Author: admin

புதுடெல்லி: வாக்கு திருட்டு மீதான நம்பிக்கை காரணமாகவே, பிஹாரில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிஹாரின் அராரியா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “பிஹாரில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக சிறப்பாக செயல்பட்டது. இம்முறை இன்னும் சிறப்பான வெற்றியைப் பெற நீங்கள் (தொண்டர்கள்) பாடுபட வேண்டும். அப்போதுதான், 160+ என்ற இலக்கை அடைய முடியும்.” என தெரிவித்திருந்தார். மேலும் அவர், “மூன்றில் இரண்டு பங்கு வெற்றியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள். புனித பிஹாரில் இருந்து ஊடுருவல்காரர்களை விரட்டும் பணியை பாஜக செய்யும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.” என குறிப்பிட்டிருந்தார். அமித் ஷாவின்…

Read More

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை இந்திய அணி பெற மறுத்துள்ளது. ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 9வது முறையாக ஆசிய கோப்பை இந்தியா கைப்பற்றியுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் இலக்கை தாண்டி 150 ரன்கள் அடித்து வெற்றியை சாத்தியமாக்கியது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையைப் பெற இந்தியா மறுத்துவிட்டது. நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், பாகிஸ்தான் அமைச்சராகவும் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. போட்டி முடிந்ததும் மேடைக்கு வந்த நக்வியிடமிருந்து கோப்பையை பெற்றுக் கொள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் நக்வி மேடையில் 20 நிமிடம் காத்திருந்தார். அதன் பின்னர் இந்திய அணி…

Read More

ஜான் ஆபிரஹாம் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாக இருக்கிறார் மீனாட்சி சவுத்ரி. இந்தியில் ’ஃபோர்ஸ்’ படம் மிகவும் பிரபலம். இதுவரை 2 பாகங்கள் வெளியாகியுள்ளது. இதன் மூன்றாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஜான் ஆபிரஹாமுக்கு நாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அவர் இந்தியில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்திருக்கிறது. தென்னிந்திய திரையுலகில் ‘கோட்’, ‘சங்கிராந்திக்கி வஸ்துணாம்’, ’குண்டூர் காரம்’, ‘ஹிட் 2’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட பல வரவேற்பைப் பெற்ற படங்களில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. ‘ஃபோர்ஸ் 3’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இந்தியில் அறிமுகமானாலும் தொடர்ச்சியாக தென்னிந்திய திரையுலகிலும் கவனம் செலுத்தவுள்ளார். ’ஃபோர்ஸ் 3’ படத்தில் மீனாட்சி சவுத்ரிக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கிறது. இதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். நவம்பர் மாதம் இதன் படப்பிடிப்பை தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

Read More

சென்னை: “கரூரில் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.” என தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். பலி 41 ஆனது…கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிசிச்சையில் இருந்த கரூர் தொழிற்பேட்டையை சேர்ந்த கவின் (34) சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 40ஆக நேற்று அதிகரித்தது. இந்நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுகுணா (65) சிகிச்சை பலனின்றி இன்று (செப். 29-ம் தேதி) அதிகாலை மரணமடைந்தார். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. மவுனம்…

Read More

அதிகப்படியான நீர் உட்கொள்ளல் காரணமாக இரத்தத்தின் சோடியம் அளவு ஆபத்தான முறையில் குறையும் போது ஹைபோநெட்ரீமியா ஏற்படுகிறது. நரம்பு செயல்பாடு, தசை இயக்கம் மற்றும் திரவ சமநிலைக்கு சோடியம் அவசியம். ஹைபோநெட்ரீமியா உருவாகும்போது, ​​செல்கள் வீங்குகின்றன, இது உறுப்புகளை, குறிப்பாக மூளையை பாதிக்கும், மேலும் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.போஸ்டன் மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்களில் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் ஒரு ஆய்வில், சோடியம் சமநிலையை பராமரிக்கும் உடலின் திறனை மீறும் போது ஆரோக்கியமான விளையாட்டு வீரர்கள் கூட ஹைபோநெட்ரீமியாவை உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.ஆரோக்கியமான நபர்கள் கூட தங்கள் சிறுநீரகங்களை விட அதிக தண்ணீரைக் குடித்தால் ஹைபோநெட்ரீமியாவை உருவாக்க முடியும் அல்லது தீவிரமான செயல்பாட்டின் போது இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மாற்றவில்லை.ஹைபோநெட்ரீமியா என்றால் என்ன, அது எப்படி நடக்கும்ஹைபோநெட்ரீமியா என்பது இரத்தத்தில் குறைந்த சோடியம் அளவால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை, இது பெரும்பாலும் அதிகப்படியான திரவ உட்கொள்ளலால் தூண்டப்படுகிறது. இது சாதாரண…

Read More

புதுடெல்லி: டெல்லியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்வி மையத்தின் இயக்குநராக இருப்பவர் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி. இவர் மீது 17 மாணவிகள் பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளனர். போலீஸார் இவரைத் தேடி வந்த நிலையில் நேற்று அவர் ஆக்ராவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சுவாமி சைதன்யானந்தா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு மாணவிகள் சிலர் டெல்லி வசந்த் கஞ்ச் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து அதே நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

Read More

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணியை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி 9-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது இந்​திய அணி. துபா​யில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணிக்கு சாகிப்​ஸாதா ஃபர்​ஹான், பஹர் ஸமான் ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தது. மட்​டையை சுழற்​றிய சாகிப்​ஸதா ஃபர்​ஹான் 35 பந்​துகளில் தனது 5-வது அரை சதத்தை விளாசி​னார். பும்​ரா, குல்​தீப் யாதவ், வருண் சக்​ர​வர்த்தி பந்​துகளில் சாகிப்​ஸதா ஃபர்​ஹான் சிக்​ஸர் விளாசி​னார். 9.3 ஓவர்​களில் 84 ரன்​கள் குவித்து மிரட்​டிய இந்த ஜோடியை வருண் சக்​ர​வர்த்தி பிரித்​தார். இது திருப்பு முனை​யாக அமைந்​தது. சாகிப்​ஸதா ஃபர்​ஹான் 38 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 57 ரன்​கள் எடுத்த நிலை​யில் வருண் சக்​ர​வர்த்தி பந்தை…

Read More

‘மீசைய முறுக்கு 2’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினை நிராகரித்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவா. ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தினை சுந்தர்.சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படம் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. இப்படத்தில் தாதாவாக நடிக்க ஹிப் ஹாப் ஆதி தன்னை அணுகியதாக தேவா தெரிவித்துள்ளார். இது குறித்து தேவா, ”ஹிப் ஹாப் ஆதி என்னை சந்தித்து கதையொன்று கூறினார். ’மீசைய முறுக்கு 2’ கதையில் நீங்கள் தான் தாதா என்று சொன்னார். ரொம்ப அற்புதமான கதை. வேண்டாம் என்று கூறிவிட்டேன். அதற்கு முதல் காரணம், இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறேன். சென்னை, இலங்கை, பாரிஸ், ஜப்பான் என தொடர்ச்சியாக இசை நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் சரியாக படப்பிடிப்புக்கு…

Read More

மதுரை: கரூர் சம்பவம் காரணமாக தவெகவை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்த மனு: கரூரில் 27.9.2025 அன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் அரசியல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட போதிலும், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்பட பாத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நெரிசலான இடத்தில் கூடினர். அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளை மீறியதன் விளைவாக கூட்ட நெரிசலில் சிக்கி சிறார்களும், பெண்களும் என 40 பேர் பலியாகினர். கரூர் கூட்டத்தில் சிறார், பெண்கள் பங்கேற்பதைத் தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது அவசியமாகிறது. எனவே ஏராளமான உயிரிழப்புகளுக்கு காரணமான தமிழக வெற்றிக்…

Read More

கால் நாள் கடுமையானது என்ற நற்பெயரைக் கொண்டுள்ளது, ஏன் என்று பார்ப்பது எளிது. குந்துகைகள், மதிய உணவுகள் மற்றும் டெட்லிஃப்ட்கள் உங்கள் கீழ் உடலை வரம்பிற்குள் தள்ளி, தசைகள் புண் மற்றும் பல ஜிம் செல்வோர் அவற்றை முழுவதுமாக தவிர்க்க ஆசைப்பட்டனர். ஆனால் புறக்கணிக்க கால் நாள் மிகவும் முக்கியமானது. வலுவான கால்கள் ஒட்டுமொத்த வலிமை, சமநிலை மற்றும் தடகள செயல்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவை தோரணை, சகிப்புத்தன்மை மற்றும் கலோரி எரியையும் மேம்படுத்துகின்றன.கால் நாளில் உயிர்வாழ்வதற்கும் செழிப்பதற்கும் முக்கியமானது ஸ்மார்ட் உடற்பயிற்சி தேர்வு, சரியான வடிவம் மற்றும் மீட்பு உத்திகளில் உள்ளது. ஒவ்வொரு பிரதிநிதியும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; அமர்வை மேலும் நிர்வகிக்கும்போது முடிவுகளை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள் உள்ளன. தொடக்க நட்பு குந்துகைகள் முதல் மேம்பட்ட ஒருதலைப்பட்ச இயக்கங்கள் வரை, சரியான நுட்பங்களை இணைப்பது கால் நாளிலிருந்து ஒரு வேதனையான கடமையிலிருந்து உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தின் பலனளிக்கும் பகுதிக்கு…

Read More