ஃபைப்ராய்டுகள் மற்றும் ஃபைப்ரோடெனோமாக்கள் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களால் பாதிக்கப்பட்டுள்ள திட வளர்ச்சிகள். இந்தியாவில் இனப்பெருக்க வயதில் கிட்டத்தட்ட 20 முதல் 30% பெண்கள் ஃபைப்ராய்டு கருப்பையைக் கொண்டுள்ளனர். உலகின் பெண் மக்கள்தொகையில் 10% பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை ஃபைப்ரோடெனோமாவால் பாதிக்கப்படுகின்றனர். பெரிய படத்தில் உள்ள கேள்வி என்னவென்றால், ஃபைப்ராய்டுகள் மற்றும் ஃபைப்ரோடெனோமாக்கள் புற்றுநோயாக மாற முடியுமா? மக்கள் நினைப்பதை விட ஃபைப்ராய்டுகள் மற்றும் ஃபைப்ரோடெனோமாக்கள் மிகவும் பொதுவானவை. அகில இந்தியாவின் மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) படி, இந்தியாவில் இனப்பெருக்க வயதிற்குட்பட்ட கிட்டத்தட்ட 20 முதல் 30% பெண்கள் ஃபைப்ராய்டு கருப்பையைக் கொண்டுள்ளனர். இதேபோல், உலகின் பெண் மக்கள்தொகையில் 10% பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை ஃபைப்ரோடெனோமாவால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நோயறிதலுக்குப் பிறகு, பெண்களிடையே மிகப்பெரிய கவலைகளில் ஒன்று, எதிர்காலத்தில், ஃபைப்ராய்டுகள் மற்றும் ஃபைப்ரோடெனோமாக்கள் புற்றுநோயாக மாற முடியுமா?…
Author: admin
சூரத்: குஜராத் மாநிலம் அகமதாபாத், மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையே புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு கட்டமைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று சூரத் பகுதியில் கட்டப்படும் ரயில் நிலையத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் சூரத் மற்றும் குஜராத்தில் உள்ள பிலிமோரா இடையேயான 50 கி.மீ. நீளத்துக்கு 2027-ம் ஆண்டு திறக்கப்படும். மேலும் 2029-ம் ஆண்டுக்கு மும்பை அகமதாபாத் இடையேயான முழுத் திட்டமும் செயல்பாட்டுக்கு வந்துவிடும். செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மும்பை – அகமதாபாத் இடையேயான தூரத்தை சுமார் 2 மணி நேரம் 7 நிமிடங்களில் புல்லட் ரயில் கடந்துவிடும். 2028-ம் ஆண்டுக்குள், தானே – அகமதாபாத் பகுதி முழுவதும் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் நரேன்பூரில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதன. ‘ஏ’ பிரிவில் ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கோவா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் மணிப்பூர், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, அசாம் அணிகள் உள்ளன. தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி சத்தீஸ்கருடன் மோதுகிறது. தொடர்ந்து 5-ம் தேதி மேற்கு வங்கத்துடனும், 9-ம் தேதி ஒடிசாவுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது தமிழ்நாடு அணி. போட்டிகள் அனைத்தும் ஆர்.கே.எம் ஆஷ்ரம மைதானத்தில் நடைபெறுகின்றன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா இரு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 13-ம் தேதி நடைபெறுகின்றன. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும்…
கரூர்: தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர். சுமார் 25-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். “கரூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது கவலை அளிக்கிறது. இந்த கடுமையான சூழ்நிலையில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம். கரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டத்தை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாமெல்லாம் ரத்த தானம் செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்படலாம். ஆதரவு தேவைப்படலாம். சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பது எனது பிரார்த்தனையாக இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு லிஸ்டீரியா வெடிப்பு காரணமாக வால்மார்ட் மற்றும் டிரேடர் ஜோவிடமிருந்து முன் சமைத்த உணவுக்கு அமெரிக்க சுகாதார முகவர் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்தன, இப்போது நான்கு இறப்புகள் மற்றும் 15 மாநிலங்களில் 20 வழக்குகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. லிஸ்டீரியா கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும் என்பதால், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களில், குறிப்பிட்ட சந்தை மற்றும் வர்த்தகர் ஜோவின் பாஸ்தா தயாரிப்புகளை நிராகரிக்க அல்லது திருப்பித் தர நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். “இந்த தயாரிப்புகளை வாங்கிய நுகர்வோர் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தயாரிப்புகள் தூக்கி எறியப்பட வேண்டும் அல்லது வாங்கும் இடத்திற்கு திரும்ப வேண்டும்” என்று சுகாதார நிறுவனங்கள் தெரிவித்தன. அமெரிக்க சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு நிறுவனங்கள் வால்மார்ட் மற்றும் க்ரோகரில் விற்கப்பட்ட முன் சமைத்த உணவுக்கு சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன, ஏனெனில் லிஸ்டீரியா வெடிப்புடன் இணைக்கப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை இந்த வாரம் நான்கு ஆக உயர்ந்தது. செப்டம்பர் 25,…
குவாங்ஜு: தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் பாரா உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் 18 வயதான இந்தியாவின் ஷீத்தல் தேவி 146-143 என்ற கணக்கில் உலகின் முதல் நிலை வீராங்கனையான துருக்கியின் ஓஸ்னூர் க்யூர் கிர்டியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். மேலும் கலப்பு அணிகள் பிரிவில் தோமன் குமாருடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜோடை கிரின்ஹாம், நேதன் மாக்குயின் ஜோடியை 152-149 என்ற கணக்கில் தோற்கடித்தது. மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் சரிதாவுடன் இணைந்து ஷீத்தல் தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த ஜோடி இறுதிப் போட்டியில் துருக்கி ஜோடியிடம் 148-152 என்ற கணக்கில் தோல்வி கண்டது. உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் ஷைலேஷ் குமார்: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில்…
திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை மலையப்பர் கற்பகவிருட்ச வாகனத்திலும் இரவு சர்வபூபால வாகனத்திலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆந்திர அரசு சார்பில் சுவாமிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இதையடுத்து தங்க கொடிமரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதராக மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெகு விமரிசையாக தொடங்கிய பிரம்மோற்சவத்தில் தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் உற்சவரான மலையப்பர் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை, திருமலையில் உள்ள…
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், திருச்சி, சேலம், திண்டுக்கல் ஆட்சியர்கள் கரூருக்கு சென்று மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடும்படி அறிவித்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (27.9.2025) கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன். மேலும் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும். நான்…
“இந்த உலகம் கொடுக்க வேண்டிய மிக அழகான பரிசுகளில் ஒரு மகள் ஒன்றாகும்.” – லாரல் ஏதர்டன் ஒருமுறை சொன்னார், சரியாக. எனவே, மக்கள் தங்கள் மகள்கள் மற்றும் மகள் போன்ற நபர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அற்புதமான பிணைப்பைப் போற்றுவதற்கு, மகள் தினம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு சந்தர்ப்பம் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது! ஒவ்வொரு குடும்பத்திலும் மக்களின் இதயத்திலும் மகள்கள் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளனர். அவை பெரும்பாலும் அன்பு, கருணை, கவனிப்பு மற்றும் உணர்ச்சி வலிமையின் தூண்களாகக் காணப்படுகின்றன. எனவே, மகளின் தினம் மகள்களை நேசிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அவர்கள் குடும்பங்களுக்கு கொண்டு வரும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் வலிமையை ஒப்புக்கொள்கிறது. இது தவிர, மகள்கள் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்களாக சமூகத்திற்கு பங்களிக்கின்றனர், இதனால் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது எதிர்காலத்தை மேம்படுத்துவதாகும். மகளின் நாள் அவர்களின் இருப்பை மதிக்க, அவர்களின் பங்களிப்புகளை மதிப்பிடுவது…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் இன்று இரவு பிரசித்தி பெற்ற கருடசேவை நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலைகள், கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் நேற்று மதியம் திருமலையை வந்தடைந்தன. தமிழக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், ஆச்சாரியார் ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் மங்கலப் பொருட்களை கொண்டுவந்தனர். இவற்றை ஜீயர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த மங்கலப் பொருட்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இவை கோயிலில் ஒப்படைக்கப்பட்டன. இந்த மலர் மாலைகளும், கிளியும் இன்று இரவு நடைபெற உள்ள கருடசேவையின் போது உற்சவர் அணிவது ஐதீகம். இது வழக்கமான பவுர்ணமி கருடசேவையில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. இரு சக்கர வாகனங்களுக்கு தடை: கருடசேவையை முன்னிட்டு நேற்று இரவு 9 மணி முதல் திருப்பதியில் இருந்து…
