சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி – போரூர் வரை ஒரு பாதையில் ஓட்டுநர் இல்லாத ரயில் சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில், பூந்தமல்லி பணிமனையில் 3 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும். இதில் முதல் கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது. இந்த வகையைச் சேர்ந்த முதல் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் கடந்த ஆண்டு பிப்.8-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் கடந்த ஆண்டு…
Author: admin
இராஜதந்திரம் பொதுவாக நீங்கள் சிரிப்பதைத் தேடும் இடமல்ல, ஆனால் அதை இங்கிலாந்தின் ஜப்பானின் தூதரிடம் விட்டு விடுங்கள், ஹிரோஷி சுசுகிவிஷயங்களை அசைக்க மர்மலேட்குறைவாக இல்லை.இப்போது அதிகாரப்பூர்வமாக ஆண்டின் மிக பிரிட்டிஷ் இராஜதந்திர நெருக்கடியில் (உண்மையில் இல்லை), தூதர் ட்வீட் செய்துள்ளார்: “வழங்கியதற்காக எனது மன்னிப்பு க்ரம்பெட்டுகள் மர்மலடுடன் பாடிங்டனுக்கு. க்ரம்பெட்டுகளை அனுபவிப்பதற்கான சரியான வழியை எனக்குத் தெரியப்படுத்துங்கள். ”ஏற்றம். உடனடி இணைய தங்கம்.பேடிங்டன் கரடியைக் குறிப்பிடுவது-கற்பனையான, மர்மலேட்-வெறி கொண்ட, எப்போதும் கண்ணியமான பிரிட் ஐகான்-சுசுகியின் ட்வீட் கன்னமான, அழகான மற்றும் ஓ-மிகவும் கூர்மையானது. மக்கள் அதை முற்றிலும் நேசித்தார்கள். சில மணி நேரத்தில், எக்ஸ் (முன்னர் எக்ஸ்) ஒரு க்ரம்பெட் மையமாகக் கொண்ட விவாதக் கழகமாக மாறியது.ஏன்? சரி, க்ரம்பெட்டுகள் அடிப்படையில் பிரிட்டனில் புனிதமானவை. அவை மென்மையானவை, துளை, பஞ்சுபோன்ற சிறிய சுற்றுகள், பாரம்பரியமாக வறுக்கப்பட்டு வெண்ணெயில் மூழ்கிவிடும். மர்மலாட் பாடிங்டனின் நெரிசலாக இருக்கும்போது (pun நோக்கம்), அடியில் வெண்ணெய் அடர்த்தியான…
ரம்பன்: ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு ராணுவத்தினர் தங்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். ரம்பன் மாவட்டத்தில் பேட்டரி சாஸ்மா என்ற இடம் அருகே நேற்று காலை 11.30 மணியளவில் ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் ராணுவ லாரியில் பயணம் செய்த அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மான் பகதூர் என்ற 3 வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர், போலீஸார், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காஷ்மீரின் ரம்பன் மாவட்ட நெடுஞ்சாலையில் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.
ஹைதராபாத்: ஐபிஎல் சீசனின் 55-வது லீக் போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. டெல்லி அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்விகளைப் பெற்று 12 புள்ளிகளைச் சேர்த்துள்ளது. அந்த அணி வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியின் அபிஷேக் போரல், டூ பிளெஸ்ஸிஸ், கருண் நாயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். அதேபோல் பந்துவீச்சில் ஸ்டார்க், சமீரா, முகேஷ் குமார், அக்சர் படேல், குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசினால் மட்டுமே வெற்றி வசப்படும். அதேநேரத்தில் ஹைதராபாத் அணி 10 ஆட்டங்களில் பங்கேற்று 3 வெற்றி, 7 தோல்விகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணியின்…
நியூயார்க்: அதானி குழுமம் மீதான ரூ.2,200 கோடி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு புகார் தொடர்பான விசாரணையை ரத்து செய்யக் கோரி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தை அதானி தரப்பு நாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து முன்னணி செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு, அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும்…
சென்னை: அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க துடிக்கும் பாஜக அரசை எதிர்க்கும் வழியை இந்திய மக்களுக்கு தமிழகம் காட்டியிருக்கிறது என அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ‘அரசியலமைப்பை காப்பாற்றுவோம்’ என்ற தலைப்பில் அரசியல் மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை மாநாட்டுக்கு தலைமை வகித்து, ‘இந்திய அரசியலமைப்பு’ புத்தகத்தை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வழங்கினார். ‘ஒருமித்த குரலோடு, ஒற்றுமையான கைகளோடு இந்திய தேசத்தை பாதுகாப்போம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாநாட்டில் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது: காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கானது. ஆனால் பாஜக கொண்டு வந்த திட்டங்கள் அம்பானிக்கும், அதானிக்குமானது. பாஜக ஆட்சியில் 50 சதவீதத்துக்கு மேல் தேசத்தில் ஒவ்வொரு குடிமகன் மீதும் கடன் சுமத்தப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுத வேண்டும் என்பது தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டமாகும். ஆனால் யார்…
கடந்த சில தசாப்தங்களாக, மருத்துவ அறிவியல் பல முனைய நோய்களுக்கு ஒரு சிகிச்சையைக் கண்டுபிடிப்பதில் இருந்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலிருந்து, நீங்கள் பார்க்கும் விதம், எடை மற்றும் எதுவுமில்லை என்பதை மாற்றுவதிலிருந்து பெரும் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கிரையோஃப்ரீசிங் மூலம், இறந்தவர்களை மீண்டும் கொண்டுவருவது குறித்து தொடர்ந்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் உள்ளன, அங்கு இறந்த உடல் பல ஆண்டுகளாக உறைவிப்பான் இடத்தில் வைக்கப்படுகிறது, இது ஒருநாள் மீண்டும் உயிருக்கு வரும் என்ற நம்பிக்கையுடன், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. எவ்வாறாயினும், இது ஒரு தொலைதூர கனவைப் போலவே இருக்கும்போது, (மற்றும் இயற்கை அன்னை முடிவு செய்ததை சரிசெய்ய முயற்சிக்கிறோமா என்பதைப் பற்றி விவாதிக்கத் திறந்திருக்கும்), மனிதர்கள் உண்மையில் மனிதர்கள் உண்மையில் வாழ முடியும், அல்லது மாறாக, உண்மையில் நீண்ட நேரம் வரை முடியும் என்று நிபுணர்கள் இப்போது நம்புகிறார்கள். எப்படி என்று பார்ப்போம் …என்பது அழியாத தன்மை சாத்தியமா?நன்கு அறியப்பட்ட எதிர்கால நிபுணரான டாக்டர் இயன்…
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘எக்சஸைஸ் சிந்து’ என்ற பெயரில் பாகிஸ்தான் நேற்று முன்தினம் ஏவுகணை சோதனை நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தில் அப்தலி என்ற ஏவுகணை ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து, தரைப்பகுதியை நோக்கி ஏவப்படும் இந்த ஏவுகணை 450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது. ‘‘பாகிஸ்தான் படைகளின் தயார் நிலை குறித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், முப்படை தளைபதி ஆகியோர் தங்களின் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் பாக். ராணுவம் கூறியுள்ளது. இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அதிகாரிகள், ‘‘பாகிஸ்தானின் இந்த திட்டமிட்ட ஏவுகணை சோதனை பொறுப்பற்ற ஆத்திரமூட்டும் செயல். இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த சோதனை வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பிரேவிஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.நடுவர் அவுட் என அறிவித்ததும், முதல் 15 விநாடிகளுக்குள் டிஆர்எஸ் ரிவியூவை பேட்ஸ்மேன்கள் செய்யவேண்டும். ஆனால், பிரேவிஸ் ரிவியூ செய்யாமல் ரன் எடுப்பதில் கவனமாக இருந்தார். அதன் பிறகு ஜடேஜாவுடன், பிரேவிஸ் ஆலோசனை செய்தார். இதைத் தொடர்ந்து டிஆர்ஸ் ரிவியூ செய்ய பிரேவிஸ் முயன்றார். ஆனால், டிஆர்எஸ் ரிவியூ கேட்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்று நடுவர் தெரிவித்தார். ஆனால், டி.வி. ரீபிளேவில் பார்த்த போது, பந்து லெக் சைடில் விலகிச் செல்வது தெரியவந்தது. இதனால் அவர் அவுட் இல்லை என்பது தெரிய வந்தது. ஒருவேளை, முன்னதாகவே டிஆர்எஸ் ரிவியூ எடுத்திருந்தால் அவுட்டாவதிலிருந்து பிரேவிஸ் தப்பித்திருக்கலாம் என்றும், அதிரடியாக விளையாடக்கூடிய பிரேவிஸ் களத்திலிருந்தால் வெற்றி சிஎஸ்கே பக்கம் வந்திருக்கலாம் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள்…
வாஷிங்டன்: வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் பிரச்சார பாணியில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க திரைப்படத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளி்யாகியுள்ளது. இந்த செயல்முறையை தொடங்க வர்த்தகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அவர் அங்கீகாரம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு சொந்தமான ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். “அமெரிக்க திரைப்படத் துறை மிக வேகமாக அழிந்து வருகிறது. மற்ற நாடுகள் அதற்கான முயற்சியை ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளன. அது அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக இந்தப் படங்கள் பிரச்சார பாணியில் உள்ளன. எங்களுக்கு வேண்டியதெல்லாம் மீண்டும் அமெரிக்காவில் திரைப்படங்கள் எடுக்க வேண்டும். இந்தப் புதிய கட்டண முறை திரைப்படத் துறையில் நிலவும்…