சென்னை: தவெக கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்களை மறித்து தாக்குதல் நடத்தும் மனநிலைக்கு தொண்டர்களை மாற்றியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் சம்பவத்தில் தமிழகமே துயரத்தில் இருக்க, பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேரிடரிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். காவல் துறை நிபந்தனைகள் எதையும் தவெக பிரச்சாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் எல்லை மீறி நடக்க எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டன. நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி கூட்டம் நடத்திவிட்டு, அவசரத்துக்கு அவ்வழியே ஆம்புலன்ஸ் வந்தால், அரசாங்கம் இடையூறு செய்கிறது என்று சொல்லி அங்கிருந்த தொண்டர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் தவறான மனஓட்டத்தை புகுத்தியவர் பழனிசாமிதான். ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே நோயாளியாக அனுப்பப்படுவார் என பழனிசாமி சொன்ன பிறகுதான், அவருடைய கூட்டங்களில் ஆம்புலன்ஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டு ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர். பழனிசாமி போட்ட…
Author: admin
இதய ஆரோக்கியத்திற்கு வரும்போது, அடுத்த ஆண்டுகளில் உங்கள் இதயம் எவ்வளவு சிறப்பாக செயல்படும் என்பதை தீர்மானிக்கும் பல காரணிகள் உள்ளன. இருப்பினும், இதய நோய்களைத் தக்கவைத்துக்கொள்வதைத் தவிர்க்கக்கூடிய ஒரு விஷயம் இருப்பதாக நாங்கள் உங்களிடம் சொன்னால் என்ன செய்வது? டாக்டர். இருதய அறுவை சிகிச்சை நிபுணரான ஜெர்மி லண்டன், செயலற்ற நிலையில் இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று எச்சரிக்கிறார். வழக்கமான உடல் செயல்பாடு இடைவிடாத நடத்தையைத் தவிர்ப்பதன் மூலம், இதய ஆரோக்கியத்தையும் வலிமையையும் பராமரிக்க உதவுகிறது என்று டாக்டர் லண்டன் வலியுறுத்துகிறார். ஆழமாக தோண்டுவோம் …இதயம் ஒரு தசைடாக்டர் லண்டனின் கூற்றுப்படி, சரியான செயல்பாட்டிற்கு தொடர்ச்சியான இயக்கம் தேவைப்படும் ஒரு தசையாக இதயம் செயல்படுகிறது. இதயம் மற்ற தசைகளைப் போலவே செயல்படுகிறது, ஏனெனில் அதற்கு வழக்கமான பயன்பாடு தேவைப்படுகிறது, வலுவாக இருக்க வேண்டும். யாராவது நீண்ட காலத்திற்கு படுக்கையில் தங்கியிருக்கும்போது அல்லது செயலற்ற நிலையில் இருக்கும்போது, இரத்தம்…
சென்னை: ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், 2021-ம் ஆண்டில் வழங்கியிருக்க வேண்டிய ரூ.2,500 விலையை நான்கரை ஆண்டுகள் கழித்து இப்போது தான் வழங்கியிருக்கிறார். உண்மையில் 2021-ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த கொள்முதல் விலையைவிட திமுக வாக்குறுதி அளித்த கொள்முதல் விலை 32.42 சதவீதம் அதிகமாகும். அதே அளவீட்டை கொண்டு பார்த்தால் தற்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,311 வழங்க வேண்டும். ஆனால், அதைவிட ரூ.811 குறைவாக கொடுத்து விட்டு, நெல்லுக்கு அதிக விலை கொடுத்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். தமிழக அரசால் தற்போது குவிண்டால் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல்லுக்கு மத்திய அரசு ரூ.2,369…
சென்னை: தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் அக். 7 முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: நடப்பு கல்வியாண்டில்(2025-26) 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சார்ந்து 2-ம் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி அக்டோபர் 7 முதல் 10-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி நடைபெறும் நாளில் தொடக்க வகுப்புகளில் கல்வி சார்ந்த பணிகள் பாதிக்கப்படக்கூடாது. ஆசிரியர் இல்லை எனில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மாற்று ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கரூர்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை கூட திமுக அரசு மறுத்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நலம் விசாரிக்கவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்தச் சம்பவத்துக்கு யார் மீதும் நாங்கள் பழி சுமத்த விரும்பவில்லை. பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கும், அதை உறுதி செய்வதற்கும் மாநில அரசுதான் பொறுப்பு. அது மாநில அரசின் தார்மிக பொறுப்பாகும். இதுபோல நடப்பது இது முதல் முறை அல்ல.…
சென்னை: தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வாரா என்றும், தவெக நிர்வாகிகள் யாரும் ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் பதிலளிக்காமல் சென்றார். கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சூழலில், இச்சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணியிடம் தவெக தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் சென்னையில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியைச் சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல்குமார், “நீதிபதியிடம் இது குறித்து முறையீடு செய்துள்ளோம். நாளை மதியம் 2.15 மணிக்கு உயர்…
கரூர்: வருங்காலத்தில் இதுபோன்ற பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் பலியான நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனிடையே, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த உடற்கூராய்வுக் கூடத்துக்கு வந்த போது உயிரிழந்தவர்ளின் உறவினர்கள் சீமானை உள்ளே அனுமதிக்காமல் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீஸார் உறவினர்களை சமாதானம் செய்து சீமானை அஞ்சலி செலுத்த அனுமதித்தனர். மேலும், காயமடைந்தவர்களை பார்வையிட்ட…
பப்பாளி விதைகளில் ஒட்டுண்ணிகளைக் கொல்லும் திறன் கொண்ட ஏராளமான பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன. இவற்றில் மிக முக்கியமானது கார்பேன் என்று குறிப்பிடப்படுகிறது. குடல் புழுக்கள் மற்றும் அமீபாக்களை முடக்குவதன் மூலம் அவற்றைக் கொல்ல நிரூபிக்கப்பட்ட ஒரு இயற்கை கலவை இது. பப்பாளி விதைகளில் பாப்பெய்ன் என்ற நொதியும் உள்ளது, இது புரதங்களை உடைக்கும் திறன் கொண்டது. குடலில் மறைக்கப்படக்கூடிய ஒட்டுண்ணி முட்டைகளை மென்மையாக்கும் மற்றும் அழிக்கும் போது இது கைக்குள் வருகிறது.இந்த சேர்மங்களுக்கு மேலதிகமாக, பப்பாளி விதைகளும் பென்சில் ஐசோதியோசயனேட்டின் தடயங்களைக் கொண்டுள்ளன. இது ஆண்டிமைக்ரோபையல் மற்றும் ஆன்டிபராசிடிக் நடவடிக்கை கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நைஜீரிய ஆய்வில், பப்பாளி விதை சாற்றில் சிகிச்சையளிக்கப்பட்ட குழந்தை நோயாளிகள் குடல் ஒட்டுண்ணிகளில் கண்கவர் குறைப்பைக் காட்டினர். சிகிச்சை பயனுள்ளதாக இருந்தது மட்டுமல்லாமல், அது பாதுகாப்பானது, மேலும் பக்க விளைவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் கரூரில் நேற்று விசாரணையை தொடங்கியது. கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர், 6 கி.மீ தொலைவில் உள்ள கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 9 குழந்தைகள், 17 பெண்கள், 14 ஆண்கள் என 40 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், அனைவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு…
கரூர்: கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கரூரில் நேற்று முன்தினம் இரவு தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 40 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து காரில் கரூர் சென்றார். பின்னர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் அஞ்சலி செலுத்தினார். காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: மிகுந்த துயரத்தோடு, கனத்த இதயத்துடன், விவரிக்க முடியாத வேதனையில் இருக்கிறேன். நெரிசலில் சிக்கி பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக செய்தி கிடைத்தவுடன், ஆட்சியர் தங்கவேல்,…
