Author: admin

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2.92 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னையில் உள்ள மீன் அங்காடிகளில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி, முக்கியமானது. மீன் அங்காடிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிந்தாதிரிப்பேட்டை, ஜோதியம்மாள் நகரில், சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 82 கடைகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடமானது புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில் டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி, குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், 10,555 லிட்டர் கொள்ளளவு கொண்ட பயோ டைஜஸ்ட் அமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு மையம்: அதேபோல் திருவல்லிக்கேணி…

Read More

குழந்தையின் மூளை மற்றும் நினைவக தக்கவைப்பின் வளர்ச்சியில் சரியான ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளில் மூளை ஆரோக்கியத்தையும் நினைவகத்தையும் ஆதரிக்கும் பத்து சத்தான உணவுகள் இங்கே.

Read More

‘‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை. பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால் மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது’’ என உலக நாடுகளிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று விளக்கம் அளித்தார். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மார்கோ ரூபியோ, இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசகர் ஜொனாதன் பவல், சவுதி அரேபியா பாதுகாப்பு ஆலோசகர் முசைத் அல் அய்பன், ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் மசாடாகா ஒகானா ஆகியோரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று போனில் பேசினார். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குல் நடத்தியது குறித்து விளக்கினார். அப்போது, ‘‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை எனவும், ஆனால், பாகிஸ்தான் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினால் மீ்ண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது’’ என இந்தியாவின் நிலைப்பாட்டை…

Read More

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் தொண்டர்கள் அமைதி, கட்டுப்பாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வியக்கும் வண்ணம் இந்த விழாவை பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டியது அவசியம். நாம் இந்த மாநாட்டை நடத்துவது, நமது வலிமையை காட்டுவதற்காக அல்ல. தமிழக வளர்ச்சி, சமூகநீதி மற்றும் மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு தேவையான திட்டங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையாக முன்வைத்து நிறைவேற்ற செய்வதுதான் இந்த மாநாட்டின் நோக்கம். நாம் முன்னேறினால் மட்டும் போதாது. கல்வி, சமூகநிலையில் பின்தங்கியுள்ள அனைத்து சமுதாயங்களும் முன்னேற வேண்டும் என்பதுதான் நமது உன்னத நோக்கம். மாநாட்டுக்கான நமது கோரிக்கைகளும் அந்த நோக்கத்தை சார்ந்தே வடிவமைக்கப்பட்டுள்ளன.…

Read More

உடற்பயிற்சி நிபுணர் டாட்ச், 52, தனது துடிப்பான ஆரோக்கியத்தை ஏழு எளிய தினசரி பழக்கவழக்கங்களுக்கு பாராட்டுகிறார். இவற்றில் 20 நிமிட காலை வலிமை பயிற்சி, சீரான தூக்கம் மற்றும் விழிப்பு நேரம், மற்றும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆகியவை இமயமலை உப்புடன் கூடுதலாக அடங்கும். அவர் ஒவ்வொரு உணவிலும் புரதத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார், தினமும் 7,000-8,000 படிகளை நோக்கமாகக் கொண்டுள்ளார், மேலும் பத்திரிகை அல்லது தியானத்தை ஒருங்கிணைக்கிறார். இரவு 8 மணிக்குப் பிறகு தனது தொலைபேசியிலிருந்து துண்டிக்க டாட்ச் வலியுறுத்துகிறார் குறைந்த கலோரி உணவில் செல்கிறது. இடையில் செயலிழப்பு உணவுகளைத் தொடர்ந்து. ஜிம்மில் 2 மணி நேரம் வியர்த்தல். இன்னும் எந்த முடிவுகளையும் காணவில்லையா? நீங்கள் அனைத்தையும் தவறாகச் செய்யலாம். உடற்பயிற்சி என்பது உங்களை தீவிரமாக தள்ளுவது என்று அர்த்தமல்ல. இதன் பொருள் சரியான நுட்பத்தைப் பின்பற்றி சீராக இருப்பது. 52 வயதில், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய பயிற்சியாளர் டாட்ச்…

Read More

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை போற்றத்தக்கது. இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா ரெய்ச்சூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இன்று நான் வழக்கத்துக்கு மாறாக நெற்றியில் சிவப்பு பொட்டு வைத்துள்ளேன். அதற்கு காரணம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையே. இந்த பதிலடி இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளக்கூடியது. இந்த நடவடிக்கை போற்றத்தக்கது. இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும். மத்திய அரசுக்கு எதிராக ரெய்ச்சூரில் போராட்டம் நடத்துவதற்காக வந்தேன். ஆனால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்ற தருணத்தில் அந்த போராட்டம் நடத்துவது சரியாக இருக்காது என்பதால் ரத்து செய்துவிட்டேன். இந்திய ராணுவத்தினரின் இந்த நடவடிக்கை மிகவும் துல்லியமானது. பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள‌னர்.…

Read More

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். மாதவரம் பால் பண்ணையில் உள்ள ஆவின் திறன் மேம்பாட்டு மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் கால்நடை சேவை மையத்தை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்கள் கறவைகளுக்கு தேவையான அவசரகால சிகிச்சை உதவிகள் பெற மற்றும் மருத்துவ ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் கூடிய ‘பாரத் சஞ்சீவனி’ செயலியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பால்வளத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் திமுக அரசு சரித்திர சாதனைகளை படைத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, கால்நடைகளுக்கான சிகிச்சைக்கு மருத்துவர்களை தேடி விவசாய பெருமக்கள் செல்வதை தவிர்த்து, இந்த மையத்தை தொடர்புகொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தரமான பால் கொடுக்கும் விவசாயிகளுக்கு ஒரு சதவீத ஊக்கத்தொகை…

Read More

(படம்: டாக்டர் கேசி என்றால் புதியது அமெரிக்க அறுவை சிகிச்சை ஜெனரல். முன்னாள் ஃபாக்ஸ் செய்தி பங்களிப்பாளர் டாக்டர் ஜேனட் நேஷிவாட்டின் நியமனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரத்து செய்த பின்னர் 37 ஆண்டுகள் பழமையான ஆரோக்கிய செல்வாக்கு, தொழில்முனைவோர் மற்றும் எழுத்தாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரின் முன்னாள் ஆலோசகர்.வழிமுறைகள் “எங்கள் அற்புதமான சுகாதார மற்றும் மனித சேவைகளின் செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி, ஜூனியர், தலைகீழாக மாற்றுவதற்காக எங்கள் நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதிசெய்யும் நாள்பட்ட நோய் தொற்றுநோய்எதிர்காலத்தில், அனைத்து அமெரிக்கர்களுக்கும் பெரும் ஆரோக்கியத்தை உறுதிசெய்க, “டிரம்ப் உண்மை சமூகத்தில் அறிவித்துள்ளார், ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.அமெரிக்காவின் அறுவை சிகிச்சை ஜெனரல் பொது சுகாதாரத்தில் நாட்டின் முன்னணி செய்தித் தொடர்பாளர் ஆவார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, சர்ஜன் ஜெனரல் அறிவியல் அடிப்படையிலான சுகாதார தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குகிறார் மற்றும் சுகாதாரக் கொள்கை குறித்து அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறார். சுகாதார…

Read More

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று ஹைதராபாத்தில் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நம் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கம் தகுந்த பாடம் கற்பித்துள்ளோம். பிரதமரின் நடவடிக்கைக்கு நாம் துணை நிற்க வேண்டும். நாட்டில் கடைசி தீவிரவாதி கொல்லப்படும் வரை பிரதமர் ஓய மாட்டார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வரும் அரசியல்வாதிகள் தங்களின் மனோபாவத்தை மாற்றிக்கொள்வது அவசியம். இந்திய ராணுவத்தையோ, அரசையோ சமூக வலைதளங்களில் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.

Read More

மதுரை: குடியிருப்புப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் உடல், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்டு, பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மதுரை காளிகாப்பானைச் சேர்ந்த எம்.சவுந்தரபாண்டி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: காளிகாப்பான் குட்லக் அவென்யூ குடியிருப்பு பகுதியில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 16.12.2024-ல் முதுமையால் உயிரிழந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சத்தியமூர்த்தியின் உடல் என் வீடு அருகே அடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு கிராம ஊராட்சி விதிகள்படி, குடியிருப்புப் பகுதியிலிருந்து 90 மீட்டருக்குள் உடல்களை அடக்கம் செய்யக்கூடாது. மேலும், உரிமம் பெறப்படாத இடங்களில் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற முழு அமர்வும், இரு நீதிபதிகள் அமர்வும் 2023-ல் உத்தரவிட்டன. எனவே, குடியிருப்புப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் உடலை அங்கிருந்து அகற்றி, அனுமதிக்கப்பட்ட மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்…

Read More