வானியலாளர்கள் தொடர்ந்து மனிதகுலத்தின் அண்ட எல்லைகளை விரிவுபடுத்துகிறார்கள். நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (ஜே.டபிள்யூ.எஸ்.டி) ஹப்பிள் ஸ்பேஸ் டெலெஸ்கோபின் ஈயெண்டலின் அற்புதமான கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தியது மற்றும் கட்டியுள்ளது, இது இதுவரை கவனிக்கப்பட்ட மிக தொலைதூர நட்சத்திரமாகும். இந்த அசாதாரண நட்சத்திரம் பிக் பேங்கிற்கு ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பிரகாசிக்கிறது, இது ஆரம்பகால பிரபஞ்சத்தில் ஒரு அரிய பார்வையை வழங்குகிறது. எரென்டலைப் படிப்பது முதல் நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் மற்றும் அண்ட கட்டமைப்புகளின் உருவாக்கம் மற்றும் பரிணாமம் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. ஜே.டபிள்யூ.எஸ்.டி.யின் மேம்பட்ட கருவிகள், முன்னோடியில்லாத தெளிவுடன் இதுபோன்ற தொலைதூர வான பொருட்களைக் கவனிக்க வானியலாளர்கள் அனுமதிக்கின்றன, பிரபஞ்சத்தின் குழந்தை பருவத்தைப் புரிந்துகொள்வதில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும்.EARENDEL: மிக தொலைதூர ‘காலை நட்சத்திரத்தை’ கண்டுபிடிப்பதுEARENDEL – “மார்னிங் ஸ்டார்” அல்லது “ரைசிங் லைட்” என்று பொருள்படும் பெயர் – ஒரு சாதாரண நட்சத்திரம் அல்ல. வெபின்…
Author: admin
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கோகர்ணா அருகேயுள்ள ராமதீர்த்த மலை குகையில் ரஷ்யாவை சேர்ந்த நினா குடினா (40) தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். அவரது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், கடந்த 6 ஆண்டுகளாக அங்கு சட்ட விரோதமாக தங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கர்நாடக போலீஸார் அவரை மீட்டு கடந்த ஜூலையில் அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில் நினா குடினாவின் கணவர் ட்ரோர் ஷலோமா கோல்ட்ஸ்டெயின் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தனது மனைவி, மகள்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டன. மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, என் மனைவிக்கு உரிய ஆவணங்களை வழங்க வேண்டும். ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்”என கோரினார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம்.ஷியாம் பிரசாத் நேற்று தீர்ப்பை வெளியிட்டார். அதில், “மத்திய வெளியுறவுத் துறை…
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இந்த பொதுக்கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நெரிசல் ஏற்பட்டதாகவும் எங்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தகவல் வந்துள்ளது. தவெக கூட்டம் நடைபெறுகின்ற போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதே கட்சி இதற்கு முன்னால் 4 பொதுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அதையெல்லாம் ஆய்வு செய்து முழுமையாக பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தொலைகாட்சியை பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த கட்சி மட்டுமல்ல, அதிமுக சார்பில் நான் நடத்தும் பயணத்தில் காவல்துறை எங்களுக்கு முழுமையான பாதுகாப்பு தரவில்லை. இந்த அரசாங்கம் ஒருதலைபட்சமாக நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பார்க்காமல் நடுநிலையோடு…
புதுடெல்லி: முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் ஒன்றான அசென்ச்சர் கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துக்கு விரைவாக மாறுவதும் தேவைக் குறைவும் இதற்கு காரணமாக கூறியுள்ளது. 865 மில்லியன் டாலர் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுவதாகவும் வரும் மாதங்களில் மேலும் ஆட்குறைப்புக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அசென்ச்சர் தலைமை செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் கூறுகையில், “குறைந்த காலக்கெடுவுக்குள் எங்களுக்கு தேவையான திறன்களை பெறுவதற்கு சாத்தியமில்லாததால் எங்கள் நிறுவனம் ஆட்களை வெளியேற்றி வருகிறது. ஏஐ சார்ந்த தீர்வுகளுக்கான வாடிக்கையாளர் தேவைக்கேற்ப நிறுவனம் தனது ஊழியர்கள் எண்ணிக்கை விரைவாக மாற்றி அமைக்க உள்ளது” என்றார்.
டாக்டர் சேதியின் கூற்றுப்படி, இந்த வேர் காய்கறி எந்த காரணமும் இல்லாமல் ஒரு கெட்ட பெயரைப் பெறுகிறது. உண்மையில், இனிப்பு உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர் மற்றும் வைட்டமின்கள் ஏ பீட்டா கரோட்டின் சி, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இனிப்பு உருளைக்கிழங்கின் கிளைசெமிக் குறியீடு நடுத்தர மற்றும் உயர் இடையே உள்ளது, ஆனால் அவற்றை கொதிக்க வைப்பது சர்க்கரை உள்ளடக்கம் குறைகிறது. இனிப்பு உருளைக்கிழங்கில் உள்ள உணவு நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இனிப்பு உருளைக்கிழங்கின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உயிரணுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன, இது இதய நோய் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். அது மட்டுமல்லாமல், இனிப்பு உருளைக்கிழங்கு பார்வை ஆரோக்கியம், நோயெதிர்ப்பு அமைப்பு செயல்பாடு மற்றும் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. அவற்றை கொதிக்க வைப்பதன் மூலமும், அதை சாலட்டாக மாற்றுவதன் மூலமோ அல்லது பரதர்கள், ரொட்டி போன்றவற்றுக்கான திணிப்பாகவும் நீங்கள் அவற்றை…
லே: லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரம் போராட்டம் வன்முறையாக மாறியது. இது குறித்து லடாக் டிஜிபி சிங் ஜாம்வல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உண்ணாவிரத போராட்டம் வன்முறையாக மாற சோனம் வாங்சுக் காரணமாக இருந்தார். இந்த போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதான என விசாரணை நடைபெறுகிறது. வாங்சுக் ஏற்கெனவே பாகிஸ்தான் சென்றுள்ளார். இஸ்லாமபாத் அதிகாரிகளுடன் அவர் பேசியுள்ளார். லே பகுதியில் போராட்டம் மேலும் தீவிரமடைவதை தடுக்க சோனம் கைது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை: கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கி வேதனையளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.” என்று தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாப் ராயல்டி “நான் செய்கிறேன்” என்று கூறும்போது, உலகம் முழுவதும் பார்க்க இடைநிறுத்துகிறது. இந்த வார இறுதியில், செலினா கோம்ஸ் எங்களுக்கு யுகங்களுக்கு ஒரு திருமண பேஷன் தருணத்தை வழங்கினார். பாடகரும் நடிகரும் ஒரு நெருக்கமான சாண்டா பார்பரா விழாவில் இசை தயாரிப்பாளர் பென்னி பிளாங்கோவுடன் முடிச்சு கட்டினர், மேலும் அவரது திருமண தோற்றம் ஏற்கனவே தசாப்தத்தின் மிகச் சிறந்த பிரபலமான திருமண ஆடைகளில் ஒன்றாக புகழப்படுகிறது. பெரிய நாளுக்காக, செலினா தனிப்பயன் ரால்ப் லாரன் தலைசிறந்த படைப்புக்குள் நுழைந்தார், அது சம பாகங்களை காலமற்றதாகவும் நவீனமாகவும் உணர்ந்தது. கவுன் ஒரு ஹால்டர் நெக்லைன் இடம்பெற்றது, அது அவளது தோள்களில் அழகாக சறுக்கியது, அதே நேரத்தில் பின்புறம் தைரியமாக முற்றிலும் திறந்திருந்தது. சாடின் துணி அவளது உடற்பகுதியின் குறுக்கே அழகாக மூடப்பட்டிருந்தது, முழு நீள பாவாடைக்குள் விழுந்து மென்மையான ரயிலுடன் அவளுக்குப் பின்னால் சென்றது. ஆனால் நிகழ்ச்சியை உண்மையிலேயே திருடியது என்னவென்றால்,…
துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது. தொடர்ந்து சூப்பர் 4 சுற்றிலும் 3 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்திருந்தது. அதே வேளையில் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றில் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்தது. ஆசிய கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி முதன்முறையாக தற்போதுதான் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. அந்த அணி லீக் சுற்றில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்திய அணியின் பேட்டிங்கில் 204.63 ஸ்டிரைக் ரேட்டுடன் 309 ரன்கள்…
திருச்சி: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தவெக தலைவர் விஜய் பதில் ஏதும் அளிக்காமல் சென்றார். தவெக தலைவர் விஜய் இன்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 31 பேர் உயிரிழந்தனர். மேலும் 58 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூரில் தனது பிரச்சாரம் முடிந்த கையோடு திருச்சி சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி விமானம் நிலையம் சென்றடைந்தார். அங்கே கூடியிருந்த செய்தியாளர்கள் விஜய்யின் காரை சூழ்ந்து கொண்டு அவரிடம் கரூர் கூட்ட…
