Author: admin

புதுடெல்லி: ​ராஜஸ்​தான் மாநிலத்​தின் வறண்ட பாலை​வனத்​தில் சிந்​துசமவெளி தொடர்​பான நாகரி​கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்​குள்ள ஆழமான பாலைவன பகு​தி​யில் ஹரப்பா காலத்​தின் தொல்​பொருட்​களும் கிடைத்​துள்​ளன. இந்தகண்​டு​பிடிப்​பு, பண்​டைய சிந்து சமவெளி நாகரிக எல்​லைகளை மறு​வடிவ​மைக்​கும் முக்​கிய தடயங்​களை வெளிப்​படுத்​து​வ​தாகக் கருதப்​படு​கிறது. இது, ராஜஸ்​தானின் ஆழமான பாலை​வனத்​தி​லும் சிந்து சமவெளியைப் போன்ற நாகரிக அடை​யாளம் இருப்​ப​தற்​கான முதல் சான்​றாகும், மேலும் வடக்கு ராஜஸ்​தானுக்​கும் குஜ​ராத்​துக்​கும் நடுவே உள்ள ஹரப்பா தளங்​களுக்கு இடையே​யான ஒரு முக்​கிய இணைப்​பாக​வும் இது கருதப்​படு​கிறது. ஜெய்​சால்​மர் மாவட்​டத்​தில் உள்ள ராட்​டாடி ரிதேரி​யில் சிந்து சமவெளி நாகரிகம் கண்​டு​பிடிக்கப்​பட்​டது. ராம்​கர் தாலு​கா​விலிருந்து கிட்​டத்​தட்ட 60 கிமீ தொலை​விலும் பாகிஸ்​தானின் சந்​தன​வாலா​விலிருந்து சுமார் 70 கிமீ தொலை​விலும் உள்ள இது தொலை​தூர பாலை​வன​மாகும். அங்கு ஹரப்பா காலத்​திய எச்​சங்​களும் அதன் அடை​யாள​மான சில தொல்​பொருட்​களும் காணப்​பட்​டுள்​ளன. இந்த இடம் பிரபல தொல்​பொருள் ஆராய்ச்​சி​யாளர் பங்​கஜ் ஜகானி​ தலை​மை​யில் தோண்​டப்​பட்​டது. இந்த கண்​டு​பிடிப்​பு​களை…

Read More

சென்னை: எம்சிசி ஆல்டிஸ் மாஸ்டர்ஸ் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னை சேப்பாக்கம் உள்ள எம்சிசி கிரிக்கெட் கிளப்பில் நாளை (ஆகஸ்ட் 2) தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 19 மாநிலங்களைச் சேர்ந்த 185 பேர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சம் ஆகும். ஆடவருக்கு 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை என 8 பிரிவிலும், மகளிருக்கு 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவிலும் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவருக்கு ரூ.20 ஆயிரமும், 2-வது இடம் பெறுபவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது எம்சிசி தலைவர் விவேக் குமார் ரெட்டி, எம்சிசி ஒருங்கிணைப்பு செயலாளர் பகவன்தாஸ் ராவ் ஆகியோர் தெரிவித்தனர். ஆல்டிஸ் நிறுவனத்தின் சித்தார்த்…

Read More

மதுரை: ராம​நாத​புரம் ராஜவீ​தி​யைச் சேர்ந்த யாசர் அராபத், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்ப​தாவது: தமிழக டிஜிபி சங்​கர் ஜிவால் ஆக.31-ல் ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி பதவிக்​கான தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதி​காரி​களின் பட்​டியலை மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு தமிழக அரசு இது​வரை அனுப்​ப​வில்​லை. தற்போதைய டிஜிபிக்கு பணி நீட்​டிப்பு வழங்​க​வும், அவரை பொறுப்பு டிஜிபி​யாக நியமிக்​க​வும் வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது. எனவே, தற்​போதைய டிஜிபி சங்​கர் ஜிவாலை ஓய்​வுக்​குப் பிறகு, பொறுப்பு டிஜிபி​யாக நியமிக்​க​வும், சங்​கர் ஜிவாலின் பணிக் காலத்தை நீட்​டிப்​புச் செய்​ய​வும் இடைக்​கால தடை விதித்​தும், டிஜிபி பதவிக்கு தகு​தி​யான ஐபிஎஸ் அதி​காரி​களின் பட்​டியலை தமிழக அரசு உடனடி​யாகத் தயார் செய்​ய​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு விரை​வில்​ விசா​ரணைக்​கு வரவுள்​ளது.

Read More

மும்பை: புரோ கபடி 12-வது சீசன் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் இம்முறை விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறுகின்றன. புரோ கபடி லீக்கின் 2025-ம் ஆண்டு சீசனின் முதற்கட்ட போட்டிகள் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 11 வரை விசகாப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு விசாகப்பட்டினத்துக்கு புரோ கபடி லீக் போட்டிகள் திரும்பி உள்ளன. இங்கு கடைசியாக 2018-ம் ஆண்டு 6-வது சீசன் போட்டிகள் நடைபெற்றன. 29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெறும் தொடக்க ஆட்​டத்​தில் தெலுகு டைட்​டன்ஸ் அணி தமிழ் தலை​வாஸை எதிர்​கொள்​கிறது. அன்​றைய தினம் நடை​பெறும் 2-வது ஆட்​டத்​தில் பெங்​களூரு புல்ஸ் அணி புனேரி பால்​டனை சந்​திக்​கிறது. 30-ம் தேதி தெலுகு டைட்​டன்ஸ் அணி, யுபி யோதாஸ் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.…

Read More

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா நேற்று திடீரென சந்​தித்து பேசி​யது அரசி​யல் வட்​டாரங்​களில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது அதி​முக கூட்​ட​ணி​யில் தேமு​திக இடம் பெற்​றிருந்​தது. அந்​தக் கூட்​ட​ணி​யில் தேமு​தி​க​வுக்கு 5 இடங்​கள் வழங்​கப்​பட்​டன. இதுத​விர ஒரு மாநிலங்​களவை இடமும் வழங்​கப்​படு​வ​தாக தேமு​தி​க​வுக்கு உறுதி அளிக்​கப்​பட்​டது. ஆனால், கூட்​டணி ஒப்​பந்​தத்​தின்​படி தேமு​தி​க​வுக்கு மாநிலங்​களவை இடத்தை அதி​முக வழங்​க​வில்​லை. மாறாக அடுத்​தாண்டு நடை​பெறவுள்ள தேர்​தலில் இடம் வழங்​கு​வ​தாக அதி​முக அறி​வித்​தது. இதனால் தேமு​திக தரப்​பினர் அதிருப்தி அடைந்​தனர். அதைத்​தொடர்ந்​து, கூட்​டணி நிலைப்​பாட்டை ஜனவரி​யில் அறி​விப்​போம் என்று தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் அறி​வித்​தார். இதன்​மூலம் அதி​முக கூட்​ட​ணி​யில் நீடிக்​க​வில்லை என்​பதை தேமு​திக சூசக​மாக தெரி​வித்​தது. அதன்​பின் திமுக, தவெக கட்​சிகளு​டன் தேமு​திக தரப்​பில் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​வ​தாக தகவல்​கள் வெளியாகின. இந்​நிலை​யில் திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க. ஸ்டா​லினை சென்​னை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் பிரேமலதா…

Read More

ஜஸ்டின் டிம்பர்லேக் 31 ஜூலை 2025 அன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், இன்ஸ்டாகிராம் வழியாக தனது மறக்க நாளை உலக சுற்றுப்பயணத்தில் நிகழ்த்தும் போது அவர் லைம் நோயுடன் வாழ்ந்து வருவதாக அறிவித்தார் – இது துருக்கியில் அதே நாளில் மூடப்பட்டிருந்தது. அவர் அதை “இடைவிடாமல் பலவீனப்படுத்துகிறார், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும்” என்று அழைத்தார்.நாள்பட்ட நரம்பு வலி, தீவிர சோர்வு மற்றும் நோய் இருந்தபோதிலும், டிம்பர்லேக் 15 மாதங்களுக்கும் மேலாக 90 நிகழ்ச்சிகள் மூலம் இயக்கப்படுகிறது. அவர் வெளியேறுவதைப் பற்றி சிந்திப்பதை ஒப்புக்கொண்டார், ஆனால் அவர் கூறினார், “நிகழ்ச்சியின் மகிழ்ச்சி என் உடல் உணரப்பட்ட விரைவான மன அழுத்தத்தை விட அதிகமாக உள்ளது” என்றும் அவர் தொடர்ந்து வருத்தப்படவில்லை என்றும் கூறினார்.முதலில் கண்டறியப்பட்டபோது தான் அதிர்ச்சியடைந்ததாக அவர் விளக்கினார், ஆனால் அவர் ஏன் சில சமயங்களில் பாடலைத் தவிர்த்தார் அல்லது பாடல் நிரப்ப கூட்டத்தில் சாய்ந்தார் என்பதை விளக்க உதவியது. தவறான புரிதல்களைத்…

Read More

சென்னை: அரசுப் பள்​ளி​களில் கற்​பித்​தல் தரத்தை தொடர்ந்​தும் மேம்​படுத்த ஆசிரியர்​கள் செய​லாற்ற வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார். சென்னை மாவட்ட அளவி​லான கற்​றல் அடைவுத் தேர்வு (ஸ்​லாஸ்) முடிவுகள் குறித்து தலைமை ஆசிரியர்​களு​ட​னான ஆய்​வுக் கூட்​டம் புரசை​வாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு தலைமை வகித்து பள்​ளிக்கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் 16-வது மாவட்​ட​மாக தற்​போது சென்​னை​யில் உள்ள தலைமை ஆசிரியர்​களை சந்​தித்து கருத்​துகளை கேட்​டுள்​ளேன். நமது மாநிலத்​தில் மற்ற மாவட்டங்களில் தனி​யார் பள்​ளி​களின் எண்​ணிக்கை குறை​வாகும். ஆனால், சென்​னை​யில் தனி​யார் பள்​ளி​கள் அதி​கம். கடன் வாங்​கி​யா​வது தங்​கள் பிள்​ளை​களை தனி​யார் பள்​ளி​யில் சேர்த்துவிடலாம் என்ற எண்​ணம் சென்​னை​யில் வசிக்​கும் பெற்​றோரிடம் உள்​ளது. தனி​யார் பள்​ளிக்கு சென்​றது போக மீத​முள்ளவர்கள் தான் அரசுப் பள்​ளி​களைத் தேடி வரு​கின்​றனர். அதைப் புரிந்து கொண்டு அவர்​களுக்​கான கல்​வியை வழங்க வேண்டும். தமிழகத்​தில் உள்ள பள்​ளி​களில் பல்​வேறு…

Read More

பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 136 கிராமங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. 30-க்கும் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்தன. இதையடுத்து கடந்த 4 நாட்களாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததனர். 9 பேரை காணவில்லை. பெய்ஜிங்கின் வடக்கு மலைப்புர மாவட்டங்களான மியூன், யான் கிங் ஆகியவற்றில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெய்ஜிங் உள்ளிட்ட 9 பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சீன நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை…

Read More

ராமநாதபுரம்: தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படும் விவ​காரம் தொடர்​பாக மத்​திய அரசிடம் பேசி, உரிய தீர்​வு​காண முயற்சிப்​பேன் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரத்தை மேற்​கொண்டு வரும் பழனி​சாமி, ராம​நாத​புரத்​தில் மீனவர்​கள், விவ​சா​யிகள், நெச​வாளர்​களு​ட​னான கலந்​துரை​யாடல் கூட்​டத்​தில் நேற்று பேசி​ய​தாவது: இலங்கை கடற்​படை​யின​ரால் தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படு​வதை​யும், இலங்கை சிறை​களில் அடைக்​கப்​பட்​டுள்ள மீனவர்​கள் மற்​றும் பறி​முதல் செய்யப்பட்டுள்ள படகு​களை மீட்​க​வும் மத்​திய அரசிட​மும், சம்​பந்​தப்​பட்ட அமைச்​சர்​களிட​மும் பேசி, உரிய தீர்​வு​காண முயற்சிப்பேன். கடந்த அதி​முக ஆட்​சி​யில் இரு​முறை பயிர் கடன்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டுள்​ளன. ராம​நாத​புரம் மாவட்ட விவ​சா​யிகளுக்கு ரூ.540 கோடி காப்​பீட்​டுத் தொகை பெற்​றுத் தரப்​பட்​டுள்​ளது. கடந்த ஆட்​சி​யில் 24 மணி நேரம் மும்​முனை மின்​சா​ரம் வழங்கப்பட்டது. கண்​மாய்​கள் ஆழப்​படுத்​தப்​பட்​டன. ஏறத்​தாழ ரூ.14,400 கோடி​யில் காவேரி-குண்​டாறு திட்​டத்தை மேற்​கொண்டோம். ஆனால், திமுக ஆட்​சிக்கு வந்​ததும் இந்த திட்​டத்தை கிடப்​பில் போட்​டு​விட்​டது.…

Read More

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப் புக்கு தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் ஜூலை 31 (நேற்று) என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் விண்ணப்பப் பதிவை ஆகஸ்ட் 1 (இன்று) முதல் தொடர்ந்து மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். ஜூலை 31 வரை விண்ணப் பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு சிறப்புப் பிரிவு மாணவர் களுக்கான கலந்தாய்வு ஆக. 11-ம் தேதியும் பொது கலந்தாய்வு ஆக.13-ம் தேதியும் தொடங்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More