Author: admin

சென்னை: உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியிடம் முறையிட்ட தவெக தரப்பு, ‘கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் என்பது விபத்து போல தெரியவில்லை; திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது. கரூரில் சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். ஒருபக்கம் பெருந்துயராக சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம், மறுபக்கம் அரசியல் ரீதியில் பல விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்தப் பின்னணியில், உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியான தண்டபாணியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தவெக வழக்கறிஞர் அணியினர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர். அப்போது, ‘கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் என்பது விபத்து போல தெரியவில்லை. அது, திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது. பிரச்சாரம் நடந்துகொண்டு இருந்தபோது, திடீரென எங்கிருந்தோ கற்கள் வீசப்பட்டன. போலீஸார்…

Read More

சென்னை: கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டிச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “நேற்று கரூரில் நடந்த விபத்தை நினைத்து இதுவரை எனக்கு மனம் பதறிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் அன்றாடம் நாம் சந்தித்து மகிழும் தெய்வங்கள். இது போன்ற கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டிச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அவர்கள் நாம் அழைத்துச் செல்லும் இடத்துக்கு வந்துவிடுவார்கள். ஆனால் அங்கே சென்ற பிறகு அந்த நெரிசலில் இருந்து அவர்களை வெளியே கொண்டுவருவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. கூட்ட நெரிசல் என்பதே அனைவரையும் மீறி நடக்கக் கூடிய ஒன்று. இந்த நெரிசலுக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அந்த குடும்பங்களின் இழப்புக்கு யாராலும் ஈடு செய்ய முடியாது. பதில் சொல்லவும் முடியாது. இப்படிப்பட்ட விபத்துகளின் போது பொதுமக்கள் அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும். மக்கள் ஒன்றாக இணைந்து, கட்டுப்பாட்டுடன் எப்படி…

Read More

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்களில் ஆட்டமிழந்தது. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக அணியில் ரிங்கு சிங் விளையாடுகிறார். இலங்கை உடனான கடந்த ஆட்டத்தில் விளையாடாத பும்ரா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இதில் விளையாடுகின்றனர். பாகிஸ்தான் அணிக்காக சாஹிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் பஹர் ஸமான் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இன்னிங்ஸில் 35 பந்துகளில் அரைசதம் விளாசினார் ஃபர்ஹான். இந்திய அணிக்கு எதிராக கடந்த போட்டியிலும் அவர் அரைசதம் பதிவு…

Read More

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த இந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் விஜய் வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? எங்கிருந்து இந்த…

Read More

35 வயதான ஒரு பெண், ஆரம்பத்தில் மார்பகக் கட்டியை நிராகரித்தார், அதை ஹார்மோன் மாற்றங்கள் காரணம் என்று கூறியது. ஒரு குடும்ப வரலாறு இருந்தபோதிலும், ஆரம்பகால மேமோகிராம்களுக்கு எதிராக அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. உடல் பரிசோதனையின் போது காணப்படும் அறிகுறிகள் அல்லது அசாதாரணங்களை ஆராய எந்த அறிகுறிகளும் நோயறிதலும் இல்லாதவர்களுக்கு மார்பக புற்றுநோயைக் கண்டறிய மேமோகிராம் ஒரு ஸ்கிரீனிங் சோதனை ஆகும். கர்ப்பமாக இருந்தபோது ஆக்கிரமிப்பு மார்பக புற்றுநோயால் கண்டறியப்பட்ட அவர், தன்னையும் குழந்தையையும் காப்பாற்ற தைரியமாக சிகிச்சை பெற்றார், அறிகுறிகளை புறக்கணிக்கும் அபாயத்தை வலியுறுத்தினார். மார்பக புற்றுநோய் பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாக உள்ளது, ஆனால் பெரும்பாலானவை மேம்பட்ட கட்டங்களில் கண்டறியப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டில், 2.3 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது உலகளவில் 670,000 இறப்புகளுக்கு வழிவகுத்தது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 35 வயதான ஆஸ்திரேலிய பெண்மணி ரெஷு பாஸ்னயட் இப்போது எந்த அறிகுறியையும்…

Read More

ராமநாதபுரம்: தமிழக முதல்வர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்து ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத் திட்டங்கள் வழங்க விருந்த நிலையில் கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து அந்த நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தியும், நலத் திட்டங்கள் வழங்கியும் வருகிறார். இந்நிலையில் முதல்வர், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு செப்.29ம் தேதி (திங்கள்கிழமை) வருகை தந்து, செப்.30ம் தேதி ( செவ்வாய் கிழமை) மாவட்ட வளர்ச்சிக்காக அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தவும், நலத்திட்டங்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், கரூர் துயர் சம்பவத்தை தொடர்ந்து முதல்வரின் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ராமநாதபுரம் நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, ”கட்சி தலைமை உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்…

Read More

மாதுளை சாறு, குறிப்பாக விதைகளால் நுகரப்படும், மருத்துவ ஊட்டச்சத்து ஆலோசகரான ரியான் பெர்னாண்டோ செய்த அவதானிப்புகளின் அடிப்படையில் தமனி பிளேக் கட்டமைப்பை ஒரு குறிப்பிடத்தக்க அளவு குறைக்கலாம். ரியான் பெர்னாண்டோ மேற்கோள் காட்டிய ஒரு ஆய்வில், ஒரு வருடத்திற்கு தினமும் விதைகளுடன் கலக்கப்பட்ட மாதுளை சாறு அல்லது சாற்றை உட்கொண்ட பங்கேற்பாளர்கள் கரோடிட் இன்டிமா-மீடியா தடிமன் (சிஐஎம்டி) 35 சதவீதம் வரை குறைப்பு இருப்பதைக் காட்டுகிறது.சிஐஎம்டி என்பது ஒரு தீங்கற்ற, ஆக்கிரமிப்பு அல்லாத குறிப்பானாகும், இது மூளைக்கு இரத்த விநியோகத்திற்கு காரணமான கரோடிட் தமனிகளின் உள் அடுக்குகளின் தடிமன் கண்டறிய பயன்படுகிறது. இந்த தமனியின் தடிமன் எந்த உயர்வு பொதுவாக பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி, பிளேக் கட்டமைப்பது மற்றும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இருதய ஆபத்து ஆகியவற்றுடன் தொடர்புடையது. காணப்பட்டபடி சிஐஎம்டியின் குறைவு தமனி பிளேக் உருவாக்கத்தின் தலைகீழ் அல்லது பின்னடைவை பிரதிபலிக்கிறது.முழு மாதுளையின் பங்குஆராய்ச்சியின் மிக முக்கியமான…

Read More

கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் வேலுசாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் சனிக்கிழமை அன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 40 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரூர் – வேலுசாமிபுரத்தில் நேற்று (செப்.27) காலை முதலே விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கும் விதமாக தவெக உறுப்பினர்கள், விஜய்யின் ரசிகர்கள் மற்றும் மக்கள் என அதிகமானோர் அங்கு திரண்டனர். இரவு 7 மணி அளவில் பிரச்சார கூட்டத்துக்கு பேருந்தில் வந்த விஜய், தனது பேச்சை பேருந்தின் மேற்புறம் நின்றபடி தொடங்கினார். அவர் பேசியபோது ஆம்புலன்ஸ் வாகனங்கள் சில சென்றன. அதோடு விஜய் பேசும்போதே சிலருக்கு தண்ணீர் தேவைப்பட்டதால், பேருந்துக்கு மேல் இருந்தபடி அதை அவரும், அவருடன் இருந்தவர்களும் வழங்கியிருந்தனர். பின்னர் தனது உரையை முடித்துக்கொண்டு விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கரூர் அரசு…

Read More

2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் துணை விற்பனை 150 பில்லியன் டாலர்களை தாண்டிவிட்டது. உலகளவில் வாங்குவதற்கு 80,000 க்கும் மேற்பட்ட தனித்துவமான துணை தயாரிப்புகள் உள்ளன. இருப்பினும், தயாரிப்புகளை தவறாக பெயரிடுவது பொதுவானது.”நாங்கள் பகுப்பாய்வு வேதியியலைச் செய்தோம், லேபிளில் கூறப்பட்ட பொருட்களுக்கும் அவை உண்மையில் இருப்பதற்கும் இடையில் 50% பொருந்தாத தன்மையைக் கண்டறிந்தோம், இது மிகவும் ஆபத்தானது. நீங்கள் ஒரு சப்ளிமெண்ட் வாங்கினால், அது ஒரு குறிப்பிட்ட மூலப்பொருளைக் கொண்டிருப்பதாகக் கூறினால், அது உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது ஒரு நாணயத் திருப்பம்” என்று ராபர்ட் ஃபோண்டானா, எம்.டி.”நாங்கள் ஒரு அலாரத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை, மக்கள் எடுக்கும் மேலதிக சப்ளிமெண்ட்ஸ் சோதிக்கப்படவில்லை அல்லது பாதுகாப்பாக இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை என்ற விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சிக்கிறோம்” என்று ஃபோண்டானா மேலும் கூறினார்.

Read More

கரூர்: ‘யார் மீதும் நான் பழிபோட விரும்பவில்லை, இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை. இதில் யாரும் சதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யாரின் கட்சி என்பதை தாண்டி அனைவரும் தமிழக மக்கள். தமிழக மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பு தமிழக முதல்வர். அவர்களின் மக்களை எதிர்த்து அவர்களே சதி செய்யும் அவசியம் கிடையாது’ என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார். கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “நேற்று கரூரில் 20 பேருக்கு ஒரு போலீசார் என பாதுகாப்பு அளித்துள்ளனர். தவெக நிர்வாகிகளுடன் கலந்து பேசிவிட்டுத்தான் இடத்தையும் தேர்வு செய்துள்ளார்கள். கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். பிரதமரோ, முதல்வரோ ஒரு அரசு நிகழ்ச்சிக்கு சென்றால்…

Read More