புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த 22-ம் தேதி பதவி விலகினார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்தது. இந்நிலையில் உடல்நிலை காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தேர்லுக்கான அறிவிக்கை விரைவில் வெளியாகும். இதன் பிறகு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செயல்படும் கவுன்ட்டரில் வாக்காளர் பட்டியல் கிடைக்கும்” என்று கூறியுள்ளது. மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன உறுப்பினர்களும் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்.
Author: admin
சென்னை: ‘தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஒற்றை கோரிக்கை காலம் கனியும்போது நிறைவேற்றப்படும்’ என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணிகள் வாகன கண்காட்சியை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, புதிய ரக தனியார் பேருந்துகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் அமைச்சர் பேசியதாவது: இந்தியாவிலேயே மோட்டார் வாகன உற்பத்தியில் முக்கிய இடத்தை தமிழகம் பெற்றிருக்கிறது. இன்றைய சூழலில் ஆம்னி பேருந்து தொழில் நடத்துவது சிரமமான காரியம் என்பதை நான் அறிவேன். இதனால், பல நேரங்களில் சங்கத்துக்கு உறுதுணையாக இருப்பதால் பலரால் விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். அரசு சார்பாக நடத்தும் போக்குவரத்துத் துறையைப்போல, தனியார் நடத்தும் ஆம்னி பேருந்து தொழிலும் சிறப்பாக இருக்க வேண்டும். இதை…
அரிசி அல்லது ரோட்டி இல்லாமல் 30 நாட்கள் செல்ல நினைத்தீர்களா? நீங்கள் மட்டும் இல்லை. குறைந்த கார்ப் உணவுகள் மற்றும் உடற்பயிற்சி போக்குகள் அதிகரித்து வருவதால், சிறந்த ஆற்றல், வேகமான எடை இழப்பு அல்லது மேம்பட்ட செரிமானத்தைத் தேடி பலர் இந்த இந்திய ஸ்டேபிள்ஸைத் தள்ளிவிடுகிறார்கள். ஆனால் அரிசி மற்றும் ரோட்டியை வெட்டுவது ஒரு ஆரோக்கியமான உடலுக்கு ரகசியம் அல்லது ஒரு தற்காலிக போக்கா? அரிசி மற்றும் ரோட்டியை ஒரு முழு மாதத்திற்கு நீங்கள் தவிர்க்கும்போது, உங்கள் உடலுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதை உடைப்போம்.ஒரு மாதத்திற்கு அரிசி மற்றும் ரோட்டியைத் தவிர்த்த பிறகு உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள்உங்கள் உடல் எரிபொருளுக்காக கொழுப்புக்கு மாறுகிறதுஉங்கள் வழக்கமான கார்ப்ஸ் இல்லாமல், உங்கள் உடல் வேறு இடங்களில் ஆற்றலைத் தேடத் தொடங்குகிறது, முக்கியமாக கொழுப்பு. இது கெட்டோசிஸ் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது மிகவும் குறைந்த கார்ப் உணவுகளின் அடித்தளமாகும். முதலில், நீங்கள்…
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் இமயமலையில், கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கியது ஆகஸ்ட் 9-ம் தேதி வரை யாத்திரை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “பாபா அமர்நாத் சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார். அவரது ஆசிர்வாதத்தால், குகைக் கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இந்த அற்புதத்திற்காக நான் சிவபெருமானை வணங்குகிறேன். மேலும் புனித யாத்திரையை பக்தர்களுக்கு ஒரு தெய்வீக அனுபவமாக மாற்றுவதில் பங்கு வகிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சென்னை: கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ.345 கோடி என அறநிலையத்துறை தெரிவித்துள்ள நிலையில், உண்டியல் காணிக்கை, கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்களின் வாடகை கட்டணம் எங்கே செல்கிறது என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயில் நிதியில் கட்டிடங்கள் கட்டுவது சம்பந்தமான பொதுநல வழக்கில், அறநிலையத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ.345 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நிலத்தில் ஏக்கருக்கு ஒரு ரூபாய் என்ற அளவிலும்கூட வருவாய் இல்லையா? கட்டிட வாடகை எவ்வாறு நிர்ணயிக்கபட்டுள்ளது? திருமண மண்டப வாடகை, கோயில் இடங்களில் அரசு அலுவலகங்கள் வாடகை எல்லாம் எந்தக் கணக்கில் வருகிறது? கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக டெபாசிட் செய்த வருமானம் எதில் சேர்க்கப்படுகிறது? மதுரை, திருவண்ணாமலை, பழனி,…
சென்னை: சென்னையில், ரூ.35 லட்சம் மதிப்பில் நுங்கம்பாக்கம், அரும்பாக்கம் உள்பட 7 ஆவின் ஜங்ஷன் பாலகங்களில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஆவின் நிறுவனம் ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது. தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் சார்பில், நாள்தோறும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி பலவகைகளில் பிரித்து விநியோகிக்கப்படுகிறது. இது தவிர, 220-க்கும் மேற்பட்ட பால் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மற்றும் புறநகரில் தினசரி சுமார் 15 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உபபொருட்கள் விற்கப்படுகின்றன. பால் மற்றும் பால் உபபொருட்களை 35 ஆவின் ஜங்ஷன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. பால் பொருட்கள் விற்பனையில் ஆவின் ஜங்ஷன்…
கோவிட் 19 இன்னும் சுற்றிலும் இருந்தாலும், அது அச்சுறுத்தலாகக் குறைவாகவே உள்ளது (இப்போதைக்கு), ஆனால் நிலையின் நீண்டகால நன்மைகள் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சியின் தலைப்பாகத் தொடர்கின்றன. இப்போது, மார்பக புற்றுநோய் நிவாரணம் மற்றும் கோவிட் 19 க்கு இடையே ஒரு இணைப்பு நிறுவப்பட்டுள்ளது, மேலும் பிந்தையது செயலற்ற செல்களை எவ்வாறு தூண்டுகிறது. கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, புற்றுநோய் நோயாளிகள் தங்கள் வெற்றிகரமான சிகிச்சைக்கு அப்பாற்பட்ட தொடர்ச்சியான ஆபத்துக்களை எதிர்கொள்ளக்கூடும் என்பதைக் குறிக்கிறது. இன்ஃப்ளூயன்ஸாவுடன் கோவ் -19, நுரையீரலில் அமைந்துள்ள மார்பக புற்றுநோய் செல்களைச் செயல்படுத்துகிறது, இது புதிய வளர்ச்சியை உருவாக்கக்கூடும் மற்றும் புற்றுநோய் மீண்டும் நிகழும் என்பதை நேச்சர் வெளியிட்ட ஆராய்ச்சி நிரூபிக்கிறது.உடலில் “தூங்கும்” புற்றுநோயின் விதைகள்அறுவைசிகிச்சை அல்லது கீமோ மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சையானது, சில செல்கள் முக்கிய கட்டியிலிருந்து நுரையீரல் உள்ளிட்ட தொலைதூர இடங்களுக்கு இடம்பெயர காரணமாகின்றன, அங்கு அவை செயலற்றதாகிவிடும். இந்த சொல் புற்றுநோய் செல்களை (டி.சி.சி) பரப்புகிறது,…
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை, ஆயுதங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மணிப்பூரின் விஷ்ணுபூர், தவுபால், மேற்கு இம்பால், கிழக்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொது மக்களிடம் அச்சுறுத்தி பணம் பறித்ததாக 3 தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 5 பேரை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். நான்கு தீவிரவாதிகளும், மக்கள் விடுதலைப் படை, காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி, ப்ரீபக் (புரோ) ஆகிய 3 அமைப்புகளை சேர்ந்தவர்கள். இதற்கிடையில் சூரசந்த்பூர் மற்றும் தவுபால் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வெவ்வேறு நடவடிக்கைகளில் 26 துப்பாக்கிகள், 9 வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகளை நேற்று முன்தினம் கைப்பற்றினர்.
ஆளும் கட்சியாக இருந்தாலும் தேர்தல் வந்தால் தான் கட்சியின் அடிமட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஞாபகத்துக்கு வரும். அப்படித்தான் அண்மையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அண்ணாச்சி தயவில் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால், “அண்ணாச்சி கொடுக்கச் சொன்ன பணம் ஒன்றியத்துக்கு மட்டும் தான் வந்தது, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர நிர்வாகிகளுக்கு அவர் கொடுக்கச் சொன்ன பணத்தை சேர்மன் இன்னும் கொடுக்கல” என்று புலம்பித் தீர்க்கிறார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர திமுக நிர்வாகிகள். 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ள திமுக தலைமை, கடந்த முறை திமுக கூட்டணி தோற்றுப் போன தொகுதிகளில் இம்முறை கூடுதல் கவனம் செலுத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் கடந்த முறை அதிமுக வென்ற ஒரே ஒரு தொகுதியான ஸ்ரீவில்லிபுத்தூரை இம்முறை வென்றெடுக்க…
வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி, சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் பல்வேறு பேஸ்ட்ரிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாஸ்தா, வேகவைத்த பொருட்களுடன், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. இந்த உணவுகளில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், கல்லீரலுக்குள் குவிக்கும் கூடுதல் கொழுப்பை உருவாக்க உடலைத் தூண்டுகிறது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவு விரைவான அதிகரிப்பு பசி வேதனைகளுக்கு வழிவகுக்கிறது, இதனால் அதிக உணவை உண்ணலாம், இது கொழுப்பு கல்லீரல் நோய்க்கான நிலைமைகளை உருவாக்குகிறது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை பழுப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் முழு கோதுமை ரொட்டி போன்ற முழு தானியங்களுடன் மாற்றுவது இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் கல்லீரல் செயல்பாட்டிற்கு பயனளிக்கிறது.குறிப்புகள்பெலிக்ஸ் மருத்துவமனை, ஆரோக்கியமான கல்லீரலைச் சேர்க்க மற்றும் தவிர்க்க சிறந்த 10 உணவுகள், 2025அப்பல்லோ மருத்துவமனைகள், கல்லீரல் ஆரோக்கியத்திற்கான சிறந்த மற்றும் மோசமான உணவுகள், 2025ஹெல்த்லைன், கொழுப்பு கல்லீரல் உணவு: என்ன உணவுகள் சாப்பிட வேண்டும், என்ன உணவுகள்…
