Author: admin

தோஹா: தோஹாவில் கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அபய் சிங், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள எகிப்தின் கரீம் கவாட்டுடன் மோதினார். 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபய் சிங் 11-6, 11-4, 1-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அபய் சிங், உலகத் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் உள்ள வீரரை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.

Read More

கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ளது. இந்த துயரச் சம்பவம் குறித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பார்வை இது… விஜயிடமும் கேள்விகளை கேளுங்கள்: துணை முதல்வர் உதயநிதி: கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கரூரில் இதுபோன்ற மிக, மிக துயரமான சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அரசு சார்பில் முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தும் கோர விபத்து நடந்துவிட்டது. செய்தி அறிந்தவுடன் முதல்வர் இரவோடு, இரவாக கரூருக்கு வந்து துயர்துடைப்பு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த சம்பவத்தை முதல்வரால் தாங்க முடியவில்லை. மிகுந்த சோகத்தில் என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். குடும்பத்துடன் வெளிநாடு ஓய்வுக்கு சென்றிருந்த நான் உடனடியாக…

Read More

இன்றைய சுகாதார உணர்வுள்ள உலகில், கெட்டோ, மத்திய தரைக்கடல், தாவர அடிப்படையிலான உணவு மற்றும் இடைப்பட்ட உண்ணாவிரதம் போன்ற உணவுகள் உரையாடல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒவ்வொன்றும் விரைவான முடிவுகளை உறுதியளிக்கிறது, இது எடை இழப்பு, மேம்பட்ட ஆற்றல் அல்லது சிறந்த ஒட்டுமொத்த ஆரோக்கியம். ஆனால் அது உங்கள் இதயத்திற்கு வரும்போது, ​​ஒவ்வொரு உணவும் அதன் வாக்குறுதிகளை வழங்குவதில்லை.ஹைப்பிலிருந்து உண்மையை பிரிக்க, விக்டர் சாங் இருதய ஆராய்ச்சி நிறுவனத்தின் இருதயநோய் நிபுணரும் இயக்குநருமான பேராசிரியர் ஜேசன் கோவாசிக், செப்டம்பர் 17 இன்ஸ்டாகிராம் இடுகையில் பிரபலமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் குறித்த தனது நிபுணர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். எந்த போக்குகள் இருதய நல்வாழ்வை உண்மையிலேயே ஆதரிக்கின்றன என்பதையும், எந்தெந்தவை அமைதியாக தீங்கு விளைவிக்கும் என்பதையும் அவரது தரவரிசை வெளிப்படுத்துகிறது.கார்னிவோர் முதல் மத்திய தரைக்கடல் வரை: எந்த உணவு உங்கள் இதயத்தை உண்மையிலேயே பாதுகாக்கிறதுமாமிச உணவுடாக்டர் ஜேசன் மாமிச உணவுக்கு மிகக்…

Read More

இம்பால்: மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் கும்பி பஜாரில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தைச் (பிஎல்ஏ) சேர்ந்த ஞானேஷ்வர் சிங் (49) கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் பிஎல்ஏ அமைப்புக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கியதாக அரசு தெரிவித்துள்ளது. பிஎல்ஏ அமைப்பைச் சேர்ந்த லைஷ்ராம் ஜிதன் சிங் (56) இம்பால் மேற்கு மாவட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் இதே அமைப்பைச் சேர்ந்த சோபி சிங் (50) இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். என்ஆர்எப்எம் அமைப்பைச் சேர்ந்த சுனிலா தேவி என்ற பெண், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட காங்கில்பாக் கம்யூனிஸ்ட் கட்சியின் முஜ்புர் ரஹ்மான் (44), ஷோரென்ஷங்பம் (44) ஆகிய இருவரும் தவுபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

Read More

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையை சாம்பியனான இந்திய அணி வாங்க மறுத்தது, இதனையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி ஒரு மணி நேரம் கால தாமதமானது. இந்திய அணிக்குச் சேர வேண்டிய கோப்பையையும் பதக்கங்களையும் மோசின் நக்வி எடுத்துச் சென்றது கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. மோசின் நக்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் என்பதோடு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் கூட. இதனையடுத்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மாட்டோம் என்று முடிவெடுத்தோம். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். அதனால் நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்தோம், இதனால் அந்தக் கோப்பையை அவர் எடுத்துக் கொள்ளட்டும் என்று அர்த்தமல்ல. அதனால் கோப்பையும்…

Read More

காசா: இஸ்​ரேல்​-ஹ​மாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. பாலஸ்​தீனத்திலுள்ள காசா முனையை நிர்​வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்​குழு​வினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்​குள் புகுந்து தீவிர​வாத தாக்​குதல் நடத்​தினர். இந்த தாக்​குதலில் 1,139 இஸ்​ரேலியர்​கள் கொல்​லப்​பட்​டனர். மேலும், இஸ்​ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதி​களாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்​திச் சென்​றது. இதையடுத்​து, ஹமாஸ் ஆயுதக்​குழு மீது போர் அறி​வித்த இஸ்​ரேல், காசா முனை​யில் அதிரடி தாக்​குதல் நடத்தி வரு​கிறது. காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் போரில் சுமார் 65,000-க்​கும் அதி​க​மான பாலஸ்​தீனர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இந்​நிலை​யில் காசா​வில் போரை நிறுத்​து​வதற்​கான ஒப்​பந்​தத்தை இறுதி செய்​யும் முயற்​சி​யில் அமெரிக்கா ஈடு​பட்டு உள்​ளது. ஹமாஸிட​மிருந்து பிணைக் கைதி​களை மீட்டு போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வோம் என்று வெள்ளை மாளி​கை​யில் செய்​தி​யாளர்​களிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த…

Read More

சென்னை: கரூரில் நடந்​திருப்​பது வரலாறு காணாத கொடுந்​துயரம் என்​றும், பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும் எனவும் அச்​சம்​பவத்​துக்கு இரங்​கல் தெரி​வித்த பல்​வேறு அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டுள்ள செய்​தி​கள் மிகுந்த வேதனை அளிக்​கின்​றன. உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தா​ருக்கு என் ஆழ்ந்த இரங்​கல்​கள். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: கரூரில் நடை​பெற்ற தவெக கட்​சி​யின் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் 30-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்த செய்தி அதிர்ச்​சி​யை​யும், வேதனையை​யும் தரு​கிறது. தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: விஜய் பரப்​புரை கூட்​டத்​தில் நெரிசலால் அப்​பாவி மக்​கள் 40 பேர் உயி​ரிழந்த நிகழ்​வுக்கு இரங்​கலை தெரி​வித்​துக்​கொள்​கிறேன். இதற்கு யார் காரணம் என்​பதை கண்​டறிந்து நடவடிக்கை எடுக்​கவேண்​டும். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கரூரில் நடந்த அரசி​யல் கூட்​டத்​தில் 30-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்த செய்தி அதிர்ச்​சி​யளிக்​கிறது. முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்:…

Read More

கொல்கத்தா: ​நாடு முழு​வதும் நவராத்​திரி விழா கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. மேற்கு வங்க மாநிலத்​தில் பிரம்​மாண்​ட​மான வகை​யில் துர்கா பூஜைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், பஹராம்​பூர் பகு​தி​யில் வைக்​கப்​பட்​டுள்ள துர்கா பூஜை பந்​தலில், அசுரன் சிலை வைக்​கப்​பட்​டுள்​ளது. அந்த சிலை பார்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போலவே உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து காக்ரா சமஷான்​கட் துர்கா பூஜை கமிட்டி நிர்​வாகி பிரதீக் கூறிய​தாவது: இந்​தி​யா​வுக்கு எதி​ராக அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வர்த்தக வரி விதித்​துள்​ளார். அத்​துடன் எச்​-1பி விசா கட்​ட​ணத்தை பல மடங்கு உயர்த்தி உள்​ளார். இதன் மூலம் இந்​தி​யர்​கள் பாதிக்​கும் சூழ்​நிலை உரு​வாகி உள்​ளது. மேலும், நமது பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பை நண்​ப​ராக பார்க்​கிறார். ஆனால், அதிபர் ட்ரம்ப் நம்​பிக்கை துரோகம் செய்​துள்​ளார். அதனால், ட்ரம்பை அசுர​னாக சித்​தரித்து துர்கா பூஜை பந்​தலில் வைத்​துள்​ளோம்’’ என்​றார். ட்ரம்ப் உரு​வத்​தில் அசுரன் சிலையை உள்​ளூர் கலைஞர் அசிம் பால் உரு​வாக்கி…

Read More

புதுடெல்லி: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் இந்த வெற்றிக்கு தனது வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர். அதன் விளைவு ஒன்றுதான். இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. அப்போது திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டது. அவர்கள் இருவரும் 57…

Read More

சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த நிலை​யில், விஜய் சுற்​றுப்​பயணம் தற்​காலிக​மாக தள்​ளிவைக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும், சென்​னை​யில் விஜய் வீட்​டுக்கு பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. கரூரில் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த நிலை​யில், நேற்​று​முன் தினம் இரவு 11 மணிக்கு அவர் சென்னை திரும்​பி​னார். அவருக்கு ஆதர​வாக நேற்று முன்​தினம் இரவு ஏராள​மான தொண்​டர்​கள் குவிந்​த​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. மேலும், அவருக்கு எதிர்ப்​புத் தெரி​வித்து வீட்​டின் முன் போராட்​டம் நடத்​து​வதற்​காக பல்​வேறு அமைப்​பு​களும் வரவுள்ளதாக கிடைத்த தகவலை​யடுத்​து, கூடு​தல் போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டது. இந்​நிலை​யில், நேற்று விஜய் வீட்டை முற்​றுகை​யிடு​வதற்காக வந்த மாணவர் அமைப்​பினர் 20-க்​கும் மேற்​பட்​டோரை போலீ​ஸார் தடுத்து நிறுத்தி கைது செய்​தனர். மேலும், விஜய் வீடு அமைந்​திருக்​கும் பகு​தி​யில் தடுப்​பு​கள் அமைத்​து, அவ்​வழியே வரு​வோரை தீவிர விசா​ரணைக்​குப் பின்​னரே அனு​ம​திக்​கின்​றனர். இதற்​கிடை​யில், விஜய்…

Read More