சமீபத்தில் நடிகையும் தொகுப்பாளருமான நேஹா துபியா ஐ.ஜி.க்கு 21 நாள் சுகாதார சவாலைப் பகிர்ந்து கொண்டார். இதில், அவர் 21 நாட்களுக்கு தினமும் எடுப்பார் என்ற ஒரு கலவைக்கான செய்முறையைப் பகிர்ந்து கொண்டார். கலவையானது இது போன்றது:லிட்டில் ரா ஹால்டிமூல இஞ்சியின் 1 கன சதுரம்5-7 கருப்பு மிளகுத்தூள்1 தேக்கரண்டி நிஜெல்லா விதைகள் (கலோன்ஜி)உங்களிடம் எம்.சி.டி எண்ணெய் இல்லையென்றால், பயன்படுத்தவும்:1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது1 தேக்கரண்டி நெய் அல்லது1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்இந்த கலவையானது ஒரு அழற்சி எதிர்ப்பு சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், மேலும் வீக்கத்தைக் குறைக்கும், மேலும் எடை இழப்புக்கும் உதவும் …இருப்பினும், இந்த எம்.சி.டி எண்ணெய் என்ன, அது எவ்வாறு உதவுகிறது? பார்ப்போம் …நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடு (எம்.சி.டி) எண்ணெயின் இயற்கையான நிகழ்வு தேங்காய் எண்ணெய், பாம் கர்னல் எண்ணெய் மற்றும் பிற பால் பொருட்களில் உள்ளது. எம்.சி.டி எண்ணெய், மறுபுறம்,…
Author: admin
புதுடெல்லி: டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான திட்டத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிதி, மனிதாபிமான உதவி, சுகாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற உயர்தொழில்நுட்ப துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்கள் இந்த சந்திப்பின்போது முன்னெடுக்கப்படும். இந்தியா தனது வர்த்தக உறவுகள் குறித்த முடிவுகளை சுயமாக மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளில் இந்தியா முற்றிலும் திறமையான வகையில் முடிவுகளை எடுத்து வருகிறது. இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மை அமெரிக்காவால் அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லை. ஏனெனில், இந்தியா எந்த அழுத்தத்துக்கும் அடிபணியாமல் தனது சொந்த விருப்பப்படி சர்வதேச கூட்டாளர்களை தேர்ந்தெடுக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான பிரேசில், இந்தியாவின்…
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசுத் துறைகளில் குரூப் 2, 2ஏ பணிகளில் உள்ள 645 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை கடந்த ஜூலை 15-ம் தேதி வெளியானது. முதல்நிலைத் தேர்வுக்கு 5 லட்சத்து 53,634 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 1,905 மையங்களில் நேற்று நடைபெற்றது. இதில் 4 லட்சத்து 18,791 பேர் பங்கேற்றனர். 1 லட்சத்து 34,843 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த முறை முதல்நிலைத் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாகவும், பொது அறிவு மற்றும், பொது தமிழ் வினாக்கள் எதிர்பாரா பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டதாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர். மேலும், வினாத்தாளில் மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் திட்டம், மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கேள்விகளும் இடம்பெற்றன. இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி தலைவர்…
சென்னை: புரோ கபடி லீக் 12-வது சீசனின் 3-வது கட்ட போட்டிகள் சென்னையில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டி வரும் 10-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக 3-வது கட்ட போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. புரோ கபடி லீக் வருடங்களுக்கு பின்னர் சென்னைக்கு திரும்பி உள்ளது. இன்று இரவு நடைபெறும் முதல் போட்டியில் யுபி யோதாஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதைத் தொடர்ந்து 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அக்டோபர் 1-ம் தேதி யு மும்பாவுடன் மோதுகிறது. தொடர்ந்து 3-ம் தேதி ஹரியான ஸ்டீர்ஸ் அணியுடனும், 5-ம் தேதி பெங்களூரு புல்ஸ் அணியுடனும், 7-ம் தேதி பாட்னா பைரேட்ஸ் அணியுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது…
சென்னை: காலி பாட்டில்களை சேமித்து வைக்க 1,500 கடைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது 20 மாவட்டங்களில் 1,800 கடைகளில் இத்திட்டத்தை டாஸ்மாக் செயல்படுத்தி வருகிறது. இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. காலி மதுபாட்டில்களை சேமிக்க இடமில்லை, பாட்டில்களை கையாள போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தால் பணியாளர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை அறிந்து, அவற்றை எவ்வாறு சரி செய்வது என்று மண்டல முதுநிலை மேலாளர்கள் தலைமையில் குழு அமைத்து ஊழியர்கள் கூட்டத்தை நடத்தி, பணியாளர்களின் சுமைகள் குறித்தும் ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்நிலையில் காலி பாட்டில்களை சேமித்து வைக்க 1,500 கடைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலான…
புதுடெல்லி: வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்யூஆர்எஸ்ஏஎம்), வாங்குவதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டரை ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக சீனா மற்றும் துருக்கி அளித்த ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. அப்போது வான் பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்தி, அவற்றை நமது ராணுவம் நடு வானில் சுட்டு வீழ்த்தியது. தற்போது எல்லைப் பகுதியில் வான் பாதுகாப்பு கருவிகளை அதிகளவில் பயன்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது. எதிரி நாட்டு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க ‘ஆனந்த் சாஸ்த்ரா’ என்ற வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் கூடிய வாகனம் (க்யூஆர்எஸ்ஏஎம்) ஒன்றை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ), பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்தது. இதில் 360 டிகிரி ரேடார், ஜாமிங் ஷீல்டு, லாஞ்சர் மற்றும் ஏவுகணைகள் உள்ளன. இது 30 கி.மீ தூரத்திலும், 6 முதல் 10 கி.மீ…
பிரேசிலில் ஆராய்ச்சியாளர்களால் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய அவதானிப்பு ஆய்வில், தீவிரமான சூரிய புயல்கள், பூமியின் காந்தப்புலம் தொந்தரவு செய்யும் அத்தியாயங்கள், மாரடைப்பு சேர்க்கை, குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக வெளிப்படுத்துகிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச் (ஐ.என்.பி.இ) ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக மாரடைப்பு பற்றிய மருத்துவமனை பதிவுகளை கே.பி. நடுத்தர மற்றும் வயதான வயதினரில் உள்ள பெண்கள் குறிப்பிடத்தக்க அபாயத்தைக் காட்டினர். இந்த கண்டுபிடிப்பு விண்வெளி வானிலை மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு இடையிலான எதிர்பாராத தொடர்புக்கு கவனத்தை ஈர்க்கிறது, தடுப்பு உத்திகள் வெளிப்புற சுற்றுச்சூழல் தூண்டுதல்களைப் பற்றிய விழிப்புணர்வை சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.சூரிய புயல் மற்றும் வெப்ப தாக்குதல் இணைப்புசூரிய புயல்கள் அல்லது புவி காந்த இடையூறுகள் சூரிய எரிப்பு அல்லது கொரோனல் வெகுஜன வெளியேற்றங்கள் போன்ற சூரிய செயல்பாடுகளின் வெடிப்புகள் பூமியின் காந்தக் கவசத்துடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படுகின்றன. இந்த நிகழ்வுகள்…
மும்பை: டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மினாஸ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் 45 வயதான மிதுன் மனாஸ் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிசிசிஐ-யின் 37-வது தலைவர் மிதுன் மனாஸ் ஆவார். ரோஜர் பின்னி மற்றும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்குப் பிறகு பிசிசிஐ-யின் தலைவராகப் பொறுப்பேற்ற மூன்றாவது முதல் தர கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மிதுன் மனாஸ். மிதுன் மனாஸ் முதல்தர கிரிக்கெட்டில் 1547 ஆட்டங்கள், லிஸ்ட் ஏ போட்டியில் 130 ஆட்டங்கள், ஐபிஎல் தொடரில் 55 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ஜம்மு & காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குறைபாடு காரணமாக, அதன் விவகாரங்களை நிர்வகிக்க பிசிசிஐ அமைத்த மூன்று பேர் கொண்ட தற்காலிகக் குழுவின் இயக்குநராகவும் மிதுன் மனாஸ் பணியாற்றி…
சென்னை: கரூர் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கரூரில் நடந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் தங்களது இன்னுயிரை இழந்திருக்கின்றனர். அவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வரை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். மேலும், தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தார். கரூர் விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசிடம் உரிய விளக்கம் கேட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்துக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்.…
சிபா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், ஒரு குறிப்பிட்ட உணவு நரம்பியல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான செல்லுலார் மறுசுழற்சி செயல்முறையான தன்னியக்கத்தை சீர்குலைப்பதன் மூலம் நினைவகத்தை பாதிக்கும் என்பதைக் காட்டுகிறது. பழ ஈக்களைப் பயன்படுத்தி, எச்.எஃப்.டி-ஊட்டப்பட்ட ஈக்கள் இடைநிலை மற்றும் நீண்ட கால நினைவகத்தை பலவீனப்படுத்தியிருப்பதைக் கண்டறிந்தனர், இது குறைபாடுள்ள ஆட்டோபாகோசோம்-லைசோசோம் இணைவுடன் இணைக்கப்பட்டுள்ளது. “இந்த ஆராய்ச்சி உணவு பழக்கவழக்கங்கள் மூளை ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது. எங்கள் கண்டுபிடிப்புகள் தன்னியக்கத்தை அதிகரிக்கும் தலையீடுகளை அடையாளம் காண்பதை துரிதப்படுத்தக்கூடும்-குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிகிச்சை முகவர்கள் உட்பட-உணவு தூண்டப்பட்ட அறிவாற்றல் வீழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதற்கும் வயதான மக்களில் அறிவாற்றலைப் பாதுகாப்பதற்கும்” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நீங்கள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உணவு உங்கள் மூளையின் செயல்பாட்டை கூட பாதிக்கும், சில சமயங்களில், நினைவகத்தை பாதிக்கும். ஆம், அது சரி. ஒரு புதிய ஆய்வு ஒரு குறிப்பிட்ட…
