சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவே திருச்சி வந்த விஜய், தனி விமானம் மூலம் உடனடியாக சென்னை திரும்பினார். பிரச்சார கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவது ஆகியவை தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்கூறுவதற்காக விஜய் மீண்டும் கரூர் செல்ல அனுமதி கேட்டு, கட்சித் தரப்பில் காவல் துறையில் மனு கொடுக்கப்பட உள்ளதாகவும்கூறப்படுகிறது. இதற்கிடையே, விஜய் வெளியிட்டஅறிக்கை: இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். நம் உறவுகளை…
Author: admin
சென்னை: ‘கரூர் சம்பவம், விபத்துபோல தெரியவில்லை. திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது. எனவே, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியிடம் தவெகவினர் முறையிட்டனர். உயர் நீதிமன்றத்துக்கு தற்போது தசரா விடுமுறை என்பதால், விடுமுறைக்கால நீதிபதியான தண்டபாணியை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தவெக வழக்கறிஞர் அணியினர் நேற்று சந்தித்தனர். அப்போது, நீதிபதியிடம் தவெக வழக்கறிஞர் அறிவழகன், இணை பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் ஆகியோர் முறையிட்டதாவது: கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம், விபத்துபோல தெரியவில்லை. திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது. பிரச்சாரம் நடந்துகொண்டு இருந்தபோது, திடீரென எங்கிருந்தோ கற்கள் வீசப்பட்டன. போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். எனவே, இதுதொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த…
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரத்தின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார். கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் மீ.தங்கவேல், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மின்வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, ஆட்சியர் மீ.தங்கவேல் கூறும்போது, “கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேரும் சடலமாகத்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மயங்கி விழுந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாவது: கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள லைட்ஹவுஸ் முனை பகுதியை முதலில் தவெகவினர் கேட்டனர். அங்கு பெட்ரோல் பங்க், அமராவதி ஆறு உள்ளதாலும், நெருக்கடியான இடம் என்பதாலும் அனுமதி வழங்கவில்லை. உழவர்சந்தை பகுதியும் குறுகலான பகுதி என்பதால் அனுமதி வழங்கவில்லை. வேலுசாமிபுரத்தில் ஏற்கெனவே வேறு கட்சி பிரச்சாரம் செய்ததால் அந்த இடம் வழங்கப்பட்டது.…
ஒரு துடிப்பான ஆப்டிகல் மாயை பார்வையாளர்களுக்கு ஆரஞ்சு கோமாளி மீன் மற்றும் நண்டுகளின் கடலில் ஒரு மறைக்கப்பட்ட நட்சத்திர மீன் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. இதேபோன்ற வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் நட்சத்திர மீன்களைக் கண்டறிவது கடினம், ஏனெனில் நமது மூளை ஒரே மாதிரியான கூறுகளை தொகுக்க முனைகிறது. ஐந்து புள்ளிகள் கொண்ட நட்சத்திர மீன்களை மற்ற கடல் உயிரினங்களிலிருந்து வேறுபடுத்துவதற்கு மெதுவாகவும், வெளிப்புறங்களில் கவனம் செலுத்துவதையும் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆப்டிகல் மாயைகள் எப்போதுமே பொழுதுபோக்கு அளிக்கின்றன, ஏனென்றால் அவை நம் கண்கள் உண்மையில் எவ்வளவு விவேகமானவை மற்றும் புலனுணர்வுடன் இருக்கின்றன என்பதை சவால் செய்கின்றன. முதல் தோற்றத்தில், மேலே உள்ள படம் ஆரஞ்சு நண்டுகள் மற்றும் அபிமான ஆரஞ்சு கோமாளி மீன் ஆகியவற்றால் முற்றிலும் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது. அவற்றின் ஒரே மாதிரியான புள்ளிவிவரங்கள் மற்றும் துடிப்பான ஆரஞ்சு நிறங்கள் முழு உருவமும் ஒரே வடிவமைப்பைக் கொண்டுள்ளன என்று நினைத்து மனதை உடனடியாக…
சென்னை: கரூரில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எவரும் எதிர்பாராத இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப். 14 முதல் மாவட்ட வாரியான பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கிய விஜய், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரைக் காண ரசிகர்கள், தொண்டர்கள் மிக அதிக அளவில் திரண்டதால், அவர்களைக் கட்டுப்படுத்துவது காவல் துறைக்கு சவாலாக இருந்தது. மேலும், பல இடங்களிலும் பொதுச் சொத்துகள் சேதமடைந்தன. அதேபோல, தொண்டர்கள், ரசிகர்கள் சிலர் உயரமான இடங்களிலும், மின்சார டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மரங்களிலும் ஆபத்தான முறையில் நிற்பது, விஜய் பிரச்சார வாகனத்தை பைக்குகளில் பின்தொடர்வது என ஆபத்தை உணராமல் செயல்பட்டனர். இதனால் தவெக பிரச்சாரங்களுக்கு காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.…
கரூர்: கரூரில் நேற்று நடந்த கூட்ட நெரிசல் காரணமாக விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம் என்று தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசும் விஜய்யும் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கரூரில் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நேரில் ஆறுதல் தெரிவித்தார். கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததையடுத்து, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று காலை (ஞாயிற்றுக் கிழமை), கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அவர்களை நலம் விசாரித்து, ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம்…
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 9வது முறையாக ஆசிய கோப்பை இந்தியா கைப்பற்றியுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. பாகிஸ்தான் அணிக்காக சாஹிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் பஹர் ஸமான் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இன்னிங்ஸில் 35 பந்துகளில் அரைசதம் விளாசினார் ஃபர்ஹான். வருண் சக்கரவர்த்தி வீசிய முதல் இன்னிங்ஸின் 10-வது ஓவரில் ஃபர்ஹான் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசினார். அதன் பிறகு பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. சயிம் அயூப் 14, முகமது ஹாரிஸ் 0, ஸமான் 46, ஹுசைன் தலாத்…
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’ இதன் 11வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் உடன் இயக்குநர் மிஷ்கினும், இசையமைப்பாளர் தமனும் நடுவராக பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக ‘செலிப்ரேட்டிங் இசை’ என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது. இதில் முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர். இளையராஜாவைப் போலவே பாடிய போட்டியாளர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்ட்டை பரிசளித்து வாழ்த்தியுள்ளார்.
சென்னை: “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனவர்களின் உடலை கூட இன்னும் அடக்கம் செய்வதற்குள்ளாகவே இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்” என விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், தவெக தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த விவகாரத்தை நாளை (திங்கட்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்க உள்ளது. இந்த சூழலில் இது தொடர்பாக வன்னியரசு, சமூக வளைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “நடிகர் விஜய்யை காண வந்த ரசிகர்களும் தொண்டர்களுமாக 40 பேர் மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.…
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு தவெக தவறும், அரசின் கவனக்குறைவுமே காரணம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியது: “இதற்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். குறுகலான சாலையை வழங்கியுள்ளனர். உள்நோக்கத்தோடு வழங்கப்பட்டதா என தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். குறுகலான இடம், காலதாமதம், மின் தடை, போலீஸ் தடியடி, ஆம்புலன்ஸ் வருகையால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. தவெக தலைவர் விஜய் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளிக்கும்போது உங்களை நம்பி வரும் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும்.…
