Author: admin

ஃபைப்ராய்டுகள் மற்றும் ஃபைப்ரோடெனோமாக்கள் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களால் பாதிக்கப்பட்டுள்ள திட வளர்ச்சிகள். இந்தியாவில் இனப்பெருக்க வயதில் கிட்டத்தட்ட 20 முதல் 30% பெண்கள் ஃபைப்ராய்டு கருப்பையைக் கொண்டுள்ளனர். உலகின் பெண் மக்கள்தொகையில் 10% பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை ஃபைப்ரோடெனோமாவால் பாதிக்கப்படுகின்றனர். பெரிய படத்தில் உள்ள கேள்வி என்னவென்றால், ஃபைப்ராய்டுகள் மற்றும் ஃபைப்ரோடெனோமாக்கள் புற்றுநோயாக மாற முடியுமா? மக்கள் நினைப்பதை விட ஃபைப்ராய்டுகள் மற்றும் ஃபைப்ரோடெனோமாக்கள் மிகவும் பொதுவானவை. அகில இந்தியாவின் மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) படி, இந்தியாவில் இனப்பெருக்க வயதிற்குட்பட்ட கிட்டத்தட்ட 20 முதல் 30% பெண்கள் ஃபைப்ராய்டு கருப்பையைக் கொண்டுள்ளனர். இதேபோல், உலகின் பெண் மக்கள்தொகையில் 10% பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை ஃபைப்ரோடெனோமாவால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நோயறிதலுக்குப் பிறகு, பெண்களிடையே மிகப்பெரிய கவலைகளில் ஒன்று, எதிர்காலத்தில், ஃபைப்ராய்டுகள் மற்றும் ஃபைப்ரோடெனோமாக்கள் புற்றுநோயாக மாற முடியுமா?…

Read More

சூரத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத், மகா​ராஷ்டிர மாநிலம் மும்பை இடையே புல்​லட் ரயில் திட்​டத்தை மத்​திய அரசு கட்​டமைத்து வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று சூரத் பகு​தி​யில் கட்​டப்​படும் ரயில் நிலை​யத்தை மத்திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் பார்​வை​யிட்​டார். பின்​னர் அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் முதல் புல்​லட் ரயில் திட்​டத்​தின் சூரத் மற்​றும் குஜ​ராத்​தில் உள்ள பிலிமோரா இடையே​யான 50 கி.மீ. நீளத்​துக்கு 2027-ம் ஆண்டு திறக்​கப்​படும். மேலும் 2029-ம் ஆண்​டுக்​கு மும்​பை அகம​தா​பாத் இடையே​யான முழுத் திட்​ட​மும் செயல்​பாட்​டுக்கு வந்​து​விடும். செயல்​பாட்​டுக்கு வந்த பிறகு, மும்பை – அகம​தா​பாத் இடையே​யான தூரத்தை சுமார் 2 மணி நேரம் 7 நிமிடங்​களில் புல்​லட் ரயில் கடந்​து​விடும். 2028-ம் ஆண்​டுக்​குள், தானே – அகம​தா​பாத் பகுதி முழு​வதும் இயக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Read More

திருச்சி: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்​பந்து சாம்​பியன்​ஷிப்​பின் இறு​திக்​கட்ட போட்​டிகள் வரும் அக்​டோபர் 1-ம் தேதி சத்​தீஸ்கர் மாநிலம் நரேன்​பூரில் தொடங்​கு​கிறது. இதில் கலந்து கொள்​ளும் 10 அணி​கள் இரு பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளதன. ‘ஏ’ பிரி​வில் ஒடி​சா, தமிழ்​நாடு, சத்​தீஸ்​கர், மேற்கு வங்​கம், கோவா அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. ‘பி’ பிரி​வில் மணிப்​பூர், உத்​தரபிரதேசம், பஞ்​சாப், ஹரி​யா​னா, அசாம் அணி​கள் உள்​ளன. தமிழ்​நாடு அணி தனது முதல் ஆட்​டத்​தில் வரும் அக்​டோபர் 1-ம் தேதி சத்​தீஸ்​கருடன் மோதுகிறது. தொடர்ந்து 5-ம் தேதி மேற்கு வங்​கத்​துட​னும், 9-ம் தேதி ஒடி​சாவுட​னும் பலப்​பரீட்சை நடத்​துகிறது தமிழ்​நாடு அணி. போட்​டிகள் அனைத்​தும் ஆர்​.கே.எம் ஆஷ்ரம மைதானத்​தில் நடை​பெறுகின்​றன. லீக் சுற்​றின் முடி​வில் இரு பிரி​விலும் முதல் இரு இடங்​களை பிடிக்​கும் தலா இரு அணி​கள் அரை இறு​திக்கு முன்​னேறும். அரை இறுதி ஆட்​டங்​கள் 13-ம் தேதி நடை​பெறுகின்றன. சாம்​பியன் பட்​டம் யாருக்கு என்​பதை தீர்​மானிக்​கும்…

Read More

கரூர்: தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர். சுமார் 25-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். “கரூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது கவலை அளிக்கிறது. இந்த கடுமையான சூழ்நிலையில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம். கரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டத்தை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாமெல்லாம் ரத்த தானம் செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்படலாம். ஆதரவு தேவைப்படலாம். சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பது எனது பிரார்த்தனையாக இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

ஒரு லிஸ்டீரியா வெடிப்பு காரணமாக வால்மார்ட் மற்றும் டிரேடர் ஜோவிடமிருந்து முன் சமைத்த உணவுக்கு அமெரிக்க சுகாதார முகவர் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்தன, இப்போது நான்கு இறப்புகள் மற்றும் 15 மாநிலங்களில் 20 வழக்குகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. லிஸ்டீரியா கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும் என்பதால், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களில், குறிப்பிட்ட சந்தை மற்றும் வர்த்தகர் ஜோவின் பாஸ்தா தயாரிப்புகளை நிராகரிக்க அல்லது திருப்பித் தர நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். “இந்த தயாரிப்புகளை வாங்கிய நுகர்வோர் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தயாரிப்புகள் தூக்கி எறியப்பட வேண்டும் அல்லது வாங்கும் இடத்திற்கு திரும்ப வேண்டும்” என்று சுகாதார நிறுவனங்கள் தெரிவித்தன. அமெரிக்க சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு நிறுவனங்கள் வால்மார்ட் மற்றும் க்ரோகரில் விற்கப்பட்ட முன் சமைத்த உணவுக்கு சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன, ஏனெனில் லிஸ்டீரியா வெடிப்புடன் இணைக்கப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை இந்த வாரம் நான்கு ஆக உயர்ந்தது. செப்டம்பர் 25,…

Read More

குவாங்ஜு: தென் கொரி​யா​வின் குவாங்ஜு நகரில் பாரா உலக வில்​வித்தை சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான காம்​பவுண்ட் தனி​நபர் பிரி​வில் 18 வயதான இந்​தி​யா​வின் ஷீத்​தல் தேவி 146-143 என்ற கணக்​கில் உலகின் முதல் நிலை வீராங்​க​னை​யான துருக்​கி​யின் ஓஸ்​னூர் க்யூர் கிர்​டியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார். மேலும் கலப்பு அணி​கள் பிரி​வில் தோமன் குமாருடன் இணைந்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார். இந்த ஜோடி வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் இங்​கிலாந்​தின் ஜோடை கிரின்​ஹாம், நேதன் மாக்​கு​யின் ஜோடியை 152-149 என்ற கணக்​கில் தோற்​கடித்​தது. மகளிருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் சரி​தாவுடன் இணைந்து ஷீத்​தல் தேவி வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். இந்த ஜோடி இறு​திப் போட்​டி​யில் துருக்கி ஜோடி​யிடம் 148-152 என்ற கணக்​கில் தோல்வி கண்​டது. உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் ஷைலேஷ் குமார்: உலக பாரா தடகள சாம்​பியன்​ஷிப் டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் ஆடவருக்​கான உயரம் தாண்​டு​தலில்…

Read More

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை மலையப்பர் கற்பகவிருட்ச வாகனத்திலும் இரவு சர்வபூபால வாகனத்திலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆந்திர அரசு சார்பில் சுவாமிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இதையடுத்து தங்க கொடிமரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதராக மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெகு விமரிசையாக தொடங்கிய பிரம்மோற்சவத்தில் தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் உற்சவரான மலையப்பர் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை, திருமலையில் உள்ள…

Read More

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், திருச்சி, சேலம், திண்டுக்கல் ஆட்சியர்கள் கரூருக்கு சென்று மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடும்படி அறிவித்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (27.9.2025) கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன். மேலும் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும். நான்…

Read More

“இந்த உலகம் கொடுக்க வேண்டிய மிக அழகான பரிசுகளில் ஒரு மகள் ஒன்றாகும்.” – லாரல் ஏதர்டன் ஒருமுறை சொன்னார், சரியாக. எனவே, மக்கள் தங்கள் மகள்கள் மற்றும் மகள் போன்ற நபர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அற்புதமான பிணைப்பைப் போற்றுவதற்கு, மகள் தினம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு சந்தர்ப்பம் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது! ஒவ்வொரு குடும்பத்திலும் மக்களின் இதயத்திலும் மகள்கள் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளனர். அவை பெரும்பாலும் அன்பு, கருணை, கவனிப்பு மற்றும் உணர்ச்சி வலிமையின் தூண்களாகக் காணப்படுகின்றன. எனவே, மகளின் தினம் மகள்களை நேசிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அவர்கள் குடும்பங்களுக்கு கொண்டு வரும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் வலிமையை ஒப்புக்கொள்கிறது. இது தவிர, மகள்கள் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்களாக சமூகத்திற்கு பங்களிக்கின்றனர், இதனால் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது எதிர்காலத்தை மேம்படுத்துவதாகும். மகளின் நாள் அவர்களின் இருப்பை மதிக்க, அவர்களின் பங்களிப்புகளை மதிப்பிடுவது…

Read More

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவத்​தில் இன்று இரவு பிரசித்தி பெற்ற கருடசேவை நடை​பெற உள்​ளது. இதையொட்டி ஸ்ரீவில்​லிபுத்​தூரில் இருந்து ஆண்​டாள் சூடிக் கொடுத்த மலர் மாலைகள், கிளி, பட்டு வஸ்​திரம் உள்​ளிட்ட மங்​கலப் பொருட்​கள் நேற்று மதி​யம் திரு​மலையை வந்​தடைந்​தன. தமிழக இந்து சமய அறநிலை​யத்​துறை இணை ஆணை​யர் மாரி​முத்​து, நிர்​வாக அதி​காரி சக்​கரை அம்​மாள், ஆச்​சா​ரி​யார் ரமேஷ் ரங்​க​ராஜன் ஆகியோர் மங்​கலப் பொருட்​களை கொண்​டு​வந்​தனர். இவற்றை ஜீயர்​கள் பெற்​றுக்​கொண்​டனர். இந்த மங்​கலப் பொருட்​களுக்கு சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்​டன. அதன் பின்​னர் மாட வீதி​களில் ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​பட்​டு, இவை கோயி​லில் ஒப்​படைக்​கப்​பட்​டன. இந்த மலர் மாலைகளும், கிளி​யும் இன்று இரவு நடை​பெற உள்ள கருடசேவை​யின் போது உற்​சவர் அணிவது ஐதீகம். இது வழக்​க​மான பவுர்​ணமி கருடசேவை​யில் இடம்​பெறாது என்​பது குறிப்​பிடத்தக்​கது. இரு சக்கர வாக​னங்​களுக்கு தடை: கருடசேவையை முன்​னிட்டு நேற்று இரவு 9 மணி முதல் திருப்​ப​தி​யில் இருந்து…

Read More