செலினா கோம்ஸ் மற்றும் பென்னி பிளாங்கோ இறுதியாக திருமணம் செய்து கொண்டனர்! இந்த ஜோடி செப்டம்பர் 27 அன்று சாண்டா பார்பராவில் முடிச்சு கட்டியது. கனவான திருமணமானது வெள்ளிக்கிழமை மாலை சாண்டா பார்பரா கவுண்டியில் உள்ள ஹோப் ராஞ்சில் ஒரு மாளிகையில் ஒரு ஒத்திகை இரவு உணவோடு உதைத்தது. நெருக்கமான திருமணத்தில் சுமார் 170 குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பாடகர் இப்போது இன்ஸ்டாகிராமில் திருமணத்தின் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். திருமணமான தம்பதியினருக்கு வாழ்த்துக்கள், இது உண்மையில் அவர்களின் உறவு காலவரிசையைத் திரும்பிப் பார்க்க சரியான நேரம்.படம் மரியாதை: இன்ஸ்டாகிராம்/ செலினா கோம்ஸ்2009செலினா கோம்ஸ் மற்றும் பென்னி பிளாங்கோ ஆகியோர் 2019 முதல் ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கிறார்கள். கோமஸின் முன்னாள் காதலன் ஜஸ்டின் பீபருடன் பிளாங்கோ நட்பு கொண்டிருந்தார். 2015கோமஸ் மற்றும் பிளாங்கோ தனது ஆல்பமான புத்துயிர் பெறுவதற்காக இணைந்துள்ளனர். ஒற்றையர் ‘அதே பழைய காதல்’, மற்றும் ‘அவர்களைக் கொல்லுங்கள்’…
Author: admin
ஜார்சுகுடா: பாரத் சஞ்சார் நிகம் நிறுவனத்தின் (பிஎஸ்என்எல்) சுதேசி 4ஜி சேவையை ஒடிசாவின் ஜார்சுகடா நகரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். இத்துடன் 97,500 செல்போன் டவர்களும் திறக்கப்பட்டன. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இது வெள்ளி விழா ஆண்டாகும். இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவையை, ஒடிசாவின் ஜார்சுகுடா நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். மேலும், 97,500 செல்போன் கோபுரங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதில் 92,600 கோபுரங்கள் 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கக் கூடியவையாகும். இந்த செல்போன் கோபுரங்கள் ரூ.37,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செல்போன் கோபுரங்கள் ஒடிசா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், குஜராத் மற்றும் பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 7,545 4ஜி கோபுரங்கள் உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 19 கிராமங்களில் உள்ள செல்போன் கோபுரங்கள் 4ஜி-யாக தரம் உயர்த்தப்படுகின்றன.…
கரூர்: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்ததையடுத்து நாளை காலை முதல்வர் ஸ்டாலின் கரூர் வருகை தர இருப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் இன்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 31 பேர் உயிரிழந்தனர். மேலும் 58 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்ட செந்தில் பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர்…
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் மாவோயிஸ்ட் தம்பதிகளான ஜக்கு குர்சம் என்கிற ரவி என்கிற ரமேஷ் (28), கமலா குர்சம் (27) ஆகியோரை பாதுகாப்புப் படையினர் கடந்த 23-ம் தேதி கைது செய்தனர். இவர்கள் இருவரைப் பற்றியும் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய வீட்டில் சோதனை நடத்திய போது 10 கிராம் தங்க பிஸ்கட், ரூ.1.4 லட்சம் ரொக்கம், 2 ஆன்ட்ராய்டு போன்கள் மற்றும் மாவோயிஸ்ட் துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் மாவோயிஸ்ட்களுக்கு மருந்துகள், அத்தியாவசிய உணவு பொருட்களை சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “கரூரில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு.…
அதிகாலை 1:00 முதல் 3:00 மணி வரை தொடர்ந்து எழுந்திருப்பது வெறுப்பாக இருக்கும், மேலும் பெரும்பாலும் தொந்தரவு தூக்கம் அல்லது தூக்கமின்மையின் அடையாளமாக நிராகரிக்கப்படும். இருப்பினும், பாரம்பரிய சீன மருத்துவத்தின் கொள்கைகளின்படி, குறிப்பிட்ட நேர சாளரம் ஒரு ஆழமான பொருளைக் கொண்டிருக்கக்கூடும். டி.சி.எம்மில், இந்த முறை குறிப்பாக கல்லீரலின் ஆற்றல் அமைப்பில் ஏற்றத்தாழ்வைக் குறிக்கலாம்.டி.சி.எம் உறுப்பு கடிகாரத்தைப் புரிந்துகொள்வதுபாரம்பரிய சீன மருத்துவம், குய் அல்லது லைஃப் ஃபோர்ஸ் எனர்ஜி என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது, இது 24 மணி நேர சுழற்சியில் உறுப்பு அமைப்புகள் வழியாக பாய்கிறது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் இரண்டு மணி நேர சாளரம் உள்ளது, அதன் ஆற்றல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கல்லீரலின் உச்ச நேரம் 1:00 முதல் 3:00 மணி வரை நிகழ்கிறது. இவை உச்ச நேரம், இரத்தத்தை சுத்தப்படுத்த கல்லீரல் பொறுப்பு, செரிமானத்தை ஆதரிக்கிறது மற்றும் ஹார்மோனை ஒழுங்குபடுத்துகிறது. இந்த…
அமராவதி: ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவித்துள்ளார். ஆந்திர மாநில மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது அமராவதியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை கூட்டணி அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. சூப்பர் சிக்ஸ் திட்டம் ஆந்திராவில் சூப்பர் வெற்றி. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று மாத உதவி தொகைகளை நேரில் சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குவதில் எனக்கு முழு திருப்தியாக உள்ளது. தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனா கூட்டணியை உறுதி செய்தோம். மக்கள் முழு வெற்றியை அளித்தனர். அவர்களுக்கு நன்றி கடன் செலுத்துவது போல் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படாத மேலும் பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம். விரைவில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கேப் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ரூ.15 ஆயிரம் நிதி உதவி…
சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: இதர பிற்படுத்தப்பட்டோர் (பிசி, எம்பிசி, டிஎன்சி) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் (‘யசஸ்வி’) மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 2025- 26ம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதில் பயன்பெற, பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் பயனடைந்த மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ( உள்ள Renewal Application என்ற இணைப்பில் சென்று OTR எண் பதிவு செய்து 2025-26-ம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை புதுப்பிக்கலாம். பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9, 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இந்த ஆண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட தளத்தில் செல்போன்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காய்ச்சல், சளி பிரச்சினை காரணமாக நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை டீன் சாந்தாராமனிடம் கேட்டபோது, ”பெ.சண்முகம் நலமுடன் உள்ளார். மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். 2 நாள் ஓய்வுக்கு பிறகு அவர் வீடு திரும்புவார்” என்றார்.
புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்களை வழங்கும் பல நூற்றாண்டுகளாக பால் மனித உணவுகளில் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. இந்த நன்மைகள் இருந்தபோதிலும், இரத்த சர்க்கரை அளவில் அதன் தாக்கத்தைப் பற்றி பலர் கவலைப்படுகிறார்கள். வெற்று பாலில் இயற்கையாகவே லாக்டோஸைக் கொண்டுள்ளது, இது குளுக்கோஸை படிப்படியாக வெளியிடுகிறது, அதே நேரத்தில் சுவையான பால் மற்றும் மில்க் ஷேக்குகளில் பெரும்பாலும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் உள்ளன, அவை இரத்த குளுக்கோஸில் விரைவான கூர்முனைகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க இயற்கையான மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். நீரிழிவு, ப்ரீடியாபயாட்டீஸ் அல்லது இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிக்கும் நபர்களுக்கு இந்த அறிவு மிகவும் முக்கியமானது, தகவலறிந்த உணவுத் தேர்வுகளைச் செய்ய அவர்களுக்கு உதவுகிறது.எவ்வளவு இயற்கையானது மற்றும் பாலில் சர்க்கரைகள் சேர்க்கப்பட்டன இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது லாக்டோஸ் – இயற்கை பால் சர்க்கரைலாக்டோஸ் என்பது பாலில் இயற்கையாக…
