏனென்றால் மாரடைப்பு அறிகுறிகள் உயிருக்கு ஆபத்தானவை, ஆனால் தீவிரமற்ற மார்பு…
புதுடெல்லி: பிஹாரில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் சிறப்பு திருத்தப் பணி மேற்கொண்டது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹாரில் சமீபத்தில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே. என்றாலும் இதனை இறுதிப் பட்டியல் என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். பெயரை தவறாக சேர்த்தது அல்லது நீக்கியதை சுட்டிக்காட்ட ஆக. 1 முதல் செப். 1 வரை அவகாசம் உள்ள நிலையில் இப்போது ஏன் இவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இவர்கள் தங்களின் 1.6 லட்சம் பூத் முகவர்களிடம் ஆட்சேபனை அல்லது கோரிக்கை ஆவணங்களை ஆக. 1 முதல் செப். 1 வரை சமர்ப்பிக்க ஏன் உத்தரவிடக்கூடாது?…
பதுமி: ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனையான திவ்யா தேஷ்முக், சகநாட்டைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கிராண்ட் மாஸ்டரான கோனேரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். ஜார்ஜியா நாட்டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 38 வயதான கோனேரு ஹம்பி, சகநாட்டைச் சேர்ந்த 19 வயதான சர்வதேச மாஸ்டரான திவ்யா தேஷ்முக்குடன் மோதினார். இரண்டு கிளாசிக்கல் ஆட்டமும் டிராவில் முடிவடைந்ததை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான டைபிரேக்கர் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல் ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் திவ்யா தேஷ்முக் விளையாடினார். இந்த ஆட்டமும் டிரா ஆனது. தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் விளையாடிய திவ்யா தேஷ்முக், 2 முறை உலக ரேப்பிடு சாம்பியனான கோனேரு ஹம்பியை 2.5-1.5…
பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாடுசக் பகுதியில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் நேற்று காலையில் பரபரப்பாகப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாவலர்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர் கொலையாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் கொலையாளி உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பாங்காக் போலீஸார் கூறியதாவது: துப்பாக்கிச்சூடு நடத்திய கொலையாளியை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் போக்கு இந்த சம்பவத்துக்கு காரணமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சென்னை: கம்யூனிச இயக்கம் மாறாத தன்மையோடு நிலைத்து நின்று மக்களுக்காக போராடி வருகிறது என்று புத்தக வெளியீட்டு விழாவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில் கவிஞர் ஜீவ பாரதி எழுதிய ‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ நூலை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக்கொண்டார். அப்போது தங்கம் தென்னரசு பேசியது: காலங்கள் மாறிக்கொண்டிருக்க முடியும். ஆனால், கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவது இல்லை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது கணிதத்துக்கு பொருத்தமாக இருக்கலாம். ஆனால், பொதுவாழ்வில் நூற்றாண்டு கண்டிருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் இயக்கம் மாறாது தன்மை யோடு நிலைத்து நின்று மக்களுக்காக போராடி வருகிறது. கம்யூனிசம் என்பது மாறிலி மட்டும் அல்ல, ஒரு முடிவிலியாகவும் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்நூல், இந்த மண்ணின் சிந்தனையைச் சிவப்பாக்கிய தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் முதல்…
இப்போது, அமெரிக்காவில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்சைமர் நோய் அல்லது தொடர்புடைய டிமென்ஷியாக்களுடன் வாழ்கின்றனர். மக்கள்தொகை வயதாக இருப்பதால், அந்த எண்ணிக்கை 2050 க்குள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறைப்பதற்கான சக்திவாய்ந்த வழிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றன – மேலும் மிகவும் நம்பிக்கைக்குரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று வெளிவந்தது.வாழ்க்கை முறை மாற்றங்கள் அது உண்மையில் உங்கள் மூளைக்கு வேலை செய்கிறதுஒரு முக்கிய புதிய ஆய்வில், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் -நன்றாக சாப்பிடுவது, சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் உங்கள் மூளையை ஈடுபடுத்துவது போன்ற சில வாழ்க்கை முறை மாற்றங்கள் -வயதானவர்களில் சிந்தனையையும் நினைவகத்தையும் மேம்படுத்தலாம் என்பதற்கு இன்னும் சில வலுவான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது.ஆராய்ச்சியாளர்கள் 60 மற்றும் 70 களில் 2,100 க்கும் மேற்பட்ட உட்கார்ந்த பெரியவர்களை இரண்டு ஆண்டுகளில் பின்பற்றினர். இந்த உடற்பயிற்சி குப்பைகள் அல்லது மூளை பயிற்சி வெறியர்கள்…
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. முன்னதாக இதுகுறித்து முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சமீபத்தில் ஊடகத்துக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது “பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று ஏன் நினைக்கிறீர்கள். அதற்கு ஆதாரங்கள் இருக்கினறனவா? அவர்கள் உள்ளூரை சேர்ந்த தீவிரவாதிகளாகவும் இருக்கலாம். அந்த தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள். அவர்களை ஏன் கைது செய்யவில்லை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு என்ஐஏ என்ன செய்தது. இதுபோன்ற கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்காதது ஏன்? ஆபரேஷன் சிந்தூரில் இந்திய தரப்பில் ஏற்பட்ட சேதம் என்ன? இவற்றை பற்றி எல்லாம் பிரதமர் மோடி பேசாதது ஏன்?’’ என்று பல கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா நேற்று தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடைபெறும்…
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி அபாரமாக விளையாடி டிரா செய்தது. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடி இந்திய அணி ரன் கணக்கை தொடங்கும் முன்னரே 2 விக்கெட்களை பறிகொடுத்த போதிலும் கேப்டன் ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் ஜோடி அபாரமாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. ஷுப்மன் கில் 103 ரன்களும், கே.எல்.ராகுல் 90 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஜோடி மிக அற்புதமாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்காமல் அந்த அணி வீரர்களை களத்தில் வெகு நேரம் பீல்டிங் செய்ய வைத்து சோர்வடையச் செய்தது. இந்த ஜோடி 334 பந்துகளை சந்தித்து 203 ரன்களை வேட்டையாடியது. கடைசி நாள் ஆட்டத்தில் 15 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் போட்டியை டிராவில் முடித்துக்கொள்ள இங்கிலாந்து அணியின்…
